இடுகைகள்

தினகரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவொளிரும் மலைகள் - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

வெயிலை அள்ளிப்பருகுபவனின் கதை! கடிதங்கள்

படம்
          எழுத்தாளர்  ஜெயமோகன்   இனிய தோழர் இரா . முருகானந்தம் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் அலுவலகத்தில் தற்போது தீபாவளி மலர் வேலைகள் நடந்து வருகின்றன . கட்டுரைகளை செம்மையாக்கும் பணியைக் கொடுத்திருக்கிறார்கள் . சேலம் கல்லாங்குத்து பஜார் , திண்டுக்கல் - பழநி நடைபாதை , சிவகாசி தீக்குச்சிகள் உள்ளிட்ட கட்டுரைகள் தயாராகி உள்ளன . நிருபர் வெ . நீலகண்டனின் இடத்தை நிரப்புவது கடினமானது . அவர் ஏகப்பட்ட வேலைகளை செய்துகொண்டிருந்தார் . என்னால் முடிந்தளவு வேலை செய்து வருகிறேன் . விகடனில் ஜெயமோகன் எழுதிய வெயிலில் தொற்றிக்கொள்வது கதை , புதுவித புனைவாக ஈர்த்தது . வெயிலை அள்ளிப்பருகும் மனிதர் ஒருவரின் கதை இது . தீராத பகல் , தனது காதலியின் இறப்பு ஆகிய நினைவுகளை பசுமையாக வைத்திருக்க வெளிச்சத்தின் போதையை நாடி விமானத்திலேயே திரியும் மனிதரின் வாழ்க்கை ஆச்சரியப்படுத்தியது . குங்குமத்தில் வரும் முகங்களின் தேசம் தொடர் , நூலாக வெளியாகும்போது முக்கியமான நூலாக இருக்கும் . இந்திய நிலப்பரப்பு , மனிதர்கள் , புழுதி , நீர் , உணர்வுகள் என மாயம் நிகழ்த்தும் எழுத்து . பேச்சு மற

எனக்கு கிடைத்த மறக்க முடியாத நண்பர் நீங்கள்! கடிதங்கள்

படம்
            அன்பு நண்பர் கதிரவனுக்கு , நலமா ?    உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன் . பெருந்தொற்று காலகட்டத்தில் வேலையை காப்பாற்றிக்கொள்வதே கடினமாக உள்ளது . இதழ்களில் விளம்பரங்கள் கிடைப்பது வெகுவாக குறைந்துவிட்டது . பொதுவாக அனைத்து தொழில்களும் தள்ளாடி வருகின்றன . பொதுமுடக்கம் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது . நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவலின் சில பகுதிகளை படித்தேன் . வங்கதேச முஸ்லீம்களின் வாழ்க்கையை பேசும் நூலில் 60 பக்கங்கள் நிறைவு பெற்றுள்ளன . இப்போதுள்ள நிலையில் மனநிலையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு வேலையை செய்வது கடினமாக உள்ளது . படங்கள் பார்ப்பதை விட யூட்யூபில் டிவி தொடர்களை பார்த்து வருவதே எனது பொழுதுபோக்காக மாறிவிட்டது . கொரிய டிவி தொடர்களில் புதிய ஐடியாக்கள் , பாத்திரங்கள் , இந்திய மனநிலை , மதிப்புகள் என நிறைய விஷயங்களை அழகாக பேசுகிறார்கள் . பேரிளம் பெண்ணின் அழகிய வனப்பும் வளங்களும் , குழந்தையின் மனமுமாக கொரிய டிவி தொடர் பெண்கள் காட்டப்படுவது புதுமை . சீரியல் கொலைகாரர்களின் மனநிலை பற்றிய நூல்களை படித்து வருகிறேன் . இதனை எதிர்வரும் நாட்களில

உறவின் நோக்கமே சுயநலம்தானா? - கடிதங்கள்

படம்
              கடிதங்கள் 3.1.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக உள்ளீர்களா ? சொந்த ஊருக்கு சென்றதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் . சென்னையில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களை நான் சந்திக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது . கல்வி வேலை வழிகாட்டியில் வேலை செய்த வெங்கடசாமியுடன் இப்போது பேசுவது இல்லை . தேவையைப் பொறுத்தே உறவுகள் என்பதை அவர் தீவிரமாக நம்புகிறார் . எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் விலகிவிட்டேன் . அது உண்மையாக இருக்குமோ என்னமோ , எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது . 2021 ஆம் ஆண்டில் இழப்புடன்தான் சம்பளக்கணக்கு தொடங்கியுள்ளது . பொதுமுடக்க காலம் என்பதால் இரண்டாயிரம் ரூபாயை வெட்டிவிட்டார்கள் . மீதியுள்ள பணத்தில்தான் ஊருக்கு பணம் அனுப்புவது , வாடகை , சாப்பாடு ஆகியவற்றை சமாளிக்க வேண்டும் . நீங்கள் வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்தில் இப்போது பிடிக்கும் பிடிமானங்களைத் திருப்பித் தர வாய்ப்புள்ளது . ஆனால் எங்களுக்கு அப்படியான நிலைமை இருக்குமா என்று தெரியவில்லை . எங்கள் தலைவர் எங்களுக்கான பரிந்து பேசுவார் என

