இடுகைகள்

யானை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - மலம்

படம்
  பீயுக்கும் ஈயுக்கும் என்னலே ஃபிரெண்ட்ஷிப்பு?   என ஓரம்போ படத்தில்   ஜான்விஜய் கேட்பார். காரண காரிய சமகால நட்பை, அந்தளவு கேவலமாக   கொச்சையாக ஆனால் மனதிற்கு உண்மையாக யாரும் சுட்டிக்காட்டி சொல்ல முடியாது. அதை விடுங்கள். மலம் என்றாலும் அதிலும் விஷயம் இருக்கிறது. உடலில் இருந்து வெளியேறும் மலத்தில் பல்வேறு கிருமிகள், தேவையில்லாத வேதிப்பொருட்கள் இருக்கும். அவை வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பசு ஒருநாளில் சுரக்கும் எச்சிலின் அளவு 98- 190 லிட்டர். மனிதர்கள் தம் ஆயுளில் வெளியிடும் அபான வாயுவின் அளவை வைத்து இரண்டாயிரம் பலூன்களை நிரப்பி வானில் பறக்க விடலாம். பலூன் வெடித்தால் என்னாகும் என்ற கேள்வியை த.வி.வெங்கடேஷ்வரனிடம் கேட்டுக்கொள்ளுங்கள். அபானவாயு, ஏப்பம், மலம் ஆகியவற்றை பண்ணை விலங்குகளான பசு, பன்றி, ஆடு மற்றும பிற விலங்குகள் வெளியிடுகின்றன. இதனால் உலகளவில் அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுவின் அளவு, 14.5 சதவீதம் ஆகும். ஜெயன்ட் பாண்டா, ஒருநாளுக்கு நாற்பது முறை மலம் கழிக்கிறது. யானை தினசரி பதினைந்து முறை சாணத்தை வெளியேற்றுகிறது. இந்த வகையில் நூறு கிலோ சாணம் வெளித்தள்ளப்படுகிற

தெரிஞ்சுக்கோ - திமிங்கலம்

படம்
  தெரிஞ்சுக்கோ – திமிங்கலம் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை, சமகாலத்தில் திமிங்கலம் என குறிப்பிடுகிறார்கள்.பெருசு, சீயான், பெரிய தலைக்கட்டு என்ற வரிசையில் திமிங்கலமும் சேர்கிறது. உண்மையில் கடல் உயிரினமான திமிங்கலத்திற்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என பார்ப்போம். பவ்ஹெட் திமிங்கலத்தின் வாய் 2.4 மீட்டர் நீளமானது. அதாவது, மூன்று வயது வந்த மனிதர்களின் வாய்களின் அளவுக்கு பெரியது. ஹம்பேக் திமிங்கலத்தின் எடை 36 டன்னுக்கும் அதிகம். ஸ்பெர்ம் திமிங்கலம் வேட்டையாட செல்லும்போது கடலுக்குள் 3 கி.மீ. தூரம் பயணிக்கிறது. நீலத்திமிங்கலம் 30 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது. நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை 200 கிலோவுக்கு அதிகம். விலங்குகளில் அதிக எடை கொண்ட இதயம் இதுவே. ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளை 7.8 கி.கி எடை கொண்டது. விலங்குகளில் அதிக எடை கொண்ட மூளை இதுவே. பவ்ஹெட் திமிங்கலம், இருநூறு ஆண்டுகள் வாழ்கிறது. நீலத்திமிங்கலத்தின் எடை 150 டன்னுக்கும் அதிகம். அதாவது 32 ஆசிய யானைகளின் எடைக்கு நிகரானது. ஹம்பேக் திமிங்கலம் பாட ஆரம்பித்தால், பாடல் 35 நிமிடங்களுக்கு நீள்கிறது. இந்த திமிங்கலங்கள், இனப்

