இடுகைகள்

தாக்குதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதக்கலவர, பேரிடர் சூழலில் உங்களை தற்காத்துக்கொள்வதே முக்கியம்!

படம்
  உலகளவில் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எழுபத்து மூன்று சதவீதம். தற்காப்புக்கலையில் பெல்ட்டுகள் வாங்கித்தள்ளாவிட்டாலும் அடிப்படையாக சில முறைகளைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். மதவாத நாடான இந்தியாவில் தலித்துகள் திருமணத்தின்போது கூட தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கீழ் ஏராளமான சகோதர குண்டர்கள் அமைப்பு உண்டு. இவர்கள் வேலையே தாழ்த்தப்பட்டவர்களை, சிறுபான்மையினரை தாக்கி சொத்தை கொள்ளையடிப்பதுதான். எனவே, தற்காப்புக்கலை கற்பது ஏழை நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாட்டிலும் நல்ல விஷயம்தான். உயிர்பிழைக்க சண்டைபோடும்போது ஆயுதம் என தனியாக பிரித்துச் சொல்ல ஏதுமில்லை, அனைத்துமே ஆயுதங்கள்தான். கல், மண், குச்சி, செங்கல், ஆணி, சுத்தி, என அனைத்தையும் பயன்படுத்தலாம். உடலையும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.   கைகளை வைத்து ஒருவரை முதுகில் முன்புறமாக மார்பில் வைத்து பின்புறமாக எப்படி வேண்டுமானாலும் தள்ளலாம். உங்கள் ஆற்றலைப் பொறுத்து எதிரிக்கு மார்பு எலும்புகள் கூட உடையும். கையிலுள்ள மூட்டு காயமடையாமல் இருந்தால...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்!

படம்
    தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்! இன்று இந்தி மொழி திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிவது என்ன? ஆபாச வக்கிரமான காட்சிகள், பெண்களை இழிவாக நடத்துவது, அளவற்ற வன்முறை, மதவாத அரசியலை ஊக்குவிக்கும் அரசுக்கு ஆதரவான படங்கள் என்றுதான் நிலைமை உள்ளது. கதைக்கு தேவையோ இல்லையோ படத்தினுள் கற்பனைக் கதையான அரசியலுக்கு உதவும் ராமாயணம் வந்துவிடும். எதற்கு என பார்வையாளர்களுக்கே புரியாது. இப்படிப்பட்ட குப்பைகளை எடுப்பதற்கு பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. சிலவேளைகளில் இதுபோன்ற மதவாத படங்களை நாட்டின் ஆட்சித்தலைவரே. தனது அமைச்சரவையில் உள்ள குற்றவாளி அமைச்சர்களுடன் அமர்ந்து கண்டு காண்பார். அதைப்பற்றிய பெருமைமிகு விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பகிர்வார். இந்த லட்சணத்தில் வீடு இடிக்கப்படும், தொழில்களை மிரட்டி பறிக்கும் அவலமான நெருக்கடி நிலையை சிறுபான்மையினர் எப்படி பிறருக்கு கூறுவது? அதற்காக அவர்களும் கேமராக்களை, செல்போன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அரை உண்மையை மட்டுமே எடுத்து வைத்து எதிர்க்கட்சிகளை அல்லது மக்களை இழிவுபடுத்தும் கால்நக்கி ஊடகங்கள்...

ஓநாய்களை பிடிப்பதே இப்போதைக்கு தாக்குதலை தடுக்கும் ஒரே வழி!

படம்
      உத்தரப்பிரதேசத்தில் மக்களை ஓநாய்கள் தாக்கியுள்ளதன் காரணம் என்ன? ஓநாய்கள், குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஓநாய்களை அரசு நிர்வாகம் வேட்டையாடினால்,ஓநாய்கள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே அங்கு ஓநாய்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. வாழிடம் அழிவது, உணவு தட்டுப்பாடு, இயற்கையாக கிடைக்கும் இரைகள் அழிவது, குட்டிகளுக்கு உணவிட முடியாத சிக்கல் ஆகியவை காரணமாக ஓநாய்கள் மாற்று வழிகளைத் தேடி மனிதர்களைத் தாக்குகின்றன. புல்வெளியில் தங்களை மறைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடி காத்திருக்கும் ஓநாய்கள், வீடுகளில் உள்ள குழந்தைகளை வேட்டையாடியுள்ளன. குழந்தைகள் விலங்குகளை குறைந்தளவிலேயே எதிர்த்து போராட முடியும் என்பதை ஓநாய்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளன. ஓநாய்கள் குறைந்துவரும் சூழலில் ஓநாய் - நாய் இணைந்த கலப்பினம் உருவாவது ஆரோக்கியமானதல்ல. இது மனித இனத்திற்கு எதிர்காலத்தில் அபாயத்தையே தரும். உபியில் இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெறுவது அவசியம். ஓநாய்களின் வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பது பிரச்னையாக மாறியுள்...

