இடுகைகள்

பள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார்.  பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்? தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர்...

குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி குழந்தைகள் கேலி சித்திரவதையில் ஈடுபடுவது எதற்காக? உளவியல் ரீதியாக சில குழந்தைகள் எதிர்பார்த்த அங்கீகாரம், அன்பு கிடைத்திருக்காது. கோபம், ஆக்ரோஷன், வன்முறை மூலம் தங்களுக்கான புகழை, பெருமையை அடைய முயல்கிறார்கள் இதன்பொருட்டே கேலி சித்திரவதையை தொடங்குகிறார்கள். பள்ளிகளில் மாணவிகளில் சிலரும் இதுபோல கேலி சித்திரவதையை செய்து புகழ்பெற முயல்வதுண்டு. அதெல்லாமே வெட்டிப்பெருமைதான். மாணவர்களில் பத்து முதல் இருபது சதவீதம் பேர் இப்படி பிறரை கேலி சித்திரவதை செய்பவர்களாக இருக்கிறார்கள். இப்படி செய்வதை ஏற்க கூடாது. முறையாக புகார் அளித்து பாதிக்கப்படுபவர்களை காக்க முயலவேண்டும். இதன் வழியாக கேலி சித்திரவதை குறையும்.  குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்? சில பெற்றோர்கள் குழந்தையை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்பவர்களுக்கு சுய நம்பிக்கை, துணிச்சல், தைரியம் இருக்காது. தன்னம்பிக்கை குறைவாக, கூச்ச சுபாவிகளாக இருப்பார்கள். இப்படியானோரை பள்ளியில் கேலி சித்திரவதை குழு அடையாளம் கண்டு அடித்து துன்புறுத...

கல்வி ஒருவற்கு... சீன கல்வி சீர்திருத்தங்கள் புதிய மின்னூல் வெளியீடு

படம்
    https://www.amazon.com/dp/B0FC2V9TT9

சீனாவிலுள்ள பள்ளி வகைகள்

படம்
  எலைட் பள்ளி இதில் தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் உண்டு. சீனாவில் தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை எலைட் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆங்கில வழிக் கல்வி, கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கல்வி, மாணவர்களுக்கான வசதி, சூழல் ஆகியவை சொகுசு ஓட்டல் போல உயர்தரமாக இருக்கும். நகர மேல்நிலைப்பள்ளிகள் அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள். இப்பள்ளியில் மாணவர்கள் சேர்வது, பல்கலைக்கழக அனுமதி தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே. தேர்வு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேலை செய்வதற்கான திறன்களை பெற முடியும். சுயாட்சி முறை என்பதால் சுதந்திரம் உண்டு. அரசின் பாடங்களை கற்றுக்கொடுத்தபிறகு வேறு விருப்ப பாடங்களை மாணவர்கள் கற்கலாம். அரசுப்பள்ளிகளை விட வசதிகள் நன்றாக இருக்கும். குறைபாடு, நிதியுதவி. வயதான ஆசிரியர்கள். தொழில்பயிற்சிபள்ளிகள் கல்விக்கடன் வாங்கிப் படிக்க எல்லோராலும் முடியாது. எனவே, படித்து முடித்த உடனேயே வேலைக்கு செல்ல உதவும் பள்ளிகள் இவை. வாகனம் ஓட்டுதல், சமையல், உலக வணிகம், சுற்றுலா, சேவை நிர்வாகம், அல...

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - உயர்கல்வியை வளர்த்தெடுத்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்!

படம்
    சீனாவில், 1998 -2007 காலகட்டத்தில் மட்டும் 1022லிருந்து, 1912 கல்வி நிறுவனங்கள் என உயர்கல்விக்காக தொடங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி 2சதவீதம். பெய்ஜிங், தியான்ஜிங், கிழக்கு கடற்புற பகுதியான ஜியாங்சு ஆகியவற்றில் உயர்கல்வி பாராட்டும்விதமாக வளர்ந்துள்ளது. சீன அரசின் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. சீன நகரங்களில் கல்வியில் ஒட்டுமொத்தமாக முன்னிலை பெறும் நகரமாக பெய்ஜிங் உள்ளது. குறைந்த வளர்ச்சி கொண்ட மாகாணங்களைப் பார்ப்போம். ஷெஜியாங், குவாங்டாங் ஃப்யூஜியன், சான்டாங், ஹெனான், நிங்ஷியா ஆகியவை கல்வி வளர்ச்சியில் கீழே உள்ளன. பெய்ஜிங், சாங்காய், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் ஒருவர் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதுவே ஹெனான், ஷெஜியாங், சான்டாங், குவாங்டாங் ஆகிய மாகாண மாணவர்களில் ஒருவர் கல்வி கற்க நினைத்தாலும் வாய்ப்பை பெறுவதற்கு ஏராளமான பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். வாய்ப்பே கிடையாது என்றல்ல. கடினம் என்று கூறவேண்டும். சீனாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டதே தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கவேண்டும் என சீன அரசு முடிவெடுத்ததால்தான். ஐம்பது எழுபதுகளில் தைவானில் உள்ள கு...

