இடுகைகள்

மலையாளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல்வாதிகள், காவல்துறை கைகோப்பதால் ஐபிஎஸ் பதவியை கைவிட்டு மாஃபியா தலைவனாகும் நாயகன்!

படம்
    காவல்நிலையம் சுரேஷ்கோபி, ஜோதிர்மயி மலையாளம் தயாசங்கர் என்ற எஸ்பி, கேரளத்திற்கு பணிபுரிய வருகிறார். அவருக்கு மனைவி, தம்பி ஆகியோர் உண்டு. காவல்துறை கமிஷனர், அரசியல்வாதிகள், மாஃபியா தலைவன் ஜிவி ஆகியோர் செய்யும் சூழ்ச்சியால் தம்பி கொல்லப்பட்டு தலை வேறு முண்டம் வேறாக ஆக்கப்படுகிறான். மனைவிக்கு முதுகு எலும்பில் அடிபட்டு சக்கர நாற்காலியில் வாழ்க்கை அமைகிறது. தயாசங்கர் ஜிவியை எப்படி பழிவாங்கினார் என்பதே கதை. படத்தின் தொடக்கத்தில் பாட்டாளி தோழன் என்ற ஒருவரை வில்லனாக காட்ட அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். அவருக்கு செல்வாக்கு பல பக்கம் இருப்பது போல தெரிகிறது. பல்வேறு சமூக சேவைகளை செய்கிறார். மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம், பெண்கள் காப்பகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அவரை எதிர்த்து அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சியால், போலீஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லும் உணவுகளை கீழே கொட்டி சோதிக்கிறார்கள். ஆனால் எதுவும் காவல்துறை நினைத்தது போல நடப்பதில்லை. ஆயுதங்கள், போதைப்பொருள் என எதுவும் கிடைப்பதில்லை. காவல்துறை அதிகாரி குழம்பிப்போகிறார். அவரது காதலி, பாட்டாளி தோழன் நல்ல மனிதர் கெட்டவர் ...

தொடர்ச்சியாக கொல்லப்படும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் !

படம்
  பூட் சவுண்ட் சுரேஷ் கோபி, பாலா, ஹனி ரோஸ் மலையாளம் பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி, வீட்டுக்கு போகும் வழியில் கழுத்து அறுத்து கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க நாயகன் வருகிறார். கூடுதலாக, ஓய்வு பெற்ற இன்னொரு போலீஸ்காரரின் மகள் காணாமல் போகிறாள். இந்த வழக்கையும் நாயகனே விசாரிக்கிறார். அதில் அவருக்கு நிறைய உண்மைகள் தெரிய வருகிறது. கேரளத்தில் அவசரநிலை காலகட்டத்தில் காவல்துறை செய்த வல்லுறவு, கொலைகளை பின்னணியாக கொண்ட கதை. அவசர நிலையை சாதகமாக பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் குடும்பத்தை அழிக்கிறார்கள். பத்திரிக்கை நடத்துபவரின் மனைவியை வல்லுறவு செய்கிறார்கள். அவரது மகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்தில் கொல்லப்படுகிறாள். பத்திரிகையாளர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பல்வேறு போலி வழக்குகள் வழியாக இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. கல்லூரி படிக்கும் மகள் காணாமல் போன செய்தியை ஒய்வுபெற்ற அதிகாரி, நாயகனுக்கு கூறுகிறார். நாயகனும் அதை ஏற்று மகளை தேடித்தருவதாக குறிப்பாக உயிரோடு... என்று கூறுகிறார். மகளைப் பற்றிய தகவல்களை விசாரித்தால், எந்த துப...

இறந்துபோனவராக கருதப்பட்ட ராணுவ வீரர் திரும்ப கிராமத்திற்கு வருகிறார்!