ஸிசோபெரெனியா நோயாளியை சாமியார் என நினைத்து வணங்கி வந்த காஷ்மீர் கிராம மக்கள்!

படம்
          ஸிசோபெரெனியா சாமியார்! மனநிலை பாதித்து பித்து நிலையில் அழுக்கு உடையில் திரிபரவர்களைக் கூட மக்கள் விட்டுவைப்பதில்லை. அவர்களையும் போகிறபோக்கில் கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் தின்றுவிட்டு வீசி எறியும் குவளைகளைக்கூட தெய்வ பிரசாதமாக ஏற்கிறார்கள். உண்மையில் இங்கு யாருக்கு மனநிலை பிறழ்ந்துள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதே கடினம். இந்த லட்சணத்தில் மதவாதிகள், தெலுங்கு ஆட்களை வைத்து நாத்திகர்கள், ஆத்திகர்களைக் கொல்கிறார்கள் என கருத்தூசி படங்களை வேறு எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கஷ்டம்தான். இந்தியாவில் வாழ்வதும், மக்களைப் புரிந்துகொள்வதும் மிக கடினமான செயல்களில் ஒன்று. இப்போது ஒரு கதையைப் பார்ப்போம். இந்த பாபாவின் பெயர் லாசே பாப். இவர் காஷ்மீரில் உள்ள குப்வாரா சோகுல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரபான காஷ்மீரிகளின் வீடுகளைப் போலவே பெரிய முற்றம், வராண்டா கொண்ட வீட்டில் வசிக்கிறார். பாப் என அழைக்கப்படும் சொல்லுக்கு துறவி என்று பொருள். மேலே சொன்னது, அவரது பட்டப்பெயர். நிஜப்பெயர் குலாம் ரசூல். இந்த சாமியார் அவரது அக்கா வீட்டில் அமர்ந்து மக்களின் பிரச...

ஐஇடி வெடிகுண்டுகள் - ஒரு அலசல்

படம்
  காவிக்கட்சி ஆட்சியில் கலவரங்கள் தேசியமயமாக்கப்பட்டு சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. நாளிதழ்களில், இந்தமுறை எத்தனை பேர் இறந்தார்கள் என எண்ணிக்கை விளையாட்டுதான் மக்கள் விளையாட வேண்டும். அந்தளவு சிறுபான்மையினர் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், அதீதமாக வெடிகுண்டு வைப்பதும் புதிதாக சேர்ந்துள்ளது. தேசப்பற்று கொண்ட வட இந்தியர்கள் கட்டுப்பாடு தவறாமல் காவிக்கட்சிக்கு வாக்களித்துவிட்டு வேலை செய்யவும், வாழவும் தென்னிந்தியாவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ராஜதந்திரம் புரியாத வடநாட்டிலேயே வேலை செய்யும் மக்கள் மாட்டு மூத்திர பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.  பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற இடத்தில் ஐஇடி என்ற வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் பத்துபேர் காயமுற்றிருக்கிறார்கள். ஐஇடி என்பதற்கு இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ளோசிவ் டிவைஸ் என்று விரிவாக்கம் கூறுகிறார்கள்.  சிசிடிவி கேமராவில் கஃபேயில் மர்ம மனிதர் பேக்கோடு வந்து உட்கார்ந்திருக்கும் காட்சியை காவல்துறை கைப்பற்றியுள்ளனர். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட குண்டு வகையில் ஐஇடி வருகிறது. இதை...

