இடுகைகள்

உரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடிப்படை உரிமைகளை கோரும் போராளிகளை கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  கண்காணிப்பு அரசியலில் வேகமெடுக்கும் சீனா  சிசிடிவி கேமராக்களை செயற்கை நுண்ணறிவு வசதியுடன் பொருத்தி அதை இயக்கி குற்றவாளிகளை பிடிப்பது சீனாவின் சிறப்பம்சம். இதில் நாம் அறியாத ஒன்று. இதே வசதியைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை முழுமையாக முடக்க முடியும் என்பதுதான். சீனாவில் மட்டுமல்ல. அதன் ஆட்சி ஹாங்காங்கிலும் விரிவடைந்துள்ளது. அங்குள்ள காவல்துறைஅதிகாரிகளும் இப்போது சீனாவின் காவல்துறை போலவே அரசியல் உரிமை போராளிகளை கைதுசெய்து, கண்காணித்து விசாரித்து மிரட்டி வருகின்றனர். இங்கு நாம் பார்க்கப்போவது அப்படியான போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதுதான்.  ஹாங்காங்கைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆக்னஸ் சோ. இவர் கனடாவில் படிக்க விண்ணப்பித்தார். பல்கலைக்கழகத்தில் கூட அனுமதி கடிதம் வழங்கிவிட்டனர். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை ஹாங்காங் அரசு தர மறுத்துவிட்டது. அதை ஆக்னஸ் பெற சில நிபந்தனைகளை விதித்தது. ஹாங்காங்கில் அவர் செய்த போராட்டங்கள், பங்கேற்புகள் அனைத்தும் வருத்தம் தெரிவிப்பது, கம்யூனிஸ்ட் கொள்கை சுற்றுலாவை ஏற்கவேண்டும் என்பவைதான அவை.  ஆக்னஸூக்கு அப்படியான கருத்தியல் சுற்றுலா என்பது பற்றி எதுவ

ஈரானிய அரசு கொடூரமான முறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி உண்மையை மறைக்க முயல்கிறது - நர்கேஸ் மொகம்மதி

படம்
  நர்கேஸ் மொகம்மதி நர்கேஸ் மொகம்மதி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் உங்களுடைய இளமைக்காலத்தை நினைத்துப்பார்க்கும்போது, ஈரானிய குடும்பம் இப்படித்தான் இருக்கும் என நாங்கள் புரிந்துகொள்ளள ஏதாவது விஷயங்கள் உண்டா? ஈரானில் குடும்ப உறவுகள் வலிமையானவை. அதோடு இணைந்த சொந்த பந்த உறவுகளும் அதேபோல்தான். இந்த வகையில் எனது அம்மாவின் குடும்ப உறவுகளில் அரசியலில் தீவிரமாக ஊக்கமாக ஈடுபட்டிருந்தனர். 1979ஆம் ஆண்டு புரட்சியில், எனது அம்மா குடும்பத்தினர் சிலரும், அப்பாவின் குடும்பத்தினர் சிலரும் சிறைப்பட்டனர். தூக்கிலும் போடப்பட்டனர். இந்த சம்பவங்கள்தான் எனது சிறுவயது நினைவுகளாக போராட்டத்தையும் எதிர்ப்பையும் நினைவூட்டி வருகின்றன.  ஈரானிய பெண்ணாக ஒருவரின் வாழ்க்கை எப்படி இருந்தது? எனது அம்மா, அரசு வற்புறுத்திய கருப்பு நிறு பர்காவை அணியவில்லை. வண்ண நிறங்களைக் கொண்ட உடைகளை அணிந்தார். ஆனால் அரசு தனது கருத்துகளை மதிப்புகளை மக்கள் மீது திணித்தது. மக்கள் கொண்டிருந்த கருத்துகளுக்கும் அரசுக்கும் பொருந்திப்போகவில்லை. தொன்மை பழக்க வழக்கங்களை உடைத்து சுதந்திரம் கேட்கும் போராட்டங்கள் இன்று வரை நடந்து வருகின்றன. பெண்கள்,

பால்புதுமையினரான மார்ஷா கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன?

