இடுகைகள்

காந்தி 150 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  காந்தி காந்தி பிறந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வாழும்போதும், மறைந்த பிறகும் கூட அவரளவுக்கு சர்ச்சையான மனிதர் இந்தியாவில் குறைவுதான். ஆன்மிக குருக்களை மறந்துவிடுங்கள். வாழ்க்கை, த த்துவம், பொருளாதாரம், தொழில், இயற்கைச் சூழல் என பல்வேறு தளங்களிலும் காந்தியின் செல்வாக்கு இன்றும் உள்ளது.  இதற்கு முக்கியமான காரணம், காந்தி என்ற மனிதரின் மூலமாக ஒருவர் பெறும் ஊக்கம் பல்வேறு செயல்களாக மாறியுள்ளது. இதற்கு நிறைய இயக்கங்களை அடையாளமாக கூறலாம்.  காந்தியை எப்படி புரிந்துகொள்வது என்பது இன்று நமக்கிருக்கும் சிக்கல். ஏனெனில் காலந்தோறும் காந்தியை எப்படி பார்ப்பது, கொள்கைகளை புரிந்துகொள்வது பற்றி நூல்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. காந்தியின் ராமன் நூல், பல்வேறு ஆங்கில நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. நூலில் எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவின் நேர்காணலும் உள்ளது. இவர் தனது நூலில் வரலாற்றில் காந்தியின் இடத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். காந்தியின் போராட்டம் எப்படிப்பட்டது, தென்னாப்பிரிக்காவில் அவரின் போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எப்படி உதவியது என்பதை நூலில் வாசி

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி ஆங்கில நாளிதழ்களில் சிறப்புக்கட்டுரைகள் வெளிவந்தன.அதனைத் தொகுத்து தமிழாக்கம் செய்துதான், காந்தியின் ராமன் நூல் வெளியாகியிருக்கிறது.  இந்த நூலின் தொடக்க வடிவம் பிரதிலிபி தமிழில் வெளியானது. ஆனால், அந்த கட்டுரைகள் எழுதப்பட்ட வேகத்தில் பதிவிடப்பட்டதால் அதில் ஒரு சீரற்ற தன்மை இருந்தது. காந்தியின் ராமன் நூல் வடிவத்தில் பிழைகள் நீக்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளன.  நூலின் அட்டைப்படம் மட்டும் இப்போது.... பின்னாளில் நூலை தரவிறக்கி வாசிக்கும்படியான இணைய முகவரி வெளியிடப்படும். நன்றி! நன்றி அட்டைப்படம் - dough belshaw, creative commons பிரதிலிபி தமிழ் வலைத்தளம்   டைம்ஸ் ஆப் இந்தியா  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

காந்தி தன் வாழ்வில் கண்ட மகத்தான எதிரி!

படம்
காந்தியின் மகத்தான எதிரி! பி.ஏ.கிருஷ்ணன் ஈ.வி. ராமசாமி நாயக்கர் என்ற பெயரைக் கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? உறுதியான உண்மையைப் பட்டென்று பேசும் குரல்தானே! இருபதாம் நூற்றாண்டின் மகத்தான சீர்திருத்தவாதிகளில் பெரியாருக்கு முக்கியமான இடமுண்டு. அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாத பெரியார், மக்களின் தலைவர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுடன் பேசுவதற்காகச் செலவிட்டு பரிசாக செருப்புகளையும் கற்களையும் பெற்றவர். ஆனால் தன் வாழ்நாள் முழுக்க சுயநலமாக மட்டும் செயல்படவில்லை. காந்தியின் மகத்தான எதிரிகளில் மூன்று முக்கியமானவர்கள் உண்டு. ஜின்னா, அம்பேத்கர் ஆகியோர் காந்தியைப் பற்றிய கருத்துகளை திடமாக எழுதி ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இதில் பெரியார் மூன்றாவதாக வருகிறார். தமிழ் பேசாதவர்களுக்கு பெரியார் அறியப்படாதவராக இருப்பார். ஆனால் அவரின் கருத்துகளையும் கேள்விகளையும் கேட்பவர், தீவிரமான அவரின் விசுவாசியாக மாறுவது நிச்சயம். இன்றும் கூட பெரியாருக்கு அவரின் முழு அரசியல் சமூக வாழ்க்கையைப் பேசும் வரலாறு கிடையாது. திராவிட இயக்கம் வெளியிட்ட வரலாறு போல் அல்லாது தமிழ் அல்லாதவர்களும் ப

காந்தியை எதிர்க்கும் இன்றைய எதிரிகள் யார்?