சாக்கடை நாற்றம் அடிக்கும் சமூகநீதி சந்நிதானங்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
chambre237.com 5 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். உங்கள் பெயரிலேயே இதழ் வரும். சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு வருந்தும்படியான பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். தலித் முரசு இதழில் மீதிப்பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,   அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. ச.அன்பரசு 6.3.16

சமூகநீதி பேசும் சமதர்ம நாயகர்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு..!

படம்
pexels 5 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். உங்கள் பெயரிலேயே இதழ் வரும். சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். தலித் முரசு பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,  அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. ச.அன்பரசு 6.3.16

நண்பனுக்கு கூறாத விளக்கம், எதிரி ஏற்காத உண்மை! - அன்புள்ள அப்பாவுக்கு

படம்
pexels 4 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? வேலை என்பதைப் பொறுத்தவரை நான் ஈடுபாட்டோடு செய்கிறேன். ஆனால் மயிலாப்பூரிலிருந்து கே.கே.நகர் சென்று சேர்வது மோட்சத்திற்கு தவம் இருப்பது போலவே இருக்கிறது. மாலையில் 12ஜி பஸ்ஸில் ஏறுவது அய்யப்பசாமியின் கோவிலின் பதினெட்டாம் படி ஏறுவது போலவே இருக்கிறது. அவ்வளவு கூட்டம். உடுப்பி பஸ் ஸ்டாப்பில் இறங்கும்போது, நான்கு பேர் சுற்றி நின்று அடித்து உதைத்தது போல உடல் வலிக்கிறது. துயரம்... தூங்குவதற்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று இருக்கிறது. அலுவலகத்திற்கு பக்கத்தில் அறையை எடுப்பது புத்திசாலித்தனம். இங்குள்ள பரத் என்ற பிராமணர் மட்டுமே நெருக்கமான நண்பர். பிற ஆட்கள் எல்லாம் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. சம்பளம் வந்ததும் உங்களுக்கு பணம் கட்டி முத்தாரம் இதழ் வரும்படி செய்கிறேன். இந்த புத்தகம் பெரு நகரங்களில் உள்ள கடைகளில்தான் கிடைக்கும். இருமாதங்களுக்குப் பிறகு நான்கு நாட்கள் லீவு போட்டுவிட்டு ஊருக்கு வர நினைத்துள்ளளேன். மஞ்சள் காமாலைக்கான சோதனை இன்னும் முடியவில்லை. இதன

யாருடைய சிபாரிசு நீங்க? - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
3 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலந்தானே? தினகரனில் இணைந்துவிட்டேன். இங்கு சம்பளக்கணக்கு தொடங்குவதற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. தலித் முரசு இதழில் வரவேண்டிய பாக்கி 2.796 ரூபாய் உள்ளது. இதற்காக அவர்களது அலுவலகம் சென்றேன். நீங்கள் எங்கள் கணினிகளை உங்களது உபயோகத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றார் தலித் முரசு புனித பாண்டியன். இதைக் கண்டுபிடித்து சொன்னதற்காக நெடுஞ்செழியன் பெண் உட்பட பலரது பெயரையும் சொன்னார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். கொடுத்த  பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். இவர்களுக்கு வேலை ஆகவேண்டுமென்றால், என்ன சாதி என்பது வரை கேட்டுக்கொண்டு இளிப்பார்கள். தேவையில்லை என்றால் மயிரே என்று மதித்துப் பேசுவது. சமூகநீதியே இவர்களின் கரங்களில்தான் இருக்கிறது. என்னை கோபப்படுத்திப் பார்க்க முயன்றார்கள். நான் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த வில்லை. இந்த யுக்தியை எல்லாம் வேலை செய்த காலத்திலேயே பார்த்தாகிவிட்டது. முத்தாரத்தில் என்னைப் பார்த்து பேசுகிற பலரும், யாருடைய சிபாரிசு என குறுஞ்சிரிப்புடன் கேட்கிறார

அப்பா, நான் உங்களை புறக்கணிக்கவில்லை! - அன்புள்ள அப்பாவுக்கு!

