இடுகைகள்

விருது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உளவியலாளருக்கு வழங்கப்பட்ட விருதுக்கு வந்த சர்ச்சைகளும், விமர்சனங்களும்!

படம்
  ரேமண்ட் காட்டெல், இருபதாம் நூற்றாண்டில் மதிக்கப்படும் உளவியலாளர்களில் ஒருவர். இவர் மனிதர்களின் அறிவுத்திறன், ஊக்கம், ஆளுமை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர். மனிதர்களின் அறிவுத்திறன் பற்றிய ஆய்வு செய்யலாம் என்ற எண்ணம், சிறுவயதில் பிரிட்டிஷ் ஆய்வாளரான சார்லஸ் ஸ்பியர்மேன் மூலம் உருவானது.  இங்கிலாந்தில் ஸ்டாஃப்போர்ட்ஷையர் என்ற நகரில் பிறந்தார். வேதியியலில் பட்டம் பெற்றவர், பிறகே உளவியலுக்கு மாறி அதில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டனில் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி கற்பித்து வந்தார். அங்கேயே லெய்செஸ்டர் என்ற குழந்தைகளுக்கான கிளினிக் ஒன்றை நடத்தினார். பிறகு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கேயே தங்கி 1973ஆம் ஆண்டு வரை கற்பித்தலை தொடர்ந்தார். மூன்று முறை திருமணம் செய்தவர், ஹவாய் பல்கலைக்கழக வேலைக்கு மாறினார். 1997ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் சங்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதளித்து பெருமைப்படுத்தியது. ஆனால் கேட்டல் மீது விருதுக்கு தகுதியானவரா என விவாதம், விமர்சனங்கள், வசைகள் பெருகின. தன்னுடைய ஆய்வுகளுக்கு ஆதரவாக பேசியவர், வழங்கிய விருதை ஏற்க மறுத்துவிட்டார். விமர்சனங்கள் ஏற்படுத்திய ம

ஜார்ஜ் ஆர்மிடேஜ் மில்லர்

  ஜார்ஜ் ஆர்மிடேஜ் மில்லர் இவர் சார்லஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். 1941ஆம் ஆண்டு ஸ்பீச் பாத்தாலஜி பாடத்தில் எம்ஏ பட்டம் வென்றார். பிறகு, ஹார்வர்டில் உளவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்லி ஸ்மித் ஸ்டீவன்ஸ் ஆய்வகத்தில் ஜெரோம் ப்ரூனர், கார்டன் ஆல்போர்ட் ஆகியோருடன் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின்போது ராணுவம் ரேடியோக்களை இடைமறித்து கேட்கும் பணிகளை செய்து தர கோரியது. 1951ஆம் ஆண்டு எம்ஐடியில் பணியாற்றச்சென்றவர். பிறகு 1955ஆம் ஆண்டு மீண்டும் ஹார்வர்டிற்கு திரும்பினார். அங்கு நோம் சாம்ஸ்கியோடு இணைந்து வேலை  செய்தார். 1960ஆம் ஆண்டு, அறிவாற்றல் படிப்புக்கான மையத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேலை செய்துள்ளவருக்கு 1991ஆம் ஆண்டு தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது.  முக்கிய படைப்புகள்  1951 language and communication  1956 the magival number seven plus or minus two 1960 plans and the structure of behaviour

தெரிஞ்சுக்கோ - திரைப்படம்

படம்
  திரைப்படம் லார்ட் ஆஃப் ரிங்க்ஸ் (2001-2003)   படத்தில் 19 ஆயிரம் உடைகள், 48 ஆயிரம் கவசங்கள், ஹாபிட் பாத்திரத்திற்கான ஆயிரம் ஜோடி   கால், காதுகள் பயன்படுத்தப்பட்டன. 2005ஆம் ஆண்டு வெளியான ஜெர்மானிய திரைப்படமான மெட்ரோபோலிஸின் போஸ்டர், 6,90,0000 டாலர்களுக்கு விற்றது. 1939ஆம் ஆண்டு, ‘தி விஸார்ட் ஆஃப் ஆஸ்’ திரைப்படம் வெளியானது. இதில் டெர்ரி என்ற பாத்திரத்தில் நடித்த நாய்க்கு வார சம்பளமாக 125 டாலர்களை அளித்தனர். இது அந்த படத்தில் நடத்த பிற நடிகர்களுக்கு வழங்கிய ஊதியத்தை விட அதிகம். 1973ஆம் ஆண்டு’ பேப்பர் மூன்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில், டாடும் ஒ நீல் என்ற பத்து வயது சிறுமி நடித்திருந்தார். இவருக்கு 1974ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ‘மான்ஸ்டர் இன்க்’ படத்தில் வரும் சல்லி பாத்திரத்தின் உடலில் உள்ள 2.3 மில்லியன்மயிர்க்கற்றைகள் அனிமேஷன் கலைஞர்கள் முழுக்க வரைந்துள்ளனர 2012ஆம் ஆண்டு ‘சைனீஸ் ஜோடியாக்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் பதினைந்து மடங்கு அங்கீகாரத்தை ஹாங்காக் நடிகரான ஜாக்கிசான் பெற்றார். 1928ஆம் ஆண்டு மிக்கி மௌஸின் எட்டு நிமிட திர

