இடுகைகள்

பாகுனின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு துருப்பிடித்த இரும்புத்துண்டு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
              https://www.amazon.com/dp/B0F2TVMKVZ

நாட்டை சமூக நீதி பாதைக்கு கொண்டு வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்!

      உற்பத்தியைப் பொறுத்தவரையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள் எனில் பகுதியாக குறையும். பிறகு, முற்றாக நின்றுவிடும். இப்படியான விளைவை தொழிலாளர்கள் முன்னமே அடையாளம் கொண்டு செயல்பட வேண்டும். புரட்சி என்பது முக்கியம். அதேசமயம், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு தெருக்களில் குழுமுவது தற்காலிகமாகத்தான். அது நிரந்தரமல்ல. புரட்சி என்பது பொது சொத்துக்களை அழிப்பதல்ல. அது மக்களுக்கு உதவும் பெரும் பொறுப்பை தன் தோள்களில் கொண்டுள்ளது. கடின உழைப்பும், சுய ஒழுக்கமும் கொண்டவர்கள்தான் புரட்சியின் பாதையில் பயணிக்க முடியும். முதலாளித்துவவாதிகள், துறையை போட்டியிடும் வகையில் உயர்த்தி வைத்திருக்கிறார்கள். அதிகளவு முதலீடு, அதற்கு கட்டாயமாக கிடைத்தே ஆக வேண்டிய லாபம், இரக்கமில்லாத விலை, விலை வேறுபாடுகள், வாங்கும் கடன்களுக்கு அதிகரிக்கும் வட்டி என முதலாளித்துவ வணிகம் பல்வேறு நெருக்கடிகளை தனக்குள்ளேயே கொண்டது. முதலாளித்து நிறுவனங்கள் ஏற்படுத்தும் போட்டி உள்நாடு, வெளிநாடு என இரண்டு பிரிவுகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்துறையை ...