தெரிஞ்சுக்கோ - கரடிகள்

படம்
  தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்   கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம். கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது. துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு. ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது. உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன. ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது. சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந...

பணத்திற்காக வயதானவர்களை அடித்துக் கொல்லவும் தயங்காத கொடூரன் - ஆலன்

படம்
  ஆலன், ஆப்பிரிக்க அமெரிக்க தொடர் கொலைகாரர்களில் ஒருவர். இந்தியன் போலிஸ் பகுதியில் கொலைகளை செய்து பழகியவர் சும்மா இருப்பாரா? தனக்கான பலவீனமான இரையைத் தேடிக்கொண்டிருந்தார். 1974ஆம் ஆண்டு, ஓபல் கூப்பர் என்ற 85 வயது பெண்மணியின் வீட்டில் கொள்ளையடிக்கப் புகுந்தார். ஓபல் என்ற அந்தப் பெண்மணியை அடித்துக் கொன்றார். இதற்காக   குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்திற்கு தண்டனை 21 ஆண்டுகள். இந்த குற்றத்தை ஆலன் செய்தபோது அவரின் வயது 24. பிறகு பிணை கிடைக்க 1985ஆம் ஆண்டு வெளியே வந்தார். வந்தவர் இந்தியன் பொலிஸ் பகுதியில் இருந்த கார்களை சுத்தம் செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அமைதியாக இருந்தார் என்றால் வருந்தி திருந்தியதாக அர்த்தமில்லை. 1987ஆம் ஆண்டு, மேமாதம் 18 அன்று, 73 வயது பெண்மணி வீடு புகுந்து தாக்கப்பட்டார். இறப்பில் இருந்து சற்றே அதிர்ஷ்டம் இருந்து பிழைத்தார் என்றுதான் கூறவேண்டும். இரண்டு நாட்கள்தான். அடுத்த குற்றம் நடைபெற்றது. அதில் லாவர்னே ஹாலே என்ற பெண்மணி மாட்டினார். ஆனால் குற்றச்சம்பவத்தில் இவருக்கு கிடைத்த அடிகளும் குத்துக்களும் அவரை உயிரோடு வாழ விடவில்லை. 87 வயதான பெண்...

ரேடார் எப்படி செயல்படுகிறது?

படம்
  quantum radar, china ரேடார் எப்படி செயல்படுகிறது? இரண்டாம் உலகப்போர். அதுதான் பிரிட்டனுக்கு ரேடாரின் முக்கியத்துவத்தை சொன்ன முக்கியமான வரலாற்று காலகட்டம். அப்போது ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர், தன்னை உலக அதிபராக நினைத்து பல்வேறு நாடுகளை ராணுவத்தால் ஆக்கிரமித்து வந்தார். அந்த வகையில் பிரிட்டனை எப்படியாவது அடக்கி ஆளவேண்டும் என்பது அவரது ஆசை.   வெறும் ஆசை மட்டுமல்ல, அதற்கான தயாரிப்புகளோடுதான் அவர் கனவையும் கண்டார். ஜெர்மனியின் விமானங்கள், கப்பல்கள் களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றிவாகை சூடின. நோக்கம் உயர்வாக இருந்தாலும் அதைநோக்கிய பயணத்திற்கு உழைப்பும் முக்கியம். அதுவும் ஹிட்லரிடம் இருந்தது. ரேடியோ அலைகளை வானில் ஏவி அது விமானத்தில் பட்டு திரும்பி வந்தால் வல்லுநர்கள் மூலம் விமானத்தின் அளவு, வேகம், தூரம் என அனைத்தையும் கணக்கிட முடியும். இதற்கு பயன்படுவதுதான் ரேடார். ரேடியோ டிடெக்ஷன் அண்ட் ரேஞ்சிங். 1885ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து இயற்பியலாளர் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வேல்   ரேடியோ அலைகள் உலோகங்களில் மோதும்போது பிரதிபலிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார். ஏறத்தாழ ஒளி அலைகளின் இ...