அலமாரியில் கால்நடை தீவனப்பயிர்களை வளர்க்கும் விவசாயி - நாமக்கல் சரவணன்

படம்
  அலமாரியில் சோளம் விதைத்து அதை கால்நடைகளுக்கு போடுவதை எங்கேனும கண்டிருக்கிறீர்களா? அதை நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன் செய்கிறார். வெளிநாடுகளில் மண் இல்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறி விளைவிப்பதை பற்றி அறிந்திருப்பீர்கள். அதை நமது ஊரில் சாத்தியப்ப்படுத்துகிறார். தனது உறவினர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு சொல்லித் தருகிறார். அரியக்கவுண்டம்பட்டியில் விவசாயத்திற்கென சிறியளவு நிலம் இருக்கிறது. ஆனால் அவர் வளர்க்கும் கால்நடைகளுக்கான தீனி என்று வரும்போது அது போதுமானதாக இல்லை., எனவேதான் மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் வழியை கிரிஷி விக்யான் கேந்திரா எனும் மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்பில் அறிந்து கற்றுத் தேர்ந்திருக்கிறார். இதில் மண் இல்லாத காரணத்தால் நீர் மூலமே அனைத்து சத்துகளையும் பயிருக்கு தரவேண்டியிருக்கும். குறைவான அளவில் கால்நடை தீவனங்களை, பருப்புகளை விளைவிக்க முடியும். சந்தையில் கிடைக்கும் தீவனங்களை விட மலிவாக விளைவிக்க முடிந்திருக்கிறது என்பதுதான் இதில் முக்கியமான சங்கதி. 500 கிலோ விதையில் 4.5 கிலோ கால்நடை தீவனத்தைப் பெறமுடிகிறது. விதை சோளத்திற்கு இருபத்து நான்கு மணிநேரமும் நீர் வி

ஆவணப்படங்களை தரமாக உருவாக்கி விருதுகளைப் பெறும் இந்தியர்கள்!

படம்
  ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் உலக அளவில் கவனம் பெற்ற இந்திய ஆவணப்படங்கள் தி சினிமா டிராவலர்ஸ் ஷிர்லி ஆப்ரஹாம் – அமித் மாதேஷியா சிறப்பு தங்க கண் விருது, கேன்ஸ் 2016 விவேக் – ஆனந்த் பட்வர்த்தன் சிறந்த ஆவணப்பட விருது- 2018ஆம் ஆண்டு   ஐடிஎஃப்ஏ, நெதர்லாந்து எ நைட் ஆஃப் நோயிங் நத்திங் பாயல் கபாடியா சிறந்த ஆவணப்படம், தங்க கண் விருது கேன்ஸ் 2021 ஆம்ப்ளிஃபை   வாய்சஸ் விருது, 2021 ரைட்டிங் வித் ஃபயர் ரின்டு தாமஸ் – சுஸ்மித் கோஷ் உலக சினிமா ஆவணப்படம் – பார்வையாளர்கள் விருது, தாக்கம் மற்றும் மாற்றத்திற்கான விருது, சிறப்பு ஜூரி விருது, சண்டேன்ஸ் விழா 2021, பார்வையாளர்கள் விருது, ஐடிஎஃப்ஏ தி நெதர்லாந்து 2021, சிறந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்ட ஆவணப்படம் 2022 வொய்ல் வீ வாட்ச்டு வினய் சுக்லா ஆம்ப்ளிஃபை வாய்சஸ் விருது டிஐஎஃப்எஃப் 2022 ஆல் தட் பிரீத்ஸ் சௌனாக் சென் உலக சினிமா ஆவணப்படம் – கிராண்ட் ஜூரி விருது, சண்டேன்ஸ் விழா 2022, சிறந்த ஆவணப்படம், தங்க கண் விருது, கேன்ஸ் 2022, சிறந்த ஆவணப்பட விருதுக்கான பரிந்துரை, ஆஸ்கர் விருது, 2023 தி எலிபன

