இடுகைகள்

காவல்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளிக்காக, குற்றவாளிகளை நெருப்பால் கொல்லும் சீரியல் கொலைகாரன்!

படம்
  chimera k drama  16 episodes Chimera (Korean: 키마이라; RR: Kimaira) is a South Korean television series directed by Kim Do-hoon and written by Lee Jin-mae. Starring Park Hae-soo, Lee Hee-joon and Claudia Kim, the series tells the story of three leading characters who dig through secrets of the past 30 years to find ...   Wikipedia கிமேரா என்றுதான் தொடரில் உச்சரிக்கிறார்கள். எனவே அப்படியே தொடருவோம்.  1984ஆம் ஆண்டு கிமேரா என்ற கிரேக்க புராணக்கதையில் வரும் மிருகத்தின் அடையாளத்தை வைத்துக்கொண்டு கொலைகாரர், மூன்று பேர்களைக் கொல்கிறார். அந்த மூன்று பேருமே ஹான்மியாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஐந்து ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் காணாமல் போகிறார். உயிர்தப்பும் மற்றொருவர் சியோரன் என்ற பெருநிறுவனத்தின் குடும்பத்தில் பெண் எடுத்து மருமகனாகிறார். எளிமையாக முதலாளி ஆகிறார்.  35 ஆண்டுகள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் செய்தியை பத்திரிகையில் எழுதிய  முன்னாள் ஊழல் பத்திரிக்கைகாரர் திடீரென காரில் வைத்து எரிக்கப்படுகிறார். காரில் லைட்டர் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அதில் கி

அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!

படம்
யூ ஆர் ஆல் சரவுண்டட் கொரிய டிராமா இருபது எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்  நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார்.  இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்த நகரில்

முப்பது ஆண்டுகளாக தேடப்படும் டீனேஜ் பெண்!

படம்
  தாரா காலிகோ நெடுஞ்சாலையில் காணாமல் போன டீனேஜ் பெண் – முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீளும் தேடல் 1988 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி. தாரா காலிகோ என்ற பெண்ணுக்கு வயது பத்தொன்பதாகியிருந்த்து. தன் அம்மாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாக்மேன் பிளேயரை எடுத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே வெளியே சென்றார். நியூ மெக்சிகோ பகுதியில் வாழ்ந்து வந்தவரான தாரா பிறகு சைக்கிளோடு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதோ   முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் காவல்துறையினர் நம்பிக்கையை கைவிடவில்லை. குற்றவாளியை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். தாரா சைக்கிளில் சென்று வந்த பகுதி பாலைவனத்தை ஒட்டிய நெடுஞ்சாலை. அவர் அடிக்கடி சைக்கிளில் முப்பதைந்து கி.மீ. தூரம் சென்று திரும்புவது வழக்கம். போகும்போது, ‘’நான் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு திரும்பலைன்னா, சைக்கிளுக்கு ஏதோ பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு என்னை கூட்டிக்கிட்டு போறதுக்கு வந்துடுங்க’’ என்று   கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை அவரது சகோதரி சரியாக நினைவில் கொண்டிருக்கிறார். அதுதான் தாரா பேசிய கடைசி வார்த்தைகள். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் அவரைப்

கார்டெல்கள் ஆளும் மெக்சிகோ தேசம்! - தினசரி கொல்லப்படும் அப்பாவி மக்கள்!

