இடுகைகள்

சிஎஸ்ஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ப்ரீதமிழ் இபுக்ஸில் இலவச மின்னூல்கள் - அன்பரசு சண்முகம்

படம்
  ப்ரீதமிழ் இபுக்ஸில் நூல்களைத் தேடுவதற்கு சர்ச் பட்டன் கிடையாது. ஆனால் எழுத்தாளரின் பெயரை தட்டச்சு தேடினால் அவர்கள் எழுதிய நூல்களை வலைத்தளம் காண்பிக்கிறது. சிறந்த தொழில்நுட்பம்தானே? வரவேற்போம். அன்பரசு சண்முகம் எழுதிய நூல்களில் சில.... இந்த நூல்கள் அனைத்தும் விலையின்றி கிடைக்கிறது. வாய்ப்பிருப்பின் தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! நூலை பதிப்பித்த ப்ரீதமிழ் இபுக்ஸ் குழுவினர் மற்றும் கணியம் அறக்கட்டளை நிறுவனர் திரு. சீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் கோடி.... https://freetamilebooks.com/authors/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/ ப்ரீதமிழ்இபுக்ஸ் - அன்பரசு சண்முகம்

சிஎஸ்ஆர் நிதியில் முன்னிலை- தமிழ்நாடு சாதனை

படம்
  படம் - விகடன் சிஎஸ்ஆர் நிதியை பெருநிறுவனங்கள் கட்டாயம் அரசுக்கு வழங்க வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதிலிருந்து இதுவரை 92., 605 கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்துள்ளது. நாட்டிலேயே நான்காவது மாநிலமாக தமிழ்நாட்டிற்கு 4,094 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள சிஎஸ்ஆர் நிதியை நிதியமைச்சர் பிடிஆர் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மாவட்ட அளவு, குறிப்பிட்ட தொழில்துறை சார்ந்து கிடைத்துள்ள நிதி அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.  2018-19, 2019-29 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் காரியாலயங்களைக் கொண்டுள்ள பெரு நிறுவனங்கள் அரசுக்கு 800 கோடி ரூபாய்  கிடைத்துள்ளது. சிஎஸ்ஆர் நிதி என்ற வகையில் 72 சதவீதம் கிடைத்துள்ளதாக மாநில அரசு தகவல் கூறியுள்ளது. ஐ.நாவின் தகவல் அடிப்படையில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உள்ளது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் உள்ள தமிழ்நாடு , மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது இடத்தில் உள்ளது.  2020- 21ஆம் ஆண்டில் நிதிஆயோக்கின் அடிப்படையில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலம் ஆகியவற்றில் பிற மாநிலங்களை விட முன்னேறி இரண்டாவது இடத்

சிஎஸ்ஆர்: கடைபிடிக்கவேண்டிய வெற்றி விதிகள்

படம்
glocal thinking 9 வெற்றி விதிகள் இந்தியாவில் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான நிதியை தேசியப் பேரிடர் பிரச்னைகளுக்கும் வழங்கலாம் என அறிவித்திருக்கிறது . இந்திய அரசு . இதனால் பல்வேறு பெரு நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக்கு தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியை வழங்க உள்ளன . இம்முறை வணிகம் பாதிப்பு , பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஊழியர்களுக்கு முழு சம்பளம் தருவதே சிக்கலாக உள்ள நிலைமை . இதில் பொதுமக்களுக்கான செலவுகள் என்பதை நிறுவனங்கள் கடைசியாகத்தான் யோசிப்பார்கள் . சில தன்னார்வலர்கள் , கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி , பருப்பு , சோப்பு என அவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர் . சமூக பொறுப்புணர்வுத் திட்டம் என்பது காகிதத்தில் இருப்பதோடு , நடைமுறையிலும் வருவது முக்கியம் . ஆனால் பெரும்பாலும் அதில் நிறைய நிறுவனங்கள் சொதப்பிவிடுகின்றன . காரணம் , சமூகப் பிரச்னைகளை எப்படி தேர்ந்தெடுப்பது , அதில் கவனம் குவிப்பது சார்ந்த சந்தேகங்கள்தான் . அதற்கு சில உதாரணங்களையும் விதிகளையும் இங்கே பார்ப்போம் . சமூக பிரச்னைகளை தேர்ந்தெடுங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த

சிஎஸ்ஆர்: தன்னாவலர்களின் பங்களிப்பும், திட்டத்தின் நோக்கமும்!