மாணவர்களை விஞ்ஞானிகளாக்க புதுமையான முறைகளைக் கையாளும் அறிவியல் ஆசிரியர் - மைதிலி

படம்
  மாணவர்களை விஞ்ஞானிகளாக்க முயலும் ஆசிரியர் – மைதிலி புதுக்கோட்டையில் உள்ள கம்மங்காட்டில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, அறிவியல் ஈடுபாட்டில் தலைசிறந்த பள்ளி என பெயர் பெற்றுவருகிறது. மாநில அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசுகளை,  இந்த அரசு பள்ளி மாணவர்கள் பெற்று வருகிறார்கள். இதெல்லாம் கடந்து மத்திய அரசின் உதவித்தொகைக்கான தேர்வுகளை எழுதியதில் 14 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் என்ன காரணம் என்று கேட்டால், மைதிலி டீச்சர் என கோரசாக சொல்லுகிறார்கள் மாணவர்கள். ‘’எனக்கு மாணவர்களின் ஒழுக்கம் என்பது முக்கியம். பாடங்களை சாதாரணமாக சொல்லித் தந்தபிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் மாணவர்கள் நான் கற்றுத்தரும் வழிகளை ஏற்கத் தொடங்கினார்கள்’’ என்று பேசும் மைதிலி, வேதியியல் பட்டதாரி. இவர் அறிவியல் பாடங்களின் முக்கியமான அம்சங்களை சினிமா பாடலாக மாற்றிப்பாடுகிறார். பிறகு, பாடங்களை எப்போதும் போல நடத்துகிறார். இதனால் மாணவர்களுக்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக புரிகிறது. அறிவியல் கண்காட்சிகளில் கம்மங்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கோள் மண்டலம், பிளாஸ்டிக்கில் இருந்து ப்ளூடூ

மனிதனை மாற்றுவது கலையா,கலைஞனா? - கடிதங்கள்- கதிரவன்

படம்
  22.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரை கேட்டதாக சொல்லவும். எங்கள் நாளிதழை டிஜிட்டலாக ஐந்து பக்கங்களில் உருவாக்கி பள்ளிகளுக்கு அனுப்புகிறேன் என்று எடிட்டர் சொன்னார். அதாவது, தினசரி எங்களுக்கு வேலை உண்டு.  இன்று மருத்துவர் ஜீவா பசுமை விருது பெற்ற சமஸ், டி.எம்.கிருஷ்ணா ஆகியோரது வீடியோ பார்த்தேன். ஊக்கமூட்டும்படி இருந்தது. சமஸ் செயலூக்கம் பற்றியும், ஜீவா ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினார். வாய்ப்பாட்டு கலைஞர் கிருஷ்ணா தனது செயல்பாடு, நம்பிக்கை பற்றி உறுதியாக பேசினார். கலை எப்படி மனிதனை மாற்றுகிறது, அதை கலைஞன் எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை பேசியது அருமை. இன்றைய நாள் இனிதானது இவர்களால்தான். காலையில் கவிதா அக்கா பேசினார். தற்போது ஓமனில் வாழ்கிறார். எப்போதும் உற்சாகமாக இருக்கும் நபர்களில் ஒருவர். தனக்குப் பிடித்த நூல்கள், வாசிப்பு என சிறிது நேரம் பேசினோம். விரைவில் ஈரோட்டுக்கு வருகிறேன் என்றார். இவர் எனக்கு நண்பரல்ல. அண்ணனின் தோழி.  தி ஆர்க் மிஷன் அமைப்பை நடத்தும் ஆட்டோ ராஜா என்பவரைப் பற்றி படித்தேன். 750க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை கொடும்

கனடாவில் சூழல் விருது பெற்ற இரண்டு சூழலியலாளர்கள்!

