இடுகைகள்

சுயசரிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரரான அப்பாவை போலீசில் பிடித்துக்கொடுத்த மகள்!

படம்
  அப்பா, தொடர் கொலைகாரர். தன்னை வெளி உலகில் நல்லவராக காட்டிக்கொண்டு கொலைகளை மறைவாக செய்துவருகிறார். இதை மகள் ஏப்ரல் மெதுவாகத்தான் சந்தேகம் வந்து விசாரணை செய்து கண்டுபிடிக்கிறார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட ஐந்துபேர் கொல்லப்பட்டு விடுகிறார்கள். ஆனாலும் நீதியுணர்வும், குற்றவுணர்ச்சியும் அவரை துன்புறுத்த தானாகவே சென்று காவல்துறையில் தந்தை எட்வர்ட்ஸ் பற்றி புகார் கொடுக்கிறார்.  காவல்துறையும் முப்பது ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது. ஆனால் துப்பு கிடைக்கவில்லை. ஏப்ரல் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் எட்வர்ட்ஸை பிடித்து விசாரித்தனர். அவர் ஐந்து கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் சிறையில் இறந்துவிட்டார்.  இந்த கொலை வழக்கை சற்று விரிவாக பார்ப்போம்.  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வாட்டர்டவுன் நகரம். அப்போது ஏப்ரலுக்கு ஏழு வயது இருக்கும். அவருக்குப் பிறகு நான்கு பிள்ளைகள் உண்டு. ஒருநாள் இரவில், அவரது அப்பா, சீக்கிரமாக கிளம்பவேண்டும் என ஏப்ரலை எழுப்புகிறார். கனசரக்கு வண்டி ஓட்டுநரான எட்வர்ட்ஸ், ஆண்டில் ஆ

இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதன் பின்னால் இரண்டு மோசமான கெட்ட விஷயங்கள் இருக்கும்!

படம்
  sly stone ஸ்லை ஸ்டோன்  அமெரிக்க இசைக்கலைஞர்  ஸ்டோன் அண்மையில் தனது எண்பது வயதில் சுயசரிதை ஒன்றை எழுதியிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் பேசினோம்  தற்போதைய வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்? மனம் என்பதைப் பொறுத்தவரை நலமாகவே இருக்கிறேன். ஆனால் உடல்தான் சரியான நிலையில் இல்லை. எனது நுரையீரலில், பிற உறுப்புகளில் சில பிரச்னைகள் உள்ளன. இந்த ஆண்டில் காது கேட்கும் கருவியை வாங்கி அணியும்வரை ஒருவர் பேசுவது கேட்காமல்தான் இருந்தது.  நீங்கள் எழுதியுள்ள சுயசரிதையில், சில்வெஸ்டர் ஸ்டீவர்ட் திரும்ப வந்து ஸ்லை ஸ்டோனின் கதையை கூறியுள்ளதாக கூறியுள்ளீர்களே? மக்கள் என்னைப் பார்த்து எனக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள். நான் மறுவாழ்வு முகாமில் இருந்தபோது அங்கிருந்த மருத்துவர் உனக்குள் உள்ள சில்வெஸ்டர் சந்திப்புகளை விரும்புகிறான். ஆனால் ஸ்லை அதை தவிர்க்கிறான் என்று கூறினார். என் அப்பாவும் இரண்டு மனிதர்களுக்கு என தனி நாட்கள் உண்டு என்று கூறினார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறேன். மக்கள் சிலவகை கடந்தகால கதைகளை கேட்க விரும்புகிறார்கள் என்றொரு மூடநம்பிக்கை உ

சுயநலமான மனிதர்கள், சமூகம், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் உள்நாட்டு அகதியின் வாழ்க்கை!

