இடுகைகள்

விலையுயர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணவீக்கத்தால் பசியில் படுக்கும் ஏழை குடும்பங்கள்!

படம்
  பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாக உள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வட இந்தியாவில் ரொட்டியுடன் சாப்பிட காய்கறிகள் இல்லாமல் உப்பை மட்டும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு வருகிறார்கள். இறைச்சி, பால், முட்டை என குழந்தைகளுக்குத் தேவையான எதையுமே அவர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழல் உள்ளது.  பணவீக்கம் காரணமாக பருப்பு, காய்றிகளை மூன்று வேளை உணவில் ஒரே முறை சேர்த்துக்கொள்ளும் படி நிலைமை மாறிவிட்டது. மும்பையைச் சேர்ந்தவர் அஃப்சனா. இவர் தனது வீட்டுக்கு அருகில் இருந்த குழந்தைகளுக்கு ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார். இவரது கணவர் துணிக்கடை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இருவரின் ஊதியமாக மாதம் 50 ஆயிரம் கிடைத்து வந்தது. அதை வைத்துத்தான் சேமிப்பையும் ஒரு லட்சம் வரையில் உயர்த்த முடிந்தது. இவர்களுக்கு மூன்று பெண்கள் உண்டு.  மூன்று குழந்தைகளுக்கும் முதலில் கறி, காய்கறி, பால், முட்டை என கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இடையில் குறுக்கிட்ட லாக்டௌன் காலம் இதுவரையிலான வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. அஃப்சனா சேர்த்து வைத்த சேமிப்புகள் காலியாகிவிட்டன. அடுத்து, அவரின் கணவருக்கு வேலை

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!

படம்
  உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  எத்தனால் கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக  இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்

நேரு பல்கலையில் உயர்த்தப்பட்ட கட்டணம்!- என்ன பிரச்னை?

படம்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் இன்றைய பெரும்பான்மையான முக்கிய தலைவர்கள், இயக்குநர்கள் என இருக்கிறார்கள். காரணம், அங்கு பாடங்களைத் தாண்டி சொல்லித்தரப்படும். தற்போது அங்குள்ள விடுதி வாடகை ஏற்றப்பட்டு உள்ளது.  தெரிஞ்சுக்கோ! டில்லி நேரு பல்கலையில் பயிலும் மாணவர்களின் 40 சதவீத குடும்பங்களின் மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் உள்ளது என்கிறது அவர்களின் மாணவர் சங்கம். விடுதியில் உயர்த்தப்பட்ட தொகை 1700. இதனால் வாடகைத் தொகை 2 ஆயிரம் முதல் 2500 வரை அதிகரித்திருக்கிறது. திருப்பித்தரும் காப்புத்தொகை 5500 முதல் 12000 வரை அதிகரித்துள்ளது. மாதம் ரூ.20 என்று இருந்த மாணவர்களின் அறை வாடகை ரூ.600 ஆக மாறி உள்ளது. இரண்டு அறைகள் வாடகை ரூ.10லிருந்து 300 ரூபாயாக மாறியுள்ளது. மாணவர் விடுதி மற்றும் மெஸ் கட்டணம் 50 ஆயிரம் முதல் அறுபதாயிரம் வரை எகிறியுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை 27,600 முதல் 30 ஆயிரம் வரை. இதனால் அதிக விலை வசூலிக்கும் பல்கலைக்கழகமாக தற்போது பெயர் வாங்கியுள்ளது. 19 ஆண்டுகளாக பல்கலையின் விடுதி, மெஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பல்கல