இடுகைகள்

சைக்கோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொய்வாகும் உடலால் ஆற்றல் இழக்கும் மனம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  தொய்வடையும் உடலால் பலவீனமாகும் மனம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன . ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது . குரல் அப்படித்தான் . சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார் . இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை . எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது . 2022 ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் . உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் . தாரகை - ரா . கி . ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன் . 624 பக்கம் . சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது . வேலைச்சுமை தான் காரணம் . செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது . பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் . உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது . புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன் . போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை . இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை . உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள் . நன்றி ! அன்பரசு 29

மாற்றுத்திறனாளி பெண்ணைக் கொல்லத் துரத்தும் புத்திசாலி சைக்கோ! - மிட்நைட் 2021 - கொரிய திரைப்படம்

படம்
  மிட்நைட் தென்கொரிய திரைப்படம் திரில்லர் சொகுசு வேனில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் சுற்றுகிறான். அவன் ஒரு பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கிறான். அடிபட்டு கிடப்பவளை வாய் பேசமுடியாத காது கேளாத பெண் பார்த்து உதவுகிறாள். இதனால் கொலைகாரன், அவளையும் அவளது அம்மாவையும் கொல்லத் துரத்துகிறான். அவள் அந்த கொலைகாரனிடமிருந்து தப்பித்தாளா இல்லையா என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.  படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர் (வி ஹா ஜூன்), வாய் பேச முடியாத பெண் (ஜின் கி ஜூன் ) என இருவருமே சிறப்பாக நடத்திருக்கிறார்கள். அதிலும் இறுதிக்காட்சியில்  திக்கித்திணறி பேச்சிலும், செய்கையிலும் தனது கனவு பற்றி விவரித்து தன்னை உயிரோடு விட்டுவிடும்படி கெஞ்சும் காட்சி. அடுத்து, தன்னைக் காப்பாற்ற கத்திகுத்துபட்ட பெண்ணின் அண்ணனிடம் (பார்க் ஹூன்) உதவி கோரி, இறுதியில் அவன் சுயநலமாக தனது தங்கைக்காக வாய் பேச முடியாத பெண்ணை கைவிடும்போது விரக்தியாகி அழும் காட்சி.  வள்ளுவர் கோட்டத்திலிருந்து போரூர் வரை பல்வேறு சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி வேகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஓடும் தடகள காட்சியை பதினைந்து நிமிடங

அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கும் முரட்டு முட்டாள் பாண்டி சகோதரர்களின் கதை! கடசீல பிரியாணி

படம்
  கடசீல பிரியாணி கடசீல பிரியாணி படத்தின் மையக்கதை அப்பாவைக் கொன்றவர்களை தேடிப்பிடித்து கொல்வதுதான். அதனை படத்தின் இயக்குநர் அவல நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார். அதுதான் படத்தை தனித்துவமாக காட்டுகிறது.  ஆனால் தலைப்பு எதற்கு கடசீல பிரியாணி என வைத்திருக்கிறார்கள் என சிலர் கேட்கலாம். அதற்கான பதிலையும் இயக்குநர் இறுதியில் பதிலாக வைத்திருக்கிறார்.  பாண்டி குடும்பத்தார் மொத்தம் இருவகை. மனைவி, மாமனார், அத்தை என குடும்பமே வன்முறை கொண்டவர்களாக இருக்க கணவன், தனது கடைசிப்பிள்ளையை மட்டும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். மூன்றாவது பிள்ளையோடு தனியாக வாழ்கிறார். இவரது மூத்த இருபிள்ளைகளும் வன்முறையான ஆட்கள் என்பதால், அவர்களை அப்பா சந்திக்கவிரும்புவதில்லை. அவர்கள் தாயோடு வெட்டும் குத்தும் கறிச்சோறுமாக வாழ்கிறார்கள்.  இந்த நேரத்தில் அப்பா, தொழில் சார்ந்து சிலரால் படுகொலை செய்யப்படுகிறார். அதனால் மூத்த இருபிள்ளைகளுக்கும் அம்மா, கொன்றவர்களை பழிவாங்கவேண்டும் என்று சொல்லி பாடம் போட்டு அனுப்புகிறார். எனவே, அவர்கள் ஒரு எமோஷனல் சப்போர்ட்டுக்காக கடைசி பிள்ளையான தம்பியையும்  கூட்டிக்கொண்டு வருகிறார்கள். தம்பிக்க

இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் சைக்கோ டைரி நூலை வாசிக்கலாம்! - இணைய முகவரி இதோ!