படம்
        மனோரஞ்சன் பியாபாரி, எழுத்தாளர்     இன்ட்ரோகேட்டிங் மை சந்தால் லைஃப் மனோரஞ்சன் பியாபாரி சிறுவயதில் தான் பிறந்தவுடனே தனது நாக்கில் வைக்க வீட்டில் தேன் இல்லை என்று மனோரஞ்சன் கூறுகிறார் . அப்படி இனிப்பு வைக்கப்படும் குழந்தைக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை . நூலில் இந்த பகுதியை படிப்பவர்களுக்கு இது பெரிதானதாக தோன்றாது . ஆனால் மனோரஞ்சனின் வாழ்க்கை மோசமாகவே அமைகிறது . இனிப்பு என்ற சுவையே உண்ணாதவன் , அறியாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும் ? இவரது வாழ்க்கையும் அப்படித்தான் . இந்த சுயசரிதை பலரையும் அச்சப்படுத்தக்கூடியது . பீதியூட்டக்கூடியது . அந்தளவு சாதியால் , துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர் . மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மனோரஞ்சன் . இன்று அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார் . ஆனால் அவரது தொடக்க , மத்தியகால கட்ட வாழ்க்கை என்பது புழுத்த நாய் குறுக்கே போகாது என வசைபாடுவதைப் பற்றி தி . ஜா கூறுவார் . அதைப்போலத்தான் உள்ளது . அந்தளவு நெருக்கடிகள் . வறுமை , வேலை செய்து சம்பளம் கிடைக்காதது , ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவது , ரயிலில் டிக்கெ

ஒருவரை பலவீனங்கள் கொண்ட மனிதராக காட்சிபடுத்தினால் பிரச்னையில்லை! - இயக்குநர் ஷியாம் பெனகல்

படம்
  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் -  IE ஷியாம் பெனகல் திரைப்பட இயக்குநர் முஜீப் - தி மேக்கிங் ஆப் எ நேஷன் எனும் ஷேக் முஜிபர் ரஹ்மான் சுயசரிதையை படமாக எடுத்துள்ளார். இப்படத்தை வெளியிட தயாராக உள்ளார்.  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் - இந்தியா டுடே பொதுவாக அரசியல் சார்ந்த ஒருவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எடுப்பதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. இதை எப்படி எதிர்கொள்ள நினைத்துள்ளீர்கள்? படத்தில் ஒருவரை மனிதராக பார்க்கும் தன்மையை இழக்கவிட்டுவிடக் கூடாது. அப்படி செய்தால், நீங்கள் உருவாக்கும் படம் சூப்பர்மேன் தனமாக வாழ்க்கையைத் தாண்டியதாக உருவாகிவிடும். ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவரின் பலவீனங்களையும் பார்க்கத்தான் வேண்டும். அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் பலவீனங்கள் உண்டு. அதைத்தாண்டி அவரின் திறன், பலம் இருக்கிறதா என்பதை பாருங்கள். அதை யாரும் ஒருவரிடமிருந்து அகற்றி விட முடியாது. இதை நீங்கள் மனதில் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.  ஷேக் முஜிபர் ரஹ்மானிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள என்ன விஷயங்கள் இருக்கின்றன? நல்ல பழக்கவழக்கங்களைக் கூறலாம். அவர் தனது மக்களை நேசித்தார். அவர்கள

பல்வேறு மொழிகளில் பாடலைப் பாடுவது கடினமானது! - பாடகி உஷா உதூப்

படம்
  பாடகி உஷா உதூப் உஷா உதூப்  பாடகி அண்மையில் இவரின் தி குயின் ஆப் இந்தியன் பாப் என்ற சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது.  நீங்கள் பதினேழு இந்திய மொழிகளிலும் நான்கு வெளிநாட்டு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்கள். தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடுவது கடினமானதா? இப்படி பல்வேறு மொழிகளில் பாடுவது கடினமானதுதான். எனக்கு தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடும்போது பாடலை நான் எனக்காக மூன்றுமுறை எழுதி வைத்துக்கொள்வேன். குறிப்பிட்ட வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இந்த முறை பயன்படுகிறது.  பாடலைப் பாட எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்? பணம் கிடைக்கிறது என்பது முக்கியமான காரணம். அதற்கு முன்னதாக நமக்கு ரசிகர்கள் வேண்டுமே? பாடலின் தரமும், அந்த பாடல் நமக்கு கிடைப்பதும் முக்கியமானது. ரசிகர்களின் எண்ணிக்கையை விட பாடலின் தரம் முக்கியமானது.  நீங்கள் 53 ஆண்டுகள் பாடகியாக இருந்துள்ளீர்கள். இதனை திரும்பி பார்க்கும்போது எப்படியிருக்கிறது? இது கனவுப்பயணம் போலத்தான் இருக்கிறது. என்னுடைய வேலையின் முக்கியமான சாதனைகள் அனைத்துமே கடுமையான சவாலாகத்தான் இருந்துள்ளது. நான் திரைப்பட பாடகியாக மாறுவதற்கு முன்னர் நேரடியாக மேடைகளில் பாடிக்கொண்டிருந்தேன

அரசியல்வாதிகள் எழுதிய நூல்கள்! - காந்தி முதல் சல்மான் குர்ஷித் வரை....

