இடுகைகள்

டிஎன்ஏ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணு நோய்களை தீர்க்க உதவும் மரபணு வரிசை வரைபடத் திட்டம்!

படம்
  ஜெனோம் இந்தியா - மரபணு வரைபடத்திட்டம் இந்தியாவிலுள்ள 20 அறிவியல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 10 ஆயிரம் ஆரோக்கியமான மனிதர்களின் மரபணு வரிசையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய செய்தி, கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. ரத்த மாதிரிகளை சேகரிப்பது, மரபணுக்களை வரிசைப்படுத்துவது, செயல்பாட்டுமுறையை மேம்படுத்துவது, தகவல்களை சேகரிப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.  ஒரு மரபணு வரிசையை சேமித்து வைக்க 80 ஜிபி நினைவகம் தேவைப்படுகிறது. 8 பீட்டபைட்ஸ் அளவுள்ள தகவல்கள் ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தகவல் மையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் பொதுமக்களின் நன்மைக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. புதிய நோய் கண்டறியும் முறைகள், சிகிச்சைகள், அரியவகை நோய்களை அடையாளம் கண்டறிவது, நோய்களை குணமாக்குவது ஆகியவற்றுக்கு மரபணு வரிசை தகவல்கள் உதவக்கூடும்.  மக்கள்தொகையில் உள்ள மரபணுக்களின் பன்மைத்தன்மையை அறிய மரபணு வரிசை வரைபடம் தேவை. அதை வைத்து பரிமாண வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம். கூடுதலாக, நோய் அதற்கான சிகிச்சைகளை மேம்படுத்தலாம். இதற்கு உலக நாடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள மரபணு

புத்தக கடை உரிமையாளரைக்கொன்ற கொலையாளி - 11 ஆண்டுகள் போராடி பிடித்த காவல்துறை!

படம்
  உணமையான சமத்துவமான நீதி என்பது உலகில் எங்குமே இல்லை. ஏனெனில் மனிதர்களிடையே சாதி, மதம், இனம், அந்தஸ்து, செல்வாக்கு, சமூக அடுக்கு என்ற வகையில் ஏராளமான பாகுபாடுகள் உள்ளன . அரசியலமைப்பு அடிப்படையில் சாமானியர் ஒருவருக்கு நீதி கிடைக்கும் இடம நீதிமன்றம், ஆனால் அங்குள்ள நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்கள், மனதிலுள்ள முன்முடிவுகளும் கருத்துகளும் கூட தீர்ப்பில் வெளிப்படுகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே பார்த்து தேவையான சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி தண்டனை வழங்குவது சரியானது. பெரும்பாலான நேரங்களில் அரசியல் அழுத்தங்கள், இறந்துபோனவரின் குடும்ப செல்வாக்கு, பணபலம், ஏழையின் நிர்க்கதியான பலவீன நிலை கூட தீர்ப்பை மாற்ற வைக்கிறது. இப்போது இங்கே நீங்கள் வாசிக்கப்போகும் குற்றச்சம்பவம் கூட அத்தகையதுதான்.  ஒரு புத்தக்கடையை வயதான பெண்ணும், அவரது கணவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. அவர் வழியாக பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள். வயதான பெண்ணுக்கு புத்தகடை மேல் தனிப்பிரியம் உண்டு. இவர் ஒருநாள் கடையில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார். அதே கடையில்தான் அவரின்

