பாலின பேதம் அகற்றும் உடைகள்! - புதிய முயற்சி!
பள்ளிகளில் வெள்ளைச்சட்டை காக்கி ட்ராயர் அணிந்து வந்தது காமராசர் காலத்தில். காரணம், ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் மனதைப் பாதிக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. இன்று ஏற்றத்தாழ்வுகளை உடை கூறுவதில்லை. பிற பொருட்களை அதற்கேற்ப தயார் படுத்திவிட்டார்கள். பயன்படுத்தும் பொருட்கள், உணவு முதற்கொண்டு மாறுபடுகிறது. ஆனால் மாணவர்களை பார்க்கும்போது வேறுபாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரச்னை காலப்போக்கில் முளைவிட்டது. அது ஆண், பெண் பாலின பேதம். பெண்ணுக்கு ஒருவிதம், ஆணுக்கு ஒருவிதமான உடை என்பது வகுப்பிலேயே அவர்களை பிரிப்பது போல என மேற்கத்திய நாடுகளில் உடை சீர்த்திருத்தங்கள் தொடங்கியுள்ளன. சமூகத்தில் வேலைத்திறன் என்பதைப் பார்க்காமல் பெண் செய்தால் குறைந்த கூலி, ஆண் செய்தால் அதிக கூலி என்ற பிரச்னை உருவாகி வருகிறது. இதனை பள்ளியிலேயே ஏன் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உடை சீர்த்திருத்தங்களுக்கு முக்கியக்காரணம். எர்ணாக்குளத்தைச் சேர்ந்த வலையச்சிருங்காரா தொடக்கப்பள்ளி பாலின பேதமற்ற ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஸ்கர்டுகளை அணிந்த மாணவிகளுக்கு அந்த உடை விளையாட்டுக்கு உதவியாக இல