படம்
  சீதாராம் யெச்சூரி தி ஸ்டோரி ஆப் மை எக்ஸ்பரிமென்ட்ஸ் வித் ட்ரூத் 1927 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஓம் புக்ஸ் 295 சத்திய சோதனை என்றாலே எழுதியது யார் என தொடக்கப்பள்ளி மாணவர் கூட சொல்ல முடியும். தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றியது முதல் இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போராட்டத்தில் இணைவது வரையிலான பயணம்தான் நூலின் பேசுபொருள். தனது வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படையாக பேசிய அரசியல்வாதி, போராளி காந்தி மட்டும்தான். இதனால் இன்றுவரையும் இவரை வலதுசாரி மதவாத கும்பல்கள் என்ன முயன்றும் புறக்கணிக்கவே முடியவில்லை.  மை ட்ரூத் 1980 இந்திரா காந்தி விஷன் புக்ஸ் 195 சிறுவயதிலிருந்து இந்திராகாந்தியின் வாழ்க்கையைப் பேசுகிற நூல் இது. கூடவே அரசியலில் உயர்வு, இறக்கம் என சொந்த வாழ்க்கையைப் பேசுவதோடு இந்தியாவின் வரலாற்றையும் உள்ளடக்கிய முக்கியமான நுல்.  ட்வென்டி ஒன் போயம்ஸ் 2001 வாஜ்பாய் பெங்குவின்  299 எண்பத்து எட்டு பக்கங்களை கொண்ட நூல்தான். வன்முறை, அதிகாரம், பாகுபாடு ஆகியவற்றைப் பற்றி பேசுகிற கவிதைகளைக் கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை பற்றிய பேச்சுகளையும் கொண்டுள்ள நூல் இது.  கபிதா பிதான் 2020 மம்தா பா

உலக கோப்பை போட்டியை வெல்வது மட்டுமே எனது கனவு! - மிதாலி ராஜ், கிரிக்கெட் வீரர்

படம்
  மிதாலி ராஜ்  மிதாலி ராஜ் கிரிக்கெட் வீரர் அண்மையில்தான் கேல் ரத்னா விருதை மிதாலி ராஜ் பெற்றார். இந்திய கிரிக்கெட் அணிக்காக இருபத்திரெண்டு ஆண்டுகள் விளையாடிய அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர். அவரிடம் பேசினோம்.  இருபத்தி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விளையாடி வருகிறீர்கள். இப்படி ஊக்கமாக விளையாட என்ன காரணம்? இதற்கு ஒழுக்கமான விளையாட்டு பழக்கம்தான் காரணம். நான் வளர்ந்து வந்த இடத்தில் என் வாழ்க்கை குறிப்பிட்ட திட்டப்படி நடந்து வந்தது. இதனால்தான் என்னால் எளிதாக தோல்விகளிலிருந்து விடுபட்டு சவால்களை சந்திக்க முடிந்தது. நான் என்னை எப்போதும் பெட்டராக மாற்றிக்கொள்ள முயன்றுகொண்டே இருந்தேன். நான் எனது விளையாட்டை வேறு பரிணாமத்தில் மாற்ற நினைத்துக்கொண்டிருந்தேன்.  கேல்ரத்னா, ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக அதிக வெற்றி, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், உங்களது சுயசரிதை படமாக்கப்படுவது என பல்வேறு விஷயங்கள் நிறைவேறி வருகிறது. இதில் நிறைவேறாமல் இருப்பது என ஏதேனும் இருக்கிறதா?  உலக கோப்பையை வெல்வது எனது லட்சியம். 2022ஆம் ஆண்டு இதற்கான வாய்ப்பு உள்ளது. இதுதான் கேக்கின் மீதுள்ள செர்ரி போன்ற பெருமை. நாங்கள் வெற்ற