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - நாட்டுப்பற்றை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டம்!

படம்
நாட்டில் எந்த சீர்திருத்தங்கள் வந்தாலும் அதற்கு கலந்துரையாடல்கள், விவாதங்கள் அவசியம். பல்வேறு தரப்பு, கொள்கைகளை விவாதித்தால்தான் பல்வேறுவிதமான பார்வைகள் நமக்கு கிடைக்கும். அதுவே, நேர்மறை, எதிர்மறையான விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி அதை புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் சீனாவில் கல்வி சீர்திருத்தங்கள் வேகம் பெற்றது தொண்ணூறுகளுக்கு பிறகுதான். சீனா போன்ற தொன்மை பெருமை கொண்ட நாட்டில், அதன் கடந்த காலமே சீர்திருத்தங்களுக்கு எதிராக மாறுவது புதிதான ஒன்றல்ல. சீனாவில், 1990ஆம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு கல்வி புத்துயிர்ப்பு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு, அடிப்படை கல்வித்திட்ட சீர்திருத்தம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டு சீனாவின் கல்வித் திட்டங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. காலப்போக்கில் மேம்பாடுகள் இருந்தன என்பது உண்மை என்றாலும் மத்திய அரசின் மேலாதிக்கம் கூடுதலாக இருந்தது. 2017ஆம் ஆண்டு அதிபர் ஷி ச்சின் பிங்கின் கருத்துகள் அடிப்படையில் நாட்டுப்பற்று தொடர்பான கருத்துகள், பாடங்கள் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவை முழுக்க மாணவர்கள...

சீனாவின் கல்விச் சீர்திருத்தங்கள்- பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்கள்!

படம்
சீனாவில் தொடக்கப்பள்ளி முடித்ததும் உயர்கல்விக்காக தேசிய தேர்வை எழுத வேண்டும். அதை வைத்துத்தான் மாணவர்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். தேசிய தேர்வில் சீனமொழி, கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், அரசியல் அறிவியல், உடற்பயிற்சி ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். சீனாவில், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகள் சிறப்பானவை. வெளிநாட்டிலுள்ள பள்ளிகளைப் போல வசதிகளைக் கொண்டவை. இவற்றுக்கு அடுத்த நிலையில் வூகான், செங்டு, ஷியான் ஆகிய நகரிலுள்ள பள்ளிகள் இருக்கும். அனைத்து நாடுகளைப் போலவே கிராமங்களிலுள்ள பள்ளிகளில் வசதிகள் குறைவாக உள்ளன. இந்த வேறுபாடுகளும், இப்போது மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளியில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படும் என்று பார்ப்போம். சீனமொழி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, அரசியல், புவியியல், தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள், உடற்பயிற்சி, ஆரோக்கிய கல்வி, ஓவியம், இசை, இனக்குழு செயல்பாடுகள், அறக்கல்வி. உயர்கல்வியைப் பொறுத்தவரை மாகாணங்களில் நடைபெறும் தேசிய தேர்வுகள் முக்கியமானவை. இதைப் பொறுத்தே மாணவர்கள் பல்...

மாணவர்களை மன உளைச்சலில் தள்ளும் சீன அரசு தேர்வுமுறை!