படம்
  ஏமி லின் ஹெய்ன் விருது பெற்ற சூழலியலாளர்கள்! மேரி அசெல்ஸ்டின் ஸ்கொம்பெர்க், கனடா 35 ஆண்டுகளாக கிராம மக்களின் இனக்குழு சார்ந்து செயல்பட்டுவருகிறார். டஃப்ரின் மார்ஸ் அமைப்பைத் தோற்றுவித்த உறுப்பினர்கள் ஒருவர். இயற்கைச்சூழலைக் காப்பதற்கான பல்வேறு பிரசாரங்கள், செயல்பாடுகளை செய்து வருகிறார். இவருக்கு, ஸ்கோம்பெர்க் கிராமத்திலுள்ள பள்ளிக்குழந்தைகள் வைத்த செல்லப்பெயர், தவளை அத்தை. யார்க் பல்கலைக்கழகத்தில் புவியியல் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேரி அசெல்ஸ்டின். நடப்பு ஆண்டில் மேரி  செய்த பல்வேறு சூழல் பணிகளை பாராட்டி,  கனடா காட்டுயிர் கூட்டமைப்பு (CWF) சூழல் பணிகளுக்காக ரோலண்ட் மிச்னர் கன்சர்வேஷன் விருது (Roland Michner Conservation Award) வழங்கியுள்ளது.  ”இயற்கை மீதான நேசம் பற்றிய சிந்தனைகளை நான் பிறருக்கு பகிர்ந்து வருகிறேன். இயற்கை  வழங்கிய  ஆச்சரியமான அனுபவங்களே அதைப் பாதுகாக்கும் ஊக்கத்தை பிறருக்கு தரத்தூண்டியது ” ஏமி லின் ஹெய்ன் கல்காரி, கனடா தாவரங்களை ஓவியங்களாக வரையும் ஓவியக்கலைஞர். வரைவதற்கான இங்கையும் இயற்கையான பொருட்களிலிருந்து  தயாரித்து பயன்படுத்துகிறார். எ பின்ட் சைஸ்டு இ

ஆயிரம் மரங்களை வளர்த்த பொள்ளாச்சி அரசு உதவிபெறும் பள்ளி

படம்
  பொள்ளாச்சியில் ரெட்டியாரூர் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மாணவர்களை மரக்கன்றுகளை ஊன்ற வைத்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர். இவற்றை நட ஊக்கப்படுத்தியவர் விவசாய ஆசிரியர் டி பாலசுப்பிரமணியன்.   இதனை நட்டவர்கள் அனைவருமே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தானே? ஆயிரம் மரங்கள் இப்போது வளர்ந்துள்ளது ஆச்சரியம் என்றாலும் இதற்கான திட்டமிடல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கிறது. இதனை பள்ளி நிர்வாகம் முன்னெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் விதைகளை பெற்றிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமும் நிறைய விதைகளைப் பெற்றிருக்கிறது. விதைகளை முளைக்க வைத்து அவை முளைவிட்டதும் கிராமத்தினருக்கும், அருகிலுள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அரசுப்பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.  பள்ளியில் விளையும் காய்கனிகளை பறித்து சமைத்து சாப்பிட சமையல் அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்

அம்மாவின் வாழ்க்கையைக் காக்க தன்னை கறைப்படுத்திக்கொள்ளும் மகன்! - தி பவர் ஆப் டாக் - ஜேன் கேம்பியன்

படம்
  தி பவர் ஆஃப் டாக் தி பவர் ஆப் டாக் ஜேன் கேம்பியன்  1925இல் நடைபெறும் கதை. நியூசிலாந்தின் மான்டனா நகரில் கதை நிகழ்வுகள் நடக்கின்றன. பில், ஜார்ஜ் என்ற இரு சகோதரர்களின் கதை. இருவருக்கும் தொழிலே மாடுகளை மேய்ப்பதுதான். இதற்கென குதிரைக்காரர்கள் இருக்கிறார்கள். இப்படி செல்லும் வாழ்க்கையில் ஜார்ஜ், உணவகம் நடத்தும் பெண் ஒருவரைக் காதலித்து மணம் செய்கிறார். இது பில்லுக்கு பிடிப்பதில்லை. முன்னமே உணவகப்பெண், அவரின் மகன் ஆகியோரை கடுமையாக கேலி செய்தவன் பில்.  இப்படியிருக்கும் நிலையில் பில்லின் வீட்டுக்கே உணவகப் பெண் வர, இருவருக்கும் இடையிலான உறவுச்சிக்கல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம்.  பெனடிக் கும்பர்பச், படம் நெடுக வெறுப்பை உமிழும் மனிதராகவே வருகிறார்.இவர்தான் பில். தனது சகோதரர், உணவகப்பெண்ணை மணம் செய்துகொள்ளப்போவதை அறிந்து குதிரையை ஆக்ரோஷமாக அடிப்பார். படம் நெடுக்க வெறுப்பும், கோபமுமாக காட்சிகளில் வரும் வெயில் பார்வையாளர்களின் மனதில் வரும்படி நடித்திருக்கிறார்.  கிர்ஸ்டன் டன்ஸ்ட் தான் உணவகப் பெண். இவர் குடிபோதைக்கு அடிமையாகி தவித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் பில் செய்யும் கேலிகளால்

