இடுகைகள்

டில்லி கலவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அரசு தொடர்ச்சியாக எங்களை முடக்குவதற்கான செயல்களை செய்து வருகிறது! -டேவிட் கிரிப்பின்ஸ், ஆம்னெஸ்டி

படம்
          டேவிட் கிரிப்பின்ஸ் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமலாக்கத்துறை சில ஆண்டுகளாக உங்கள் அமைப்பை குறிவைத்து தாக்குவதாக நினைக்கிறீர்களா? கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு எங்கள் வங்கிக்கணக்கை முடக்குவது, செயல்பாடுகளை தடுப்பது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு விட்டதை வங்கிதான் எங்களுக்கு கூறியது. அமலாக்கத்துறையின் செயல்பாடு இதில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசு, நீங்கள் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறுகிறதே? எங்கள் போர்டு உறுப்பினர்களை விசாரிப்பது, ஆதாரங்கள் இல்லாமல் ஏராளமான வழக்குகளை பதிவது என பல்வேறு விதிமீறல்களை இந்திய அரசு எங்களுக்கு செய்தது. முதல் தகவல் அறிக்கை பதிவானாலும் கூட இன்னும் வழக்குகள் என்னென்ன என்று எங்களுக்கு கூறப்படவில்லை. கடந்த செப்டம்பரில் அரசின் நடவடிக்கைகள் எங்களுக்கு எதிராக தீவிரமாக இருந்தன. முந்தைய அரசும் கூடத்தான் உங்கள் மீது வெளிநாட்டு நிதி பெறுவது தொடர்பான விவகாரத்தில் தடை விதித்தது. எங்களுடைய மாடல் மூலம் வெளிநாட்டில் பணம் பெறும் தேவை இல்லை. முந்தைய அரசை விட இந்த அரசு எங்கள் செயல்பாடு மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. சுதந்தி