இடுகைகள்

ஆந்திரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்மார்ட் ஸ்ப்ரேயர்- செலவை மிச்சப்படுத்தும் சிறந்த கண்டுபிடிப்பு!

படம்
  ஆந்திர விவசாயி கண்டுபிடித்த ஸ்மார்ட் ஸ்ப்ரேயர்! விவசாயமுறைகளை தொழில்நுட்பங்கள் காலம்தோறும் மேம்படுத்தி  வருகின்றன.  தொழில்நுட்பங்களை ஏற்பதன் மூலம், விவசாயிகளின்  உற்பத்தி கூடுவதோடு, இதற்கான செலவுகளும் குறைகின்றன. அந்தவகையில் ஆந்திரத்தின் அம்ருதலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ஸ்மார்ட் ஸ்ப்ரேயரைக் கண்டுபிடித்துள்ளார்.  கண்டுபிடிப்பாளரான விவசாயி மல்லேபெடி ராமகிருஷ்ணாவுக்கு வயது 50.  இவர், தனது 100 ஏக்கர் நிலத்திற்குப் பயன்படுத்த டிராக்டரில் பொருத்தும்படியான ஸ்மார்ட் ஸ்ப்ரேயரை உருவாக்கியுள்ளார். ஸ்மார்ட் ஸ்ப்ரேயரில் 1,800 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் உள்ளது. இதனை  இயக்க  5 ஹெச்பி மோட்டாரும் உள்ளது. இதன் மூலம் அவரது மொத்த நிலங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க, 3 லிட்டர் எரிபொருள் தான்  செலவாகியுள்ளது.  ஸ்ப்ரேயரை உருவாக்க பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பாகங்களை வாங்கியுள்ளார்.   ராமகிருஷ்ணா தனது விவசாயப் பணிகள் போக, ஸ்மார்ட் ஸ்ப்ரேயரை அருகிலுள்ள விவசாயிகளுக்கு  வாடகைக்கும் தந்து வருகிறார். தனது நிலத்தைப் பார்வையிட வரும் பள்ளி மாணவர்களையும் உற்சாகத்துடன் வரவேற்று விளக்கம் தந்து

முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

படம்
  பிரதிநிதி தெலுங்கு  இயக்கம் பிரசாந்த் மந்தரா நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல.  முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.  நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்திரமாகிறார். அவரின் பெயர

ஆறு மாநிலங்களில் மிளகாய் உற்பத்தியை தாக்கி அழிக்கும் பூச்சி!

படம்
  தெலுங்கானாவில் உள்ள விவசாயிகள், மிளகாயை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். அந்த மாநிலத்திலுள்ள சுபக்காபலி கிராமம் . இங்கு, திரிப்ஸ் பர்விஸ்பினஸ் எனும் பூச்சி மிளகாய் செடிகளில் மீது நடத்திய தாக்குதலில் நாற்பது ஏக்கரிலுள்ள பயிர்கள் நாசமாயின.  கடந்த ஆண்டு சித்தூரி ரவீந்திர ராவ் பண்ணையில் பூச்சி தாக்கியது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லியைக் கூட ராவ் பயன்படுத்தினார். ஆனால் எந்த பயனும் இல்லை. பிரச்னையை சொல்லி, அதற்கான தீர்வைத் தேடுவதற்குள் காரியம் கைமீறிவிட்டது. ஒரே வாரத்தில் அத்தனை பயிர்களும் நாசமாகிவிட்டன. இதனால் மனமுடைந்த ராவ் தற்கொலை செய்துகொண்டார்.  மிளகாயை பயிரிட அவர் 20 லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். பயிர்கள் பூச்சியால் வீணாகிவிட்டதால், கடனைக் கட்டமுடியாத விரக்தி அவரை பாதித்து வீழ்த்திவிட்டது.  மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் திரிப்ஸ் பூச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்கள் ஆகும்.   இந்தியாவில் திரிப்ஸ் பூச்சி, கர்நாடகத்தில் பப்பாளித் தோட்டத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.  2018-19 ஆம் ஆண்டுகளில் அலங்காரச் செடிகளில் தி

