இடுகைகள்

மார்க்சிம் கார்க்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையில் மின்னும் வலி!

படம்
  உணர்வெழுச்சி கொண்ட நாவல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா ? வேலை எப்படி போகிறது ? தாய் - என்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய நாவலைப் படித்தேன் . 1334 பக்கம் . தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம் . பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன . ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன் . அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது . பார்ப்போம் . பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன . இந்தளவு பதிப்பக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை . அறையில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை . பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம் . சாதாரண பாய் வாங்கினால் , எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது . தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது . அன்பரசு 12.7.2021 மயிலாப்பூர் ------------------------------ மூ

மகனின் கொள்கைக்காக தன்னையே அர்ப்பணிக்கிற தாய்! - தாய் - மார்க்சிம் கார்க்கி

படம்
மாதிரிப்படம் தாய்  மார்க்சிம் கார்க்கி தொ.சி. ரகுநாதன் ரஷ்யாவில் மன்னருக்கு எதிராக கலகம் செய்யும் தொழிலாளர்களின் கதை. இதில் முக்கியமான பாத்திரங்களாக பாவெல், அவனது அம்மா பெலகேயா நீலவ்னா ஆகியோர் உள்ளனர்.  நீலவ்னாவுக்கு நடக்கும் திருமணமே எதிர்பாராத விபத்தாக அவளது சொல்லில் வெளிப்படுகிறது. அதற்குப் பிறகும் அடி, உதை என வாழ்கிறாள். குழந்தை பிறந்தாலும் அவளது வாழ்க்கை பெரிய மாற்றங்களின்றி வலியோடுதான் இருக்கிறது. பாவெல் அவனது அப்பா குடிநோயால் இறந்தபிறகு ஆலை வேலைக்கு செல்கிறான். பிறரைப் போல குடிக்காமல் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் வாங்கிய நூல்களை படித்துக்கொண்டிருக்கிறான். இது அவனது அம்மாவுக்கு முதலில் பெருமையாக இருந்தாலும் பின்னர் ஏதோ பிரச்னையாக தோன்றுகிறது.  பாவெல் அடிக்கடி வெளியே கிளம்பிவிட்டு தாமதமாக வீடு வருகிறான். சில நாட்களில் வீட்டுக்கு வருவதில்லை. அவன் எங்கு செல்கிறான் என்பதை நீலவ்னா அறியும்போது அதிர்கிறாள். நாட்டை ஆளும் ஜார் மன்னருக்கு எதிரான சோஷலிச அணியில் மகன் சேர்ந்துவிட்டான். கட்சியில் சேர்ந்து படிப்பது, எழுதுவது, பேரணிகளை நடத்துவது என சென்றுகொண்டிருக்கிறான்.  நீல