அற்புதமான விமானங்களை வடிவமைத்த ஜப்பானிய பொறியாளரின் கனவு - விண்ட் ரைசஸ் - anime

படம்
  விண்ட் ரைசஸ் அனிமேஷன்  ஜப்பான்  அடிப்படையில் தேசியவாதப் படம்தான். ஆனால் அதைத்தாண்டிய விமானங்களை கட்டமைக்கும் கனவு கொண்ட ஒருவனின் வாழ்க்கை தான் அனிமேஷன் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.  இந்த அனிமேஷன் படம், ஜெர்மனியில் உள்ளது போன்ற நவீனத்துவத்துடன் அதிவேகம் செல்லும் விமானங்களை கட்டமைக்கும் பொறியாளர் ஒருவரின் கதையைப் பேசுகிறது. சிறுவயதில் இருந்தே விமான பைலட்டாக மாறும் ஆசையுடன் ஜீரோ உள்ளான்,ஆனால் கண்பார்வை சற்று குறைவானதால், பொறியாளர் ஆகிறான். அப்போது உலகப்போர் காலகட்டம். எனவே, வேகமாக செல்லும் ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்களை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஜீரோ தனது விமானத்தை எப்படி உருவாக்குகிறான் என்பதே படம்.  படம் நெடுக விண்ணில் பறக்கும்போது அல்லது வாகனத்தில் பைக்கில் போகும்போது நமது முகத்தில் காற்று அடிக்குமே, வேகமாக, மெதுவாக என பல்வேறு விதமாக.. .அப்படி காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. விமானத்தை உருவாக்குபவனான ஜீரோ, காற்றில் தனது கனவுகள் அலைபாய திட்டங்களை தீட்டுகிறான். பெரும்பாலானவை, எஞ்சின் கோளாறுகள், மோசமான எரிபொருள், ஜப்பானில் வீசும் க...

பச்சை விரியனின் தாக்குதலுக்கு பலியாகும் மக்கள்!

படம்
   பச்சை விரியனின் விஷத் தாக்குதல்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாம்புகளால் மனிதர்கள் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு, 64 பாம்புகள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 பாம்பினங்கள் விஷத்தன்மை கொண்டவை. இதில் க்ரீன் பிட் வைப்பர் எனும் பாம்பினத்திலுள்ள பல்வேறு வகை பாம்புகளால் தான் மனிதர்கள் அதிகம் கடிபட்டுள்ளனர். இந்த பாம்பின் விஷத்தை ஹீமோடாக்ஸிக் ( Hemotoxic venom)என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கண்ணாடி விரியன், புல் விரியன் ஆகிய பாம்பினங்களை விட க்ரீன் பிட் வைப்பரின் விஷம் கடுமையானதல்ல. காணப்படும் நிலப்பரப்பைப் பொறுத்து பாம்பின் விஷம் மாறுபடுகிறது. மேற்குவங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் பாம்புகள் ஒரே இனத்தில் பல்வேறு துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவை. பாம்புகள் பல்வேறு வகையான விஷத்தன்மைகளைக் கொண்டுள்ளன. ஹீமோ டாக்ஸின் (Hemotoxin) என்பது, சிவப்பு ரத்தசெல்களை அழிக்கிறது. உடலின் இயல்பான ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. நியூரோடாக்ஸின் (Neurotoxin), மனிதர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும், சைடோடாக்ஸின் (Cytotoxin), உடலி...

தனிநபர்களை தாக்கும் வன்முறைக்கு பெயர் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  ரன்னிங் அமோக் (Running amok) என்பது உடல்நலக்குறைபாடா?  மலாய் வார்த்தையான மெங் அமுக் (Meng amuk)என்பதிலிருந்து ரன்னிங் அமோக் என்ற வார்த்தை உருவானது. சமூகத்தை புறக்கணித்த மனிதர், பெருந்திரளான அல்லது தனிநபர்களை தீவிரமாக தாக்கும் குறைபாடு என ரன்னிங் அமோக்கை வரையறை செய்யலாம். 1770ஆம் ஆண்டு கடல் பயணம் செய்த கேப்டன் குக் என்பவர், மலேஷிய பழங்குடிகளிடையே ரன்னிங் அமோக் மனநல குறைபாடு இருப்பதை பதிவு செய்துள்ளார்.  ஜீன்ஸ் பேண்டிலிலுள்ள சிறிய பாக்கெட் எதற்கு?  1879ஆம் ஆண்டு, லீவிஸ் ஸ்ட்ராஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீன்ஸ் பேண்டில் நான்கு பாக்கெட்டுகள் இருந்தன. இதில் ஒரு சிறிய பாக்கெட்டும் உள்ளடங்கும். அன்றைய காலத்தில், ஆண்கள் தங்களின் பாக்கெட் வாட்சுகளை ஜீன்ஸில் வைத்துக்கொள்ளத்தான் இந்த வசதி. ஆனால் பின்னாளில் சிறிய பாக்கெட்டின் பயன்பாடு மாறி பயணச்சீட்டு, நாணயங்களை வைத்துக்கொள்வதாக மாறிவிட்டது.  https://www.rd.com/article/tiny-pocket-in-jeans/  https://www.rd.com/list/interesting-facts/ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC181064/