படம்
காந்தியின் அன்றைய எதிரிகளும் இன்றைய எதிரிகளும்! டக்ளஸ் ஆலன், பேராசிரியர் மைன் பல்கலைக்கழகம்.  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலத்திலும், அவரை நினைவுகூரும் 150 ஆம் ஆண்டு தினத்திலும் கூட அவரின் கொள்கைகளும், அவை பெற்றுத்தந்த எதிரிகளையும் மறக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே புதுமையான மனிதராக காந்தி தெரிந்தார். காந்தி வாழும் காலத்தில் அவரை எதிர்த்தவர்களின் முக்கியமானவர்கள் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாவர்க்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இன்றும் இவரது எதிரிகளின் தொண்டர்கள் காந்தியையும், அவரது கொள்கைகளையும் எதிர்த்து வருகின்றனர். அவரின் பல எதிரிகளின் தமக்கான கொள்கைகளை காந்தியின் பேச்சு மற்றும் எழுத்துக்களிலிருந்து எடுத்து பயன்படுத்தி வரும் விநோதமும் நடைபெற்று வருகிறது. அதையும் காந்தி அனுமதிக்கிறார்தான். காந்தி பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதர். நமது 20 ஆம் நூற்றாண்டு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது. அணுஆயுதங்கள், சுயலமான அரசியல், தன் முனைப்பை மட்டுமே கொண்ட நுகர்வு, இனக்குழு சார்ந்த வன்முறை அதிகரிப்பு என காந்தி தன் காலத்தில் வலியுறுத்திய பல்வேறு விஷயங்

காந்தி புழங்கிய இடங்கள் - ஒரு பார்வை!

படம்
காந்தி 150 காந்தி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள நகரங்களிலும் புழங்கியுள்ளார். அவர் அப்படி சென்று வந்த இடங்கள் ஒரு பார்வை. போர்பந்தர் காந்தி  1869 ஆம் ஆண்டு பிறந்த இடம். இவரது தந்தை திவானாக இருந்தார். தற்போது இந்த இடம் மியூசியமாக உள்ளது. குஜராத் தண்டி 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் செய்த இடம். இங்கு காந்திக்கு சிலை உண்டு. இந்த இடத்தை சுற்றுலாப்பயணிகள் வரும்படி ஈர்க்க தண்டி பாரம்பரிய காரிடாராக மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. சம்பரான் காந்திய போராட்ட ங்களில் ஒன்றான சத்தியாகிரகத்தை காந்தி இங்கிருந்தான் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளுக்கு உதவினர் என்ற காந்தியின் எண்ணம் நொறுங்கியது. கௌசானி காந்தி இங்கு அனசக்தி யோகம் நூலை எழுத தங்கியிருந்தார். டெல்லி காந்தி, தன் வாழ்க்கையில் இறுதி 144 நாட்களை கடும் மனவேதனையுடன் கழித்த இடம் இது. இங்குள்ள சாலையின் பெயர் 30 ஜனவரி மார்க். ஆம். காந்தி இறந்த நாள்தான் சாலையின் பெயரும் கூட. பிர்லாஹவுஸ் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அந்த இடத்தின் இன்றைய பெயர் காந்தி ஸ்மிருதி.

என் படங்களில் வெளிவந்த காந்தி! - இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி

படம்
ராஜ்குமார் ஹிரானி, சினிமா இயக்குநர்.  லகோ ரகோ முன்னாபாய் எனும் படத்தை எடுத்தார். அதில் பேசிய காந்திய வழிமுறைகளுக்காக இன்றும் நினைவுகூரப்படும் நட்சத்திர இயக்குநர். படம் முழுக்க சமூகம், மக்கள், கல்வி என பேசுபவர் காந்தியை படத்திற்கு கூட்டி வந்து உலக மக்களின் கவனம் ஈர்த்தார்.  காந்தி உங்களுக்கு எப்படி அறிமுகமானார்? எனக்கு காந்தி பற்றிய அறிமுகம் பாட நூல்களில் அவரைப்பற்றி படித்ததுதான். வெளிப்படையாக சொன்னால் காந்தி பற்றிய அறிவு எனக்கு குறைவுதான். ரிச்சர்ட் அட்டன்பரோவின் படம் பார்த்துத்தான் காந்தி பற்றி தெளிவு வந்தது. புனேவில் திரைப்படக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். காந்தி பற்றி நிறைய நூல்களைப் படித்தாலும் லூயிஸ் பிளெட்சரின் காந்தி பற்றிய சுயசரிதை எனக்கு திருப்தி தந்தது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று விவாதித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நான் அவற்றைக் கேட்டு காந்தி பற்றி நிறைய படிக்கத் தொடங்கினேன். காந்தி இயல்புக்கு மாறானவர்தான். ஆனால் அவரன்றி நமக்கு யார் அகிம்சை வழியைக் காட்டியிருக்க முடியும்? உங்கள் படங்களில் காந்தியை

காந்தி பற்றி அறிய நூல்கள் இதோ!

