இடுகைகள்

மகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரரான அப்பாவை போலீசில் பிடித்துக்கொடுத்த மகள்!

படம்
  அப்பா, தொடர் கொலைகாரர். தன்னை வெளி உலகில் நல்லவராக காட்டிக்கொண்டு கொலைகளை மறைவாக செய்துவருகிறார். இதை மகள் ஏப்ரல் மெதுவாகத்தான் சந்தேகம் வந்து விசாரணை செய்து கண்டுபிடிக்கிறார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட ஐந்துபேர் கொல்லப்பட்டு விடுகிறார்கள். ஆனாலும் நீதியுணர்வும், குற்றவுணர்ச்சியும் அவரை துன்புறுத்த தானாகவே சென்று காவல்துறையில் தந்தை எட்வர்ட்ஸ் பற்றி புகார் கொடுக்கிறார்.  காவல்துறையும் முப்பது ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது. ஆனால் துப்பு கிடைக்கவில்லை. ஏப்ரல் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் எட்வர்ட்ஸை பிடித்து விசாரித்தனர். அவர் ஐந்து கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் சிறையில் இறந்துவிட்டார்.  இந்த கொலை வழக்கை சற்று விரிவாக பார்ப்போம்.  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வாட்டர்டவுன் நகரம். அப்போது ஏப்ரலுக்கு ஏழு வயது இருக்கும். அவருக்குப் பிறகு நான்கு பிள்ளைகள் உண்டு. ஒருநாள் இரவில், அவரது அப்பா, சீக்கிரமாக கிளம்பவேண்டும் என ஏப்ரலை எழுப்புகிறார். கனசரக்கு வண்டி ஓட்டுநரான எட்வர்ட்ஸ், ஆண்டில் ஆ

காதலி மீது அவளது அப்பா வைத்துள்ள அதீத பாசத்தை தடுக்க முடியாத காதலனின் கதை - நுவ்வே நுவ்வே - திரிவிக்ரம் சீனிவாஸ்

படம்
  நுவ்வே நுவ்வே  இயக்குநர் திரிவிக்ரம்  தருண், ஸ்ரேயா சரண் அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தில் மகளின் காதலன் சிக்கிக்கொண்டால் என்னவாகும்?  படத்தில் நாயகன் என்பது பிரகாஷ்ராஜ்தான். படம் தொடங்கி இறுதிக்காட்சி வரை உறுதியாக நின்று நடித்திருக்கிறார். இது திரிவிக்ரம் சீனிவாசின் முதல் படம்.  படத்தில் முரணான பாத்திரங்களுக்கு இடையில் வரும் வசனங்கள் கச்சிதமானவை. அச்சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. கதையைப் பார்ப்போம்.  அஞ்சலி, கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறாள். இவளது அப்பா தொழிலதிபர். அதைத்தாண்டி மகள் மீது பாச வெறி கொண்டவர். மகளுக்கு கொடுக்கும் பரிசு கூட பாசத்தைப் போல ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. மகளுக்கும் அம்மாவை விட அப்பாவே ஆதர்சம். மகளுக்கு, தனது குடும்பத்தினர் ஏன் அவரது மூத்த பையன் பரிசு கொடுக்கும் முன்னரே பரிசு கொடுத்து திகைப்பு ஏற்படுத்துகிறார். இப்படி இருப்பவர், அதீத பாசத்தால் திருமணம் என்று வரும்போது என்ன முடிவு செ்யகிறார் என்பதே கதை.  படத்தின் தொடக்க காட்சியே மது அருந்தியபடி பிரகாஷ் தனது நண்பரிடம் பேசும் காட்சிதான்.  அதில் தனது மகளைப் பற்றி பாசத்தோடு பேசுகிறார். மனம் கனிந்த பேச்சில் ந

நோயை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னை உணர்ந்துகொள்ளும் தந்தையின் கதை! ட்ரெயின் டு பூஸன்