காடுகளை பாதுகாக்க அதை நேசிக்கும் பளியன் செய்யும் கொலை - கானகன் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கானகன் (நாவல்) லஷ்மி சரவணக்குமார்   பளியர்களின் வாழ்க்கையை பேசும் நாவல். பளியக்குடிகள் காடுகளை நேசித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு வேலை என்பது விவசாயம் சார்ந்த்துதான். அதுவும் கூட காட்டின் இயல்பறிந்து நடப்பதுதான். அதை அழித்து தன் வழிக்கு கொண்டு வருவது அல்ல. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்காமலா இருக்கும்? அப்படியான அழிவுகளை தொடங்கி வைப்பவனாக இருக்கிறான் தங்கப்பன். நாவல் முழுக்க வரும் பாத்திரம் வேட்டைக்காரரான தங்கப்பன்தான். இவன்தான் வேட்டை என்பதை வாழ்நாள் முழுக்க தொடரும் தன்னை மறக்கும் நிலையாக, பாலுறவு போன்று பார்க்கும் மனிதன். இதனால்தான் தங்கப்பனுக்கு வேட்டை என்பது முக்கியமான ஒன்று. இந்த வேட்டையாடும் வெறியான மனநிலையை கஞ்சா தோட்ட முதலாளிகள், விவசாய பண்ணைக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாவலின் முதல் காட்சியே காட்டின் அழிவைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுதான். காட்டின் உணவுச்சங்கிலியை பாதுகாக்கும் குட்டி ஈன்ற பெண் புலியை வேட்டையாடி கொல்கிறார்கள். அதில் தங்கப்பன், மாட்டுப் பண்ணை நடத்தும் அன்சாரிக்காக புலியை வேட்டையாடுகிறான். இதில் ஏற்படும் வினை அதற்கான விளை

மின்சார வேலியால் கொல்லப்படும் யானைகள்!

படம்
  அதிகரிக்கும் மனிதர், விலங்குகள் மோதல்! கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 222 யானைகள் இறந்துள்ளன. இவற்றின் இறப்புக்கு முக்கியக் காரணம் மின்சார வேலி ஆகும். நச்சு, ரயில் மோதல், சட்டவிரோத வேட்டை ஆகியவையும் பிற காரணங்களாகும். 2019 - 2021 காலகட்டத்தில் 197 புலிகள் இறந்துள்ளன. இதில் சட்டவிரோத வேட்டை மூலம் 29 புலிகள் கொல்லப்பட்டன என மத்திய வனம், சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அஸ்வின் சௌபே தகவல் தெரிவித்துள்ளார்.  அதேநேரம், விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2019-2022 காலகட்டத்தில் 1,579 மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்கள். அதிக மனிதர்கள் பலியான மாநிலங்களில் ஒடிஷா முதல் இடத்திலும், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சட்டீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட புலி காப்பகங்களில், மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 125 பேர், புலிகளால் தாக்கப்பட்டு மரணித்துள்ளனர். இந்த பிரிவில் மகாராஷ்டிரம் 61 இறப்புகள் என அதிகளவிலான இறப்பு எண்ணிக்கையைக்

அகதிவேலியால் உணவின்றி தவிக்கும் விலங்குகள்!

படம்
  அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்! போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.  போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன.  மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உய

விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!

படம்
  விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி! 2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை.  மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.  கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின்,  கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.  "தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் ,

அகதிகளைத் தடுக்கும் இரும்புவேலி- பாதிக்கப்படும் காட்டு உயிரினங்கள்

படம்
  அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்! போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.  போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன.  மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உய

லைபீரியா அரசுக்கு உதவிய ஒடிஷா டெக் இளைஞர்! - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்ஷன் 11.8.2021 புதன் கிழமை   ஆஹா! கிரிப்டோகரன்சி ஆட்டோ! இந்தியாவில் உள்ள ஆட்டோ க்காரர், கிரிப்டோகரன்சியில் பயணக்கட்டணத்தை செலுத்தலாம் என எழுதி வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறார். இப்புகைப்படம் எந்த நகரத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும், கிரிப்டோகரன்சியை ஏற்கும் முதல் ஆட்டோக்காரர் இவர்தான் என்ற புகழை முகம்தெரியாத ஆட்டோக்கார ர் பெற்றுவிட்டார். உலகளவில் தொழிலதிபர் எலன் மஸ்க் கிரிப்டோகரன்சியை ஏற்றுள்ளார். இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை என்றாலும், பல்வேறு நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்சி வணிகத்தில் மெல்ல இறங்கி வருகின்றன.  https://www.indiatimes.com/trending/social-relevance/auto-rickshaw-accepts-payments-in-cryptocurrency-goes-viral-546942.html யுவான்ஜியாங் ஆற்றுப்பகுதியில் பாலத்தைக் கூட்டமாக கடந்துசெல்லும் ஆசிய யானைகள்! இடம் யுன்னான், சீனா  https://www.reuters.com/news/picture/top-photos-of-the-day-idUSRTXFFSQQ அங்கீகாரம் சைபர் சக்கரவர்த்தி! ஒடிஷாவின் புல்பானி பகுதியைச்  சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர், சௌம்யா ரஞ்சன் சாஹூ. இவர், ஆப்பிரிக்க ந

