இடுகைகள்

சாலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறும் கல்வி, வணிகம் சார்ந்த துறைகள்!

படம்
  பட்டுச்சாலை நோக்கம் நிலம், நீர் என இரண்டு தளங்களிலும் பட்டுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், வணிகம், கலாசார பரிமாற்றம்  என்று மூன்று அம்சங்கள் வணிக வழித்தடத்தில் முக்கியமானதாக உள்ளது. கொள்கை அளவில் உள்ளூர் அரசுகளோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுப்பது. நடைமுறை ரீதியாக பெரிய திட்டங்களை உருவாக்க உதவுவது, ஆற்றல், தகவல்தொடர்பு என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது, வணிகம் என்பதில் தடையற்ற வர்த்தகம், நாடுகளுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பு, சான்றிதழ், அங்கீகாரம், தர நிர்ணயம், நவீன சேவை வணிகம், எல்லைகளுக்குள் இணைய வணிகம், இருநாட்டுக்கு இடையிலான பணப்பரிமாற்றம், காப்பீட்டு சந்தை என செயல்பாடுகளை விளக்கலாம்.  பட்டுச்சாலை திட்டத்திற்கு ஆசிய அடிப்படைகட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி, சாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகிய அமைப்புகள் நிதியுதவியை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் அல்லாமல் பட்டுச்சாலை நிதி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.  பட்டுச்சாலை திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பலவும் காலனி கால ஆட்சியால் கடுமையாக சுரண்டப்பட்டவை. அந்த நாடுகள் இப்போதும்...

பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து

படம்
  பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து இந்திய பேரரசரின் மதக்கலவர ஆட்சியில் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு என்பதே முக்கியமான சுலோகம். அவர் சொல்ல மறந்துவிட்டார். இருந்தாலும் மக்கள் தாமாகவே புரிந்துகொண்டுவிட்டார்கள். சட்டவிரோதமாக குளிரில் உறைந்து செத்தாலும் தாய் நாட்டில் வாழமுடியாது என மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதுவும் பேரரசரின் பூர்விக ஆட்களே ஆள விட்டுவிடுடா சாமி என தப்பி ஓடிவருகிறார்கள். ஓகே கெட் டு தி பிசினஸ். தப்பி ஓடுவது சரி. அதை எப்படி திட்டமிடுவது? திட்டமிட்டாலும் கூட ஒருமுறை சாலைக்கு வந்துவிட்டால் அப்புறம் நடப்பது எல்லாம் நம் கையில் இருக்காது. அப்படியே வரும் சூழ்நிலைகளை சந்தித்து பயணிக்க வேண்டியதுதான். இருந்தாலும் சில முன்னெச்சரிக்கைகளைப் பார்ப்போம். பேரிடர், மதக்கலவரம், போர் என எது வந்தாலும் சரி, டிவி சேனல்களைப் பார்த்து தேசப்பற்று எனும் உச்சத்தை அடைவதை கட்டுப்படுத்தினால்தான் உயிர்பிழைப்பது சாத்தியம். தப்பிச்செல்லும் சாத்தியம் கொண்ட சாலைகளை அடையாளம் கண்டு அதிகம் பயன்படுத்தாத சாலைகளை தேர்வு செய்து தப்பிக்க முயலவேண்டும். எப்போது...