குளத்தில் இருந்து காணாமல் போன இளம்பெண்! - இருபது ஆண்டுகளாக தேடிவரும் காவல்துறை

படம்
  மோலி பிஷ் மசாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள வாரன் பகுதியைச் சேர்ந்தவர் மோலி பிஷ். இவர், 2000ஆம் ஆண்டில்   சிறுவர்கள் குளிக்கும் குளம் ஒன்றில் லைஃப் கார்டாக வேலை செய்துகொண்டிருக்கும்போது காணாமல் போனார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த நீலநிற நீச்சலுடை மட்டுமே காவல்துறைக்கு கிடைத்தது. ஆனால் அவரது உடல் அல்லது வேறு பொருட்கள் என எதுவுமே கிடைக்கவில்லை. மோலியின் குடும்பத்தினர், காணாமல் போன மகளின் பெயரில் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி, குழந்தைகளை கண்காணிக்கவென சில பொருட்களை பெற்றோருக்கு வழங்கி வருகின்றனர். மகள் தொடர்பான வழக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. கமின்ஸ் என்ற குளத்தில் மோலியின் சகோதரர் ஜான் லைஃப் கார்டாக   வேலை செய்து வந்தார். எனவே, பள்ளியில் படித்து வந்த மோலிக்கு பதினாறு வயதில் தானும் லைஃப் கார்டாக வேலை செய்யவேண்டுமென ஆசை பிறந்தது. ஆனால் வேலைக்கு சேர்ந்த எட்டே நாட்களில் காணாமல் போய்விட்டார். அம்மா மேகிக்கு, மகள் ஆபத்தான இடத்தில் வேலை செய்கிறாளே என பயம் இருந்தும் மகள் உறுதியாக கூறியதால் மனதை சமாதானம் செய்துகொண்டார். ஆனால் அது நிலைக்காது என அவரும் கூட நினைத்த

நாயின் கண்களிலுள்ள சோக உணர்வு, நீலநிறக்கண்களைக் கொண்ட குழந்தைகள்! உண்மையா? உடான்ஸா?

படம்
  நாயின் கண்கள் சோக உணர்ச்சி கொண்டது! உண்மையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓநாய்களிலிருந்து உருவாக்கப்பட்ட நாய்கள் மெல்ல வீட்டு விலங்காக மாறின. பரிணாம வளர்ச்சிப்படி,நாய்களுக்கு கண்களின் அருகில் தசைகள் உருவாகின. இதன் மூலம், நாய் மனிதர்களோடு எளிதாக தொடர்புகொள்ள முடிந்தது. மனிதர்களைப் பார்த்து புருவத்தை தூக்கும்போது, தசைகள் காரணமாக அதன் முகம் சோகமாக தெரிகிறது என 2019ஆம் ஆண்டு வெளியான புரோசீடிங் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்(Proceedings of the National Academy of Sciences)  ஆய்வு கூறியது.  பிறக்கும்போது, அனைத்து குழந்தைகளும் நீலநிற கண்களைக் கொண்டுள்ளனர்  உண்மையல்ல. ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கண்கள் பழுப்பு நிறமாகவே இருக்கும். காகசியன் நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பிறக்கும்போதே கண்கள் நீலநிறமாக இருக்கும். தோல், முடி ஆகியவற்றின் நிறத்தைத் தீர்மானிக்கும் மெலனின் என்ற நிறமியே கண்களின் நிறத்திற்கும் காரணம். இதை மெலனோசைட்ஸ் (melanocytes) என்ற செல்கள் உற்பத்தி செய்கின்றன. மெலனின் மற்றும் மரபணுக்களின் பங்கு கண்களின் நிறத்தை தீர்மானிக்கின்றன.   https://www.allabout

கிரிஸ்பிஆர் முறையை வணிகப்படுத்த முடியும் - ஜெனிஃபர் டவுட்னா

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர், ஜெனிஃபர் டவுட்னா. 2020ஆம் ஆண்டு மரபணு செம்மைப்படுத்தல் மேம்பாட்டிற்காக (Genome Editing) இம்மானுவேல் சார்பென்டியருடன்  சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்.    வால்ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த சிக்ஸ்த் ஸ்ட்ரீட் என்ற நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பணியை நீங்கள் ஏற்றது ஏன்? சிக்ஸ்த் ஸ்ட்ரீட் நிறுவனத்தில், சரியான குழுவை அடையாளம் கண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த நிறுவனத்தின் எந்திரக் கற்றல் நுட்பம் மூலம் கிரிஸ்பிஆர் தகவல்களை ஆராய முடியும். எந்திரக்கற்றலும், கிரிஸ்பிஆர் முறையும் ஒன்றாக சேரும்போது ஆற்றல் கொண்டதாக மாறும். இதன் மூலம் மரபணு நோய்களை அறிந்து சிகிச்சை செய்யலாம்.  பெண்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2.3 சதவீத அளவுக்கு முதலீடு (Harvard Business Review)  கிடைப்பது பற்றி தங்களது கருத்து?  இந்த ஆய்வுத்தகவல் எனக்கு ஏமாற்றம் தந்தது. நான் ஆய்வுத்துறையில் பல்லாண்டு காலமாக  இருப்பதால் அதிர்ச்சி ஏற்படவில்லை.   கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா? 10 ஆண்டுகளுக்கு மேலாக கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்

டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளை அறிந்து உலகிற்கு சொன்னவர்! - ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின்

படம்
  ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின் (1920-1958) இங்கிலாந்தின், லண்டன் நகரில் பிறந்தார். பெற்றோர் எல்லிஸ் ஆர்தர் ஃபிராங்கிளின், முரியல் ஃபிரான்சஸ் வாலே.பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் படிப்பில் ஆர்வம் காட்டினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்காம் கல்லூரியில், இயற்கை அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர், 1941ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றவர்,  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று எக்ஸ்ரே கதிர்கள்(xray diffraction) பற்றி படித்து வல்லுநரானார்.  1951ஆம் ஆண்டு லண்டனில் கிங் கல்லூரியில் இருந்த ஆராய்ச்சிக் குழுவோடு இணைந்து எக்ஸ்ரேவைப் பயன்படுத்தி டிஎன்ஏவை 3டி வடிவத்தில் உருவாக்க முயன்றார். இதற்கு ரோஸாவின் மாணவர் எடுத்த போட்டோகிராப் 51 முக்கியமான ஆதாரமாக உள்ளது. 1953ஆம் ஆண்டு புகையிலை மொசைக் வைரஸின் ஆர்என்ஏ அமைப்பை பற்றி ஆராயத் தொடங்கினார். இந்த செயல்பாடுதான், வைரஸ்களைப் பற்றிய அமைப்பு பற்றி அறிவதற்கு உதவியது. டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளைப் பற்றி அறிவதற்கு ரோஸாலிண்ட் செய்த ஆராய்ச்சிகள் உதவின. https://en.wikipedia.org/wiki/Rosalind_Franklin

டாலி என்ற செம்மறி ஆட்டிற்கு ஏன் இத்தனை புகழ்?

படம்
  பல ஆண்டுகளாக குளோனிங் செய்வது என்பதை, அனைவரும் திரைப்படங்களில் தான் பார்த்து வந்தார்கள். டாலி என்ற ஆடு இந்த முறையில் உருவாக்கப்படும் வரை. இந்த செம்மறி ஆடுதான் முதன்முதலில் செம்மறி ஆட்டின் ஸ்டெம்மில் இருந்து உருவாக்கப்பட்டது.  இந்த குளோனிங் ஆட்டிற்கு மூன்று அம்மாக்கள் உண்டு. ஒரு ஆட்டில் டிஎன்ஏ, மற்றொன்றில் கருமுட்டை, மூன்றாவது ஆட்டை வாடகைத்தாயாக பயன்படுத்தினார்கள். இப்படித்தான் டாலி என்ற குளோனிங் ஆடு உருவாக்கப்பட்டது.  1996ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, டாலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது. இந்த ஆடு பிறந்து ஆறரை ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தது. பொதுவாக ஒரு செம்மறி ஆட்டின் ஆயுள் காலம் பனிரெண்டு ஆண்டுகள் ஆகும். இந்த ஆடு குறுகிய காலமே வாழ்ந்ததற்கு குளோனிங் செய்தது காரணமாக என்று தெரியவில்லை.  டாலியை உருவாக்கும்போது பெறப்பட்ட ஸ்டெம் செல் கொண்ட ஆட்டிற்கு ஆறுவயதாகியிருந்தது. எனவே பிறக்கும்போது, டாலியின் வயது ஆறு என்று நாம் கொள்ளலாம்.  டாலி ஆடு வெற்றிகரமான ஆறு குட்டிகளை ஈன்றது. இதனை தானாகவே செய்தது. இக்குட்டிகளுக்கு போனி, சாலி, ரோஸி, லூசி, டார்சி, காட்டன் என்று பெயர் வைக்கப்பட்டது. இன்று நடைபெறும் குளோனிங் ஆரா

கொலையாளியை பிடிக்க உதவும் டிஎன்ஏ!

