இடுகைகள்

சுமந்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளர்ப்பு தந்தைக்காக தன்னை தியாகம் செய்யும் மகனின் தியாக கதை!

படம்
  சின்னோடு  சுமந்த், சார்மி கௌர் இயக்குநர் கண்மணி  சிறைக்கைதியாக இருக்கும் பெண்ணின் குழந்தையை சிறை வார்டன் தனி கவனமெடுத்து பார்த்துக்கொள்கிறார். கைதி திடீரென நோய்மையால் இறந்தபிறகு, குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்து வந்து தானே வளர்க்கிறார். வார்டனின் அப்பா, அவரது தம்பிக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் வார்டனின் தம்பி தலையில் அடிபட்டு இறந்துகிடக்கிறார். அப்போது, அருகில் ரத்தக்கறை படிந்த பூச்சாடியோடு வளர்ப்பு மகன் சின்னா நிற்கிறான். இதனால் அவனை வளர்த்த வார்டன் கடும் கோபத்திற்கு ஆளாகிறார். அவனை வெறுக்கத் தொடங்குகிறார். சிறைக்கு சென்ற சின்னா திரும்பி வரும்போது அவனை குடும்பம் ஏற்றுக் கொண்டதா என்பதே படக்கதை.  படத்தில் முக்கியமான விஷயமே, காட்சியை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடும். ஆனால் அந்த உண்மையை காட்சியில் உள்ள மற்றவர்கள் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். இதனால் காட்சிகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். படத்தில் இப்படி சென்றுகொண்டிருப்பதில் சற்றே மாறுதல் ஏற்படுத்துவது வேணு, அலி காமெடி காட்சிகள் தான்.  மற்றபடி, படம் சற்று சீரியசான ஒன்று.  சிறையில் இர

மார்பிங் செய்து உருவாக்கிய மாடல் பெண் உண்மையில் வந்தால்.... தக்கராக தூரங்கா.. - தெலுங்கு

படம்
  தக்கராக தூரங்கா சுமந்த், வேதிகா இயக்குநர் ரவி சாவலி இசை  ரகு குஞ்சே தூரமாக இருக்கும்போது இருக்கும் காதல், அருகே இருக்கும்போது பெருகியதா, வற்றியதா என்பதே ஒருவரிக் கதை.  கௌதம், விளம்பர ஏஜென்சியில் வேலை செய்கிறார். அவருக்கு மாடலாக ஒரு பெண் தேவைப்படுகிறார். ஆனால் அவருக்குத் தேவைப்படும் பெண் கிடைக்கவில்லை. இதனால், பல பெண்களின் முகத்தில் உள்ள உருப்படியான பாகங்களை எடுத்து மார்பிங் செய்து பெண் ஒருவரை உருவாக்கி காமாட்சி என பெயர் வைக்கிறார். அவரை இப்படித்தான் இந்த மாடலை உருவாக்கினேன்  என்று சொல்லி விளம்பர ஏஜெனசி ஓனரை கன்வின்ஸ் செய்கிறார்.  மார்பிங் செய்த பெண்ணின் உருவத்தில் நிஜமாகவே ஒரு பெண் விசாகப்பட்டினத்தில் வாழ்கிறார். இந்த விளம்பரங்களால் அந்த பெண்ணின் கல்யாணம் நின்றுபோகிறது. அதற்கு காரணம் கௌதம் என தெரிந்து அவனைத் தேடி வருகிறார். இதில் ஏற்படும் பிரச்னைகளால் இருவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. உச்சபட்சமாக தீவிரவாத குழு வேறு இருவரையும் தேடுகிறது. கௌதம், மீனாட்சி என இருவரும் காதல் கொண்டார்களா, இல்லையா என்பதே கதை.  முக்கியமான கதை என்பது கௌதம் கிராபிக்ஸில் உருவாக்கும் பெண் காமாட்சியை அப்பட