2025ஆம் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

படம்
  புதிய எதிர்பார்ப்புகள் 2024ஆம் ஆண்டு பற்றிய விஷயங்களை பூந்தி, டெய்லிகரன் ஆகியோர் இணைப்பிதழை இலவசமாக கொடுத்து புரிய வைத்துவிடுவார்கள். இனி அதை தனியாக எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம். எதிர்வரும் ஆண்டுக்கான விஷயங்களைப் பார்ப்போம். விமானநிலையம் மக்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் செல்லவா என்று தெரியவில்லை. பிரமாண்ட விமானநிலையங்கள் நொய்டா, நவி மும்பையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இவற்றை ஆட்சித்தலைவரின் அபிமான நண்பர் இயக்குவாரா இல்லையா என விரைவில் செய்திகள் சொல்லும். கூட்டுறவு இந்தியா குவாட் அமைப்பில் உள்ளது. அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் பதவியேற்கவிருக்கிறார். சீனாவின் டிக்டாக்கை தடைவிதிக்க வேண்டாம் என கூறியுள்ளார். வணிகத்தைப் பொறுத்தவரை அதிகவரி ஏற்றுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா என்ன வித நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா அதற்கு மகிழ்ச்சியுறும்.பின்னே நாம் முன்னேறமுடியவில்லை அடுத்தவர்கள் முன்னேறினால் மட்டும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா என்ன? இந்த வகையில் இந்தியா ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு இணைந்துகொண்டு இயங்கும். மின...

பெங்களூருவில் பொதுமக்கள் கூடுவதற்கான இடங்கள் தேவை!

படம்
              பொதுமக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் போராளி வி ரவிச்சந்தர் நமது சமூகம் தொடர்ச்சியாக பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறது என்று வருத்தப்பட்டுக்கொண்டு நின்றுவிடாமல் அந்த நிலையை மாற்ற முயல்பவர்களில் குறிப்பிடத்தக்கவர், வி ரவிச்சந்தர். வயது 67 ஆகிறது. தொடர்ச்சியாக அரசின் நிர்வாக பிரச்னைகளை எதிர்த்து போராடி வருகிறார். கோரமங்கலா பகுதி குப்பைகளை கிராமங்களுக்கு கொண்டு சென்று கொட்ட்க்கூடாது. அப்படி கொட்டினால் கிராமம் பாதிக்கப்படும் என வெளிப்படையாக எதிர்க்கும் மக்களுக்கான குரல் அவருடையது. நிதியுதவி குறைவாக கொண்டிருக்கும் திட்டம் என்றாலும் அதில் பாதிப்பு என்றால் வெளிப்படையாக மக்களிடம் பேசி ஆதரவு திரட்டி அதை மாற்ற முயல்பவர். வெறும் பேச்சு மட்டுமின்றி, செயல்படுவதற்கும் தயங்காதவராக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இருபத்து நான்கு ஆண்டுகளாக அரசின் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி போராடி வருகிறார். அவரின் சாதனைகள் என்று பார்த்தால் குறிப்பிட்டு மூன்று விஷயங்களைக் கூறலாம். சொத்து வரி திட்டம், பாதசாரிகளுக்கான சாலை, லால்பாக் பூங்கா சூழல் திட்டம் ஆகியவற்றில் ரவிச்சந...

போருக்கு செலவு செய்வதைவிட நிதியை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு திருப்பலாம்!

படம்
           உள்நோக்கம் கொண்ட தேசபக்தி அரசியல்    ஒருவகையில் பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகள் மேம்படுவதாக  இருந்தாலும், இன்னொருவகையில் அந்நாட்டுடன் சுமூகமான உறவு ஏற்படக்கூடாது என்று விரும்புகிறோம். நமது பிரதமர் பாகிஸ்தான் பகுதிகளைப் பற்றிப்பேசும்போது நாடாளுமன்றத்தில் பல அணிகளாகப் பிரிந்து நின்று பேசுவது நடக்கிறது. நாட்டின் ஊடகங்களில் இரு தரப்பு பற்றி கடும் கூச்சல் இடுவதுமாக இரு நாட்டு உறவுகள் சமநிலையடையும் நிலையில், இச்செயல்கள் அதைக் குலைத்துப்போட்டுவிடுகின்றன.  நமது செயல்பாடுகள் பாகிஸ்தானுடனான ஒற்றுமையை உண்மையில் நாம் விரும்புவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. உறுதியாக, நாம் உறவுகளை சிறந்ததாகவும், ஆழமானதாகவும் கொள்ள முயற்சித்தும் அங்கே மனக்கசப்பும், கோபமும்தான் இறுதியில் மிஞ்சுகிறது. அனைத்தையும் விட பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்பிக்கவேண்டும்; அவர்களை சரியான இடத்தில் வைக்கவேண்டும்; எனவும், பாகிஸ்தானை இகழ்ந்து பேசுவதுதான் தேசபக்தி என்று கூறுவதில் பெரும் அரசியல் உள்ளது.  மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமர் பாகி...