படம்
காந்தி பற்றி வெளிவந்துள்ள நூல்களில் முக்கியமானது. அவருடைய வாழ்க்கை, கொள்கை, அரசியல் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது.  காந்தியின் வாழ்க்கை அவருடைய செயல்பாடுகளாலும், அவரை தீவிரமாக விமர்சித்த ஆட்களாலும்தான் நிறைவு பெற்றது. ரிச்சர்ட் அட்டன்பாரோவின் காந்தி படம் மற்றும் அதுதொடர்பான கருத்துகள், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் இந்த நூல் பேசுகிறது.  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜூடித் எம் ப்ரௌன், எழுதியுள்ள காந்தியின் சுயசரிதை. காந்தியை சாமியார் அல்லது அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து மாற்றி வாசிப்பவர்களுக்கு நெருக்கமாக காண்பிக்கிறது.                                 1869 -1948 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த காந்தி எதிர்கொள்ளாத நம்பிக்கையும் கிடையாது. வெறுப்பும் கிடையாது. அவரின் வாழ்க்கை, அரசியல், சமூகம் பற்றிய பார்வைகளை சுருக்கமாக முன்வைக்கும் நூல் இது.       பழிக்குப்பழி என துடித்துக்கொண்டிருந்த மக்கள் வன்முறை வேண்டாம் என்று சொல்லி ஒரு பக்கிரி சொன்னதைக் கேட்டார்கள் என்றால் அவர் பெயரை காந்தி என நீங்களே கூறிவிடுவீர்கள். அவர் அகிம

இந்தியாவின் முக்கிய பிரச்னைகளுக்கு காந்தியத் தீர்வுகள்!

படம்
பின்டிரெஸ்ட் இந்தியாவின் பிரச்னைகளும் - காந்தியத் தீர்வுகளும்! இந்தியா சுதந்திரமடைந்தபோது,  அதனுடன் பல்வேறு சமஸ்தானங்கள் ஒன்றாக இணைந்தன. பின்னர்தான் அரசியலமைப்புச் சட்டப்படி ,மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. இவையெல்லாம் நிர்வாகரீதியானவையே. அன்றிலிருந்து இன்றுவரை நிலப்பரப்பு, கலாசாரம், மக்கள் என்று பார்த்தால் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய மாநிலங்கள் பலவும் தமக்கிடையே உள்ள இயற்கை வளங்களை, பல்வேறு பூசல்களுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றன.  அரசியல்கட்சிகள், இதனைப் பயன்படுத்திக்கொள்வதால் மாநில பிரச்னைகள் தேசிய அளவிலான பிரச்னைகளாக மாறுகின்றன. ஆட்சியாளர்கள், மாநில நலன் சார்ந்த பார்வையில் முடிவு எடுக்க நேரிடுகிறது. அப்போது, மாநிலங்களுக்கிடையே கடும் பிரிவினை போராட்டங்கள் மூளுகின்றன. சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிரம்மபுத்திரா நதி மற்றும் கர்நாடகம், தமிழகத்திற்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு, இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கு காந்தியடிகள், நீதிமன்றத்தை நாடுவதும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்வதையும்  தனது தீர்வாக முன்வை

அகிம்சைச் சுடர் காந்தி! - காந்தி 150

படம்
pinterest காந்தி! காந்தி படிப்பில் சுமாரான மாணவர்தான். கணக்கில் நன்றாகப் படித்தவர். புவியியல் பாடத்தில் தடுமாறினார். காந்திக்கு பதிமூன்று வயதில் திருமணமானது. இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துபோக, அதிலிருந்து குழந்தை திருமணங்களை தீவிரமாக எதிர்த்து வந்தார் காந்தி. காந்தியின் ஆங்கில ஆசிரியர் அயர்லாந்துக்காரர். எனவே அவரின் ஆங்கிலம், ஐரிஷ் தன்மை கொண்டிருக்கும். காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹென்றி டேவிட் டோரியு முன்மாதிரி. இவரைப் பற்றிய போராட்டச் செய்திகளை காந்தி சிறையில் படித்து அறிந்தார். 1930 ஆம் ஆண்டு காந்தி முதல் இந்தியராக டைம் பத்திரிகையில் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி அமைதிக்கான நோபலுக்கு ஐந்துமுறை (1937,1938,1939,1947,1948) பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் பரிசு வழங்கப்படவில்லை. 2006 ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது. தன்னை பிறர் புகைப்படம் எடுப்பதை கடுமையாக வெறுத்தவர் காந்தி. ஆனால், அவரது காலத்தில் அதிகம் புகைப்படம் எடுக

காந்தி தீர்த்து வைத்த ஆற்றுநீர் பஞ்சாயத்து! - காந்தி 150!