படம்
pexals 1 அன்புள்ள அப்பாவுக்கு,  அன்பரசு எழுதுவது, தாங்கள் நலமாக இருக்கிறீர்களா? மஞ்சள் காமாலை பாதிப்பு இன்னும் முழுதாக நீங்கவில்லை. உடல் சோர்வும், மனச்சோர்வும் வாட்டுகிறது.  தினசரி சாப்பிடுவதற்கு முன்னதாக அறையில் கீழாநெல்லி பொடியை நீரில் கலக்கி குடித்து வருகிறேன். என்ன பலன் கிடைக்குமோ தெரியவில்லை. அறையில் சமையல் செய்யும் முயற்சிகள் மிக தூரத்தில் தெரியும் விளக்கு போலவே என்னை இன்னும் ஈர்த்துவருகிறது. ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. காரணம் எனது அலுவலகப் பணிகள்தான்.  காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டு சிறிதுநேரம் படிப்பேன். பிறகு, டீ குடிக்க ஜனா அண்ணனோடு செல்வேன். அவர் உறுதியாக டீ குடிப்பாரா என்று எனக்கு தெரியாது. காரணம், க்ரீன் டீ என டெட்லி டீ பாக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார். அது அவரின் ஸ்டைல். விஷயத்திற்கு வருகிறேன். ஏழரை மணிக்கு வரும் 12 ஜியில் ஏறிவிடுவேன், மலம் கழிப்பது கூட தினகரன் அலுவலகத்தில்தான். எங்கள் அறையில் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டைப் பார்ப்பது பாலைவனத்தில் பிஸ்லரி வாட்டர் பாட்டில் கிடைப்பதை விட அரிதானது. நீங்கள் மருத்துவமனையில் மனம் கலங்கியபடி ப

ஆபீஸ் அரசியலை சமாளித்தால் உனக்கு வேலை! - இதழியல் பணி!

படம்
நீ எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யுடா தம்பி. ஆனா அங்கிருக்கிற அரசியலைச் சமாளிக்கத் தெரிஞ்சாத்தான் அங்க வேலை பார்க்க முடியும். பாத்துக்க என்றார் வடிவமைப்பாளரும் நண்பருமான மெய்யருள். விரைவிலேயே அலுவலகத்தில் அப்படியான சூழ்நிலை உருவானது. நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் நான் வேலை செய்த இதழ் முழுக்க நானே தயாரிப்பதுதான். இதில் மற்றவர்களுடன் கலந்து செய்யும் பிரச்னை ஏதுமில்லை. தி.முருகன் குழும ஆசிரியராக இருக்கும்போது, அவரும் முத்தாரத்தில் கட்டுரைகளை எழுதி வந்தார். நான் பொதுவான செய்திகளை இணையம், நாளிதழில் பார்த்து தேடி எழுதுவேன். அவர் தேவையானால் அதனை எடுத்து பயன்படுத்திக்கொள்வது வழக்கம். குங்குமத்திற்கென நான் வேலைக்கு எடுக்கப்படவில்லை. எனவே, அதில் கடிதங்களை மட்டும் எழுதிக் கொடுத்து வந்தேன். ஆனால் அங்கிருந்த குங்குமம் இதழில் சீனியர், ஜூனியர் மோதல்கள் சகஜமானது. பெரும்பாலான ஆட்கள் விகடனிலிருந்து வந்தவர்கள். ஈகோ மோதல்கள் இருக்காதா என்ன? முத்தாரம், சூரியன் பதிப்பகம், பொங்கல் மலர், கல்வி வேலை வழிகாட்டி, கல்விமலர்  என வேலைகள் டைம்டேபிள் போட்டது போல இருக்கும். இந்த லட்சணத்தில்

பத்திரிகையில் வேலை கிடைச்சிருச்சேய்! - பதிப்பக பணி

படம்
மனமறிய ஆவல் - கடிதங்கள் பத்திரிகையில் வேலை என்பது கடைசி புகலிடமாக இருக்கும் என நினைத்தேன். காரணம், நாவல்கள் படித்தாலும் அது பற்றி எழுதினாலும் சரி அது மற்றவர்களுக்கு தெரிய பத்திரிகைதான் ஒரே வழி. இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று வந்தாலும் அன்று எனக்கு அதில் ரெஸ்யூம் அனுப்பி வேலை வாங்கும் யுக்தி தெரியவில்லை. சிறுபான்மை இதழ் ஒன்றில் தட்டச்சு செய்பவனாக வேலை செய்துகொண்டிருந்தேன். எழுதுபவனுக்கு தட்டச்சில் என்ன வேலை? மூத்த பெண் இதழியலாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அதுவும் சென்னையில் கோட்டூர்புரத்தில் நேர்காணலுக்கு சென்றபோதுதான். எப்போதும் போல நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு முன்னும் பின்னுமான நான்லீனியரில் பதில் சொல்லியதில் அவர்களே ஒரு காஃபி எனக்கும் மட்டும் என ஆர்டர் செய்து குடித்துவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என அனுப்பி விட்டார்கள். பிறகு இரு மாதங்கள் கழித்து எனக்கு போன் செய்து இப்படி இதழ் ஒன்றில் வேலை செய்கிறீர்களாக என்று கேட்டார். சரி என்றேன். அப்புறம் கிடைத்ததுதான் தட்டச்சுப்பணி. வேலை, ஆசிரியர் என இரண்டுமே சரியில்லைதான். ஆனால் அலுவலகத்தில் இருந்த நூல்கள