உடல் பருமன் ஆபத்து, ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால் விளைவுகள் - மிஸ்டர் ரோனி

படம்
            அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி உடல் பருமன் என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்துகிறது? பொதுவாக, குழந்தைகள் கொழு கொழுவெ இருப்பதை ரசிக்கிறார்கள். ஆனால் வயதுக்கு மீறிய உடலின் செழுமை எப்போதுமே ஆபத்தானது. உயர் ரத்த அழுத்தம், டைசிலிபிடெபியா, இரண்டாம் நிலை நீரிழிவுநோய், இதயநோய்கள், வாதம், ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், மூச்சு விடுவது தொடர்பான நோய்கள், புற்றுநோய் ஆகியவை உடல்பருமனால் உண்டாகின்றன. ஒருவரின் ரத்தத்தில் அதிகரிக்கு்ம ஆல்கஹால் அவரின் உடல், இயல்பில் மாற்றம் ஏற்படுத்துமா? ரத்தத்தில் அதிகரிக்கும் ஆல்ஹால் என்பது ஒருவரின் உடல் எடையை அடிப்படையாக கொண்டது. மதுபானம், மதுபானம் சார்ந்த பல்வேறு பானங்களும் இந்தளவில்தான் உடலைப் பாதிக்கிறது. ஆல்கஹால் என்பது எத்தில் ஆல்கஹால் என்று புரிந்துகொள்ளவேண்டும். இதன் தூய்மையான தன்மையைப் பொறுத்து ஒருவரின் இயல்பு மாறும். இப்போது அதன் அளவு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். 0.02-03 சதவீதம் அதிகரித்தால் ஒருவரால் சரியாக யோசிக்க முடியாது, உடலின் ஒத்திசைவு மாறும். 0.05 சதவீதம் அதிகரித்தால், மயக்கம் உருவாகும் 0.08-0.10 என்ற அளவை அமெரிக்க மா...

நடப்பதற்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பார்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை. மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன. சாப்பிட அறைக்கு வரும்போது, பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது. அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார். ஆச்சரியம்... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன்.  அடாத மழையிலும் என்னுடைய தேவை  உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது.  எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார். மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன். ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன். மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை பிரன்ட்லைனில் பார்த்தேன். படிக்கவேண்டும...

கைவீசி நடக்கும் பழக்கம் தோன்றிய வரலாறு!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சாலையில் நடக்கும்போது கைவீசி நடக்கும் வழக்கம் எப்படி வந்திருக்கும்? நம் ஊரில் திருமணமானவர்கள் கைவீசம்மா பாட்டு பாடி நடப்பது மிக குறைவு. காதலி சமேதராக எழுந்தருளி நண்பர்களுக்கு எரிச்சல் தரும் முருகேசன்களும், பழனிசாமிகளும் இப்படிச் செய்வது உண்டு.  இதற்கான நதி மூலத்தை தேடினால் 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் போக வேண்டும். நாம் தோன்றிய காலத்திலிருந்து கைவீசம்மா கைவீசு சமாச்சாரம் இருக்கிறது. பாருங்கள் இன்று கூட, ஒரு இளம்பெண் அதாவது நேசிக்கிற பெண், தன் கையைத் தொட்டால் என பயங்கர ஃபீலாகிற ஆண்கள் உண்டு. . 2010 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஃப்ரீ பல்கலையைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோர்டு ப்ரூஜின், கைவீசும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கைவீசி நடப்பது கால்களின் வேகத்திற்கு இயல்பாக வரவேண்டும் என்பதால் உருவானது என்கிறார். கால்களை மாற்றிப்போட்டு நடக்கும்போது உருவாகும் விசையை கைகளை வீசி நடப்பது சமன்படுத்துகிறது என்பதுதான் விஷயம். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

