இடுகைகள்

சளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழிவறை, குளியறைகளில் எமர்ஜென்சி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  30.11.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலம். மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது. வேலை செய்தே ஆகவேண்டும். நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும். ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது. அதுதான் இருப்பதிலேயே கடினமானது.  இனிய உதயம் பத்திரிகை படித்தேன். இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார். அதாவது மொழிபெயர்த்து தமிழில் செய்திருக்கிறார். பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை. சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை. அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே. பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள்.  இதனால் அம்முக்குட்டிக்கு கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது. அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள். அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை.  நன்றி!  அன்பரசு 2.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு சளி பிடித்துள்ளது. சள

கொரோனாவால் குரலை இழந்தேன்!

படம்
  கொரோனாவால் குரலை இழந்தேன்! இங்கிலாந்தைச் சேர்ந்த கானர்  ரீட் (Connor Reed) கொரோனா வைரஸ் தாக்கி மீண்டுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் பணியாற்றியவர், வைரஸால் தாக்கப்பட்டு உயிர்மீண்டதே மறுபிறப்பு போலத்தான்.  இங்கிலாந்தின் நார்த்வேல்ஸ் பகுதியிலுள்ள லாலன்டுட்னோவைச் சேர்ந்த கானர் ரீட். இவர் சீனாவிலுள்ள வூஹானில் உள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். 2019 நவம்பர் 25 அன்று, சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டார். முதலில் அதனை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.   ஏழு நாளில் சளி, மூக்கடைப்பு சரியாகிவிடும் என்று தன் தினசரி வேலைகளை செய்து வந்திருக்கிறார். ஆனால் , திடீரென ஒருநாள் காலையில் அவரால் படுக்கையிலிருந்து எழமுடியவில்லை. உடல்வலியோடு, இடைவிடாத இருமல் தொல்லை வேறு. பல்வேறு கைவைத்தியங்களை செய்தும் பயனில்லை.  “ நுரையீரல் பாதிக்கப்பட்டதால் எனக்கு மூச்சுவிடுதல் சிரமமாகி வந்தது. முழுக்க குரலை இழந்து விட்டிருந்தேன். பேச முயற்சித்தால் கர், புர் என்ற ஒலிதான் வந்தது” என்றார் கானர். உடல்நிலை தேறாததால் உடனே அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் அவருக்கு நிம்மோனியா

விமானத்தில் செல்லும்போது அழுகை வருவது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ? - வின்சென்ட் காபோ

படம்
    pixabay       பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ காய்ச்சலில் இருக்கும்போது சாப்பிடாமல் இருப்பதும் , சளிப்பிடித்திருக்கும்போது சாப்பிடுவதும் சரியா ? சளி பிடித்திருக்கும்போது சாப்பிடுவது பொதுவானதுதான் . நோய்த்தொற்றை எதிர்கொள்ள உடலில் பலம் தேவை . எனவே நோயுற்றிருக்கும்போது ஏதாவது உணவை சாப்பிடுவது அவசியம் . உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும்போது , சூப் தயாரித்து குடிப்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . 2002 இல் செய்த ஆராய்ச்சிப்படி ஆராய்சியாளர்கள் சளிப்பிடித்திருக்கும்போது உணவை முறையாக எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது என்று கூறினர் . இதில் கலந்துகொண்டவர்கள் குறைவானர்கள்தான் . மேலும் பசித்தால் சாப்பிடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிடுவது சரியானதல்ல . கிரேக்கத்தில் காய்ச்சல் அடிக்கும்போது எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது புழக்கத்தில் இருந்து வந்த து . இது காய்ச்சலை குணப்படுத்தும் என்று கூறமுடியாது . உணவு எடுத்துக்கொள்வதை விட முழுமையாக ஒய்வெடுப்பது முக்கியமானது . விமானத்தில் படங்களை பார்க்கும்போது கண்ணீர் வருவது ஏன் ? தனி

டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா?

படம்
  cc         ஷாம்பெய்ன் பாட்டிலைத் திறந்து அதில் ஸ்பூன் ஒன்றை போட்டால் அது புதிய பானம் போலவே இருக்குமா? அறிவியல் பூர்வமாக இதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. பொதுவாக குடித்துவிட்டு மீந்த பானங்களில் வெள்ளி ஸ்பூன்களை போட்டுவைத்தால் அதிலுள்ள கேஸ் போகாமல் அப்படியே இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. 1994ஆம் ஆண்டு பேராசிரியர் ரிச்சர்ட் ஜரே என்பவர், இதுபற்றி ஆராய்ந்தார். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். 26 மதுபான சுவையை அறியும் வல்லுநர்களைக் கொண்டு சோதித்தார். இச்சோதனையில் ஸ்பூன் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் எந்தத வகையில் சுவையை ஊக்குவிக்கவில்லை என்பது உறுதியானது. மதுபானம் சுவையாக கார்பன்டை ஆக்சைடு் வாயுவுடன் இருக்கவேண்டுமா? அதனை குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள். போதும். டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா? பாதிக்க வாய்ப்புண்டு. இதெல்லாம் உளவியல் சார்ந்த தன்மை. பல் மருத்துவர் அணியும் வெண்ணிற கோட், சமையல்கலைஞர் அணியும் உடை ஆகியவை அவர் செய்யும் வேலை நமக்கு மட்டுமல்ல அவருக்கும் உணர்த்தும். இதனை என்குளோத்டு காக்னிஷன் என்று கூறலாம

சளி பிடித்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்யலாமா?

மிஸ்டர் ரோனி சளி பிடித்திருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா? சளி பிடித்திருக்கும்போது அதனை விரட்டும் பணியில் உடல் இருக்கும். அப்போது பார்த்து நீங்கள் டம்பெல், பென்ச் பிரஸ் என செய்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும், உடல்நிலை இன்னும் மோசமாகும். எளிதான உடற்பயிற்சிகளைச்செய்யலாம் தவறில்லை. பாத் பல்கலைக்கழக அறிக்கைப்படி, சளி பிடித்து உடல்வெப்பநிலை காய்ச்சல் வரும் நிலையில் இருக்கும்போது, ஓய்வு எடுப்பதே நல்லது. இல்லையெனில் உடலை ஐசியுவில் வைத்து பராமரிக்கும்படி ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

குளிரில் சளி பரவுவது எப்படி?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குளிர்பிரதேசத்திலும் சளி பிடிக்குமா? நிச்சயமாக. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இது நடக்கும். சளி பிடித்து மூக்கைச் சிந்தி சுவற்றில் துடைத்துவிட்டு நடப்பீர்கள். ரினோவைரஸ் இதற்கு காரணம். இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு கால்களில் ஐஸ்கட்டிகளும், சிலருக்கு நீரும் வைக்கப்பட்டது. குளிர்ந்துபோன ஐஸ்கட்டியைக் காலில் வைத்திருந்தவர்களுக்கு சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் 30 சதவீதம் காணப்பட்டது. பிறருக்கு இதைவிட குறைவான வாய்ப்புகள் காணப்பட்டன. குளிர்ந்த சூழல், உடலில் வெள்ளை அணுக்கள் செயல்படும் வேகத்தை குறைப்பது உண்மை. இதன் விளைவாக, குளிர்ந்த சூழலில் நோய்க்கிருமிகள் வேகமாக உடலைத் தாக்குகின்றன. பிறருக்கும் பரவுகிறது. குளிர்ந்த சூழலில், உடலை சூடாக வைப்பதற்கே உடலின் சக்தி செலவாகிறது. எனவே, உடலை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது. நன்றி: பிபிசி