இடுகைகள்

விபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிடிவாதமாக குழந்தையுடன் உள்ள நாயகனை காதலிக்கும் குழந்தைநல மருத்துவர்!

படம்
  சந்தோஷம்  நாகார்ஜூனா, ஷ்ரியா சரண், பப்லு வெளிநாட்டில் வாழும் நாயகனுக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை. பள்ளி சென்று வருகிற வயது. நாயகனின் தங்கை, அவளது கணவர் என மூவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்று, அஞ்சலில் வருகிறது. அது வேறு யாருமல்ல. நாயகனின் மனைவி வழி சொந்தங்கள்தான். நாயகன் தனது தங்கை, மாப்பிள்ளை ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இந்தியாவிற்கு செல்கிறார். ஆந்திரத்திற்கு மாமனார் வீட்டுக்கு சென்றாலும், அங்கு பெரிய வரவேற்பு இல்லை. காரணம், நாயகன் அவர்கள் வீட்டு பெண்ணை சம்மதமின்றி அழைத்துச் சென்று காதல் மணம் செய்துகொண்டதுதான். இந்த பின்னணிக் கதையில் நாயகன் விரும்புகிற பெண், அவனை விரும்புகிற மனைவி வழி சொந்தக்காரப் பெண் என இருவர் வருகிறார்கள். திருமணம் செய்து சொற்ப ஆண்டுகளில் மனைவி விபத்தில் இறந்துவிட, நாயகனை விரும்பும் சொந்தக்கார பெண் மீண்டும் அவனது வாழ்க்கைக்கு வருகிறாள். அவளை நாயகன் ஏற்றானா, மனைவி வழி சொந்தங்கள் இந்த உறவுக்கு பச்சைக்கொடி காட்டினார்களா என்பதே மீதிக்கதை.  படத்தில் வில்லன் என யாருமே கிடையாது. இங்கு எதிரியாக ஒருவருக்கு முன்னே நிற்பது காலம்தான

சாலை விபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன்!

படம்
      எலா செப்பனு - தருண், ஷிரியா       எலா செப்பனு தருண் , ஷிரியா சரண் ஜெர்மனி , இந்தியாவில் ஆந்திரம் என இரு நாடுகளில் பயணிக்கிற கதை . தற்செயலாக நடைபெறும் விபத்தால் நாயகி மணம் செய்துகொள்ளப்போகும் அவளது காதலன் இறந்துபோக , நாயகன் காதலனின் இழப்பை எப்படி ஈடுகட்டுகிறான் என்பதே கதை . இறந்துபோனவர் நடத்தும் தொழில் , குடும்பம் , சமூகம் என அனைத்து இடங்களிலும் தன்னை நாயகன் பொருத்திக்கொண்டு சாப விமோசனம் தேடுகிறார் . இந்த நேரத்தில் தன்னால் வாழ்க்கை இழந்த நாயகியையும் சந்தித்து , அடையாளம் மறைத்து அவரைத் தேற்றுகிறார் . தொழிலை மேலே மீட்டு கொண்டுவருகிறார் . இந்த நேரத்தில் அவர் மெல்ல நாயகியை காதலிக்கத் தொடங்குகிறார் . நாயகியும் அப்படித்தான் . இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா , நாயகன் பற்றிய உண்மை நாயகிக்கு தெரிந்ததா , காவல்துறை அதிகாரி நாயகனின் தற்செயல் விபத்துக்காக அவரை கைது செய்தாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி . படத்தில் ஷிரியா சரணுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது . ஆனால் அவரோ எங்கோ பராக்கு பார்ப்பது போல நிற்கிறார் . ஒரு நிறுவனத்தை தனது காதலனோடு சேர்ந்து நடத்தியவர

தனது அப்பா செய்த தவறை காதலால் சரிசெய்யும் ஆனந்த்!