படம்
  மார்ஷா பி ஜான்சன் கொல்லப்பட்டது ஏன்? 1992ஆம் ஆண்டு, ஜூலை ஆறாம்தேதி நாற்பத்து ஆறு வயதான மார்ஷா ஹட்சன் ஆற்றில் பிணமாக மிதந்தார். அப்போதுதான் பால்புதுமையினருக்கான நகர பேரணி நியூயார்க்கில் நடைபெற்று முடிந்திருந்தது. பால்புதுமையினரன மார்ஷாவின் இறப்பை காவல்துறை தற்கொலையாகவே கையாண்டது. ஒரு கும்பல், மார்ஷாவை அடிக்க துரத்திச் செல்வதை மக்கள் பார்த்து சாட்சி சொன்னபிறகே அவரின் தலையின் பின்புறம் அடிபட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். பிறகுதான் தற்கொலைக்கோண விசாரணை மாறி, கொலை என்ற ரீதியில் விசாரிக்கத் தொடங்கினர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான மார்ஷா, பால்புதுமையினரின் உரிமைக்காக போராடியவர். ஸ்டோன்வால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தோழி சில்வியா ரிவேராவுக்கு உதவியவர். சில்வியா 2002ஆம் ஆண்டு காலமானார். இவருடன் சேர்ந்து மார்ஷா ஸ்ட்ரீட் டிரான்ஸ்வெஸ்டைட் ரிவெல்யூஷனரிஸ்   - ஸ்டார் என்ற அமைப்பை   தொடங்கினார். இந்த அமைப்பு நியூயார்க் நகரில் வீடற்று தெருவில் திரியும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கானது. 2021ஆம் ஆண்டு மார்ஷாவின் நேர்காணல் பே இட்   நோ மைண்ட் என்ற ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டு வெளியானது. அதில், நீங்

சிறுவயது குற்றவாளிகளை அடையாளம் கண்டு தடுப்பது எளியது அல்ல!

படம்
  அசுர குலம் 5 மனமென்னும் இருட்குகை 1.0   குழந்தைகள் செய்யும் குறும்புகளுக்கு எல்லாம் இப்படி பெயர் வைப்பது நல்லதா என சிலர் நினைக்கலாம். ஆனால் இதில் பெற்றோரின் பங்கும் உண்டு. அவர்கள் குழந்தைகளை எந்த மாதிரியான சூழலில் வளர்க்கிறார்கள். அதன் மூலம்   அவர்களின் மனம் எப்படி விளைகிறது என்பதன் அடிப்படையில்தான் அறிகுறிகளைப் பார்க்கவேண்டும். உளவியலாளர்கள் சிறுவர்களை ஆராய்ந்தபோது பதிமூன்று வயது முதல் பதினெட்டு வயது வரை சோதித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பலரும் வயது வந்தவர்களைப் போன்ற தன்மையில் இருந்தனர்.   சைக்கோபதி செக்லிஸ்டில் சிறுவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர். இளைஞர், வாலிபர் ஆகியோரிடம் அவர்களின் மனநிலை பற்றி பேசும்போது தங்களை தற்காத்துக்கொள்ள முனைவார்கள். அந்த இயல்பு சிறுவர்களிடம் இல்லை என்பதுதான் மகிழ்ச்சியான ஒரே விஷயம். தன்னிடமுள்ள வன்முறையான குணத்தை பற்றி வெளிப்படையாக பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு சிறுவன், எனக்கு இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. நான் ஏதேனும் பிரச்னையில் சிக்கிக் கொள்ளும்போது பெற்றோர் அதிகம் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு நல்ல நேரம் இருக்கும் வர

வெறுப்பின் வாசம் வீசும் ரத்தம் தோய்ந்த காற்று - இந்தியாவின் மதவாத வன்முறைக்கு எதிராக காந்தி

படம்
            காந்தி இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காலம் இருந்தது . ஆனால் அவர் மக்கள் மீது காட்டிய பாசங்கற்ற அக்கறையும் அன்பும் அவரது உயிரைப் பிரித்தது . அவரது உடலில் பாய்ந்த மூன்று தோட்டாக்கள் உடலை நம்மிடமிருந்து பிரித்திருக்கலாம் . பிறரைப் பற்றி அக்கறை கொள்ளும் காந்தியின் மதிப்புகளை அல்ல . இன்று காந்தி பிறந்த தேசத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு எதிர்காலத்தில் இருக்கும் என்று கூறமுடியாது . இந்து - முஸ்லீம் பிரச்னையில் காந்தியின் நிலைப்பாடு காரணமாக அவர் மீது விரோதம் பாராட்டி கருத்துகளைப் பேசும் பதிவிடும் குழுக்கள் அனைத்து இடங்களிலும் உருவாகி வளர்ந்து வருகிறார்கள் . காந்தி தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்தபோதுதான் வறுமையில் உள்ள விவசாயிகளின் நிலையைப் பார்த்து தனது உடையை அரையாடையாக மாற்றிக்கொண்டதாக கூறுவார்கள் . அவர் அந்த ஆடையை தனது செயல்பாடுகளுக்கு கருவியாக கொண்டார் . தனது போராட்டத்திற்கு தனது உடலையே ஆயுதமாக பயன்படுத்த காந்தி கற்றிருந்தார் . இதனால்தான் இங்கிலாந்தின் பக்கிங்காம் மாளிகைக்கு காந்தி அரையாடையில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . உண்மையில் அப்படி

