இடுகைகள்

அரட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேஸ்புக் வணிக பயன்களுக்காக, மக்களின் தகவல்களை பாதுகாக்க முயற்சிக்காது! - ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ

படம்
  ஜோஹோ நிறுவனர், இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு பத்ம ஸ்ரீயை வென்றிருக்கிறார். தென்காசியில் 2019ஆம் ஆண்டே கிளம்பி வந்து கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் புரட்சியாளர் இவர். அவரிடம் பேசினோம்.  பத்ம ஸ்ரீ விருது பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது? இதனை விளக்குவது கடினம். கலவையான உணர்வுகளால் பீடிக்கப்பட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இதன் காரணமாக விருது என்பது எனக்கு பெரிய விஷயமாக பட்டது. பொதுவாக இந்த விருதுகளை சமூகத்திற்கு சுயநலமின்றி உழைப்பவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் . நான் வணிகம் செய்யும் தொழிலதிபர். எனக்கு கொடுக்கப்பட்டதை, இந்தியாவிற்கு வேறுவழிகளில் திரும்பக் கொடுக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.  வாட்ஸ் அப்பின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் இப்போது அரட்டை என்ற மென்பொருளை தயாரித்து வருகிறோம். அது இன்னும் சோதனை முறையில்தான் உள்ளது. இந்தியாவிற்கென செய்திகளை அனுப்புவதற்கு தனி மென்பொருள் தேவை என நினைத்து மென்பொருளை உருவாக்கினோம். இதுபோலவே இன்னும் பல்வேறு பொருட்களை உருவாக்கவேண்டும் என நினைக்கிறேன். பேஸ்புக் தான் கூறியபடி