பேராளுமைகளை சந்தித்த அனுபவத்தை சொல்ல நினைத்தேன்! - கவிஞர் குல்ஸார்

படம்
  கவிஞர் குல்ஸார் குல்ஸார் கவிஞர், பாடலாசிரியர் ஆக்சுவலி ஐ மெட் தம் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார் குல்ஸார். நூல், சினிமா, இசை, இலக்கியம் பற்றி அவரிடம் பேசினோம்.  நூலுக்கான தலைப்பை எப்படி பிடித்தீர்கள்? என்னுடைய பயணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக இருந்தது. பிமல்ராய், பண்டிட் ரவிசங்கர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை சந்தித்து பேசி பழகி இருக்கிறேன். இதுபோன்ற பெரிய ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அதை வெளிக்காட்டும்படியாக நூல் தலைப்பை வைத்தேன்.  நூலில் சத்யஜித்ரே, கிஷோர்குமார், சுசித்ரா சென் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.  நூலில் உள்ள பதினெட்டு ஆளுமைகளை சந்தித்து பேசி அவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது. இவர்களில் சிலரைப் பற்றி நூலாக எழுத நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சில மனிதர்களைப் பற்றி கவிதைகளை எழுதி வைத்துள்ளேன். அவற்றை பின்னாளில் பிரசுரிப்பேன் என நினைக்கிறேன்.  யாருடனாவது பணியாற்றவேண்டும் என நினைத்துள்ளீர்களா? அந்தப் பட்டியல் பெரிது. குருதத்துடன் பணிபுரிய நினைத்தேன். அவர் படம் எடுத

முப்பது ஆண்டுகளாக தேடிய வெற்றி ஒரு படத்தில் கிடைத்தது அதிர்ச்சியாக இருந்தது! - நீனா குப்தா - இந்தி நடிகை

படம்
                நீனா குப்தா இந்தி நடிகை நீனா குப்தாவை சினிமா உலகில் தன்னம்பிக்கை நிறைந்தவராக , புரட்சிக்காரராகவே பார்க்கிறார்கள் . இவையெல்லாம் தாண்டி அவரைப் பற்றிய வேறு விஷயங்களை அறிய சச் கஹூன் தோ எனும் பெயரில் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ளார் . அவரிடம் பேசினோம் . உங்கள் சுயசரிதையை நீங்கள் எழுதுவதற்கு காரணம் என்ன ? பெருந்தொற்று காலம் இதற்கான நேரத்தையு்ம ஊக்கத்தையும் கொடுத்ததா ? நான் இந்த நூலை எழுத இருபது ஆண்டுகள் காத்திருந்தேன் . நிறைய முறை எழுத நினைத்து நிறுத்திவிட்டேன் . கடந்த ஆண்டு முக்தேஸ்வரிலுள்ள எனது வீட்டுக்கு சென்றேன் . நான் எதையும் அப்போதைய சூழ்நிலையில் எதையும் பெற நினைக்கவில்லை . படப்பிடிப்பிற்காக வேறு எங்கும் செல்லமுடியாத நிலை . ஆறு அல்லது ஏழு மாதங்கள் நான் இங்கு சிக்கிக்கொள்ளவில்லை என்றால் இந்த நூல் வெளியே வந்திருக்காது . இந்த நூலில் இயக்குநர் உங்கள் உடலைப் பற்றிக் கூறியது . பத்திரிக்கையாளர் மசாபாவின் பிறந்தநாள் சான்றிதழை திருடியது ., படத்தயாரிப்பாளர் உங்களோடு இரவை ஹோட்டலில் கழிக்க திட்டமிட்டது ஆகியவற்றை பற்றி நூலில் எழுதியுள்ளீர்க

ஆட்டிச பாதிப்புடன் வாழ்க்கையை பிறருக்கு பகிரும் நூல்! - புத்தகம் புதுசு

படம்
              கைண்ரட் நியாண்டர்தால் லைஃப், லவ், டெத், ஆர்ட் ரெபெக்கா ரெக் சைகஸ் இன்று அனைத்து இடங்களிலும் ஏன் கூகுள் சர்ச்சிலும் கூட நியாண்டர்தால் பற்றிய சர்ச்சைகள்தான் அதிக இடம்பிடித்துள்ளது. பலரும் தேடிப்படித்து வருவதும் இதுதொடர்பான சர்ச்சைகள்தான். இதுபற்றிய தகவல்களை தொல்பொருள் ஆய்வாளர் ரெக் சைகஸ் நமக்கு விளக்குகிறார்.நமது பரிணாம வளர்ச்சி, அவர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், உடல் உறுப்புகள் என ஏராளமான விஷயங்களை நூலில் விளக்கியுள்ளனர். அவுட்சைடர் கைடு டு ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் டாஃப்ட் மி அபவுட் வால் வீ டூ அண்ட் ஹூ வீ ஆர் கமிலா பாங் உயிரிவேதியியலாளர் பாங் ஐந்து வயதாக இருக்கும்போது பிற மனிதர்களை அந்நியர்களாக கருத தொடங்கிவிட்டார். சோதித்தபோது அவருக்கு ஆட்டிச பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தன்னுடைய வாழ்க்கையை, அறிவியல் கலந்து பேசியுள்ள நூல் இது. தி டேங்கில்டு வெப் வி வீவ் இன்சைடு தி ஷாடோ சிஸ்டம் தட் ஷேப்ஸ் தி இன்டர்நெட் ஜேம்ஸ் பால். இணையம், இணைய நிறுவனங்கள் எப்படி இணையத்தை நிலைநிறுத்துகிறார்கள். முன்பு கடவுளாக தெரிந்த இணையம் எப்படி வில்லனாக பார்க்கப்படுகிறது என்பதை எழுதியுள்ளார் ஆசிர