பணத்தை விட மதிப்பான பொருளைத் தேடும் நாயகன்! - போனி -2009 சுமந்த்

படம்
  போனி -2009 ராஜ் பிப்பல்லா சுமந்த், கீர்த்தி கர்பண்டா அனாதை ஆசிரமத்தில் வளரும் டிடி, சின்னா என்ற இருவருக்கும் ஒரே ஆதர்சம், அங்கு சமையல் செய்யும் பெண்மணி சரஸ்வதம்மா. இவர்தான் சிறுவர்களின் குறும்புகளுக்கு பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களை ஆசிரமத்தில் தங்கி படிக்குமாறு பார்த்துக்கொள்கிறார். அவர் ஒருமுறை, எந்த விஷயம் செஞ்சாலும் காசு கிடைச்சாத்தான் செய்யறீங்க. ஆனா, பணத்தை விட மதிப்பான விஷயம் ஒண்ணு இருக்கு, என தன் நெஞ்சை தொட்டு அதிலிருந்து ஏதோ எடுப்பது போல எடுத்து இருவரின் கையில் வைக்கிறார் சரஸ்வதம்மா.  பணத்தை விட மதிப்பானதை டிடி, சின்னா அடையாளம் கண்டு கொண்டார்களா இல்லையா என்பதுதான் கதை.  படம் ஆக்சன் தான். அதிலேயே காமெடியை வித்தியாசமாக பயன்படுத்த நினைத்திருக்கிறார்கள். இதற்கு ஆண்ட்ரூவின் கேமரா, எம்.ஆர் வர்மாவின் அற்புதமான எடிட்டிங் உதவியிருக்கிறது. இதை நீங்கள் அறிய படத்தின் பாடல், சண்டைக்காட்சி, துரத்தல்களைப் பார்த்தாலே போதுமானது.  டிடி, சின்னா இருவரும் வளர்கிறார்கள். கிரி என்ற ரௌடியிடம் மாமூல் வசூல் செய்யும் ஆட்களில் ஒருவராக இருக்கிறார்கள். அத்தனை பேர்களிலும் டிடியும் சின்னாவும் மட்டு

தன்னைக் காதலிப்பவனை மணக்க நினைப்பவளின் வாழ்க்கையில் வரும் காதலே தெரியாத நல்ல ஆன்மா! மதுமாசம்

படம்
  மதுமாசம் சுமந்த், ஸ்னேகா, பார்வதி மெல்டன் இயக்குநர் - சந்திர சித்தார்த்தா தலைப்பில் தான் சொல்லிவிட்டோமே அதுதான் விஷயம்.  சஞ்சய், ஹம்சா என இருவர்  திருமணம் ஒன்றில் சந்திக்கிறார்கள். அங்கு வரதட்சணை சார்ந்து ஏற்படும் பிரச்னையை சஞ்சய் கல்யாண மாப்பிள்ளையிடம் பேசி தீர்க்கிறான். அதுவே ஹம்சாவுக்கு நல்ல அபிப்ராயத்தை தருகிறது. பிறகு நகருக்கு வந்தால், சஞ்சயின் வீட்டில் தான் ஹம்சா வாடகைக்கு தங்கும்படி சூழல் அமைகிறது.  சஞ்சய்யைப் பொறுத்தவரை சிகரெட் பிடிப்பது, மது அனைத்து அளவாட்டு உந்தி. ஆனால் ஹம்சாவுக்கு இதெல்லாம் ஆகாது. காலையில் எழுந்து கோலம்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் அவள் வழக்கம். அவளுக்கு சஞ்சய் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும்,  பிறருக்கு உதவி செய்யும் பழக்கம் பிடித்திருக்கிறது. அவளுக்கு மெல்ல சஞ்சய் மீது ஆர்வம் வருகிறது. கூடவே இருக்கும் தோழியும் உசுப்பேற்றுகிறாள்.  திருமணம் பற்றி சஞ்சயிடம் ஒருநாள் தைரியமாக சொல்லுகிறாள். சஞ்சய் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. அவனுக்கு சொத்துக்களோடு மாமா பெண் கிராமத்தில் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு ஹம்சா பற்றி பெரிய கருத்தேதும் இல்லை.  திருமண நிச்ச

மக்களுக்கு துணையாக நிற்கும் இரு நண்பர்களின் வெட்டுக்குத்து கதை!

படம்
  மகாநந்தி ஸ்ரீஹரி, சுமந்த், அனுஷ்கா இயக்கம் வி சமுத்ரா ஒருவழியாக படம் முடிந்தபோது.... கதையின் கரு நண்பர்களுக்குள் வரும் முட்டல் மோதல், நம்பிக்கை தான் கதை.  ஆந்திராவில் உள்ள கிராமம். அங்கு தனது நிலபுலன்களை விற்று ஊர் மக்கள் வேலை செய்வதற்கு தொழிற்சாலை கட்ட நினைக்கிறார் சுவாமி நாயுடுவின் அப்பா. ஆனால், அதை ஊரில் உள்ள பணக்கார ர் ஏற்கவில்லை. அப்படி தொழிற்சாலைக்கு மக்கள் வேலைக்கு போனால் நமக்கு மதிப்பிருக்காது. நீ தொழிற்சாலை கட்டக்கூடாது என்று மிரட்டுகிறார். பிறகு ஒரு நல்லநாள் பார்த்து சுவாமி நாயுடுவின் பெற்றோரை வீடு புகுந்து தாக்கிக் கொல்கிறார்.  இதனால் சுவாமிநாயுடுவும் அவரது தங்கையும் அனாதை ஆகிறார்கள். படம் இப்படித்தான் தொடங்குகிறது.  பிறகு சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் எதிரிகளை பழிவாங்கிய சுவாமி நாயுடு ஊரில் பெரிய ஆளாக மாறியிருக்கிறார். அவருக்கு வலது இடது என இரு கரமுமாக இருப்பவன்தான் சங்கர். பார்த்தால் அண்ணன் தம்பி போல  தோன்றும் ஆனால் இருவரும் நண்பர்கள். சுவாமி நாயுடுவைப் பொறுத்தவரை அப்பாவின் கனவை நிறைவேற்றுவதுதான் பேஷன், ஆம்பிஷன், கனா எல்லாமே. இப்படி தொழிற்சாலை கட்டி முடிக்கும்போது எத