படம்
  மெக்சிகோ அதிபர் ஆம்லோ கார்டெல்கள் ஆட்சி செய்யும் மெக்சிகோ தேசம் மெக்சிகோ நாட்டை இடதுசாரி பாப்புலிச தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரடார் ஆள்கிறார். இப்படி கூறுவது பெயரளவில்தான். உண்மையில் மெக்சிகோவை   ஆள்வது போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் குழுக்கள்தான். அதிபரான ஆம்லோ ஆட்சிக்கு வரும்போது தினசரி 89 கொலைகள் நடந்துவந்தன. இப்போது அந்த எண்ணிக்கை கூடி 96 ஆக மாறியிருக்கிறது. ஆட்சி மாற காட்சியும் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது? இடதுசாரி தலைவரின் ஒற்றைத்திட்டம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அணுவளவு பயனும் தரவில்லை என்பதே உண்மை. கார்டெல்களில் வேலை செய்யும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்ட 2.3 மில்லியன் இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு திறன்களை அளிப்பதாக அதிபர் ஆம்லோ கூறினார். கொலைக்குற்றங்களைக் குறைக்க அறுபதாயிரம் பேர் கொண்ட தேசிய காவல்படையை உருவாக்குவதாக வாக்களித்தார். ஆனால், தேசிய காவல்படை மத்திய அமெரிக்க அகதிகளை தேடி வேட்டையாடி வருவதால், கொலைக்குற்றங்களை தடுக்கமுடியவில்லை. அதேசமயம் நாட்டில் நடைபெறும் கொலைக்குற்றங்களும் கூடி வருகின்றன. அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இயலாமையில் த

கொல்லப்பட்டவர்களின் வாயில் மின்ட் மிட்டாய்! - டெ மீ வாட் யூ சீ - கே டிராமா -2020

படம்
  டெல் மீ வாட் யூ சா கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிச்சிறுமி சூ, பள்ளி முடிந்து வெளியே வருகிறாள். அவளைக் கூட்டிப்போக அவளது அம்மா வரவில்லை. சற்று வசதியான தோழி குடையுடன் அவளை கூட்டிக்கொண்டு போகிறாள். வழியில் வாய் பேச முடியாத சூவின் அம்மா, குடையுடன் சாலையைக் கடந்து மகளின் பெயரை அழைத்துக்கொண்டே வருகிறாள்.   சூவுக்கு தனது தோழியிடம் தனது தாய் வாய் பேச முடியாத   ஊமை என கூற வெட்கமாக இருக்கிறது. அவள் தன்னை அழைக்கும் அம்மாவை புறக்கணித்துவிட்டு செல்கிறாள். அவளது அம்மா, சாலையைக்கடக்கும்போது கார் ஒன்று அவளை மோதித் தூக்கியெறிந்துவிட்டு நிற்காமல் செல்கிறது. சூ அதிர்ச்சியடைந்து அம்மாவை நோக்கிப் போகிறாள். அம்மா, அங்கேயே அடிபட்டு இறந்துபோகிறாள். இறக்கும்போதும் கூட குடையை மகளுக்கு கைகாட்டிவிட்டு மரணிக்கிறாள். மழையிலும் கூட சூ, அம்மாவை மோதிய காரில் உள்ள இருவரைப் பார்த்துவிடுகிறாள். காரின் எண்ணையும் காவல்துறைக்கு கூறுகிறாள். போலீஸ்காரர்கள் அதை கண்டுபிடிக்க மெனக்கெடுவதில்லை. ஏழையின் குரல் என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது? அதே கதைதான். ஆனால் சூ, தனது அம்மா இறந்துபோனதற்க

கோடாரியால் மண்டையை பிளந்து கொலை.. கொலைக்கு முன்னரே குறியீட்டுச் செய்தி - கோடாரி மனிதன்

படம்
  கோடாரி மனிதன்   தெலுங்கு படங்களில் அதிகம் பயன்படுத்தும் பொருள் என்ன? பன்ச் டயலாக்குகள் அல்ல. கோடாரி. சிங்கமுகம், சூரியன் என விதவிதமான உருவங்கள் பொறித்த கோடாரிகளை பயன்படுத்தி நல்நோக்கமில்லார்களை நாயகன் வெட்டுவார். அவரும் வெட்டப்படுவார். அதேபோல ஒரு கோடாரி கிரைம் கதைதான் இது. ஆனால் இறுதியாக யார் அந்த கோடாரி மனிதன் என்பதை கண்டறிய முடியவில்லை. 1918ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவரான ஜோசப் மேகியோ கொலை செய்யப்பட்டார். மேகியோ மட்டுமல்ல, கூடவே அவரது மனைவியும் தலையில் கோடாரியால் வெட்டப்பட்டிருந்தனர். இருவரின் குரல்வளைகளும் அறுக்கப்பட்டிருந்தது மேகியோவின் சகோதரர்கள் கொலைக்கு காரணம் என்று காவல்துறை சந்தேகப்பட்டாலும் பின்னாளில் அவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். மேகியோ வீட்டைவிட்டு சில மீட்டர் தூரத்தில் நடைபாதையில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதில் ‘’திருமதி மேகியோ, இன்று திருமதி டோனி போலவே அமர்ந்திருக்கப் போகிறார்’’ என எழுதியிருந்தது.    1911ஆம் ஆண்டு கோடாரியால் வெட்டப்பட்டு மேகியோ கொல்லப்பட்டது போலவே நிறைய கொல