வினோத சாலை அடையாளங்கள்

படம்
வினோத சாலை அடையாள போர்டுகள் mentalfloss சாலை டர்னுக்கு பிறகு வேகமாக சரிவாக கீழிற்குகிறது என்று பொருள். கவனிக்காவிட்டால் ராக்கெட் வேகத்தில் கீழே இறங்கிச்செல்லும் வாய்ப்பு உள்ளது.  mentalfloss தென் அமெரிக்க நாடுகளில் இந்த போர்டுகளை அதிகம் பார்ப்பீர்கள். பொதி ஒட்டகமான லாமா, சாலையைக் கடக்கிறது என உங்களுக்கு அறிவிக்கும் அறிவிப்பு பலகை இது.  எதிரே வரும் வண்டியைப் பார்க்க முடியாது என்பதைச் சொல்லும் எச்சரிக்கைப் பலகை. உச்சியேறி சடக்கென கீழிறங்கும் சாலை. ஐஸ்லாந்தில் இதுபோன்ற பலகைகள் உண்டு.  இங்கிலாந்தில் உள்ள முள்ளெலி போர்டு இது. பள்ளிக்கூடம் அருகே. மெதுவாக செல்லவம் என்று சொல்வது போல. முள்ளெலி அருகே, மெதுவாக செல்லுங்கள் என்கிறது அரசு.  பனி நிரம்பிய தேசங்களில்(க்ரீன்லாந்து) திடீரென சாலையில் போகும்போது ஸ்லெட்ஜ் வண்டிகள் குறுக்கே வந்தால் எப்படியிருக்கும்? அதற்காகத்தான் இந்த போர்டு. கவனமாக பயணித்தால் விபத்தைத் தவிர்க்கலாம்.  நன்றி: மென்டல்ஃபிளாஸ்

என் கையை விட்டுவிடு: மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
Pexels.com மயிலாப்பூர் டைம்ஸ் என் கையை விட்டுவிடு ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன் துன்பங்களிலிருந்து காப்பாற்றுவேன்.  நேற்று சாலையை நானும் சகாவுமான பாரதியும் கடந்தோம். மை ஹோட்டலுக்கு மினி டிபன் சாப்பிட பாரதி அழைத்தார் என வந்தேன். பாரதி, ஏதோ மஃப்டி போலீஸ் போல வெள்ளைச் சட்டையும், காக்கி பேண்டும் போட்டு ராட்சஷ உடம்பில் பயமுறுத்தினார். பேசினால்தானே தெரியும் பாஸ் எப்படின்னு. நான் புதுசா வேலைக்கு சேர்ந்த கான்ஸ்டபிள் ஏட்டய்யாவை சுற்றுவது போல அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்து இல்லை ஓடிக்கொண்டு இருந்தேன். சாலை கடக்கும்போது முன்னால் வேகமாக போக, நான் அவரின் அட்டாச்மென்டாக பின்னால் நடந்தேன். ஆனால் அந்த வேகம் போதாமல் அவரின் கையைப் பிடித்து டோ போட முயற்சித்தேன். சட்டென திரும்பியவர், அயோக்கியப் பயலே கையை இழுக்கறியே, கையை விடு எப்படி ரோட்டை கிராஸ் பண்ணுவேன் என மூர்க்கமானார். பயப்படாதீர், தைரியமாக இரும்.  எனக்கு என்னடா இது. ஏதோ பொண்ணு கையப்பிடுச்சு இழுத்தமாதிரியில்ல டென்ஷன் ஆகறாருன்னு அப்படியே நின்றேன். அதில்லடா தம்பி. திடீர்னு கைய பே...