படம்
  சைக்கோ டைரி இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் சைக்கோ டைரி நூலை வாசிக்க முடியும். விருப்பமிருந்தால் தரவிறக்கலாம். இல்லையெனில் நூல் போலவே அப்படியே வாசிக்கலாம்.  நன்றி இணைய முகவரி https://ia902307.us.archive.org/3/items/the-heist/psycho%20diary.pdf

தீவிரவாதிகளை சீரியல் கொலைகாரர்கள் என வகைப்படுத்தலாமா? - சைக்கோ டைரி

படம்
            சைக்கோ டயரி தீவிரவாதிகளை தொடர் கொலைகாரர்கள் என வகைப்படுத்தலாமா ? அறிவியல் முறையில் இல்லை என்று தான் கூறவேண்டும் . ஆனால் சிந்தனை முறையில் ஆம் என்று கூறலாம் . குடும்ப வாழ்க்கை , சமூக வாழ்க்கை என இரண்டிலும் வேறுபாடு கொண்ட தனியாக வாழ்க்கையை தொடர் கொலைகாரர்கள் கொண்டுள்ளனர் . தீவிரவாதிகளில் தற்கொலை செய்துகொள்பவராக மாறி தன்னை வெடிக்க வைத்து பெரும் திரளான மக்களை கொல்வது என்ற சிந்தனை தொடர்கொலைகாரர்களுடன் ஒத்துப்போவதுதான் . அதில் மாற்றமில்லை . இவர்கள் கொலை செய்வதில் குறிப்பிட்ட ஐடியா , முறை , சில முன்னோடிகள் என இருக்கும் . இப்படி கொலை செய்வதன் வழியாக இவர்கள் தங்களை முக்கியமானவர்களாக நினைக்கிறார்கள் . பிறருக்கும் இதே தகவல்களை தெரிவிக்கிறார்கள் . தற்கொலைப்படை தாக்குதல்கள் , அரசியல் காரணங்களுக்காக நடைபெறுகின்றன . இதில் கொல்லப்படும் மக்கள் பலியாவதற்கு தகுதியானவர்கள் என்றே தீவிரவாதிகள் நினைக்கின்றனர் . ஆவேசமும் , கோபமும் கொண்ட இளைஞர்களை எளிதாக மூளைச்சலவை செய்து அவர்களை மாற்றி விட முடியும் . தீவிரவாத இயக்கங்கள் பல்லாண்டு காலமாக இதனை செய்துவருகின்றன . உலக நாடுகளில்

சடலங்களை மறைக்க சீரியல் கொலைகாரர்கள் மெனக்கெடுகிறார்களா?

படம்
                சித்திரவதை தொடர் மற்றும் சைக்கோ கொலைகார ர்களை மோசமானவர்கள் என்று எப்படி பிரிப்பது , இதற்கு பலரும் பல்வேறு வித எடுத்துக்காட்டுகளை கூறுவார்கள் . ஆனால் எளிதான ஒன்று யார் உங்களையும் , உங்களது நண்பர்கள் , குடும்ப உறுப்பினர்களை கொல்கிறார்களோ அவர்கள்தான் என்று கூறலாம் . ஒரு கொலைகாரர் எந்தளவு மோசமானவர் என்பதை அவர் செய்யும் சித்திரவதையை வைத்து முடிவு செய்யலாம் . இந்த வகையில் டெப்ரி டாமர் , அனைத்து குற்றவாளிகளுக்கும் முன்னோடியான ஆள் . இவர் , தான் கொல்லும் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பிறகு தலையில் ட்ரில்லிங் மெஷி்ன் வைத்து துளையிடுவார் . பிறகு அமிலங்களை எடுத்து உள்ளே ஊற்றுவார் . இதனால் பலரும் மயக்கத்தில் இருக்கும்போது , இறந்துபோனார்கள் . எதற்கு இப்படி சித்திரவதை செய்தீர்கள் என்று விசாரித்தபோது , நான் செய்யும் விஷயங்களை வலியில்லாமல் செய்ய நினைத்தேன் என பேட்டி கொடுத்தார் டாமர் . பிரான்சில் குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்ற கில்லெ்ஸ் டி ரைஸ் , பதினைந்தாம் நூற்றாண்டில் முக்கியமான கொலையாளி . இதற்கு அடுத்து ஆல்பர்ட் பிஷ் உள்ளே வர