இடுகைகள்

சந்தோஷ் நாராயணன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊக்கமளிக்கும் இசைக்கலைஞர்கள்- ஜூபின் நாட்டியால், சந்தோஷ் நாராயணன், மெஹ்தாப் அலி நியாசி

படம்
  பாடகர் ஜூபின் நாட்டியால் அசல் குரல்! ஜூபின் நாட்டியால் பாடகர், சுயாதீன இசைக்கலைஞர் தொடக்கத்தில் இவரது குரலைக் கேட்ட ஏஆர்ஆர், உனது குரல் தனித்துவமாக இருக்கிறது என்று சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். டேராடூனிலிருந்து ஜூபின் மும்பைக்கு வர அதுவே காரணம். பிறகுதான், அவரை எக்ஸ் ஃபேக்டர் எனும் நிகழ்ச்சி தேர்வில் சோனு நிகாம் தகுதியில்லை என நீக்கினார். பிறகுதான், சில வேலைகள் செய்து கிடைத்த பணத்தை வைத்து வாரணாசி முதல் சென்னை வரை அலைந்து திரிந்தார். இதற்கிடையில் டெமோ பாடகராக 250 பாடல்களை பாடினார். இவரது முதல் பாடல் ஏக் முலாகத்.  நான் என்னுடைய வரம்புகளை தெரிந்துகொண்டபோது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அரசியல் என்னை கீழே தள்ளியபோது சிரித்துக்கொண்டே நான் அங்கிருந்து விலகிவிடுவேன் என்கிறார். காபில் ஹூன், தி ஹம்மா, தும் ஹி ஆனா என நிறைய பாடல்களை பாடியுள்ளார். கடந்த ஆண்டு இவர் பாடிய இரு பாடல்கள் பலராலும் விரும்பி கேட்கப்பட்டது. லுட் காயே, ராடான் லம்பியான் என்ற இருபாடல்களை நீங்களும் கேட்டிருக்கலாம்.   பாடலுக்கு ஒரு முகத்தை கொடுப்பது என்பது இசையில் கடினமானது என்றார் ஜூபின். திரையிசையோடு சுயாதீன இசைப