படம்
  டிரெய்ன் டு பூஸன் 2016 Director:  Yeon Sang-ho Sequel:  Peninsula கொரியப் படம். ஜோம்பிகளை மையமாக கொண்ட படம்தான். படம் ஜோம்பிக்கான காரணம், அதன் வைரஸ், அதன் வெவ்வேறு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவில்லை. ஜோம்பிகள் தாக்கும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்திருக்கிறார்கள். இப்படி உணர்ச்சிகளோடு சிறப்பாக ஒன்று சேர்வதால் படம் மகத்தான வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.  காங் வூ, டான் லீ ஆகியோர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காங் வூ, நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கிறார். குழந்தை அவருடன் இருக்கிறது. காங் வூ தனது தாய், குழந்தையுடன் ஒரே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மகளுக்கு பிறந்த நாள் வருகிறது. மகள், அம்மாவைப் பார்க்க போகலாம். அதுதான் எனது ஆசை என்கிறாள். இதனால், அவளை பூஸன் நகருக்கு ரயிலில் கூட்டிச்செல்கிறார் காங் வூ. அப்படி போகும்போது ரயிலில், ஜோம்பி பெண் ஒருவர் ஏறிவிடுகிறார். கூடவே ரயில் பணியாளர் பெண் ஒருவரைக் கடித்துவிடுகிறார். இதனால் ரயில் முழுக்க ஜோம்பிகள் பெருக, இருபது பேர் மட்டுமே இதில் பிழைக்

சமையல் கலைஞனை இயக்கும் சிறுவயதுத் தோழி! தீனி

படம்
      தீனி             தீனி தமிழ் டப் அசோக் செல்வன், நித்யா, ரிது ஏ.எஸ் சசி லண்டனில் உள்ள அமரா என்ற ஹோட்டலுக்கு தேவ் என்ற இளைஞன் வேலைக்கு வருகிறான். அவனுக்கு உடல் எடை அதிகம். தசை தொடர்பான நோய் இருப்பதாக கூறுகிறான். நிறைய நேரங்களில் திடீரென வினோதமாக நடந்துகொள்கிறான். பாத்திரங்களை தட்டி விடுகிறான். பிறர் மீது மோதுகிறான். யாரோ இழுத்தது போல வேறு திசைக்கு செல்கிறான். ஆனால் இந்த குறைபாடுகளைத் தாண்டி அவனுக்கு நல்ல மனம் உள்ளது. பிறரின் பிரச்னைகளை அவனால் கவனிக்கமுடியும்.  அவன் வேலை செய்யும் ஹோட்டல் தலைமை சமையல்காரர் நாசர் மிக கண்டிப்பானவர். அவர்  பதினைந்து ஆண்டுகளாக சமைக்காமல் இருக்கிறார். அதற்கு அவர் தனது ஆசை மகளை பிரிந்ததுதான் காரணம். இதனால் தினசரி தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற அளவிற்கு மன அழுத்தத்திற்கு சென்று திரும்புகிறார். இந்த நேரத்தில் தேவின் வருகை அவரசது செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறுக்கமாக இருக்கும் அந்த சமையல் அறையின் சூழலை கலகலப்பாக மாற்றுகிறான் தேவ். அவன் சமையல் காரன் என்றாலும் கூட அவனை உடனே சமைக்க விடவில்லை. பாத்திரங்களை கழுவ வைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவன் கவலைப்பட

எதன் கேள்வியைக் கேட்பது சமூகமா, மனமா? - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? இங்கு பனியும் வெயிலுமாக இருக்கிறது. வரும் ஏழாம்தேதி எங்கள் இதழ் சார்ந்த போட்டி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.  அதற்கு நாங்கள் கட்டாயமாக செல்லவேண்டியுள்ளது. அவசியமில்லைதான். ஆனால் அழைக்கிறார்கள். நிகழ்ச்சியில் முழுக்க விற்பனைப்பிரிவு அதிகாரிகள் முன் நிற்பார்கள். அங்கு நாங்கள் எதற்கு? இதற்கு முன்பே ஒரு விழா கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. நாங்கள் தேமே என்று நிற்கவைக்கப்பட்டோம். முக்கியமான விஷயம், முதலாளி வருகிறார் என்பதுதான்.  ஓல்ட்பாய் என்ற கொரிய படம் பார்த்தேன். படம் பார்த்து அது சொல்லும் விஷயங்களை புரிந்துகொள்வது கடினம்தான். இந்த விஷயத்திலிருந்து வெளியே வருவது சிரமமாகவே இருக்கும். தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கை பற்றி வதந்தி பரப்புவதன் பாதிப்பை ஒருவனுக்கு எப்படி பாதிக்கப்பட்டவன் புரிய வைக்கிறான் என்பதுதான் கதை. அண்ணன், தங்கை, அப்பா, மகள் உறவு அதுபற்றிய உண்மை அறியாமலே காமத்தினால் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக நொறுங்குகிறது. சமூக விதிகளின்படி வாழ்வதா, மனம் சொன்னபடி வாழ்வதா என்பதுதான் படத்தின் அடிப்படைக் கேள்வி. திகைக்