மனிதர்களின் மூளையில் உள்ள நியூரான்களைத் திருடி அவர்களை பைத்தியமாக்கும் வேற்றுகிரக குள்ளர்கள்- கால வேட்டையர்கள் - முத்து காமிக்ஸ்

படம்
        கால வேட்டையர்கள் முத்து காமிக்ஸ் சிவகாசி மெக்சிகோவில் நடைபெறுகிற கதை. அங்கு ஒரு பத்திரிகையாளர் பணியாற்றுகிறார். அவர் தனது நாளிதழுக்காக வேடிக்கையான கட்டுரை ஒன்றை எழுதுகிறார். அதன் விளைவாக அவருக்கு நேரும் ஆபத்துகளும் அது பிறரை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. புதிதாக திருமணமான ஜோடி இருவர், கடற்கரையில் வந்து தேனிலவைக் கொண்டாடுகிறார்கள். அப்போது புகைப்படம் எடுக்க மணற்குன்று ஒன்றை நோக்கிச் செல்கிறார்கள். அங்குதான் வினோதமான குள்ளர்கள் ஒருவரை பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். கணவன், அவர்களிடமிருந்து அந்த மனிதனை மீட்க உதவுகிறான். மீட்கப்படும் மனிதன்தான், பத்திரிகையாளர். அடுத்த சம்பவம் தேனிலவு தம்பதிகளுக்கு நடைபெறுகிறது. அதில் கணவனைக் கொல்லும் முயற்சி தோல்வியில் முடிகிறது. மனைவியை பத்திரிகையாளரை கடத்த முயன்று தோல்வியுள்ள குள்ளர்கள் கூட்டிச்சென்று விடுகிறார்கள். அப்புறம் என்ன கதை தொடங்கிவிட்டது. அந்த குள்ளர்கள் யார், எதற்கு பத்திரிகையாளரை குறிவைத்து தாக்கி கடத்த முயன்றார்கள், இதில் புதுமணத் தம்பதிகளை ஏன் குள்ளர்கள் குறி வைக்கிறார்கள் என்பதற்கான விடையை காமிக்ஸ் விவரிக்கிறது. இந

அறையில் கூடும் வெப்பமும், வடகிழக்கில் அதிகரிக்கும் அரச பயங்கரவாதமும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  6 3.10.2021 அன்புள்ள நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இந்த வாரம்தான் சற்று நிதானமாக இருக்க நேரம் கிடைத்தது. எல்லாமே காந்தியின் அருள்தான். வேலைகள் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதிப்பக வேலைகள் இந்தளவு சலிப்பாக நகரும் என நினைக்கவில்லை. நான் வேலைசெய்யும் நாளிதழ் நிறுவன ஆட்களால் தான் வேலை மோசமாக மாறியுள்ளது. சிற்பி கற்களை உளி கொண்டு செதுக்குவது போல செதுக்கி வருகிறார்கள். இப்படி நகாசு பார்த்தால் எப்போது நூலை அச்சுக்கு அனுப்பி வேலையை முடிப்பது? நூல்களுக்கான சந்தை என்பதே இனி டல்லாகத்தான் இருக்கும். வேலை இழப்பு, பொருளாதாரம் என நிறைய சிக்கல்கள் நமக்கு முன்னே உள்ளன.  அறையில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மழைக்காலமாக இருந்தாலும் மாறி வரும் காலநிலை மாற்றத்தை உடலால் தாங்குவது கடினமாக உள்ளது. ஒவ்வாமை பற்றிய நூலை எழுதி தொகுத்து வருகிறேன். சொந்த உடல்நலம் சார்ந்த சுயநலம் காரணமாகவே நூலை எழுதுகிறேன். உலகம் முழுவதும் அலர்ஜி பிற நோய்களை விட அதிகரித்து வருகிறது.  ஃபிரன்ட்லைன் மாத இதழின் கட்டுரைகளை படித்து வருகிறேன். ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் செ