நரசிம்மராவ் இந்தியாவை நிறையவே மாற்றியுள்ளார்! பிரகாஷ் ஜா - திரைப்பட இயக்குநர்

படம்
  பிரகாஷ் ஜா  இந்தி சினிமா இயக்குநர்  பிரகாஷ் ஜா, ஓடிடி தளத்திற்காக ஆஷ்ரம் தொடரை எடுத்து வருகிறார்.  ஆஷ்ரம் தொடரின் மூன்றாவது பகுதியை எடுத்து வருகிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது? நான் ஆஷ்ரம் தொடரை எழுதுவது தொடங்கி  அதனை படமாக்குவது, அதன் இறுதிகட்டப் பணிகள் வரை அனுபவித்துத் தான் செய்கிறேன். நான் எப்போதும் ஆஷ்ரம் தொடரின் மையக்கருத்து பற்றி மிகவும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. அப்படி செய்தால், இத்தொடரை உருவாக்கியிருக்க முடியாது. அப்படியே அந்த சிந்தனையில் சிக்கிக் கொண்டிருப்பேன். ஆஷ்ரம் தொடர் வேடிக்கையான ஒன்று. இதில் வரும் பாபாவின் பக்தர்கள் கூடுவார்கள். அவரைச் சேர்ந்த குழுவினர் அதிகரிப்பார்கள். இந்த நேரத்தில் மெல்ல அவரின் வீழ்ச்சி நடைபெறுகிறது. அதுதான் மூன்றாம் பாகத்தின் மையம்.  கடந்த ஆண்டு போபாலில் நீங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது, பஜ்ரங்தள் அமைப்பினரால் தாக்கப்பட்டீர்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நீங்கள் உங்கள் கதைகளை தணிக்கை செய்துதான் எடுக்கிறீர்களா? தணிக்கையெல்லாம் செய்யவில்லை. மேற்படி நீங்கள் சொன்ன தாக்குதல் நடந்தபிறகு படப்பிடிப்பை முடித்துக்க...

உக்ரைனுக்கு சென்று எனது குடும்பத்தைப் பார்க்கவேண்டும்! - மரியா ரியாபோஸாப்கா

படம்
  மரியா ரியாபோஸாப்கா உக்ரைன் நடிகை இவரது முழுப்பெயரை சொல்லுவதற்குள் நாக்குக்கு சுளுக்கு பிடித்துக்கொள்ளும். அதனால் மரியா என்பதே போதுமானது. இவர்தான் அடுத்த எஸ்கே 20 படத்தில் சிவாண்ணாவின் ஜோடிக்கிளி. இவரிடம் பேசினோம்.  எஸ்கே 20 படத்தில் நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் நடித்த வெப் சீரிஸ் ஸ்பெஷல் ஆப்ஸ் 1. 5, உக்ரைனில் படம்பிடிக்கப்பட்டது. அதில் நான் நடித்திருந்தேன். இத்தொடர் வெளியான பிறகு எனக்கு இந்திய ரசிகர்களிடமிருந்து நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பிறகுதான் எஸ்கே 20 படக்குழுவினர் என்னை தொடர்பு கொண்டனர். கதையும் எனது பாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டேன்.  இந்திய சினிமாவைப் பார்க்கிறீர்களா? கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்திய மக்களுக்கு திரைப்படங்களும், அதில் நடிக்கும் நடிகர்களும் அவ்வளவு பிடித்திருக்கிறது. 3 இடியட்ஸ் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உங்களை அதிக இந்தியப் படங்களில் பார்க்க வாய்ப்பிருக்கிறதா? நான் அதிகளவு படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்தியாவில் வேலை பார்க்க எனக்கும் ஆசையிருக்கிறது. உங்களது திரைப்படத்துறை சிறப்பாக செயல...

