இடுகைகள்

வாடகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பினத்தவருக்கு குடியிருக்க வீடுகளைப் பெற்றுத்தர உதவும் போராட்டக்காரர்!

படம்
  லிசா ரைஸ்  lisa rice வீடுகளை வாங்குவதில், வாடகைக்கு பிடிப்பதில் சாதி, மத, இன வெறி இயல்பாக வெளிப்பட்டுவருகிறது. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சாதி, மத இழிவு நடக்கிறது என்றால் வெளிநாடுகளில் கருப்பினத்தவருக்கு நடக்கிறது. ஒருவர் வீடு வாங்குவதில் வாடகைக்கு பிடிப்பதில் நிறவெறி சார்ந்த சிக்கல்கள் எழுந்தால் அந்த விவகாரங்களை லிசா ரைஸ் கையாண்டு தீர்வுகளை எட்ட முயல்கிறார்.  அமெரிக்காவில் சொந்த வீடு வைத்துள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம். வாடகைக்கு வீடு கொடுப்பது, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் கருப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அறுபதுகளில் சிறுபான்மையினர் நிறம் சார்ந்த புறக்கணிப்பை அனுமதித்தனர் என்றால் இப்போது வீடு, நிதி வசதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் அதே விஷயம் ஒழுங்குமுறையாக நிகழ்த்தப்படுகிறது. தேசிய வீட்டுவசதி கூட்டமைபு என்ற நிறுவனத்தின் அதிபர், இயக்குநராக உள்ள லிசா ரைஸ், இன்று பாகுபாடு என்பது தானியங்கி முறையி்ல மாறியுள்ளது. எனவே இதை எதிர்கொள்வது கடினம் என்றார். பாகுபாட்டிற்கு எதிராக தீண்டாமைச

கொரோனா காலத்தில் ரூ.12 லட்சத்தை வேண்டாம் என்று வாடகைதாரர்களிடம் சொன்ன தொழிலதிபர்!

படம்
      வாடகை வேண்டாம் ! இதுவும் கேரளத்தைச் சேர்ந்தவரின் மனிதநேயம் பற்றியதுதான் . கொரோனா காலம் பல்வேறு மனிதர்களைப் பற்றிய கதைகளை பிறருக்கு சொல்லும் சூழலை உருவாக்கியுள்ளது . வேலை இல்லாமல் பல்வேறு வீடுகளில் வாடகையை வேண்டாம் என்று மறுத்த வீட்டு உரிமையாளர்களும் உண்டு . அந்த வகையில் அவர்களுக்கு இழப்பு என்றாலும் சூழலைப் புரிந்துகொண்டு பிறருக்கும் இளைப்பாறுதலை தங்களது செயல் வழியே செய்கிறார்கள் . சிஇ சக்குண்ணி என்றால் கேரளத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாது . நூற்றுக்கும் மேலான கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் ஆள்தான் அவர் . பொதுமுடக்க காலத்தில் வியாபாரிகளால் கடை வாடகை தரமுடியாது என்று அறிந்தார் . இதனால் கடைக்காரர்களிடம் வாடகையைக் கேட்காமல் தனக்கு வரவேண்டிய ரூ .12 லட்சத்தை இழந்துள்ளார் . இதேகாலகட்டத்தில் பல்வேறு மளிகை , அரிசி ஆகியற்றின் விலை அதிகரித்து விற்கப்பட்டது . ஆனால் சக்குண்ணி தனக்கு நியாயமாக வரவேண்டிய பணத்தை வேண்டாம் என ஒதுக்கியுள்ளார் . 1968 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சந்தையில் சக்குண்ணி அண்ட் கோ என்ற சொந்த நிறுவனத்தைக் தொடங்கினார் அதற்கு முன்னர் இவர் சந்த

ஷேரிங் செய்வோம் மச்சான்ஸ்! - பகிர்தல் பொருளாதாரம்!

படம்
giphy.com பகிர்தல் என்பது எப்போதும் சிறந்த துதான். இன்று பொருளாதார மந்த நிலை உள்ளது. இதனால் சிறப்பங்காடி முதற்கொண்டு தேவைப்படும் பொருட்களைத் தவிர பிற பொருட்களை யாரும் வாங்க விரும்பவில்லை. புது பொருட்களை மக்கள் கண்கள் விரியப் பார்க்கிறராகளே தவிர பர்சை எடுத்து பொருட்களை வாங்க விரும்புவதில்லை. இந்த மனநிலை மாற்றம் அனைத்து விஷயங்களிலும் உள்ளது. உதாரணத்திற்கு ஆபீஸ் திறக்கிறார் என்றால், தனியாக வாடகைக்கு இடம்பிடிப்பதை விட கோ வொர்க்கிங் முறை எனும் முறையைத்தான் இன்று பலரும் விரும்புகின்றனர். ஆபீசுக்குத் தேவையான கணினிகள், நாற்காலிகள், ஏசி, ஏன் குடைகளைக் கூட வாடகைக்கு வாங்கலாம். இன்று கார் வாங்காமல் ஊபர், ஓலாவில் செல்கிறார்களே அதேபோல்தான். ஃபர்லென்கோ, சிட்டி ஃபர்னிஷ் ஆகிய நிறுவனங்கள் நாற்காலிகளை, மேசை ஆகிய பொருட்களை வாடகைக்கு அளிக்கின்றன. நெஸ்ட் அவே என்ற கம்பெனி, பல்வேறு வீடுகளை வாடகைக்கு அளிக்கிறது. இது அனைவருக்கும் விருப்பமான வழிமுறை என்று கூற முடியாது. முப்பது வயதுக்கு கீழுள்ளவர்கள்தான் இம்முறையை உலகெங்கும் பிரபலப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இவர்களின் சதவீதம் 51%. உலகெங்கு