இடுகைகள்

பனைமரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுனாமி பாதிப்பால் உருவான நன்செய் அமைப்பின் சூழல் பணி!

படம்
  2004ஆம் ஆண்டு. டிசம்பர் 26 அன்று நாகப்பட்டினம் கடற்புரத்தில் சுனாமி பேரழி ஏற்பட்டது. அதை இன்றுவரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை. அந்தளவு இயற்கை தன் ஆற்றலை மனிதர்களின் கட்டுமானங்கள் மீது பதிவு செய்தது.  அப்போது ஜே செந்தில்குமாருக்கு வயது 18. வரலாறு படிப்பில் இளங்கலைப் பட்டதாரியாக இருந்தார். சுனாமி பாதிப்பை ஈடுகட்டும் செயல்களில் ஈடுபட்ட மனிதர்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.  பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் பாதிப்பை இன்னும் செந்தில்குமார் மறக்கவில்லை. சூழலியல் பாதிப்பை சரிசெய்ய 2019ஆம் ஆண்டு நன்செய் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு தேனி பகுதியில் பசுமையான சூழல் பரப்பை உருவாக்க உழைத்து வருகிறது.  2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இயற்கை பேரழிவுதான் எனக்கு சூழல் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியது. எனவே, நான் காலநிலை மாற்றம், வெள்ளம் இப்படி பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேடினேன் என்றார் செந்தில்.  நன்செய் அமைப்பின் முக்கியமான பணி, ஆணிகளைப் பிடுங்குவதுதான். அதாவது, மரத்தில் சுடர்மணி ஜட்டி, ஜான்சன் சூப்பர் மார்க்கெட், ஜியோ தள்ளுபடி ஆஃபர் என ஒட்டிவிட்டு செல்கிறார்கள் அல்லவா? இவற்றைப் பிடுங

பனைமரங்கள் விதைப்பு பெருநாட்டில் நிறுத்தப்படுகிறது!

படம்
காடுகள் அழிப்பில் பாமாயில் பங்கு! பெரு, கொலம்பியா நாட்டுக்கு அடுத்தபடியாக சூழல் கெடாமல் பனை மரங்கள் நடுவதாக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷன், உள்ளூர் அரசுகளோடு சேர்ந்து காடுகளைப் பாதுகாப்பதாக ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் 2021ஆம் ஆண்டு பெரு நாடு, பாமாயிலுக்காக காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறும்.  இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என ஜூன்பால்மா எனும் பாமாயில் விற்பனைச் சங்கத்தைச் சேர்ந்த கிரிகோரியோ சென்ஸ் கூறியுள்ளார். பெருவில் 86 ஆயிரம் ஹெக்டேர்களின் பனைமரங்கள் பாமாயிலுக்காக விதைக்கப்பட்டுள்ளன. தற்போது, 31500 ஹெக்டேர்கள் புதிய பனைமரங்கள் விதைக்கப்பட உள்ளன. “காடுகள் அழிப்பைத் தடுப்பதில் அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றுபட்டால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். அந்த வகையில் இது ஒரு புது முயற்சி. மாற்றங்கள் நடக்கும் என நம்புகிறோம்” என்கிறார் தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷனைச் சேர்ந்தவரான  சகோன். பெரு நாட்டில் ஆண்டுதோறும் 1100 சதுர மைல் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்