படம்
காந்தி @ 150 காந்தி இன்று வாழ்ந்தால் இந்தியாவில் நடைபெறும் பூசல்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என கண்ணை மூடி யோசித்தால் என்ன தோன்றுகிறது? அப்படியே பலரும் தூங்கிச் சாய்வார்கள். ஆனால் இந்த கான்செஃப்டில் நாங்கள் யோசித்து ஓர் கட்டுரை எழுதினோம். இது ஓகே ஆனால் அடுத்து அணு உலையோ என்று கூட பயம் வந்தது. பயப்படாதடா சூனா பானா என்று முதுகை நாமே தட்டிக்கொடுத்து சமாளித்து எழுதிய ராவான கட்டுரை. இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களில் முக்கியமானவை, நதிகள். இவை குறிப்பிட்ட மாநிலங்களில் உருவாகி, அவை செல்லும் பாதையிலுள்ள பல்வேறு மாநிலங்களை வளப்படுத்துகிறது.  உதாரணத்திற்கு காவிரி நதி. கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி எனுமிடத்தில் காவிரி நதி உற்பத்தியாகிறது. இந்த நதி தோன்றிய இடத்திலிருந்து பாய்ந்து சென்று கர்நாடக மாநிலத்திலுள்ள பல்வேறு நகரங்களை வளப்படுத்துகிறது. பின்னர், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை வளப்படுத்தி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பல்லாண்டுகளாக காவிரியின் நீர்வளத்தை பங்கிடுவதில் கர்நாடகம் - தமிழகத்திற்கிடையே கருத்துவேறுபாட

கலைந்துபோன கனவு - இந்திய சுயராஜ்ஜியம் - காந்தி

படம்
pixabay இந்திய சுயராஜ்ஜியம் காந்தி ரா.வேங்கடராஜூலு இன்று இந்தியா பெரும் சிதைவில் உள்ளது. கலாசாரம், மதிப்பீடுகள் என அனைத்திலும் பிரதானமாக பணமே உள்ளது. மேலும் ஒருவர் கூறும் கருத்தை மற்றொருவர் பயத்துடன் ஆமோதிக்க வேண்டிய  கட்டாயம் உள்ளது காரணம், கருத்தை கூறுபவரின் பின்னே ஆயுதங்களுடன் கும்பல் நிற்கிறது. இவர்களின் தலைவர் ஆல் இஸ் வெல் என்று அயல்நாட்டில் சொல்லும்போதே, உள்நாட்டில் இறைச்சி சாப்பிட்ட காரணத்திற்காக ஒருவர் கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். காரணம், அவர் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணம்தான். உ.பியில் மதிய உணவுத் திட்டத்தில் நடந்த  ஊழல் உண்மையைச் சொன்ன பத்திரிகையாளர்  மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதியப்படுகின்றன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று இனி கூறுவது கஷ்டம். இந்து கும்பலை விரட்டி, கலவரத்தை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்திய போலீஸ்காரர்,  திட்டமிட்டு கொலை செய்யப்பட மாநில முதல்வரே உதவுகிறார்.  இதுபோன்ற சிதைவுகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. மற்றொரு அபாயம், அடிப்படைவாத தலைவர்கள் ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வாதிகாரத்த

காந்தி கேட்ட நான்கு கேள்விகள்! - காந்தி 150

படம்
பின்டிரெஸ்ட் காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு விழாக்களை கொண்டாட முடிவு செய்துள்ளது. காந்தி, ஏன் பிற தலைவர்களை விட முன்னே நிற்கிறார்? காரணம் தான் வலியுறுத்திய கொள்கைகளை அடையாளமாக்கினார். அவரின் கண்ணாடி , இடுப்பில் உடுத்திய ஒற்றைத்துணி, பாக்கெட் வாட்ச், கைத்தடி என அனைத்துமே எளிய நாடோடி  மனிதருக்கானவை. அவரை சந்திக்கும் எந்த வெளிநாட்டவருமே அவரை நாடோடி பக்கிரியாகவே கருதுவார்கள். ஆனால் அவரின் எழுத்துகள், சிந்தனைகள் வழி அவரை அணுகுபவர்கள் அவர்மீதான நேசத்தில் விழுவார்கள். காரணம், யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகர எளிமையான எழுத்து அவருடையது. இன்றும் அவரது கொள்கைகளைப் படித்து அதன்பால் ஈர்ப்பு கொண்ட காந்தியர்கள் உண்டு. இவர்கள்தான் இன்று சமூகத்தை இயக்கி வருகிறார்கள். மதம் காந்தி இறுதிவரை இந்து மத சார்பானவராகவே இருந்தார். மத வர்ணங்களை ஆதரித்தார். அதில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றார். மதம் என்பதை மக்களுக்கு வழிகாட்டும் பாதையாக, உண்மையை கண்டறிய உதவும் ஒளியாக அவர் கண்டார். ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை அவலத்திற்குள்ளாக்கும்