சர்ச்சைகளின் நாயகி அருந்ததி ராய்!

படம்
  எழுத்தாளர் அருந்ததி ராய் சூசன்னா அருந்ததி ராய் நவம்பர் 24ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு பிறந்தவர். பெண்ணியவாதியான மேரி ராய், கொல்கத்தாவின் தேயிலை தோட்ட மேலாளர் ரஜிப் ராய் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சகோதரர் ஒருவர் உண்டு. அவரது பெயர் லலித்குமார் கிறிஸ்டோபர் ராய்.  ஷில்லாங்கில் பிறந்தவர், கேரளா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் வளர்ந்தார். இவரது இரண்டாவது வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். கட்டுமானம் வடிவமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் அருந்ததி ராய். 1988ஆம் ஆண்டு அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி தேசிய விருதை வென்றார். 1992ஆம் ஆண்டு எலக்ட்ரிக் மூன் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். இதே ஆண்டில்தான் சிறிய விஷயங்களின் கடவுள் என்ற நூலை எழுத தொடங்கினார். 1996ஆம் ஆண்டில் நூல் பணியை முடித்தார். இந்த நாவலுக்கான பரிசாக மேன்புக்கரை 1997இல் வென்றார். இந்த நாவல்தான் உலகம் முழுக்க இவரை அறிய வைத்தது.  சிறிய விஷயங்களின் கடவுள் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் ஆகும். ரகேல், எஸ்தா என இரட்டையர்களின் வாழ்க்கையை அரசியல், ஜாதி பின்புலத்தில் வைத்து பேசுகிற கதை இத

பசுமை விருதுகளைப் பெற்ற இயற்கை செயல்பாட்டாளர்கள்!

படம்
  சுந்தர்லால் பகுகுணா சுந்தர்லால் பகுகுணா சிப்கோ இயக்கத்தை தொடங்கிய தலைவர். இமாலயத்திலுள்ள மரங்களை காக்கும் இயக்கம், காந்திய அணுகுமுறை போராட்டத்திற்காக புகழ்பெற்றது. 1980-2004 வரையிலான ஆன்டி டெரி டாம் எனும் இயக்கத்தை நடத்தி தலைமை தாங்கினார். சிப்போ இயக்கம் இவரது மனைவியினுடையது.  உத்தரகாண்டில் மரங்களை ஒப்பந்ததாரர் வெட்ட வந்தனர்.அப்போது போராட்டக்காரர்கள் மரத்தை வெட்டுவதை தடுக்க மரத்தைக் கட்டிப்பிடித்து தடுத்தனர். 1981-83 வரையிலான காலத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மரங்களை வெட்டக்கூடாது என பிரசாரம் செய்தார்.  இந்திராகாந்தியை சந்தித்து மரங்களை வெட்டுவதற்கான தடையைப் பெற்றார். இதனால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒருவர் மரங்களை வெட்ட முடியும்.    சாலுமாரதா திம்மக்கா சாலுமாரதா திம்மக்கா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 385 ஆலமரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஹூலிகல் குதூர் நெடுஞ்சாலையோரம் இப்பணியை செய்துள்ளார்.  குவாரியில் வேலை செய்த திம்மக்காவுக்கு முறையான கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்சொன்ன மரங்கள் இல்லாமல் எட்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வ

ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்ப ஓராண்டுக்கு வேலை பார்க்கவேண்டும்! - தயாரிப்பாளர் குனீத் மோங்கா

