இடுகைகள்

பாடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிப்பட்ட திறன்களை நாடும் மாணவர்கள்!

படம்
பள்ளிக்கு வெளியே வானம்! செய்தி: இந்தியாவில் பள்ளிப்படிப்பு தாண்டி மொழிகள், புதுமைத்திறன், இசை, விளையாட்டு உள்ளிட்ட வகுப்புகளுக்கு பெற்றோர் செலவழிக்கும் தொகை அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வி தாண்டிய பயிற்சிகளை முன்னர் யாரும் யோசித்ததில்லை. ஆனால், இன்று பள்ளிக் கல்விக்குச் செலவிடும் தொகையைவிட அதிகமாக செலவிட்டு ஜிம்னாஸ்டிக், இசை, நடனம், தற்காப்பு கலைகள், எழுத்துப்பயிற்சி ஆகியவற்றைக் கற்கின்றனர். என்ன காரணம்? வேலைவாய்ப்பு சந்தையும் அப்படி மாறி வருகிறது. இசை, தட்டச்சு, கணிதமொழிகள், கால்பந்து, சதுரங்கம், டென்னிஸ் போன்ற பயிற்சிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது, அதற்கு செலவிடுவது  வழக்கமானதுதான். ஆனால் இன்று அதற்கென துபாயில் உள்ள அகாடமிக்கு கூட கல்வி கற்க அனுப்புகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். இதற்கான பட்ஜெட் 1.4 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை எகிறுகிறது. "நாங்கள் படிக்கும்போது கல்வி மட்டுமே வேலைக்கு செல்வதற்கான தகுதியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. வேலையில் பல்வேறு திறன்களையும் சோதிக்கிறார்கள்" என்கிறார் ப்யூச்சர்