படம்
  சீரியல் கொலைகாரர்களை  பிடிக்க முடியாதா? பிடிக்க முடியாது என்று இல்லை. ஒருவர் செய்தாரா என்று உறுதி செய்தால்தானே அவரைப் பிடிக்க முடியும். இதனால் மதிப்புக்குரிய காவல்துறையினர் சீரியல் கொலைகார ர்களை உடனே வலைவீசி பிடிக்க முடிவதில்லை.  ஒருவர் கொலை செய்திருக்கிறார் என்றால் குறைந்தபட்சம் அவரை சந்தேகப்படக்கூட சில காரணங்கள் ஏதாவது தேவை. எதுவுமே இல்லாமல் ஒருவரை எப்படி சந்தேகப்பட்டு கைது செய்யமுடியும். இதில் சீரியல் கொலைகார ர்கள் சற்று புத்திசாலிகள்தான். முந்தைய பகுதியில் போலீஸ்காரர் வேலைக்கு போகும் வழியில் பெண்களை பிடித்து கட்டி வைத்துவிட்டு மாலையில் வந்து வல்லுறவு செய்வதை கூறியிருந்தோம் அல்லவா? இதனை அலிபி என்பார்கள். நான் இந்த கடத்தல், கொலை நடந்த நேரம் இங்கு இருந்தேன் என ஆதாரத்தை அவர்கள் பதிவு செய்துவிட்டால் அவர்களை நாம் சந்தேகப்படமுடியாது.  இப்படிப்பட்டவர்களை சந்தேகப்பட்டாலும் கூட அவர்கள், விசாரணையில் நல்லவர்களாகவே நடிப்பார்கள். உடல்களை மறைத்து வைப்பவர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றமுடியாது. நெடுங்காலம் உடல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதில் உள்ள தடயங்கள் அழிந

அணுகுண்டு தயாரிப்பு, கொரில்லா பாதுகாப்பு, ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடிப்பு, டிஎன்ஏவின் உருவ அமைப்பு கண்டறிந்த சாதனைப் பெண்கள்!

படம்
                    சியன் சுங் வு இயற்பியல் ஆராய்ச்சியாளர் சீனாவைத் தாயகமாக கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் இவர் . அணு இயற்பியலாளராக உலகின் முதல் அணுகுண்டைத் தயாரிக்க பங்களிப்பை அளித்தவர் . 1949 ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது . இதன் காரணமாக அமெரிக்கா , சீனா உறவு பாதிக்கப்பட்டது . 1973 ஆம் ஆண்டு வரையில் சியன் தனது தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லமுடியாது தவித்தார் . சீனாவில் உள்ள நான்ஜியாங் என்ற பல்கலைக்கழகத்தில் கணிதம் , இயற்பியலை கற்றுத்தேர்ந்தார் . பிறகு அமெரிக்காவில் கதிர்வீச்சு பற்றி படிக்க சென்றார் . இவரது பேராசிரியர் எர்னஸ்ட் லாரன்ஸ் , அணு துகள்களை தூண்டும் கருவி ஒன்றை உருவாக்கினார் . சியன் அதனைப் பயன்படுத்தி அணுக்களை பிரித்து கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கினார் . இவற்றில் புரோட்டான்கள் ஒரே எண்ணிக்கையிலும் நியூட்ரான்கள் வேறுபட்ட எண்ணிக்கையிலும் இருக்கும் . 1940 இல் சியன் தனது படிப்பை நிறைவு செய்தார் . கதிரியக்கம் பற்றி மேலும் அறிய அமெரிக்காவில் தங்கியிருந்தார் . அப்போதுதான் அவருக்கு மான்ஹாட்டன் எனும் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கி

நுண்ணுயிரிகள் கண்காணிப்பு!