படம்
  ஆனந்த் ராஜா, கமாலினி முகர்ஜி இயக்கம் சேகர் கம்முலா   தெலுங்கில் இயக்குநர் மணிரத்னம் போல படம் இயக்க முயற்சிக்கும் ஆள்தான் சேகர் கம்முலா. இவரது பட கதாபாத்திரங்கள் நல்ல வேலையில் இருப்பார்கள் . பிறகுதான் காதலிப்பார்கள். அதில் வரும் பிரச்னைகள்   என கதை நகரும். ஆனால் இந்தப்படம் அந்த ரகத்தில் வராது படத்தில் ரூபாவுக்கு பெற்றோர்கள் சிறுவயதில் விபத்தில் இறந்துவிட, தனியாளாகவே வளர்கிறாள். அவளுக்கு துணையாக தோழி ஒருத்தி அருகில் இருக்கிறாள். தான் வேலை செய்யும் அலுவலகத்தில் மார்வாடி பையன் ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிறாள். கல்யாணச்செலவு கூட அவள்தான் செய்கிறாள். ஆனால், பையன் அம்மா பிள்ளை. எனவே அம்மா சொன்னதைக் கேட்டு ரூபாவை மணம் செய்கிறான். ஏறத்தாழ ரூபாவை வீட்டுக்கு வேலைக்காரி போலத்த்தான் மாற்றிக்கொள்ள கல்யாண சடங்கு. இந்த நேரத்தில் உண்மை தெரிய வந்து ரூபா, கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லி நிறுத்துகிறாள். தன்மானம், சுதந்திரம் என்ற காரணத்திற்காகவே கல்யாணத்தை நிறுத்துகிறாள். பிறகு தான் வேலை செய்த பழைய ஆபீசுக்கே மீண்டும் பணிக்குச் செல்கிறாள். ராகுல் என்ற முன்னாள் காதலனை மட்டும் மீண்டும் தவிர்க்கி

மோசமான குற்ற வழக்குரைஞருக்கு எதிராக வாளேந்தும் இளைஞன்! - பேட் பிராசிகியூட்டர்

படம்
  பேட் பிராசிகியூட்டர் பேட் பிராசிகியூட்டர் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப் போஸ்டர் நன்றாக இருந்தால் தொடர் நன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்லாம். அதற்கான எடுத்துக்காட்டு இந்த தொடர். இந்த தொடரில் நடிக்க ஜின் என்ற பாத்திரத்திற்கான நடிகரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதிர்ச்சியான காட்சியில் கண்களை உருட்டி விழிக்கிறார். சண்டைக்காட்சிகளில்   துறுதுறுப்பாக இருக்கிறார். காதல் என்பதை பெண்களுக்கென ஒதுக்கிவிட்டனர். எனவே, நடிப்பு என்பதை ஜின் ஜூங் என்ற பாத்திர நடிகர் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. இயக்குநரும் வராத ஒன்றை எதற்கு இழுத்துக்கிட்டு என நினைத்துவிட்டார். ஷின் ஆ ரா பாத்திரத்தில் நடித்த நடிகை நன்றாக நடித்திருக்கிறார். அடுத்து, கணினி ஹேக்கராக வருபவரின் காமெடியும், சுன் சுல் என்ற மோசடிக்காரரின் காமெடி வில்லத்தனமும் பரவாயில்லை. மீதி அனைத்துமே பரிதாபகரமான தோல்வியாக முடிகிறது. சியோ என்ற வழக்குரைஞர். பெரும்புள்ளிகளின் சட்டவிரோத விஷயங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி கொரிய சட்டத்துறையையே கைக்குள் வைத்திருக்கிறார். எந்த வழக்கை விசாரிப்பது,

வாகனத்துறையை மாற்றியமைத்த செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் – வேலையை பாதிக்குமா? 2005ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் பிகின்ஸ் ஆங்கிலத் திரைப்படத்தில், நாயகன் அதிநவீன கணினியைப் பயன்படுத்தி ரிமோட் முறையில் பேட்மொபைலை கட்டுப்படுத்துவார். தனது குரல் மூலம் அதனை இயக்கி செயல்படுத்துவார். அறிவியல் புனைகதை படங்களில் இந்த படம் முக்கியமானது. நடைமுறையில், 2023ஆம் ஆண்டில் கூட மெஷின் கன்களை, புவிஈர்ப்புவிசைக்கு எதிராக பயன்படுத்துவது கடினமானது. இன்றுவரையில் கூட இந்த தொழில்நுட்பம் உருவாகி வளரவில்லை. செயற்கை நுண்ணறிவு பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களிலும் ஓட்டும் வாகனங்களிலும் கூட செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்த வகையில் எதிர்காலத்தில் நீங்களும் டிஜிட்டல் பொருட்களை பேட்மேன் போல பயன்படுத்த வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி முறையில் கார்களை குரலைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். அப்படித்தான் இன்று கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களின் தலையீடு இன்றி, ஸ்டீயரிங், ஆக்சிலேட்டர், பிரேக் ஆகியவற்றை டெஸ்லா, கடிலாக் ஆகிய கார்கள் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. இதற்கு இந்த நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை தங்களது கார்கள

பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற மோசமான விபத்துகள்

படம்
  பிரிட்டனில் நடைபெற்ற சுரங்க விபத்து   மோசமான சுரங்க விபத்து என்பது பிரிட்டனில் நடந்த ஆண்டு 1966. இங்கு அபெர்ஃபான் என்ற கிராமப் பகுதியில் சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சுரங்க வேலைக்காக வந்த மக்கள் அங்கேயே தங்கத் தொடங்கினர். இதனால் அங்கு மக்கள்தொகையும் அதிகரித்து வந்தது. சுரங்கம் தோண்டுபவர்கள் அதில் உருவாகும் கழிவை முறையாக அப்புறப்படுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலும் அதற்கு தனியாக வேறு செலவழிக்க வேண்டுமாக என அங்கேயே அருகில் உள்ள இடங்களிலேயே கழித்துக் கட்டுவது வழக்கம். அப்படித்தான். இந்த சுரங்கத்தில் உருவான கழிவுகளையும் கிராமத்தில் குவித்து வைத்தனர். அது பெரிய பிரச்னையாகவெல்லாம் இல்லை. அதுவும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 1966 வரைதான். அப்போதுதான் அங்கு 17 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் நிலம் மென்மையாக குழைந்துபோய் கிடந்தது. கழிவுகள் உயரமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை அப்படியே கீழே பள்ளமாக இருந்த கிராமத்தை நோக்கி வரத் தொடங்கின. இப்படி வந்த சுரங்க கழிவுகளின் மேகம் மணிக்கு 21 மைல். பள்ளி, மருத்துவமனை, 18 வீடுகள் என அனைத்தையும் சுரங்க கழிவுகள் மேலே விழுந்து உடைத்த

ஆளுமை பிறழ்வின் அடிப்படை, அடையாளம் காணும் முறை

படம்
  ஆளுமை பிறழ்வு பல்வேறு வகையாக பத்து முக்கிய வகையாக இருப்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா. குறைபாடுகளைப் பார்க்கும் முன்னர் நாம் ஆளுமை என்பதை தெளிவாகப் பார்த்துவிடுவோம்.  ஆளுமை என்பது எப்படி உருவாகிறது, ஒருவர் வாழ்ந்து வரும் சூழ்நிலை, அவருக்கு கிடைக்கும் விஷயங்கள், கல்வி, குடும்ப சூழ்நிலை, இதனால் அவர் உலகை புரிந்துகொள்ளும் விதம். சிந்தனை, ஆகியவற்றை நாம் ஆளுமை உருவாக்கும் அம்சங்கள் எனலாம். நாட்டின் அதிபராக உள்ளவர் பற்றி கருத்து என்றால் அதை நீங்கள் அடுத்த பிரதமர் வேறு ஒரு கட்சி சார்ந்து தேர்ந்தெடுக்கப்படும்போது மாற்றி்க்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் ஆளுமை அப்படிப்பட்டதல்ல.  உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் இந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். காலப்போக்கில் இவரது சில யூகங்கள் தவறு என்றாலும் கூட உளவியல் ஆய்வில் முக்கியமான ஆய்வுப்பங்களிப்பு செய்தவர் இவர். இவரைப் பற்றி தமிழில் நிறைய நூல்கள் வந்துள்ளன. இணையத்தில் கூட இவரைப் பற்றி தேடிப்படிக்கலாம். ஒருவரின் ஆளுமை என்பது அவர் பிறந்து சில ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். பிற விலங்கினங்கள் குட்டிகளாக பிறந்து

பின்தங்கும் ஆங்கில நூல்கள் வாசிப்பு!

படம்
  திறமைக்கான வாய்ப்பு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? மருத்துவர் முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம் . அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும் . அதில் சாதித்து வெல்ல முடியும் . நான் வேலை செய்யும் இதழின் பொறுப்பாசிரியர் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர் . இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம் . எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது . ஆனால் , நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது . இதுவரையிலும் பிறரிடம் நான் செய்த வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது . இப்போது முழங்கால் வலி மட்டுப்பட்டுள்ளது . இதனால் நடக்க முடிகிறது . உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன் . இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன் . அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதால் ஏற்படும் ஆற்றல் இழப்பை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம் எனத் தோன்றுகிறது . அன்பரசு 13.8.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------ டிஜிட்டல் வடிவில் மாறும் வாசிப்பு

மூளையில் மின்னும் வலி!

படம்
  உணர்வெழுச்சி கொண்ட நாவல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா ? வேலை எப்படி போகிறது ? தாய் - என்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய நாவலைப் படித்தேன் . 1334 பக்கம் . தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம் . பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன . ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன் . அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது . பார்ப்போம் . பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன . இந்தளவு பதிப்பக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை . அறையில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை . பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம் . சாதாரண பாய் வாங்கினால் , எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது . தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது . அன்பரசு 12.7.2021 மயிலாப்பூர் ------------------------------ மூ