அமெரிக்கர்களின் தனிமையைப் பேசும் நூல்! - நூல் அறிமுகம் ஜூலை மாதம் 2021

படம்
              ரேஷர் பிளேட் டியர்ஸ் எஸ் . ஏ . காஸ்பை தனது மகன்களையும் , தம்பதிகளையும் கொன்ற கொலைகாரர்களை அவர்களின் தந்தை யர் இருவரும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதை . நிகழ்கால கதையின் நடுவே பழிவாங்குபவர்களின் கடந்தகால வாழ்க்கையு்ம் வந்துபோகிறது . அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் வன்முறையான சம்பவங்கள் கொண்ட கதை . கோஸ்ட் ஃபாரஸ்ட் பிக் சுயன் ஃபங்   அப்பா இறந்த பிறகு அவரைப் பற்றிய இறந்த கால விஷயங்களை மகள் எப்படி தெரிந்துகொள்கிறாள் என்பதைப் பற்றி இந்த நூல் விவரித்துச் செல்கிறது . இந்த கதையில் மகளின் மனதிலுள்ள கேள்விகள் , குடும்பம் , அவளுக்கு கிடைத்த அன்பு பற்றிய ஏராளமான விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது . சீக் யூ கிரிஸ்டன் ராட்கே வரலாறு , தனிமை , ஒருவருக்கொருவர் எப்படி தகவல் தொடர்பு கொள்வது என பல்வேறு விஷயங்களை விளக்கி கிராபிக் கட்டுரை நூலாக ஆசிரியர் எழுதியுள்ளார் .

அப்பாக்களை கொண்டாடும் தினத்தில் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்கள்!

படம்
                தந்தையரை கொண்டாடும் நூல்கள் ! வரும் ஜூன் மாதம் அப்பாக்களை நினைவுகூருவதற்கான தினம் வருகிறது . 20 ஆம் தேதி வரும் இந்த தினத்தை நூல்களைப் படித்து கொண்டாடலாம் அல்லவா ? இதற்காக சில நூல்களை பார்ப்போம் வாங்க ! பெஸ்ட் சீட் இன் தி ஹவுஸ் 18 கோல்டன் லெசன்ஸ் பிரம் எ பாதர் டு ஹிஸ் சன் கோல்டன் பியர் என்று அழைக்கப்படும் ஜேக் நிக்லாஸ் என்பவரின் மகன் எழுதியுள்ள நூல் இது . அவரது தந்தையும் அம்மாவும் இணைந்த நடத்திய குடும்ப வாழ்க்கை , கடைபிடித்த விஷயங்கள் , விதிகள் , கட்டுப்பாடுகள் , பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என ஏராளமான விஷயங்கள் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் . டாட் இஸ் ஃபேட் 2013 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் , எழுத்தாளர் ஜிம் காபிகன் எழுதிய நூல் . இவர் தனது குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர் . இப்படி பிறந்தவர் எப்படி இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்தார் . தன்னை அப்பா எப்படி பார்த்துக்கொண்டார் என்பதையும் , எழுந்த பிரச்னைகளையும் நேர்மையாக எழுதியுள்ளார் . நூலின் பின்பகுதியில் காபிகனின் குடும்ப புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது வாசகர

72 மணிநேரத்தில் கொலைக்குற்றவாளியைக் கூண்டிலேற்ற காலப்பயணம்! மிரேஜ் 2018

படம்
    மிரேஜ் 2018 ஸ்பானிய திரைப்படம்  Spanish Durante la tormenta Directed by Oriol Paulo Produced by Mercedes Gamero Mikel Lejarza Eneko Lizarraga Jesus Ulled Nadal Written by Oriol Paulo Lara Sendim Starring Adriana Ugarte Chino Darín Javier Gutiérrez Álvarez Álvaro Morte Nora Navas Music by Fernando Velázquez Cinematography Xavi Giménez 1989 ஆம் ஆண்டு டிவியில் கிடாரை வாசித்த பதிவு செய்துகொண்டிருக்கிறான் சிறுவன் ஒருவன். அப்போது எதிர்வீட்டில் ஏதோ சண்டை போடுவது போல சத்தம் கேட்க, அங்கு சென்று பார்க்கிறான். மனைவி கத்தியால் குத்துபட்டு கிடக்க, மேலிருந்து கீழே வரும் கணவரின் கையில் கத்தி. பயந்துபோய் சிறுவன் ஒடுகிறான். அவனை துரத்தியபடி கொலைகார கணவர் வருகிறார். சாலையில் வேகமாக வரும் காரை எதிர்பார்க்காமல் சிறுவன் செல்ல, அவன் அடிபட்டு கீழே விழுந்து உயிரை விடுகிறான்.  2014இல் அதேசிறுவன் வாழ்ந்த வீட்டுக்கு வெரா ராய் என்ற பெண்மணி கணவனுடன் தங்குவதற்கு வருகிறாள். அங்கு நிகோ என்ற இறந்துபோன சிறுவனின் டிவி, வீடியோ கேமரா கிடைக்கிறது. அந்த நேரம் பார்த்து வானில் புயல் ஒன்று ஏற்படுகிறது. இடி, மின்னல், காற்

