பிட்ஸ் செய்திகள்
இந்தியாவின் சுதேசி ஜிபிஎஸ் ! இந்தியா விரைவில் தனித்துவமான சுதேசி ஜிபிஎஸ் சாட்டிலைட் நாடு பெருமையை நெஞ்சில் தாங்கப்போகிறது . இஸ்ரோ IRNSS-1H எனும் புதிய சாட்டிலைட்டை விண்வெளியில் நிலைநிறுத்துவதற்கான கவுண்டிங்கை தொடங்கிவிட்டது . ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட உள்ள இந்த செயற்கைக்கோள் , முன்னர் ஏவி செயலிழந்த IRNSS-1A எனும் செயற்கைகோளுக்கு மாற்று . இதில் மூன்று துல்லிய அணுக்கடிகாரங்களும் உள்ளன . பிஎஸ்எல்வி - சி 39 ராக்கெட் மூலம் 1,425 கி . கி எடையுள்ள செயற்கைக்கோள் செலுத்தப்படவிருக்கிறது . சரி , எதற்கு இந்த சாட்டிலைட் ? ரயில்வே , ஆய்வுப்பணிகளுக்கும் , இடம் சார்ந்த பணிகளுக்கும் இவை மிகவும் பயன்படும் . அதோடு பேரழிவு மேலாண்மை , வாகனங்களை கண்டறிவது உள்ளிட்ட ராணுவ பணிகளுக்கும் அவசியமான சேட்டிலைட் இது . இந்த சீரிஸில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் அடுத்த சேட்டிலைட் ரிலீஸ் . ஆபீசில் தூங்க உதவும் கேப்சூல் ! ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து தரும் ? பஸ் வசதி , கேன்ட்டீன் , இன்க்ரிமென்ட் , போனஸ் ஆகியவை இதில் அடங்கும்