அப்பாவின் வெறுப்பால் குடும்பத்தை விட்டு தனி மனிதனாகும் சத்யம்! சத்யம் -2003

படம்
  சத்யம் சுமந்த் அக்கினேனி படத்தின் தலைப்புதான் நாயகனின் குணம். அவன் உண்மை சொல்லும் சந்தர்ப்பம் எல்லாம் தவறாகவே போகிறது. இதனால் அவன் வீட்டை விட்டு வெளியே போய் வாழும்படி ஆகிறது. பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் குணம், அவனுக்கு நான்கு நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்கிறது. இருவர் அவனது அறையில் தங்கி நண்பர்களானவர்கள், மீதி இருவர்களில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் இவர்கள் தங்கியிருக்கும் அறைகளின் உரிமையாளர்.  படம் நெடுக நான்கு நண்பர்கள் சுமந்திற்கு எப்பாடு பட்டேனும் உதவுகிறார்கள். அவர்களுக்கும் சுமந்த் பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். விடுங்கள் கதை பார்ட்டி பற்றியது அல்ல.  சத்யத்தை நம்பும் ஒரே நபர், அவனது தங்கை மட்டும்தான். சத்யத்தைப் பொறுத்தவரை மனத்திற்கு தோன்றினால் வேலைகளை செய்வது இல்லையெனில் அதை செய்யக்கூடாது அவ்வளவுதான். இது பலருக்கும் புரிவதில்லை. ஏன் அவனது பெற்றோருக்கு கூட. குறிப்பாக அவனது அப்பாவுக்கு அவனை புரிந்துகொள்ள முடியாத இயலாமை மெல்ல கோபமாக மாறுகிறது. சத்யத்தைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது அதற்கான கவியுலகிலேயே இருப்பது பிடித்தமானது. இப்படி இருப்பவன் நடைமுறை வாழ்க்க

சுயநலம், காசு இவற்றை மட்டுமே பார்க்கும் ஒருவனின் இரவு வாழ்க்கை! - இடம் ஜகத்

படம்
இடம் ஜகத் - தெலுங்கு இயக்கம் அனில் ஸ்ரீகாந்தம் ஒளிப்பதிவு இசை ஸ்ரீசரண் பகலா கதை முழுக்க நெகட்டிவ்வான கதை. ஆனால் யதார்த்தமாக இருக்கிறது. டிலேய்டு ஸ்லீப் டிஸ் ஆர்டர் எனும் தூக்க குறைபாடு பிரச்னை நிஷித்திற்கு இருக்கிறது. இக்குறைபாட்டால் இரவு முழுக்க விழித்திருப்பவர், பகல் முழுக்க தூங்குகிறார். இதனால் அவருக்கு வேலை பறிபோகிறது. என்ன வேலை செய்யலாம் என்று தேடுபவருக்கு ப்ரீலான்சாக செய்திகளை டிவி சேனலுக்கு தரும் வீடியோகிராபர் வேலையை அமைத்துக்கொள்கிறார். இதில் இரக்கமே அவருக்கு கிடையாது. சேனலுக்கு அவர் தரும் செய்திகளுக்கு முடிந்தளவு அதிக காசு வாங்குகிறார். இதில் அவருக்கு சீனியரான ஒருவருடன் முட்டல் ஆகிறது. அப்போது, போதைப்பொருள் கும்பல் ஒன்றின் போலி விபத்து வீடியோவை பதிவு செய்கிறார். இதனால் அவரின் காதல், நட்பு அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதனை எப்படி அவர் சமாளித்தார் என்பதுதான் கதை. ஆஹா இயக்குநரின் கதை. இறுதிவரை மாறாமல் பயணிக்கும் திரைக்கதைதான். கதைக்கு சரியான நடிகர்களை அவர் தேர்வு செய்யவில்லை. சுமந்தின் நண்பராக வரும் சத்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். சுயநலம