ஏழை மாணவர்களுக்கு உதவும் முன்னாள் ராணுவ வீரர்

படம்
  மதுரையைச் சேர்ந்தவர் ஜிஎம் ராமச்சந்திரன். இவர் தேனி பெரியகுளத்தில் தங்கி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ராமச்சந்திரன்,  ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு, வருவாய்த்துறையில் வேலை செய்துள்ளார். பின்னாளில்தான் பழனிக்கு இடம் மாறி வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது காலையில் ஜாக்கிங் பயிற்சிக்கு சென்றார். சாலையில் இவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆன சிலர், ஃபிட்னெஸ் பற்றிய அறிவுரைகளைக் கேட்டிருக்கின்றனர். ஆகா, என  புளகாங்கிதம் அடைந்த ராமசந்திரன் உலகத்திற்கு ஏதாவது சொல்ல நினைத்தார். அதை ஆரோக்கியம் தொடர்பாக அமைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.  ராமச்சந்திரனுக்கு விளையாட்டில்தான் தொடக்கம் முதலே ஆர்வம். இதனால் படிப்பில் சுமாராகவே இருந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதை வைத்துத்தான் 1976ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.  ராமச்சந்திரன் தடகளப் பயிற்சி கொடுப்பவர்கள் எல்லோருமே வறுமையான பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்களுக்கு ஓடுவதற்கும், கயிற்றைப் பிடித்து ஏறுவதற்கும், நீளம் தாண்டுவதற்கும் பயிற்சி அ

கொத்தடிமைகளை மீட்ட பார்வதி அம்மாள்!

படம்
”என்னுடைய அப்பா, அவரது நண்பரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதனால் அவரிடம் நான் வேலை  செய்யும்படி சூழல் உருவானது. அப்பாவின் நண்பர் செங்கல் சூளை ஒன்றைத் தொடங்கினார். எனவே, எங்கள் குடும்பம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. அதுதான் கொத்தடிமை முறை என்பது எனக்கு தெரியாது. ” செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதும் பார்வதியின் கல்வி தடைபட்டது. தாத்தா, பாட்டி பார்வதியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினர். பள்ளியில் பிள்ளைகளை அடிப்பார்கள் என்று கூறி தடுத்துவிட்டனர். இதனால் வேலை மட்டுமே பார்வதி அம்மாள் அறிந்த விஷயம். காலையில் எழுந்தவுடன் பெற்றோருடன் வேலைக்கு செல்வார். பின்னாளில் மரம் வெட்டும் வேலைகளுக்கு சென்றார். இந்த வேலை, பார்வதியின் மாமனார் அவரது திருமணத்திற்காக வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக செய்யும்படி ஆனது.  பார்வதியும் அவரது கணவரும் அந்த செங்கல் சூளையில் சில ஆண்டுகள் வேலை செய்து கடனை கழித்தபிறகு வேறு சூளைக்கு மாறினார்கள். அங்கு முதலாளியிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்கள். இத்தொகையை வைத்து வீட்டுக்கு குடியேறி வாழ நினைத்தனர். இதற்குள் பிறந்த மூன்று குழந்தைகளை பார்வதி, அவரின்

மோ(ச)டிகளின் தலைநகரம் டெல்லி!