படம்
  மெயின் ஹூம் மூசா மலையாளம் சுரேஷ்கோபி கேரள கிராமம். அந்த கிராமத்தில் மூசா என்ற ராணுவ வீரர் பிரபலம். கார்கில் போரில் பலியானதால், அவருக்கு சிலை வைத்து கல்லறையைக் கூட ஊரின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இறந்துபோனதாக கருதப்படும் மூசா பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறார். அங்குள்ள அவரின் நண்பர்கள், உறவு, குடும்பம் எல்லாம் என்னாகிறது என்பதே கதை. ஒரு ராணுவ வீரன், அவனுடைய குடும்பம், அவனை மறந்துவிட்டது. அவனை பயன்படுத்தி உள்ளூரில் வாக்குகளைப் பெறுகிறார்கள். அவனது மனைவி, மூசாவின் தம்பியை மணந்துகொள்கிறாள். மூசா ராணுவத்தில் வேலை செய்து செத்து்ப்போனதால் ஓய்வூதியம் கிடைக்கிறது. அதை முழுக்க அனுபவிக்கிறார்கள். ஆனால், மூசா உயிரோடு திரும்ப வரும்போது, அவனைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் அனைவருமே அவன் செத்துப்போயிருந்தால் நல்லது என நினைக்கிறார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு. அவன் பால்ய நண்பன் மட்டுமே. அவன் சாராயக்கடை ஒன்றை நடத்துகிறான். மூசாவை தனது வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொள்கிறான். மூசா இறந்துவிட்டதாக அனைவரும் நம்புகிறார்கள். அவன், ராணுவ அலுவலகத்திற்கு சென்று தனக்கு நேர்ந்...

அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர்

படம்
  அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர் மாத்ருபூமி வார இதழின் முன்னாள் ஆசிரியர், எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் மறைந்திருக்கிறார். இவரது முழுப்பெயர் மாதத் தேக்கப்பட் வாசுதேவன் நாயர். சுருக்கமாக எம்டி வாசுதேவன் நாயர். மலபார் மாவட்டத்திலுள்ள பொன்னானி தாலுக்காவின் கூடலூர் கிராமத்தில் 1933ஆம் ஆண்டு ஜூலை பதிமூன்றாம் தேதி பிறந்தார். தந்தை நாராயணன் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தார். எம்டி, மலபார் மாவட்ட கல்வி வாரியம் நடத்திய பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். பாலக்காட்டிலுள்ள எம்பி டுட்டோரியலிலும் கூட வேலை செய்திருக்கிறார். 1956ஆம் ஆண்டு கோழிக்கோட்டிலுள்ள மாத்ருபூமி வார இதழில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இங்கு ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். எம்டி மூலமாக அடையாளம் காணப்பட்ட எழுத்தாளர்களில் புன்னத்தில் குஞ்சப்துல்லா, என்எஸ் மாதவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எம்டி வாசுதேவன் நாயர், தீவிரமான இலக்கிய எழுத்துக்கு சொந்தக்காரர். வளர்த்துமிருகங்கள் என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அடுத்து வெளியானதுதான் நாலுகெட்டு என்ற நாவல். இந்த நாவலில் நாயர் குடும்பம் ...

காவல்துறை ஆட்களை ஆட்டுவிக்கும் கிளர்க்கின் உளவியல் விளையாட்டு!

படம்
      ஹன்ட் மலையாளம் மஞ்சு வாரியர், இந்திரஜித், குஞ்சாகோ கோபன் சினிமா நடிகை ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அதுபற்றி விசாரிக்கும்போது, நீதிமன்ற கிளர்க் ஒருவர் பிடிபடுகிறார். விசாரித்தால், அவர் தனது மனைவியைக் கூட கொன்றவர் என தெரியவருகிறது. கடத்திய நடிகை, அவரது கூட இருந்தவர் என இருவரையும் கொன்றுவிட்டேன். ஆனால் புதைத்த இடத்தை மறந்துவிட்டதாக கூறுகிறார். இந்த விசாரணை சிறிபாலா என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பெரும் சோதனையாக மாறுகிறது. எனவே, நண்பரான சைலக்ஸ் இப்ராகிம் என்பவரின் உதவியை நாடுகிறார். கிளர்க் விசாரணையின்போது சொல்லும் தகவல்களால் குழந்தையில்லாத சைலக்ஸின் வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள் வருகின்றன. குறிப்பாக, மனைவி மீது தவறான உறவு உள்ளதோ என சந்தேகப்படத் தொடங்குகிறார். சிறிபாலாவுக்கு கொரியரில் சில தகவல்கள் வருகின்றன. அதன்படி தேடியதில் அவரது அப்பா, பணியின்போது விபத்துக்குள்ளானதில் நண்பர் சைலக்சின் பங்கு இருப்பது தெரிகிறது. நட்பில் உள்ள துரோகம் வலி அதிகமா, காதலித்த மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதால் கொன்றுவிட்டேன் என்று கூறும் கிளர்க்கின் வாழ்க்கையில் வலி அதிகமா என சிறிபாலா புரிந்...