மக்களின் பிரச்னைகளைப் பேசும் பத்திரிகையாளர்! - ரூரல் மீடியா ஷியாம் மோகன்

படம்
ஷியாம் மோகன் ஒளிப்பதிவாளருடன் பழங்குடிகளின் பிரச்னையைப் பேசும் பத்திரிகையாளர்! பேஸ்புக் வந்தபிறகு யூட்யூப் மெல்ல பின்தங்கியது கண்கூடாக தெரிந்தது. ஆனால், அந்தரங்க தகவல்களின் அத்துமீறல், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கமுக்கமாக வேலை பார்த்தது எல்லாம் அந்த சமூக வலைத்தள சேவைக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது. கூடவே பெருந்தொற்று காலம் வேறு வர, பேஸ்புக் மெல்ல செல்வாக்கை இழந்தது. அந்த இடத்தில் யூட்யூப் மெல்ல புகழ் பெறத் தொடங்கியது.  இன்று யூட்யூப் மூலம் இந்தியர்கள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 6,800 கோடி. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் இதன் பங்களிப்பும் உண்டு என 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டுபடி கூறியிருக்கிறது ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு.  இந்தியாவில் வாட்ஸ் அப் அமைப்பிற்கு 53 கோடி, யூட்யூப்பிற்கு 44.8 கோடி பயனர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைத்தள சேவைகளெல்லாம் இதற்கு பின்னர்தான். இப்படி யூட்பூப் வைத்து சம்பாதிப்பவர்கள் தங்களுக்கான இடத்தை எப்படி அடையாளம் கண்டுகொண்டனர் என்பது முக்கியமானது. உலகம் முழுக்கவே இப்போது எழுத்தை விட காட்சிகளைப் பார்க்கவே விரும்புக

இருபது ஆண்டுகளில் பதினெட்டு பஞ்சம்! - விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்!

படம்
  அனந்தப்பூர், ஆந்திரப் பிரதேசம் தெலுங்கில் அனந்தப்பூர் என்றால் நிறைய விஷயங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜமோ படுமோசமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் வறட்சி, பஞ்சத்தால் பதினெட்டு முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர். காரணம் மழைப்பொழிவு குறைந்ததுதான். இதனால் அங்குள்ள மக்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.  தென்னிந்தியாவின் வறண்ட மழைமறைவுப் பகுதியாக ராயலசீமாவின் அருகில் உள்ளது அனந்தப்பூர். இதன் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் 1882ஆம் ஆண்டு நெடும் பஞ்சங்களும் நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் பஞ்சங்கள் அதை விட மோசமாக இருக்கிறது.  இப்படி பஞ்சங்கள் வந்துகொண்டிருந்தால் எப்படி இங்கு விவசாயம் நடைபெற முடியும்.? கேள்வி நியாயமானதுதான். அதனால்தான் 30 லட்சமாக இருந்த விவசாய பரப்பு இப்போது 15 லட்சமாக குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஏற்படும் பஞ்சத்தின் நடைமுறை மாறுகிறது.  1989 முதல் 2018 வரையில் பெய்த மழை அளவை கணக்கிட்ட வானிலை ஆராய்ச்சி நிலையம், இங்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும் என கூறியுள்ளது. அனந்தப்பூரில் நடைபெ

கேங்ஸ்டரின் ரீவைண்ட் வாழ்க்கை - ரணரங்கம் படம் எப்படி?

படம்
ரணரங்கம்  தெலுங்கு - 2019 இயக்கம் - சுதீர் வர்மா ஒளிப்பதிவு திவாகர் மணி இசை - பிரசாந்த் பிள்ளை ஸ்பெயினில் வசிக்கும் தேவா தன்னுடைய கதையை சொல்லுவதாக தொடங்கும் கதை ஆந்திராவில் நடக்கிறது. ஆந்திராவில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் தேவா, அப்போது இருந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி நண்பர்களோடு சட்டவிரோத மதுபான பிசினஸில் இறங்குகிறார். இதை தனக்கு விடப்பட்ட நேரடி சவால் என்று நினைக்கும் அந்த ஊரின் எம்எல்ஏ முரளி சர்மா, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறார். தேவாவின் பக்கத்தில் ஏராளமாக உயிர்ப்பலியாகிறது. முரளி சர்மாவுக்கும் இழப்புகள் அதிகமாகிறது. உச்சமாக அவரின் உயிரும் போகிறது. அதற்கு காரணமான சம்பவத்தால் தேவா கடுமையாக பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு போகிறார். ஆனால் செய்யும் பிசினஸ் ஏதும் மாறவில்லை. அவர் நண்பர்கள் அப்படியே தொழிலை செய்து வருகின்றனர். அப்போது இந்தியாவில் இருந்து வரும் வேலையை தேவா ஏற்க மறுக்கிறார். அதனால் அவரின் மகள், காதலி உள்ளிட்டோரின் உயிருக்கு ஆபத்தாகிறது. இப்போது தனது தொழிலை விட்டு வெளியேறிய தேவா ஆந்திராவுக்கு திரும்ப நேரிடுகிறது. தனது தொழிலை திரும்பவும் செய்தாரா இல்லை