படம்
சீன பொதுவுடைமைக் கட்சி, நாட்டிலுள்ள பொதுக்கல்வியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. அரசியல் கொள்கை திணிப்பு, அதீத தேசியவாதமும் உள்ளடங்கும். உலகிலேயே சீனாவில் பள்ளிகளும், ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் அதிகம். சீன அரசின் நோக்கம், மக்களை உற்பத்தித்துறையில் இருந்து கண்டுபிடிப்புகளுக்கு நகர்த்தி நாட்டை முன்னேற்றுவதுதான். அதற்கு கல்வி தரமாக இருக்கவேண்டும் என்பதே முதல்படி. ஏழை - பணக்காரர், நகரம் - கிராமம் இடைவெளியே குறைத்து கல்வியில் சீர்திருத்தங்களை செய்யவேண்டும். சிந்தனையும், செயல்திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்கினால்தான் நாடு எதிர்காலத்தில் வலிமை பெறும். கிராமங்களில் சிறுபான்மை மக்களுக்கு, ஏழைகளுக்கு, தொலைதூரத்தில் வசிப்பவர்களுக்கு கற்கும் கல்வியை தரமாக்குதல், தொடக்க கல்வியை அனைவரும் எளிதாக அணுகும்படி மாற்றுதல், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை மானியம் அளித்து வழங்குதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல் ஆகியவற்றை பொதுவுடைமைக் கட்சி முக்கியமானதாக கருதியது. சீனத்தின், பதிமூன்றாவது ஐந்தாவது திட்டத்தில் கல்வியை சீர்திருத்தி மேம்படுத்து...

சீனாவின் கல்விச் சாதனை! - கல்வி சீர்திருத்தங்கள்

சீனா, 1978ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் சந்தை பொருளாதார சக்தியாக மாறத் தொடங்கியது. அதுவரை நாடு வெறும் சோசலிச கருத்தியலைக் கொண்டதாக மட்டுமே இருந்தது. முன்னாள் அதிபர் டெங் ஷியோபிங்கின் காலத்தில் கல்வி, மத்திய அரசிடமிருந்து மையப்படுத்தாததாக, தனியார்மயமாக, சந்தைமதிப்பு கொண்டதாக மாறியது. மாவோவின் சீடராக டெங் அறியப்பட்டாலும், காலத்திற்கேற்ப நாட்டை மாற்றவேண்டும் என்ற சீர்திருத்த எண்ணம் கொண்டவர். இன்றும் கூட சீனாவில் அவருக்கு சிலைகளோ, கூறிய மேற்கோள்களோ கூட இல்லை. அதாவது அவற்றை வெளிப்படையாக பார்க்க முடியாது. ஆனாலும் முன்னாள் அதிபர் டெங் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற முக்கியமான தலைவர் என்பதை யாரும் மறுப்பதில்லை. சீன அரசு, 1949ஆம் ஆண்டு, வணிக நோக்கம் கொண்ட கல்வி அமைப்புகளை தடை செய்தது. சோசலிச கல்வியை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வலுவாக்க முயன்றது. மாவோவின் கலாசாரப் புரட்சி காரணமாக சீன மாணவர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். வெளிநாடுகளில் கல்வி பயின்றனர். அரசின் அத்துமீறல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என டெங் நினைத்தார். எனவே, கல்வி சீர்திர...

ஆன்மா இடம் மாறுதலால் வம்புச்சண்டை மாணவனின் வாழ்க்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றங்கள்!

படம்
    சேம் கைய் மங்கா காமிக்ஸ் மங்காகோ.காம் 50 அத்தியாயங்கள்--- இரண்டு பள்ளி மாணவர்கள். ஒருவன் படிப்பில் ஈடுபாடு கொண்டவன். அப்பாவி. இன்னொருவன், அடிதடி ஆள். எப்போதும் யாராவது அவனுக்கு எதிராக விரல் உயர்த்தினால் கூட கையை அடித்து முறிப்பவன். இவர்கள் இருவரும் எதிர்பாராதபடி ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். அதன் விளைவாக, இருவரின் ஆன்மா மாறுகிறது. இதனால் ஏற்படும் விவகாரங்களே கதை. இது ஒரு தற்காப்புக்கலை கதை. எனவே, கதையில் அடிதடி விஷயங்களே அதிகம். படக்கதை முழுக்க கருப்பு வெள்ளை என்பது வாசிக்கவே புதிய அனுபவத்தை தருவதாக உள்ளது. நாயகன் காங் டு ஜி உடலில் அப்பாவி மாணவன் சூன் ஆன்மா புகுந்துவிட, படிப்பதா, ஏற்கெனவே உள்ள எதிரிகளை அடித்து துவைப்பதா என அவன் யோசிக்கும் இடத்தில் கதை வேகம் பிடிக்கிறது. காங் டு ஜி உடல் அபாரமான தற்காப்புக்கலை ஆற்றல் கொண்டது. ஆனால் அதை இயக்கும் ஆன்மா, மாறிவிடுகிறது.அடிதடி என்றாலே மன்னிப்பு கேட்டுக்கூட தப்பித்து ஓடிவிடலாம் என நினைப்பவன், அவனுக்கு அவரும் எதிர்பாராத சவால்கள் மூலம் தற்காப்புக்கலை கற்க முயல்கிறான். அக்கலை பெயர் கோ மு டு. தற்காப்புக்கலை காமிக்ஸ் என்பதால் அடிதடி ம...