படம்
  மோசடிகளின் தலைநகரம் டெல்லி! 2020ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பத்தொன்பது நகரங்களில் பணமோசடிகள் எங்கு அதிகம் நடைபெறுகிறது என ஆய்வு செய்யப்பட்டது. இதில் தேசிய குற்ற ஆவணகத்தின்  தகவல்படி டெல்லி முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் என்ற தலைப்பில் இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது.  பொருளாதார மோசடி சார்ந்து டெல்லியில் மட்டும் 4,445 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கடுத்த இடத்தில் மும்பை 3,927 குற்றங்களுடன் உள்ளது. ஜெய்ப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்து 3,127 குற்றங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் குற்றங்களின் அளவு என்பது ஜெய்ப்பூரில் 10.4 சதவீதமாக உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் 2.72, 2.13 சதவீதமாக உள்ளது. பாட்னா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.  மொத்த வழக்குகளில் 44.5 சதவீத த்திற்கு டெல்லி காவல்துறையினர் சார்ஜ்ஷீட் பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக டெல்லியின் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக பொருளாதார குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  நொய்டா, காச

மக்களைக் கண்காணிக்கும் ட்ரோன்கள்!- நவீனமயமாகும் தமிழக காவல்துறை

படம்
  நவீனமயமாகும் தமிழக காவல்துறை! இனி நகரங்களில் இரவில் ட்ரோன்கள் சுற்றி வந்தால் ஏதோ ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் தான் நடத்துகிறார்கள் போல என்று நினைத்துவிடாதீர்கள். தமிழக காவல்துறை ட்ரோன்கள் உட்பட 14 நவீன கருவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். பாரட் அனாப்டி, டிஜேஐ பாண்டம் என்ற ட்ரோன் வகைகளில் பதினான்கு ட்ரோன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. இதனை முக்கியமான நகரங்களிலுள்ள துணை கமிஷனர்களுக்கு வழங்கி பொது இடங்களில் பறக்கவிட்டு கண்காணிக்க உள்ளனர். பொதுமுடக்க காலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட வழக்குகள் ட்ரோன்களின் கண்காணிப்பில் பதிவாகியுள்ளன.  ட்ரோன்களில் அதிகாரிகளுக்கு கட்டளைகளை இட ஸ்பீக்கர் பொருத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுபற்றி ஜிவால், நாங்கள் ஸ்பீக்கரை ட்ரோனில் பொருத்தி உத்தரவுகளை வழங்க நினைத்தோம். ஆனால் அது ட்ரோனில் கூடுதல் எடையாக இருந்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது என்றார்.  பாரட் அனாபி தெர்மல் ட்ரோன் எடை 315 கிராம் 4 கி.மீ. 26  நிமிடங்கள் பறக்கும் 50 மீட்டர் முதல் 4500 மீட்டர் வரையில் பறக்கும் இரவிலும் கண்காணிக்க முடியும் கேமராக்கள் இதில் உள

அமெரிக்காவை விட உத்தரப் பிரதேசத்தில் இறப்பு சதவீதம் குறைவுதான்! - யோகி ஆதித்யநாத், முதல்வர், உத்தரப்பிரதேசம்

படம்
                    யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் ஆக்சிஜன் , படுக்கை , மருந்துகள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் அதிகளவு கோவிட் 19 இறப்புகள் நேர்ந்துள்ளதை ஏற்கிறீர்களா ? இந்த விவகாரத்தில் நாம் அரசியல் செய்யக்கூடாது . வளர்ந்த நாடுகளை விட பிற மாநிலங்களை விட எங்களது மாநிலத்தில் குறைவான இறப்புகளே நோய்த்தொற்றால் நடந்துள்ளன . நாங்கள்தான் முதல் மாநிலமாக ஆக்சிஜன் சப்ளையை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை செய்தோ்ம் . இங்கே அதிகளவு ஆக்சிஜனை தயாரிக்கும் ஆலைகள் இல்லாதபோதும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்தும் அதனை பெற்று வழங்கினோ்ம் . இதற்கான ஆக்சிஜன் உருளை தணிக்கை முறையையும் இங்கு அமல்படுத்தியுள்ளோம் . தடுப்பூசியை பெண்களும் , கிராமத்திலுள்ளவர்களும் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை . இவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள் ? நாங்கள் மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம் . எதிர்க்கட்சியினர் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர் . கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஆப்களை உருவாக்கியுள்ளோம் . மக்களுக்கு உதவ 1,33,