தாராவி இன்று! -மாறிவரும் தாராவியின் முகம் பற்றிய பார்வை
தாராவி 2.0 - ச . அன்பரசு முன்பு மும்பையில் அரசு மற்றும் மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பகுதியாக ஏன் கதைகளில் சினிமாக்களில் கூட தீண்டப்படாத சேரியாக நடத்தப்பட்ட தாராவியில் இன்று நவீனத்திற்கேற்ப எக்கச்சக்க மாற்றங்கள் . 520 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள தாராவியில் கொழிக்கும் தொழில்களின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 1 பில்லியன் டாலர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? தாராவியில் சந்து பொந்தெங்கும் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி என பன்மொழி பேசும் இடம்பெயர்ந்த மக்களின் கடின உழைப்பு தொழிற்பேட்டையான தாராவியை கரன்சி பேட்டையாக மாற்றியுள்ளது . தொழில்மயமாக்கலின் இருண்ட பகுதியாக ஏழைகளின் வாழிடமாக அரசுக்கு சங்கடம் கொடுக்கும் தாராவியை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன . ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த அகதிகள் , தோல்தொழில் , டெக்ஸ்டைல்துறை , குழந்தை தொழிலாளர்கள் , சுற்றுலா கைடுகள் , உணவுத்துறை என பல்வேறுவித தொழில்செய்யும் மக்களின் உழைப்பில் திடமாக உறுதியாக வணிகத்தில் முன்னேறி வருகிறது தாராவி . இங்கு வேலைசெய்து ஃபிளாட்டில் வீடு வாங்கினாலும் கூட தாராவியை விட்டு போகாத ப