படம்
என்பிசி 8 தன்னார்வலர்களின் பங்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களை இணைத்துக்கொண்டு பணிபுரிகின்றனர் . ஆனாலும் முடிந்தவரை இந்த செயல்பாட்டில் தங்கள் நிறுவன ஊழியர்களின் பங்கினையும் உறுதி செய்கின்றனர் . காரணம் , நிறுவனத்தின் சமூகம் சார்ந்த ஈடுபாட்டை , பொறுப்பை ஊழியர்கள்தானே பிறருக்கு சொல்ல முடியும் .? ’ ரிவல்யூஷன் ஆப் தி ஹார்ட்’ என்ற நூலில் ஆசிரியர் பில் ஷோர் நிறுவனங்கள் தம் ஊழியர்களை ஈடுபடுத்தி செய்யும் சமூகப்பணிகளைக் குறிப்பிடுகிறார் . மருத்துவர் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை இலவசமாக சோதிப்பது , தச்சு வேலைக்காரர் மரச்சாமான்களை பழுதுநீக்கிக் கொடுப்பது , ஆசிரியர் வறுமைகோட்டிற்கு கீழுள்ள தெரு சிறுவர்களுக்கு கல்வி கற்பிப்பது ஆகியவை செயல்பாடுகள் சமூகப் பொறுப்புணர்வுக்கு முக்கியமான சான்றுகள் என்கிறார் . இது இனக்குழு சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார் . மேற்சொன்னவை தன்னார்வ செயல்பாடுகளாகும் . நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட நாட்களை சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களுக்காக ஒதுக்கி பணிகளைச் செய்ய வைப்பது

சிஎஸ்ஆர்: தன்னார்வ பங்களிப்பும், லாபமும்!

படம்
7 நிறுவனங்களின் பங்களிப்பு தேர்தல் , தண்ணீர் தட்டுப்பாடு , உறுப்பு தானம் , சாலை விபத்து ஆகிய விஷயங்களுக்கு பெருநிறுவனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றன . இதற்கு பெரும்பாலான நிதியை குறிப்பிட்ட நிறுவனம்தான் செலவிடும் . இம்முறையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா , தி இந்து , இ்ந்துஸ்தான் டைம்ஸ் போன்ற தேசிய நாளிதழ்கள் தண்ணீர் தட்டுப்பாடு , வாக்குரிமை , பழமையான நகரங்கள் பற்றிய செய்திக்கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடுகின்றன . மேற்சொன்ன துறைகளில் வல்லுநர்களை , ஆய்வாளர்களை கூட்டி வந்து பொதுநலனுக்கான பல்வேறு ஆய்வு கூட்டங்களையும் நடத்துகின்றன . நாளிதழ்களின் அடிப்படையான பணி , அறிவை மக்களுக்கு புகட்டுவதுதான் . அதோடு தன்னை மக்களில் ஒருவராக கருதும் பத்திரிகைகள்தான் மக்களுக்கான பங்கேற்பு பகுதிகளை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டு வருகின்றன . இதில் தேசிய நாளிதழ்கள் குறிப்பிட்ட சமூக பிரச்னை சார்ந்து அத்துறையில் செயல்படும் முன்னணி தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது . தனியார் நிறுவனங்கள் இந்த பாணியை பின்பற்றுவதோடு தாங்கள் சார்ந

சிஎஸ்ஆர்: கற்றதும் பெற்றதும்

படம்
டிஎன்ஏ இந்தியா 6 கற்றுக்கொண்டது என்ன ? 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவான பாடிஷாப் என்ற நிறுவனம் அழகுப் பொருட்களை 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்று வந்தது . இக்காலகட்டத்தில் தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ள அழகுசாதனப் பொருட்களை சோதித்துப் பார்க்க விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற பிரசாரத்தில் இறங்கியது . அக்காலத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை அறிவியல் சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்தனர் . பல்வேறு போராட்டங்கள் , பேரணிகள் , விழிப்புணர்வு கண்காட்சிகள் காரணமாக ஐரோப்பிய யூனியன் இதனை தடுக்கும் விதமாக 2002 இல் சட்டம் ஒன்றை இயற்றியது . இந்த சமூக பொறுப்புணர்வு திட்டம் காரணமாக பாடிஷாப் நிறுவனம் திரட்டி அனுப்பிய புகார் மனுக்களின் எண்ணிக்கை 40 லட்சங்களுக்கும் அதிகம் . கற்றதும் , பெற்றதும் ! துறைசார்ந்த பிரச்னையை கையில் எடுக்கவேண்டும் . அதேசமயம் அதனை ஊழியர்களும் , வெளியிலுள்ள மக்களும் ஏற்கும் விதமாக அமைக்கவேண்டும் . எடுக்கும் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருக்க அவசியமில்லை . ஆனால் குறைந்தபட்சம் ஊடகங்களில் விவாதிக்கப்படும் அளவ