அம்மாவை எரித்துக்கொன்ற நான்கு நபர்களை பழிவாங்க முயலும் பரதநாட்டிய மாஸ்டர்!

படம்
  செஸ்  திலீப், பாவனா, சலீம்குமார், அசோகன் விஜய் கிருஷ்ணன் பரதநாட்டியம் சொல்லித்தரும் பள்ளி நடத்துகிறார். அவரது அம்மா, அவனுக்கு அதை கற்பித்திருக்கிறார். அம்மா, காவல்துறையில் வேலை செய்யும் ஒருவரை விரும்பி இணைந்து வாழ்கிறார். திருமணம் செய்துகொள்வதில்லை. இது விஜய்க்கு வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் அவன் அம்மா வருத்தப்படுவாள் என எதையும் கூறுவதில்லை. அவனது பள்ளிக்கு பாவனா கல்லூரி மாணவி வருகிறாள். கல்லூரி ஆண்டுவிழாவில் ஆடும் பரதநாட்டிய பயிற்சிக்காக விஜய்யின் உதவியை நாடுகிறாள்.  அங்கு அவனிடம் பயிற்சி செய்து ஆடி கல்லூரியில் முதல் பரிசு வெல்கிறாள். அதோடு அவளுக்கு விஜய்யை பிடித்திருக்கிறது. இருவரும் சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் காதலிக்கிறார்கள். ஆனால் நாயகியின் தாத்தாவுக்கு அதெல்லாம் குறையாக தெரிகிறது. குறிப்பாக, விஜய்யின் அப்பா யாரென்று கேட்க அவனால் உண்மையைக் கூறமுடியவில்லை. இப்படியாக காதலி, கல்யாணம் என இரண்டுமே கனவு போல கலைந்து போகிறது.   படம் காதலைப் பற்றியதல்ல. பழிவாங்குவதைப் பற்றியது. விஜய்யின் அப்பா, மரணப்படுக்கையில் இருக்கும்போது அவனையும், மனைவியையும் அழைத்து என...

ஒரே நேரத்தில் மூன்று இளம்பெண்களை காதலிக்கும் ரோமியோ!

படம்
  ரோமியோ மலையாளம்  திலீப்,விமலா ராமன், சம்யுக்தா,ஹனீபா சாதி,மதம் மாறி மூன்று பெண்களை காதலிக்கும் ரோமியோ ஒருவரின் கதை. உண்மையில் வதந்தி நாளிதழில் வரும் செய்தியைப் போன்றதல்ல. இங்கு நாயகன் மனு கிருஷ்ணன், தனது வேலை, அதில் வரும் சம்பளத்தையே நம்பியிருக்கிறார். அதில் பிரச்னை வரும்போது, பெயர் மாற்றி, சாதி மாற்றிக்கொண்டு ஓரிடம் செல்கிறார். அங்கு வாழும் ஒரு அய்யங்கார் பெண்,சுப்பிரமணி என்ற பெயருடைய நாயகனை விரும்பத் தொடங்குகிறாள். ஏன் என்றால் அதற்கென அவளுக்கென சில காரணங்கள் உள்ளன. அவளுக்கென பார்த்த மாப்பிள்ளை குடிநோயாளி. சுப்பிரமணிதான் அவனுடைய பெயரும் கூட.  நாயகன், அய்யங்கார் பெண்ணிடம் வாய்ப்பாட்டு கற்கவும் கூட முயல்கிறான். இப்படி சில விஷயங்கள் ஒற்றுமையாக இருக்க அந்தப்பெண் நாயகனை காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் நாயகன் அவளை காதலிப்பதில்லை..   அடுத்து, டிவி நிகழ்ச்சி பாடகியின் அப்பாவிடம், வாங்கிய காசை அடைப்பதற்காக பாடகியை மணக்க முடிவெடுக்கிறார் மனுகிருஷ்ணன். ஆனால் இந்த சமாச்சாரம் அந்தளவு எளிதாக இல்லை. பாடகியின் அப்பா, நாயகன் மனுவை மதம் மாறச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார். இதனா...