புலிகள் சரணாலயத்தை சுற்றி வளைக்கும் மாவோயிஸ்டுகள்!

படம்
  மத்தியப் பிரதேசத்தில் புலிகள் காப்பகம் ஒன்றுள்ளது. அதன்பெயர், கன்ஹா. 2,162 சதுர கி.மீ. பரப்பு கொண்ட நிலம். இங்கு புலி, காட்டெருமை கரடி, காட்டு நாய் என நிறைய விலங்குகள் உண்டு. இதைத்தாண்டி அதை இந்தியளவில் கவனப்படுத்தும் அம்சம் ஒன்று இருக்கிறது. அதுதான், மாவோயிஸ்ட்டுகள். இந்த புலிகள் காப்பகத்தில் நூற்றுக்கும் அதிகமாக புலிகள் வாழ்க்கின்றன. இங்கு தங்கள் கூடாரத்தை விரித்துள்ள மாவோயிஸ்ட்கள் அங்கு பணியாற்றும் வனக்காவலர்களை சுட்டுக்கொன்று வருகின்றனர்.  பாலகாட், மண்ட்லா என இரு மாவட்டங்களுக்குள் புலிகள் காப்பகம் வருகிறது. இங்கு வனத்துறை பணியாளர்களாக காவல் காத்தவர்கள் ஒவ்வொருவராக மாவோயிஸ்ட்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். பிறகுதான் இது காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. அண்மையில் சுக்தியோ என்ற வனக்காவலர் போலீஸ் உளவாளி என கண்டறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். மார்ச் 23 அன்று பாலகாட்டிலுள்ள விடுதி ஒன்றில் சுக்தியோவின் உடல் கண்டறியப்பட்டது.  பிறகு இதில் சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காதில் விழுந்து அரசு மரபுப்படி ஏராளமான கலந்துரையாடல்கள் சந்திப்பு நடத்தப்பட்டு புலிகள் காப்பக...

பத்திரிகை சுதந்திரத்தில் பின்தங்கும் இந்தியா! - இந்தியா 75

படம்
  2022ஆம் ஆண்டு இந்தியா, உலக பத்திரிகை சுதந்திர தொகுப்பு பட்டியலில் சரிந்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் உள்ள பட்டியலில், இந்தியா தற்போது 150ஆவது இடத்தை வகிக்கிறது. இந்த பட்டியலை ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்  என்ற ஊடக கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.  ஊடக சுதந்திரத்தில் முன்னிலையில் உள்ள மூன்று நாடுகளைப் பார்ப்போம். நார்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளே முன்னிலை வகிக்கின்றன.  பாரிசில் இருந்து செயல்பட்டு வரும் ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு, தன்னார்வமாக பத்திரிகை சுதந்திரத்தை காக்க செயல்பட்டு வருகிறது. பத்திரிகை சுதந்திரம் தொகுப்பு பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான செய்திகளை உண்மையை உடல், மன அச்சுறுத்தல் இன்றி பத்திரிகையாளர்கள் வழங்குவது என பத்திரிகை சுதந்திரத்தை இந்த அமைப்பு விளக்கியுள்ளது.  நாடுகளை பட்டியலிட என்ன மாதிரியான அம்சங்களை கணக்கிடுகிறார்கள்? 0 முதல் 10 வரையிலான புள்ளிகளை வழங்குகிறார்கள். இதில் ஜீரோ என்பது பத்திரிகை சுதந்திரமே படுகுழியில் இருக்கிறது என்பதைக் காட்டும் புள்ளி. அதிக புள்ளிகள் வாங...

ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயத்தில் முந்தும் சீனா!