மகளிடம் பேச முடியாமல் தடுமாறும் கூலிக்கொலைக்கார தந்தையின் மனப்போராட்டம்! - ஃபிரைடே கில்லர்

படம்
            பிரைடே கில்லர் 2011 Director: Yuthlert Sippapak Actors: Anna Chuancheun , Apinya Sakuljaroensuk , Chumphorn Thepphithak , Jaran 'See Tao' Petcharoen , Kowit Wattanakul , Ploy Jindachote , Suthep Pongam Country: Thailand வெள்ளிக்கிழமை மட்டும் பிறரை திட்டம் போட்டு கொல்லும் கொலைகாரன் . சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறான் . வந்தவுடன் அவனுக்கு சிகரெட் கொடுத்து புகைக்க சொல்லுகிறான் ஒருவன் . அவனை விடுதலையானவன் பார்த்ததே கிடையாது . அவன் யாரென்று கேட்கும்போது , திடீரென கத்தியால் அவனைக் குத்திவிட்டு ஓடிவிடுகிறான் . கீழே ரத்தசகதியில் கிடப்பவனை காவல்துறையைச் சேர்ந்த பெண் ஒருவள் காப்பாற்றுகிறாள் . அவனுக்கு தன் அம்மா எழுதிக்கொடுத்த கடிதத்தை கொடுக்கச்சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள் . அக்கடிதத்தைப் படிப்பவன் , ஆவேசம் அடைகிறான் . ஆனால் மீண்டும் அந்த கடிதத்தைப் படித்துவிட்டு தன்னை மருத்துவமனையில் சேர்த்த பெண்ணைப் பார்க்கச் செல்கிறான் . அங்கு நேரும் ஒரு அசம்பாவித நிகழ்ச்சியை அவன் தன்னுணர்வின்றி தடுக்க நினைக்க , அது அவன் மேல் வீண்பழியாக விழுகிறது . இதனால் அவனை ம

சுயலநலமில்லாத அன்பு அனைத்தையும் சகித்துக்கொள்ளும்! அமரம் அகிலம் பிரேமா - ஜொனாதன் எட்வர்ட்ஸ்

படம்
    அமரம் அகிலம் பிரேமம்         அமரம் அகிலம் பிரேமம் ஜொனாதன் எட்வர்ட்ஸ் தமிழில் நாம் பார்த்து நெகிழ்ந்த அபியும் நானும் படம்தான். தெலுங்கில் வசனங்களை நறுக்கென்று எழுதி, பாசத்தில் சுயநலம் கூடாது என செய்தி சொல்லி படம் எடுத்திருக்கிறார்கள்.   படத்திற்கு பெரும் பலம் அப்பாவாக நடித்துள்ள ஶ்ரீகாந்த் ஐயங்கார். படத்தின் நாயகன் இவர்தான். படம் முழுக்க இவர் வருகிறார். நாயகன் அமர், அகிலாவாக நடித்த விஜய்ராம், சிவ்சக்தி சச்தேவ் ஆகியோர் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். படத்தின் முக்கியமான மையம், அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசம். காதல் மகளின் மனதில் பூக்கும்போது காணாமல் போகிறதா இல்லையா என்பதுதான். அருண் பிரசாத் பாத்திரத்தைப் பொறுத்தவரை அவரே அனைத்து முடிவுகளை எடுக்க நினைப்பதில்லை. மகள் தான் செய்யும், செய்யப்போகும் விஷயங்களை தன்னிடம் சொல்லவேண்டும் என நினைக்கிறார். ஆனால் காதல் வரும்போது கள்ளத்தனம் அனைவரின் மனதிலும் குடியேறும்தானே? அகிலாவுக்கும் அப்படியே ஆகிறது. அப்பா அருண், கடும்கோபமாகி இனி அவள் என் மகள் கிடையாது என அனைத்து அன்பையும் வெறுப்பாக்கி காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். இதனால் எஞ்சினியர் ஆக