காவல்துறை ஆட்களை ஆட்டுவிக்கும் கிளர்க்கின் உளவியல் விளையாட்டு!

படம்
      ஹன்ட் மலையாளம் மஞ்சு வாரியர், இந்திரஜித், குஞ்சாகோ கோபன் சினிமா நடிகை ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அதுபற்றி விசாரிக்கும்போது, நீதிமன்ற கிளர்க் ஒருவர் பிடிபடுகிறார். விசாரித்தால், அவர் தனது மனைவியைக் கூட கொன்றவர் என தெரியவருகிறது. கடத்திய நடிகை, அவரது கூட இருந்தவர் என இருவரையும் கொன்றுவிட்டேன். ஆனால் புதைத்த இடத்தை மறந்துவிட்டதாக கூறுகிறார். இந்த விசாரணை சிறிபாலா என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பெரும் சோதனையாக மாறுகிறது. எனவே, நண்பரான சைலக்ஸ் இப்ராகிம் என்பவரின் உதவியை நாடுகிறார். கிளர்க் விசாரணையின்போது சொல்லும் தகவல்களால் குழந்தையில்லாத சைலக்ஸின் வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள் வருகின்றன. குறிப்பாக, மனைவி மீது தவறான உறவு உள்ளதோ என சந்தேகப்படத் தொடங்குகிறார். சிறிபாலாவுக்கு கொரியரில் சில தகவல்கள் வருகின்றன. அதன்படி தேடியதில் அவரது அப்பா, பணியின்போது விபத்துக்குள்ளானதில் நண்பர் சைலக்சின் பங்கு இருப்பது தெரிகிறது. நட்பில் உள்ள துரோகம் வலி அதிகமா, காதலித்த மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதால் கொன்றுவிட்டேன் என்று கூறும் கிளர்க்கின் வாழ்க்கையில் வலி அதிகமா என சிறிபாலா புரிந்...

நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....!

படம்
            நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....! நோபல் பரிசை இந்தியா ஐந்துமுறை பெற்றுள்ளது. மீதிமுறை எல்லாம் இந்திய வம்சாவளி என தலைப்பு எழுதி இந்திய கைக்கூலி ஊடகங்கள் பெருமைப்பட்டுக்கொண்டன. மற்றபடி கல்வி ஆராய்ச்சிகளுக்கே பெரிய அளவு வரிவிதிப்பு விதிக்கப்பட்டு வருகிற நிலையில் நோபல் பரிசு என்ன, ஆராய்ச்சி செய்பவனுக்கு மரியாதையே சமூகத்தில் இருக்காது. அறிவியலாளர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டிய இடத்தில் மத தலைவர்கள், சாதி தலைவர்கள், பார்ப்பன பூசாரி, பண்டாரங்கள் அமர வைக்கப்பட்டு வருகிறார்கள். இப்படியான மத அடிப்படைவாத சிக்கல்கள் இருந்தாலும் டாப் 10 நோபல் பரிசு பட்டியலில் இந்தியா வந்துவிடும் என சிலர் பகல் கனவு கண்டு வருகிறார்கள். இப்போதைக்கு நோபல் பரிசு பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ரஷ்யா, ஜப்பான், கனடா, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஆதிவாசி, பழங்குடி மக்களுக்கான மேம்பாட்டு நிதியை பசுமாட்டு மடங்கள் கட்ட மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன. இந்த நிலையில், மனிதர்கள் அழிந்து மாடுகள் மட்டுமே வா...

போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை!

