இழந்த தாய்நிலத்தை மீட்க போராடத் தூண்டும் கவிதைகள்!
பலஸ்தீன கவிதைகள் தமிழில் நுஃமான் நூலகம் இது, சிறிய கவிதை நூல். மொத்தம் ஒன்பது பலஸ்தீன கவிஞர்கள் எழுதிய முப்பது கவிதைகளைக் கொண்டுள்ளது. பலஸ்தீனம், இனப்படுகொலைக்கு உள்ளாகி மெல்ல அழிந்து வருகிறது. இன்று அமெரிக்கா, அழிந்த பலஸ்தீனத்தில் சொகுசு விடுதிகள், ஆடம்பர இல்லங்கள் கட்டினால் சிறப்பாக இருக்கும் என எகத்தாளமாக இனப்படுகொலையை ஆதரித்து பேசி வருகிறது. இப்படியான சூழலில் இக்கவிதைகளை நாம் வாசித்தோம் என்றால், அதன் அழுத்ததை புரிந்துகொள்ள முடியும். இனப்படுகொலை, தடுப்புக்காவல், சித்திரவதை, சிறை, பசி, பட்டினி, கல்வியின்மை, எதிர்காலம் பற்றிய இலக்கின்மை, வறுமை, போரில் மரணமடைந்த வீரர்கள், பலஸ்தீனியர்களுக்குள் உள்ள துரோகிகளால் வீழும் மக்கள் என நிறைய விஷயங்களை கவிதைகள் அழுத்தமாக பல்வேறு உருவகங்களை முன்வைத்து பேசுகிறது. பெரும்பாலும் அவற்றை ஒருமுறை வாசிக்கும்போதே முழு அரசியல், சமூக, பொருளாதார சூழலை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். பேரினவாதம் பேசுவோர், எதிரினத்தை குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என வன்ம வாதத்தை முன்வைப்பார்கள். அப்படியான கருத்தில் மஹ்மூத் தார்விஷ் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். ரொட்...