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - மீனா கந்தசாமி, தில்ஜித் தோசன்ஜி, வினோத்குமார் சுக்லா

படம்
  கவிஞர் மீனா கந்தசாமி எழுத்தாளர் வினோத்குமார் சுக்லா ஓப்பன் மைண்ட்ஸ் 2023 தில்ஜித் தோசன்ஜி 39 பாடகர், எழுத்தாளர், பாடலாசிரியர் இன்ஸ்டாகிராமில் பதினைந்து மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ள கலைஞன். பஞ்சாபி இசையை பிராண்டிங் செய்து உலகம் முழுக்க கொண்டு சென்றுவருகிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றபோது, மேடையில் பேசிய செயலாளர் ஆன்டனி பிலிங்கன், “”தோசன்ஜியின் பாடல்களுக்கு நாங்கள் நடனமாடிக்கொண்டு இருக்கிறோம்” என புகழ்ந்து பேசினார். கோச்செல் இசைவிழாவில் பஞ்சாபி மக்களின் உடைகளை அணிந்து கொண்டு பாடல்களை பாடி நடனமாடி அசத்தினார். இந்தி திரைப்பட உலகில் நிறைய படங்கள் நடித்தாலும் அவரை கவனிக்க வைத்தது உட்டா பஞ்சாப் என்ற படம்தான். இந்தி திரைப்படங்களைக் கடந்து தனியிசை பாடல்கள் மூலம் பெரிய கவனம் பெற்றவர், பஞ்சாபி மொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்கிறார். ஜூட் அந்தாணி ஜோசப் 40 திரைப்பட இயக்குநர், மலையாளம்.   2018 எவரி ஒன் இஸ் ஹீரோ என்ற படத்தை எடுத்தார் ஜோசப். இயற்கை பேரிடரை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி வெற்றி பெற்றவர்கள் உலகளவில் குறைவு. இவரது படம், கேரளத்தில் மட்டுமே...

மீசையை முறுக்கி சவால் விட்டுத் திருடும் மாதவன்! - மீச மாதவன், கிரேஸி கோபாலன் - கேரக்டர் புதுசு

படம்
  மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் மலையாளம் திலீப் (மாதவன் நாயர்)   கிரேஸி கோபாலன், மீசை மாதவன் என இரு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் திலீப் நடித்தார் என்பதல்ல. இரண்டு படங்களிலும் நாயகன் திருடன். ஆனால் அப்படி மாறியதற்கு இறந்தகாலத்தில் நெகிழச்செய்யும் ஃபிளாஷ்பேக் உண்டு. அதை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   மாதவன் நாயர். இந்தப் பெயரைச் சொன்னாலே ஊரில் உள்ள அனைவருக்குமே அவர் திருடன் என்பது தெரியும். மலையாளத்தில் கள்ளன் என்கிறார்கள்.   மீசை மாதவன் என்பதுதான் அவன் பட்டப்பெயர். ஊர் மக்கள் யாராவது அவனிடம் லொள்ளு பேசி கோபம் வந்து மீசை முறுக்கினால் அன்று, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்குள் முக்கியமான ஏதாவது ஒரு பொருளேனும் களவு போகும். அதை தடுக்கவே முடியாது. அந்தளவு திருட்டில் ஜெகஜாலன். திருட்டில் ரிடையர்டாகி கால் ஆணி வந்துவிட்ட முன்னாள் திருடரிடம் வித்தை கற்ற ஆள், மாதவன். ஊருக்குள் புதிய பொருட்களை வாங்க முடியாத சிலர், மீசை மாதவனிடம் எனக்கு இந்த பொருட்கள் வேண்டுமென்று சொல்லி, ஆர்டர் செய்து காசு கொடுத்து வாங்குவதும் உண்டு. மாதவனை...

