இடுகைகள்

என்சைம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வயிற்றில் என்சைம்கள் சரியாக இயங்கவில்லையெனில்?......

படம்
                    என்சைம்கள் இயங்கவில்லையே ப்ரோ? என்சைம்கள் இயங்கினால் என்ன இயங்காவிட்டால் என்ன என்று சிலர் தில்லாக பதில் சொல்லுவார்கள். ஆனால் என்சைம்கள் இயங்காதபோது தீர்க்கமுடியாத நோய்கள் பலவும் ஏற்படும். ஒவ்வாமை, முழங்கால் வலி, இளம் வயதில் வயதானதுபோல தோற்றம், புற்றுநோய், உடல் பருமன், இதய நோய்கள் ஆகியவை ஏற்படும். என்சைம்கள்தான் ஒருவருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளை தீர்க்க உதவுகிறது. திசுக்களை புதிதாக உருவாக்க உதவுவதும் என்சைம்கள்தான். நமது உடலில் உள்ள சிலவகை என்சைம்களைப் பார்ப்போம். மெட்டபாலிக் என்சைம், டைஜெஸ்டிவ் என்சைம், உணவு என்சைம். மெட்டபாலிக் என்சைம் - இவற்றை உடல் உருவாக்குகிறது. வள்ர்சிதை மாற்ற என்சைம்களான இவைதான் உடல் தனது அடிப்படை விஷயங்களை செய்ய உதவுகிறது. இந்த என்சைம்கள் பற்றாக்குறையாக இருந்தால், பல்வேறு பிரச்னைகளை உடல் சந்திப்பதோடு நோய்களும் ஏற்படும். டைஜெஸ்டிவ் என்சைம் - இதைப் படித்தவுடனே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த என்சைம்கள் பார்ட்டைம் மட்டுமல்ல முழு நேரமுமே உணவுகளை உடைத்து அதனை செரிக்க ஏற்றவையாக மாற்றுவதுதான் வேலை. இதனை பான்கிரியாட்டிக் என்சைம் என்று கூட சொல்லல

உயிரிவேதியியல் துறையில் இந்தியாவை உயரத்துக்கு கொண்டு சென்ற பெண்மணி! - கிரண் மஜூம்தார் ஷா

படம்
  கிரண் மஜூம்தார் ஷா கிரண் மஜூம்தார் ஷா தொழிலதிபர் தனது வாழ்க்கையை தானே செதுக்கி தொழிலதிபர் ஆனவர் என்று சொல்லலாம்.  1953ஆம்ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர், கிரண். பெங்களூரில் பிறந்தவரின் அப்பா, யுனைடெட் ப்ரீவர்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்பாளராள இருந்தார். இவரது அம்மா,  யாமினி மஜூம்தார் சலவைத்தொழிலை நடத்தி வந்தார். கிரணுக்கு தொடக்கத்தில தனது அப்பாவின் தொழிலை அப்படியே பின்தொடர்ந்து செய்யலாம் என்று எண்ணம் இருந்தது. தனது மதுபான தயாரிப்பு தொடர்பான படிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் பல்லாரட் பல்கலையில் முடித்தார். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறாக இருந்தது. பெண்களுக்கு மதுபானத் தயாரிப்பில் பெரிய வேலைகள் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு ஐரிஷ் கம்பெனியான பயோகான் பயோகெமிக்கல்  வேலை தருவதாக கூறியது. அதனை உருவாக்கி நிறுவியர் லெஸ்லி ஆசின்குளோஸ்.  1978ஆம் ஆண்டு ஆசின்குளோஸ், கிரணை தனது பயோகான் இந்தியா நிறுவனத்தில் கூட்டாளியாக சேர அழைப்பு விடுத்தார்.  பயோகான் நிறுவனம் பாபெய்ன், இசின்கிளாஸ் எனும் என்சைம்களை பப்பாளி, மீனிலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் தொடங்கிய பயோகான் நிறுவன

தலைமுடி மூலம் மனநோய்களை அறியலாம்!

படம்
            முடி மூலம் நோய்களை அறிய முடியுமா ? மூளையிலுள்ள ஹைப்பர் ஆக்டிவ் மரபணுக்கள் மன நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள் . மூளையில் நடக்கும் பிரச்னைகளுக்கு நாம் அதனை திறந்து பார்க்கவேண்டியதில்லை . முடியைப் பார்த்தாலே போதும் . மூளையில் உள்ள எம்பிஎஸ்டி மரபணு , கட்டற்று இயங்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது . இந்த மரபணுவினால் ஹைட்ரஜன் சல்பைடு அதிகளவு மூளையில் உருவாகிறது . இது ஆன்டி ஆக்சிடன்ட்தான் என்றாலும் அதிகளவு உருவாகும்போது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது . ஹைட்ரஜன் சல்பைடு மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாடுகளை முடக்குகிறது . மேலும் பிற நரம்பு செல்களின் தகவல்தொடர்பையும் பாதிக்கிறது . இதனால் ஸிசோபெரேனியா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது . எம்பிஎஸ்டி மரபணுவால் மூளையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமன்றி , முடியில் ஸ்டெம் செல்லும் பாதிக்கப்படுகிறது . ஆர்என்ஏவை நகல் எடுத்து எம்பிஎஸ்டி என்சைம்களை உருவாக்க முயல்கிறது . இதனால் தலைமுடியை எடுத்து சோதித்தால் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடையாளம் கண்டு்விடலாம் .