இடுகைகள்

சுரப்பி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாயிடம் இருக்கும் சூப்பர் பவர்! - என்ன தெரியுமா?

படம்
டாக்டர். எக்ஸ் எலி, முயல், கிளி என நாம் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டோம். ஆனால் நம் கூடவே வளைய வரும் நம் குணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நாய் பற்றி நாம் பெரிதாக கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. பெடிகிரி போட்டால் போதும். பால் சோறு வெச்சால் போதும் என்று இருந்தால் எப்படி? மனிதர்களுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்து பிழைத்து வரும் உயிரினங்களில் முக்கியமானவை நாய்கள். பொதுவாக ஒருவரை நமக்கு ஏன் பிடிக்கிறது? அவர் புத்திசாலி என்பதாலா அல்லது அன்பாக இருப்பார் என்பதாலா? புத்திசாலியாக இருந்தால் அவரைப் பற்றி தமிழ், ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதலாம். அதற்கே கூட அவரிடம் நீங்கள் பழக வேண்டும். மனிதர் தேள் போல கடித்துக்கொண்டே இருந்தால் அவரிடம் உங்களுக்கு பழகத் தோன்றுமா? நாய் அப்படித்தான். பூனைகள் எஜமானர் போல நடந்துகொள்ளும். நாய் அடிமை போலத்தான் நடந்துகொள்ளும். பணம் வைத்திருக்கிறோமோ இல்லையோ, பிஸ்கட் போடுகிறோமோ இல்லையோ  வீட்டிற்குள் நீங்கள் நுழைந்ததும் உங்களை ஆவலோடு ஆக்ரோஷமாக வரவேற்கும் அதனுடைய காட்டுத்தனமான பாசம்தான் அதன் விசேஷம். நாம் வாழ்வில் சிலரிடம் புகழையும் சிலரிடம் பணத்தைய