படம்
  நுண்ணுயிரிகள் கண்காணிப்பு ஆஸ்திரேலியாவில் நிலம், நீர் உள்ளிட்டவற்றிலுள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சைகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் லேமா முயற்சித்து வருகிறார். இவர், பாசிகள் எப்படி நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பாசிகள் வெளியிடும் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார் கிம்.  நுண்ணுயிரிகளின் டிஎன்ஏக்களைத் தொகுத்து அதனை வரிசைப்படுத்த தொடங்கியுள்ளார். இம்முறையில் 1.7 மில்லியன் பாக்டீரியா, 1.2 மில்லியன் பூஞ்சைகள் ஆகியவற்றோடு பிறவகை நுண்ணுயிரிகள் 1.8 மில்லியன் அளவில் இணைக்கப்பட்டு மக்கள் அணுகும் தகவல்தளமாக இதனை உருவாக்கி வருகிறார். நுண்ணுயிரிகளை ஆவணப்படுத்தும் பணியில் 40 அறிவியல் அமைப்புகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதன் மூலம் வெப்பமயமாதலின் தாக்கத்தை அறிவதோடு, நுண்ணுயிரிகளை எப்படி வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்ற புத்திசாலித்தனமும் இதில் உள்ளது.  மாசுபடுதலை நுண்ணுயிரிகள் மூலம் எப்படி தடுக்கலாம் என்பதற்கும் இவற்றின் டிஎன்ஏக்களை ஆவணப்படுத்த

செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன! அடுத்து என்ன - குளோனிங்கில் அடுத்த கட்டம்?

படம்
                  பெருகும் குளோனிங் செயல்முறைகள் குளோனிங் செய்யும் செயல்முறை முன்னர் வேகமாக தொடங்கினாலும் பல்வேறு தடைகள் , விதிகள் காரணமாக தொடர்ச்சியாக நடைபெறவில்லை . ஆனால் தற்போது செல்லப்பிராணிகளை , போலீஸ் நாய்களை , அழியும் நிலையுள்ள விலங்குகளை குளோனிங் செய்து வருகிறார்கள் . முதன்முதலில் டாலி என்ற ஆட்டை குளோனிங் செய்து பிறக்க வைத்தனர் . இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன . முதலில் இம்முறையை எப்படி பயன்படுத்துவது என தடுமாற்றம் இருந்தது . ஆனால் தற்போது உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பூனை , ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வணிகரீதியில் குளோனிங் செய்து தருகின்றன . அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் கர்ட் என்ற குதிரையை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள் . இந்த இனத்தில் 2 ஆயிரம் குதிரைகள் இருந்தாலும் கூட குளோனிங் செய்வதற்கான தரம் குறிப்பிட்ட இன குதிரை ஒன்றிடம் மட்டுமே இருந்தது . இப்படி நாற்பது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட செல்களை வைத்து குளோனிங் செய்யப்பட்டது . இந்த கர்ட் குதிரை வளர்ந்து பெரியதாகி இனத்தை பெருக்கும்போது இழந்த மூதாதையர்களின் குணநலன

டிஎன்ஏ சோதனைகள் ஆபத்தானவையா? -இங்கிலாந்தில் தொடரும் கண்காணிப்பு!

படம்
மெடிக்கல் நியூஸ் டுடே அதிகரிக்கும் டி.என்.ஏ. சோதனைகள்! செய்தி: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் டி.என்.ஏ வை சோதனை செய்யும் சாதனங்கள் விற்கப்படுகின்றன. இச்சோதனைகளின் விளைவுகள் பற்றிய விவாதங்கள் மருத்துவ வட்டாரங்களில் தீவிரமாகியுள்ளன. இங்கிலாந்தில் டி.என்.ஏ. சோதனைகளைச் செய்வதற்கான சாதனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அங்குள்ள தகவல் கமிஷனர் அலுவலக தகவல்படி, தோராயமாக 40 லட்சம் மக்கள் டி.என்.ஏ சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வணிகத்தில் மூன்று தனியார் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.  டி.என்.ஏ. சோதனை தவறல்ல; முறையான பாதுகாப்பு ஏற்பாட்டுடன் இதனைச் செய்வது அவசியம்.  தனியார் நிறுவனங்கள் மக்களின் தகவல்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தந்து பராமரிக்கிறார்கள் என்ற பயம், புகார்களாக மாறியுள்ளன. இதன் விளைவாக,  தகவல் கமிஷனர் அலுவலகத்திற்கு பத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் என்ன பிரச்னை வர வாய்ப்புள்ளது? இரண்டாம் நிலை நீரிழிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இந்தச் சோதனை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவியல் வட்டாரத்தினர் எச்சரி