படம்
  ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயம்! கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா, ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது. இதைப்பற்றி ஃபினான்சியல் டைம்ஸில் கட்டுரை வெளியானது. அதில், இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை கொண்டு செல்ல முடியும் என்று கூறப்பட்டது. இதுபற்றிய கேள்விக்கு சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன.  ஒலியை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்டவை ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள். மாக் (mach ) என்ற அலகில் இதனை அளவிடுகிறார்கள். மாக் 1  என்பது ஒலியின் வேகம், மாக் 1லிருந்து மாக் 5 வரை சூப்பர் சோனிக், மாக் 5க்கும் அதிகமான வேகம் கொண்டவை ஹைப்பர்சோனிக் என்று வல்லுநர்கள் வரையறுக்கின்றனர்.  கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளுக்கு குறிப்பிட்ட இலக்கு உண்டு. அதற்கான வழிமுறையில் பயணிக்கும். இதை ரேடார்களால் கண்டுபிடிக்க முடியும். தாக்கப்படும் நாட்டின் பாதுகாப்பு ரேடார்கள், ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை அருகில் வந்தபிறகே கண்டுபிடிக்க முடியும். இவற்றில் இரு வகைகள்(HGV,H...

முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?

படம்
  கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.  இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.  ஹிஜாப் நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.  நிகாப் இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.  பர்கா இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையி...

ஜெசிந்தா ஆர்டன் சிறந்த தலைவரா?

படம்
  ஜெசிந்தா ஆர்டென் நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆர்டென் அந்நாட்டின் பிரதமர், அங்கு செயல்படும் தொழிலாளர் கட்சியில் தலைவராகவும் உள்ளார். 2008ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.  2017ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். அப்போது அவரின் வயது 37. இந்த வயதில் அங்கு பிரதமராவது பெரிய விஷயம். இப்படி ஆனது இவர் ஒருவர்தான். இதற்காக நாம் இவரைப் பற்றி இங்கு எழுதவில்லை.  சிறுபான்மையினரை கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் காட்சி 2019இல் கொரோனா ஏற்பட்டபோது, நியூசிலாந்தில் ஏற்பட்ட பாதிப்பை எளிதில் சமாளித்தார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கி முனகிக்கொண்டு இருந்தன. ஆனால் நாம் வித்தியாசமானவர்கள் அல்லவா?  நம்நாட்டில் விளக்கு பூசை, சாப்பாட்டு தட்டை தட்டுவது போன்ற கோமாளித்தனங்கள் நடந்துகொண்டிருந்தன.  ஜெசிந்தா, தனது நாட்டில் நோயைக் குறைக்கும் செயல்பாடுகளை செய்துகொண்டிருந்தார். விரைவிலேயே பாதிப்பைக் குறைத்து கோவிட் இல்லாத  நாடு என்ற பெயரை சம்பாதித்தார். இதனால்தான் அவரை சிறந்த தலைவர் என்று அனைவருமே பேசிக்கொண்ட...

முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

படம்
  அமான் வதூத் மனித உரிமை வழக்குரைஞர் செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள்.  ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள்.  இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்...

அவமானச்சின்னத்தை அகற்ற முயலும் சீன அரசு!

படம்
  அவமானத்தின் தூண்- ஹாங்காங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, வரலாற்று ரீதியான களங்கத்தை மறைக்கும் முயற்சியை எப்போதும் செய்துவந்திருக்கிறது. அண்மையில்  ஹாங்காங் பல்கலைக்கழகத்தில்  டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கல்சியோட் தியான்மென் சதுக்க படுகொலைகளை சுட்டும் சிற்பத்தை வடிவமைத்தார். இப்போது சீன அரசு அந்த சிற்பத்தை அகற்ற வலியுறுத்தி வருகிறது.  சீனாவில் அனுமதிக்கப்படாத தியான்மென் அடையாளம், ஹாங்காங்கில் மட்டுமே உள்ளது. சீனாவில் இருக்கும் ஜனநாயகத்தை முடக்கும் பிரச்னைகள் ஹாங்காங்கில் எதிரொலிக்க, அங்கு போராட்டங்கள் தொடங்கின. இப்போராட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அரசு ராணுவம் கொண்டு அடக்கியது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கின. இதனை நினைவுறுத்தவே சிற்பி அவமானத்தின் சின்னம் என்ற பெயரில் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.  தியான்மென் சதுக்கத்தில் மொத்தம் 7 ஆயிரம் பேர் காயம்பட்டனர். இதில் போராட்டக்கார ர்கள், காவல்துறையினரும் உள்ளடங்குவார்கள்.  36 மாணவர்கள்...