படம்
            குனீத் மோங்கா இந்தி திரைப்பட உலகத்தைச் சேர்ந்த குனீத் மோங்கா முக்கியமான தயாரிப்பாளர் . இவர் தயாரிப்பில் வெளியான பல்வேறு படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன . வேறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களையும் , புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த தயங்காதவர் . எப்படி வேறுபட்ட மையப்பொருளைக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ? எனது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது . அதற்காகவே அதை மையப்பொருளாக கொண்ட தஸ்விதனியா என்ற படத்தை தயாரித்தேன் . எனது சிக்யா தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமான பொருளே , அர்த்தமுள்ள கதைகள் என்பதுதான் . நான் இதற்கு முன்னர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்துள்ளேன் . அங்கு ஏராளமான மாறுபட்ட கதைகளைப் பார்த்துள்ளேன் . பல படங்களை இப்படி தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளோம் . இப்படித்தான் பெட்லர்ஸ் , ஹராம்கோர் , லன்ச்பாக்ஸ் ஆகியவை உருவாயின . இதில் தோல்விகளும் உண்டு . எனக்கு இத்துறையில் வழிகாட்டவென எந்த குழுவும் கிடையாது . உதவிக்காகத்தான் சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டீர்களா ? மூன்று ஆண்டுகள் என்னை நானே என்ன ச

பாலின பேதமற்ற விருது- பெர்லின் திரைப்பட விருதுவிழாவில் ஆச்சரியம்!

படம்
  பெர்லின் திரைப்படவிழாவில் வரலாற்றில் முதன்முறையாக பாலின பேதமற்ற விருது நடிகை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஐம் யுவர் மேன் என்ற படத்தில் நடித்த நடிகை மாரன் எகெர்ட் இந்த விருதை வென்றுள்ளார்.  இந்த  பாலின பேதமற்ற பிரிவில் விருது வழங்குவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்டது. தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஆண்கள், பெண்கள் அனைவரும் போட்டியிடலாம் என்பது இதன் சிறப்பு. ஆனால் எப்போதும் போல இதற்கும் சரியா, தவறா என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. கேட்பிளான்கேட், டில்டா ஸ்விண்டன் ஆகியோர் இந்த விருது வழங்கும் முயற்சியை வரவேற்றுள்ளனர். சிலர் இது பாலின பேத பிரச்னையை பெரிதாக்கும் என்று கூறியுள்ளனர்.  பாலினம் சார்ந்த நடைபெறும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தை  இந்த விருது ஏற்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம் என மேரியட் ரைசன்பர்க் கூறியுள்ளார். இவர் பெர்லின் விருதுப்போட்டியின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.  ஆஸ்கர், பாஃப்டா, எம்மி என உலகம் முழுக்க நிறைய விருது வழங்கும் போட்டிகள் உள்ளன. இவை அனைத்துமே ஆண்கள், பெண்கள் என பிரித்துதான் விருதுகளை வழங்குகின்றன. இவை அனைத்துமே ஒ

இந்திய அரசின் சாதனை நிறுவனங்கள் - ரத்னா விருதுகளின் கதை!

படம்
pixabay சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள் நாளிதழ்களை படிக்கும்போது சில அரசு நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நிறுவனத்தின் பெயருக்கு கீழே நவரத்னா விருது பெற்றது என்று அச்சிட்டிருப்பார்கள். பல்வேறு நிறுவனங்கள், தங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக விருதுகளைப் பெறுகிறார்கள். குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் அப்படி விருது பெற்றது என்று குறிப்பிடுவது எதற்கு என யோசித்திருக்கிறீர்களா? பொதுத்துறை நிறுவனங்களை இந்திய அரசு மூன்று பிரிவாக பிரிக்கிறது. மினிரத்னா, நவரத்னா, மகாரத்னா. இவற்றை அவற்றின் மதிப்பு, வருமானம், பங்குச்சந்தை மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து வகைப்படுத்துகிறார்கள். இதில் செபி அமைப்பின் விதிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள். மினிரத்னா மினி ரத்னா நிறுவனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. பிரிவு 1 இல் உள்ள நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பான லாபத்தைப் பெற்று இருக்கவேண்டும். அவை சார்ந்த தொழில்துறையில் 500 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றிருக்கவேண்டும்.  பிரிவு 2 இல், நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட இலக்கிலான லாபத்தை பெற்றி