சிறந்த கட்டுரை நூல்கள் 2019!

படம்
அயர்லாந்தில் செய்யப்பட்ட கொலை, அதன்பின்னர் அந்த நாட்டை எப்படி இங்கிலாந்துக்காரர்கள் ஆக்கிரமித்தனர், அங்கு வாழ்ந்த மக்களின் நிலை என நேர்த்தியாக விளக்கி எழுதியுள்ள நூல் இது. அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா புயலை எத்தனை பேருக்குத் தெரியும்? கத்ரீனா கைஃபை தெரிந்தவர்களை விட குறைவுதான் அல்லவா. அந்த புயலில் வீட்டை இழந்தவர் எழுதிய நினைவுக்குறிப்புதான் இந்த நூல். பாசமும், பாதுகாப்பும் தந்த வீட்டை இழந்தபோது அவர் அடையும் துயரம் நமக்கே நேர்வது போல இருக்கிறது. தன் கதையின் வழியாக நியூ ஓர்லியன்ஸ் நகரின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார். பூமியில் மனிதர்கள் உருவாக்கி விண்ணுயரும் கட்டிடங்களுக்கு சளைக்காத கட்டுமானங்களை பூமிக்கு அடியிலும் உருவாக்கியுள்ளனர். எழுத்தாளர் ராபர்ட் அதைத்தான் தேடிப்போய் அந்த அனுபவங்களை நூலாக செதுக்கியிருக்கிறார். தன் சொந்த அனுபவங்களை இழைத்து அதில் ஓரினச்சேர்க்கையின் மோசமான பிரச்னைகளை குழைத்து வித்தியாசமான மொழியில் நூலை எழுதியுள்ளார்.அதற்காகவே நீங்கள் நூலை வாங்கிப்படிக்கலாம். எழுத்தாளர் ஹார்ப்பர் லீ, திடீரென ஒரு கதையை எழுதுவதாக சொல்லி பின்னர

வரலாற்றில் முக்கிய நூல்கள்!

படம்
நூல் அறிமுகம்! வாழ்நாளுக்குள் வாசித்தே ஆக வேண்டிய நூல்கள் அல்ல இவை. ஆனாலும் இவை பதிப்பிக்கப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதனால் இதனைப் படிக்கலாம். Let Us Now Praise Famous Men by  James Agee  and  Walker Evans 1936 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் இதழுக்கான அசைன்மெண்ட். ஜேம்ஸ் அகி மற்றும் வாக்கர் ஈவன்ஸ் ஆகியோர், குத்தகை விவசாயிகளின் வலியான வாழ்க்கையை பதிவு செய்தனர். இந்த நூலில் நாற்பது பக்கங்கள் புகைப்படப்பதிவாக இருக்கும். வெளியானபோது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நூல் இது.  The Immortal Life of Henrietta Lacks by   Rebecca Skloot   1951 ஆம் ஆண்டு உலகம் முழுக்க பிரபலமான இவரின் புற்றுநோய் திசுக்களை சோதனை செய்து புற்றுநோய்க்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்த முயற்சிக்கு இவரின் பங்கு மிக முக்கியமானது. லேக்ஸூக்கு ஐந்தாவது குழந்தை பிறந்தபோது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கரான லேக்ஸ் புகையிலை விவசாயியின் மகள்.  Steve Jobs by  Walter Isaacson ஆப்பிள் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணமான ஊக்கசக்தி ஸ்டீவ் ஜாப