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முட

பெண்களின் உரிமைகள், விவசாயிகளுக்காக பாடுபட்ட குடியரசுத்தலைவர்! - பிரதீபா பாட்டீல்

படம்
  பிரதீபா பாட்டீல் பிரதீபா பாட்டீல் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை குடியரசுத்தலைவராக பணியாற்றியவர் பிரதீபா.  1934ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஜால்காவோன் என்ற இடத்தில் டிசம்பர் 19 அன்று பிறந்தவர். நாராயண் ராவ் பாட்டீல், கங்காபாய் பாட்டீல் ஆகியோர்தான் இவரின் பெற்றோர். பிரதீபா தனது பனிரெண்டு வயதில் அம்மாவை இழந்தார். பாசகேப் என்ற அத்தை கண்டிப்பும் கறாருமாக பிரதீபை வளர்த்தார்.  அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர் பிரதீபா. பாம்பே சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்துள்ளார்.  தனது 27 வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிறகு மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினரானார். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தின் எட்லாபாத்  தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.  பொது சுகாதாரம், சமூக பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்தார். பிரதீபா, டாக்டர் தேவிசிங் ஷெகாவத் என்பவரை மணந்தார். இவர் அரசியல்வாதி மற்றும் பேராசிரியர்.  2004ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் 12    ஆவது குடியரசுத்தலைவராக பதவியேற்றார். நேரு, சோனியா ஆகியோரின் வழிவந்தவர்களுக்கு மரியாதை வழங்கி பக்குவதாக

அணைகளை எதிர்த்துப் போராடும் இயற்கை போராளி மேதா பட்கர்!

படம்
    இயற்கை செயல்பாட்டாளர் மேதா பட்கர் மேதா பட்கரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இயற்கை சார்ந்த இதழ்களில் இவரைப் பற்றி அதிகம் வந்திருக்கும். நர்மதா நதியில் கட்டப்படும் அணைகளை தடுத்து போராட்டங்களை நடத்திய வகையில் உலகம் முழுக்க பிரபலமானார். நர்மதா பச்சா அந்தோலன் எனும் அமைப்பை கட்டமைத்து அணையால் ஏற்படும் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டம் நடத்தினார்.  இயற்கைப் போராளி மேதா பட்கர் சர்தார் சரோவர் எனும் அணையைக் கட்டக்கூடாது என 22 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய உறுதியான மனம் கொண்டவர் மேதா பட்கர். இந்த போராட்டங்கள் கூட 32 ஆண்டுகள் கள ஆய்வுகள், விவாதங்களுக்கு பிறகே நடைபெற்ற ஒன்று. டாடாவின் சமூக அறிவியல் கழகத்தில் சமூகப் பணி படிப்பில் எம்.ஏ படித்தவர் மேதா. மும்பையில் வாழும் குடிசைவாசிகளுக்கான வீடு கோருதல், ஆந்திராவில் கோவ்வாடா அணு உலை திட்டத்திற்கு எதிர்ப்பு, ஆக்கிரப்பு வீடுகளுக்கு எதிர்ப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கங்களில் அரசியல்வாதிகள் இருப்பதற்கு எதிர்ப்பு என மேதா பட்கர் ஏராளமான பிரச்னைகளுக்கு போராடியுள்ளார்.    சாதி, மதவாதம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள

மெய்நிகர்உலகத்திற்கு வரவேற்பு கொடுக்கும் மெட்டா! - பேஸ்புக்கின் எதிர்கால ஐடியா

படம்
  மெட்டா மெட்டாவெர்ஸ் கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட். அதைப்போலவே பேஸ்புக்கின் கைவசம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்த நிறுவனத்திற்கு மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை இப்போது மார்க் ஸூக்கர்பெர்க் ரீபிராண்டிங் செய்து வருகிறார். எதிர்காலத்திற்கான புது விஷயங்களை நம்பிக்கையுடன் செய்கிறோம் என்று மார்க் கூறியிருக்கிறார்.  மெட்டாவெர்ஸ் என்பது புதுமையான விர்ச்சுவல் உலகம். முதலில் கணினி, பிறகு இணையம் அதிலிருந்து ஸ்மார்ட்போன் என சென்றுகொண்டிருக்கும் பயணம் இதோடு நிற்காது புதுமையாக செல்லும் என்பதை தனது டெமோ வீடியோ மூலம் கூறியிருக்கிறார். மார்க் அவரது நண்பர்களை விர்ச்சுவல் ஸ்பேஸ் ஒன்றுக்கு அழைத்து விளையாடும் காட்சியை இணையத்தில் பார்த்திருக்கலாம். இதில் எப்படி தோன்றலாம் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். மக்கள் ஒருவரையொருவர் எப்படி சந்திக்கிறார்கள், இணைகிறார்கள் என்பதுதான் மெட்டாவெர்ஸ் என மார்க் நினைக்கிறார்.  இதில் ஒருவரின் முகத்தைப் பார்ப்பது மட்டுமன்றி, அவருடனான உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்ள முடியும். இதனை மார்க் மட்டுமே சாத்தியப்படுத்தமுடியும் என

மாற்றுப் பாலினத்தவர்கள் ஒன்றாக திரண்டால் மட்டுமே அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும்!

படம்
                  ராமசுவாமி   ஈக்குவலி ஸ்டோரிஸ் பை பிரண்ட்ஸ் ஆப் தி க்யுர் வேர்ல்டு என்ற பெயரில் நூல் வெளியாகியுள்ளது . இதனை ஶ்ரீனி ராமசுவாமி , ராமகிருஷ்ண சின்கா ஆகியோர் இணை ஆசிரியர்களாக பணியாற்றி தொகுத்துள்ளனர் . இதில் 45 பேரின் கதைகள் உள்ளன . நூலைப்பற்றி அவர்களிடம் பேசினோம் . கூட்டணி என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? மாற்றுப்பாலினத்தவர்கள் ஒன்றாக இணைந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டால்தான் அவர்கள் இ்ங்கு வாழ முடியும் . இதைத்தான் நாங்கள் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளோம் . ஒருவர் தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து பிறரை புரிந்துகொள்ள முடியும் . இதற்கு அவர்கள் ஒன்றாக இணைவது முக்கியமானது . நீங்கள் வெளியே வருவது பற்றி கூறுகிறீர்கள் . அதைப்பற்றி விளக்குங்களேன் . வெளியே வருவது என்று நான் கூறியது , தங்களது விருப்பம் பற்றி மாற்றுப் பாலினத்தவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதுதான் . பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , நிறுவனங்கள் என அனைவரும் மாற்றுப்பாலினத்தவரின் கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்க கூடியவர்கள் . இவர்கள் அனைவருமே ஒரு கூட்டணியாக திரண்டால் தங்களுக்கான கோரிக்கைகளை எளி

செடி, கொடிகளுக்கு காவி வண்ணம் பூசும் புதிய சட்டங்கள்! - லட்சத்தீவு மக்களுக்கான அடடே சட்டங்கள்!

படம்
                    லட்சத்தீவுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன . இதன்படி அதன் நிர்வாகி பிரபுல் கே படேல் பல்வேறு சட்டங்களை உடனே அமல்படுத்தியுள்ளார் . இதெல்லாம் எதற்கு என பார்த்தவுடனே படிக்கும் யாருக்கும் தெரிந்துவிடும் குடுமிகளை கொண்ட திட்டங்கள் அவை . .. தீவில் முறையான சான்றிதழ் இல்லாமல் யாரும் பசுக்களை கொன்று சமைத்து சாப்பிடக்கூடாது . மாட்டுக்கறியை விற்பதும் குற்றம் என அறிவிக்கப்படுகிறது . மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு , ஓராண்டிற்கு மேல் சிறைத்தண்டனையும் ஏற்பாடாகியிருக்கிறது . சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாற்ற இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம் . இதற்கு எதிராக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் . அவர்களின் அனுமதி பெறாமல் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என கருத்து கூறியுள்ளனர் . இரண்டே குழந்தைதான் 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டப்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் யாரு்ம் பஞ்சாயத்து உறுப்பினராக முடியாது . இப்போது பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்க