பௌர்ணி நிலவு ஒளி மனிதர்களின் மனநிலையை பாதிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      கரப்பான் பூச்சிகள் இல்லாத உலகம் சாத்தியம் ! ரியல் : கதிர்வீச்சிலும் கூட சமாளித்து வாழும் என்று கூறப்படுவது , கரப்பான் பூச்சி . மனித இனத்திற்கு பாக்டீரியா , ஒவ்வாமை பிரச்னைகளை ஏற்படுத்தியபடி வாழும் இந்த பூச்சி இனம் , பத்தாயிரம் ஆண்டுகளாக நம்மோடு வாழ்ந்து வருகிறது . மரம் , இலை ஆகியவற்றை உண்டு , நைட்ரஜன் சத்தை நிலத்திற்குப் பெற்றுக் கொடுக்கிறது . இயற்கையின் உணவுச்சங்கிலியில் கரப்பான் பூச்சி முக்கியமானது . எனவே , அவற்றால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம் . அதன் இனத்தை ஹிட் ஸ்ப்ரே அடித்து கொல்ல நினைக்காதீர்கள் . தற்போதைக்கு இம்முயற்சி சாத்தியமல்ல . உலகிலுள்ள அனைத்து மக்களும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யத்தொடங்கினால் சூழல் மேம்படும் ! ரியல் : நிச்சயமாக சூழல் மேம்படும் . இந்திய குடிமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முயன்றால் , கழிவுகளை நிலத்தில் கொட்டுவது குறையும் . இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன்கள் கழிவுகள் உருவாகின்றன . இந்த எண்ணிக்கை 2030 இல் 165 மில்லியனாக

அமெரிக்காவிலுள்ள கட்சிகளின் சின்னம், நிறம், தேர்தல் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்!

படம்
              தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்! ஊடகங்களில் அமெரிக்க தேர்தலை பார்க்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஜனநாயக கட்சிக்கு கழுதையும், குடியரசு கட்சிக்கு யானையும் சின்னமென. எப்படி இவை அமலுக்கு வந்தன? இவற்றை  கார்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் என்பவர் ஊடகங்களில் அதிகளவு பிரபலப்படுத்தினார். தேர்தலுக்கான சின்னமாக குடியரசுக் கட்சிக்குயானை ஒதுக்கப்பட்டது. அதுபோலத்தான் ஜனநாயக கட்சிக்கு கழுதை. இவற்றை அரசியல் காலத்தில் கார்டூனிஸ்டுகள் அதிகளவு படங்களை வரைந்து பிரபலப்படுத்தினர். நேற்று கூட டெக்கன் கிரானிக்கலில் கழுதை டிரம்பை எட்டி உதைத்துவிட்டு செல்வதாக நடுப்பக்க கார்ட்டூனை வரைந்திருந்தனர். ஜனநாயக கட்சிக்கு நீலம் சிவப்பு என்பதை ஊடகங்களே உருவாக்கின. குடியரசு கட்சியை சேர்ந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் - ஜனநாயக கட்சியின் அல்கோர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டபோது, ஊடகங்கள் இரு நிறங்களை இரு கட்சிகளுக்குமாக அடையாளப்படுத்தின. அன்று தொட்ங்கி இன்றுவரை அந்த வழக்கம் அப்படியே தொடர்கிறது. அமெரிக்க அரசு சட்டப்படி அங்கு ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்கமுடியும். அந்த வகையில் பிராங்களின் ரூஸ்வெல்ட் மட்டுமே

யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்?

படம்
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்? ஆப்பிரிக்க யானை ஒன்றை ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது, அதன் உடலில் சிறுசிறு பள்ளங்களாக தோல் அமைந்துள்ளதை வியந்தனர். இத்தன்மை உடலில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கிறது. ஏறத்தாழ பிற யானைகளோடு ஒப்பிட்டால் பத்து சதவீதம் நீர் குறைவாக ஆவியாவதால் உடலின் வெப்பநிலை பிரச்னை இன்றி இருக்கும்.  சேறு, மழை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யானை தன் கெட்டியான தோலின் மூலம் நீரைச்சேமித்து உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.                  ஆசிய யானைகள் சற்று மென்மையான தோலினைக் கொண்டுள்ளதால் அவை ஈரப்பதமான சூழலிலேயே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்(படம்,தகவல்)- சார்லட் கார்னி