படம்
      போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை! மக்களுக்கு வழங்கப்படும் கல்வியே, நாட்டின் மேம்பாடு, வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இதை ஐ நா அமைப்பும் அங்கீகரித்து ஏற்றுள்ளது. நவீன காலத்தில் தொடக்க கல்வி, தேசிய மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மாறியுள்ளது. இதற்கு எதிராக 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்திய கலாசார தன்மைக்கேற்றபடி கல்வி என்ற போர்வையில், தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு கல்விமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கொள்கை, உண்மையான வரலாற்றை மாற்றி மாணவர்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறது. இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களில் இந்திய அறிவுத்திட்டம் என்பதை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. ஜோதிடம், ஜவுளித்துறை, நகரங்கள் திட்டமிடுதல், வேத கணிதம் என வெளிப்படையாக பொதுவாக பார்த்தால் மாணவர்களுக்கு நன்மை தருவதுபோல தோன்றும். ஆனால், பகுத்தாய்ந்து பார்த்தால் வலதுசாரி கருத்துகளை உள்ளே திணித்து குறிப்பிட்ட சில இனக்குழுவினருக்கு சாதகமான கல்வி மாறியிருப்பதை அடையாளம் காணலாம். இதை பிரசாரம் செய்ய இலக்கியங்கள், நூல்கள், போஸ...

தாய்நாட்டிற்கு வாழ்வதற்காக திரும்பும் கோகோ ஆராய்ச்சியாளன் எதிர்கொள்ளும் அனுபவங்கள்!

படம்
            வேர் தி ரோட் ரன்ஸ் அவுட் ஆங்கிலம் ஈக்வடோரியா கினியா நாட்டைச் சேர்ந்த நாயகன், ஆராய்ச்சியாளராக வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார். அங்கு கிடைக்கும் பணத்தை தனது தாய்நாட்டுக்கு ஆங்கில நண்பர் ஒருவர் மூலம் அனுப்பி வைக்கிறார். ஆதரவற்றோர் காப்பகம், ஆராய்ச்சி நிலையம் இரண்டுக்குமான பணத்தை சம்பாதித்து அனுப்புபவர், ஒருநாள் கானாவுக்கு வருகிறார். அங்கு வந்து பார்த்தால் ஆதரவற்றோர் காப்பகம் புதுப்பிக்கப்படாமல் பழையது போலவே இருக்கிறது. ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்படவில்லை. அவரது ஆங்கில நண்பர் பணத்தை சுருட்டிக்கொண்டு மோசடி செய்துவிட்டார் என உணர்ந்துகொள்கிறார். அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாழடைந்த வீட்டை சீர் செய்து, வசிக்கத் தொடங்குகிறார். நேரம் கிடைக்கும்போது காப்பக பள்ளியில் சென்று கோகோ பற்றிய பாடம் எடுக்கிறார். அப்பள்ளியில் ஆங்கிலேய பெண்ணான கரினாவைச் சந்தித்து நட்பு கொள்கிறார். அந்த உறவு மெல்ல காதலாக கனிகிறது. கரினா,ஜார்ஜ் என்ற நாயகி, நாயகன் சந்திக்கும் இடர்ப்பாடுகள், அதிலிருந்து மீளுதலே படத்தின் இறுதிப்பகுதி. ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமை, பிரச்னைகள், அம்...

பள்ளி மாணவர்களை கிராமங்களிலிருந்து வேன் வைத்து பள்ளிக்கு அழைத்து வரும் தலைமை ஆசிரியர்!

படம்
                   தெருவிளக்கு   பெரும்பாலான அரசு பள்ளிகளில் மேல்சாதி ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களை அவர்களின் தந்தை செய்யும் தொழில்களை அடிப்படையாக வைத்து, அதே விஷயங்களை பள்ளிகளில் செய்ய வற்புறுத்தி அடிப்பதுண்டு. தலித் என்றால் துப்புரவுப் பணி. டீக்கடை வைத்திருக்கிறார்கள் என்றால், பள்ளியில் டீயைப் போட மாணவிகளை, கட்டாயப்படுத்துவார்கள். இதுபோன்ற சல்லித்தனமான ஆட்களைக் கடந்து மிகச்சில ஆசிரியர்களே  சாதி/மத/இன மனநிலையைக் கடந்து ஆசிரியர் என்ற பணியைப் புரிந்து அதற்கேற்ப அர்ப்பணிப்பாக நடந்துகொள்கிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியர் திருச்செல்வராஜா. இவர், தனது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக சொந்த காசைப்போட்டு இரண்டு வேன்களை வாங்கி, இயக்கி அவர்களை கிராமத்திலிருந்து பள்ளிக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார். பத்து கி.மீ. தூரத்திற்கு ஐந்து முறை செல்லும் வேன்கள், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி வருகின்றன. இதற்கான செலவுகளை தலைமை ஆசிரியர் ராஜாவே பார்த்துக்கொள்கிறார். ஓட்டுநருக்கான சம்பளத்தை மாணவர்களும் இயன்ற வகை...