இடுகைகள்

வறண்ட சூழ்நிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட பசுமைச் சுவர்!

படம்
  ஆப்பிரிக்காவின் பசுமைச்சுவர்!  ஆப்பிரிக்காவில் கிரேட் கிரீன் வால் (Great green wall) என்ற திட்டத்தின்படி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இத்திட்டப்படி, 8 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மரக்கன்றுகளை நட்டு சகாரா பாலைவனம் அதிகரிப்பதை தடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் வடக்குப்பகுதி ஆப்பிரிக்காவின் தன்மையை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.  2030க்குள் மரக்கன்றுகளை முழுமையாக நடுவது திட்டம். இதன்மூலம், சாஹேல் எனும் அப்பகுதியில் மழைபொழிவு கூடி, வெப்பம் குறையும் என சூழலியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு, டிசம்பரில் அமெரிக்க புவி இயற்பியல் மாநாடு நடைபெற்றது.  இதில், எதிர்காலத்தில் பாலைவனங்களில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டது. பசுமை சுவர் திட்டம், வெப்பத்தை எளிதில் எதிர்கொள்ள உதவும்.   சகாராவை பசுமையாக்கும் திட்டம், மேற்கு ஆப்பிரிக்க பருவகாலங்களில் மாறுதல்களை ஏற்படுத்தும் என சூழல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்காவில் குளிர் தொடங்கும் மாதங்களில் வெப்பமான வறண்ட காற்று வீசுகிறது. வடகிழக்கு  பகுதியில் இக்காலத்தில் ஈரப்பதமான காற்று வீசுகிறது. ”சூரியனின் கதிர்வீச்சு இந்த நிலப்பரப்பை தீவி