இடுகைகள்

அமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளார். சீன

அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்த தியோடர் ஸ்க்வான்!

படம்
  தியோடர் ஸ்க்வான் தியோடர் ஸ்க்வான் (theodor schwann 1810 - 1882) 1810ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். அச்சுத்தொழில் செய்துவந்த லியோனார்ட் ஸ்ச்வான் என்பவருக்கு நான்கு மகன். 1834ஆம்  ஆண்டு மருத்துவராக பட்டம் பெற்றார். ஜோகன்னஸ் முல்லர் என்ற தனது பேராசிரியருக்கு ஆராய்ச்சியில் உதவியாளராக இணைந்தார்.  நுண்ணோக்கியில் ஏற்பட்டு வந்த பல்வேறு முன்னேற்றங்களை கவனித்து வந்தார் தியோடர். பொருட்களை பதப்படுத்துதலில் ஈஸ்டின் பங்களிப்பு  பற்றிய ஆய்வின் முன்னோடி.  இவருக்குப் பிறகுதான் நோய்க்கிருமிகள் பற்றி பிரெஞ்சு நுண்ணுயிரியாளர் லூயிஸ் பாஸ்டர் ஆராய்ச்சி  செய்து சாதித்தார்.  இதைத் தவிர செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள், தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பணிகளை ஆராய்ந்து வந்தார். வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் வேதிப்பொருளான பெப்சினைக் கண்டறிந்தார். விலங்கின் திசுக்களிலிருந்து பெறப்பட்ட முதல் என்சைம் இதுவே.    லீஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்றார்.  இவர் கண்டுபிடித்த பல்வேறு அறிவியல் முறைகளுக்காக இன்றும் பேசப்பட்டு வருகிறார். 1839ஆம் ஆண்டு நுண்ணோக்கி

கண்களின் அமைப்பு நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி மனிதர்களுக்கு விதவிதமான கண் அமைப்புகள் உள்ளது ஏன்? கண்களின் மேல் இமை கீழே உள்ள கண்களை இணைப்பதில்தான் இவை மாறுகின்றன. இமைகளுக்கு முக்கிய பணி, கண்களை பல்வேறு பருவச்சூழல் மாறுபாடுகளிலிருந்து காப்பதுதான். எனவே நிலப்பரப்பு சார்ந்து மனிதர்களுக்கு கண்களின் அமைப்பு மாறுபடுகிறது. தெற்காசியர்கள், கிழக்கு ஆசியர்கள், அமெரிக்கர்கள் ஆகியோருக்கு கண்களின் அமைப்பில் இந்த வேறுபாடு தெளிவாக தெரியும். இதனை எபிகான்திக் ஃபோல்டு என்கிறார்கள். நன்றி - பிபிசி