மகளின் திருமணத்தை நடத்த பள்ளி ஆசிரியர் படும் பாடுகள் - விஷ்மயம் - இன்னொசன்ட், திலீப், ஶ்ரீதுர்கா

படம்
  விஷ்மயம் திலீப் , ஶ்ரீதுர்கா, இன்னொசன்ட், ஜெகதி ஶ்ரீகுமார் ஒரு பள்ளி ஆசிரியர், தனது கடன்களுக்கக நிலங்களை, அருகிலுள்ள குரூப்பு ஒருவருக்கு விற்கிறார். அவர் நிலத்தை வாங்கியதோடு சுற்றிலும் உள்ள மனிதர்களின் வீட்டிலுள்ள பொருட்களை திருடர்களை வைத்து திருடி வைத்து விற்று பணக்காரராக மாறுகிறார். அவரை எப்படி சுற்றிலும் உள்ள மக்கள் கண்டுபிடித்து திருத்துகிறார்கள் என்பதே கதை. படத்தில் முக்கியமான   மகேஷ் நாராயணன் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் இன்னொசன்ட் நடித்துள்ளார். தனது மறைந்துபோன மனைவியை சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவதும், அவளது நினைவாக மகளுக்கு பிரச்னை இல்லாத இடத்தில் மணம் செய்து வைப்பதுமான கனவு அவருக்கு இருக்கிறது. அவர் மகளுக்கு ஏழு பவுன் தங்கத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை குரூப் திருடி வைத்து திருமணத்தை தடுக்கிறார். அதை ஆசிரியரும், அவரது மகன் தினகரன், ஊர் மக்களில் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடி எடுத்து வர திட்டமிடுகிறார்கள். திருடப்போன இடத்தில் தற்கொலை செய்துகொள்ள முயலும் ருக்மணி என்ற பெண்ணையும் பார்த்து, தடுத்து ...

அப்பாவின் பேராசையை ஒழித்து நல்லவராக்கும் தோமா! - சவுண்ட் தோமா - திலீப், நமீதா பிரமோத்

படம்
  சவுண்ட் தோமா - திலீப்புடன்(தோமா) சாய்குமார்(பௌலோ) சவுண்ட் தோமா  - ஶ்ரீலஷ்மியுடன் தோமா சவுண்ட் தோமா திலீப், நமீதா பிரமோத், முகேஷ், சுரேஷ்   வெஞ்சரமூடு   வட்டிக்கு பணம் கொடுக்கும், ஊரில் நிறைய தொழில்களை நடத்தும் தொழிலதிபருக்கு மூன்றாவதாக மகன் பிறக்கிறான். பிரசவத்தில் அம்மா, காலமாகிறார். மகனுக்கு தொண்டையில் பிரச்னை உள்ளது. அதற்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், மனைவி இறந்துவிட்டாள். அந்த இழப்போடு ஏராளமான பணத்தை இப்போது   பிறந்த குழந்தைக்கு செலவிடவேண்டுமா என தந்தை நினைக்கிறார். இதனால் அந்த குழந்தைக்கு உதடு பிளவுபட்டு, வளரும்போது குரல் சரியாக வருவதில்லை. குட்டி என்றால் குண்ணி என சத்தம் வருகிறது. குட்டன் பிள்ளை என அவர் சொன்னால் குண்டன் பிள்ளை என்றுதான் சத்தம் வெளியே கேட்கிறது. இதனால் அவருக்கு ஊரில் சவுண்ட் தோமா என பெயரே உருவாகிறது. வட்டிக்கடைக்காரருக்கு மூன்று மகன்கள் (மத்தாய், ஜாய் குட்டி, தோமா) உள்ளனர். அவர்களால் தனக்கு என்ன பிரயோஜனம் என்று பார்த்துத்தான் செலவு செய்கிறார். உண்மையான பாசத்தை அவர் உணர்ந்தாரா, தோமா   தனது வாழ்...