இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேராசிரியர் சுசி தாரு நேர்காணல்

படம்
உரையாடல் ஒன்றின் தொடக்கம் இந்தியாவில் முதல்முறையாக பால் வேறுபாடு குறித்த கல்விப்பாடம் ஒன்றினை ஹைதராபாத் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப கல்வி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து மற்ற கல்வி நிறுவனங்கள் கவனிக்கின்றனவா?                                       ஆங்கிலத்தில்: எஸ்.பி. விஜயா மேரி                                       தமிழில்: எம்.டி. ரிச்சர்ட் இந்த பாடப்புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களில் ஒருவரான சுசி தாரு அவர்களிடம் பேசினோம். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புத்தகத்திற்கு என்ன மாதிரியான விளைவு உள்ளது? நான் இவ்வளவு ஒருமித்த கருத்துகள் இருக்கும் இந்த விஷயத்துக்கு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாடப்புத்தகம் மக்களின் மனநிலையை மாற்றிவிடுமா? நான் இந்தக்கேள்வியை எனக்குள்ளேயே திரும்ப திரும்ப கேட்டுக்கொள்வதுதான். உண்மை இதுதான். ஒரு புத்தகம் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுத்திவிட முடியாது.  நாம் ம

மனித உரிமைப்போராளி சோனி சோரி நேர்காணல்

படம்
அரசமைப்பு சட்டத்தின் படி செயல்படும் அரசு, ஏன் வன்முறையைத் தூண்டிவிடுகிறது? சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டரைச் சேர்ந்த மனித உரிமை போராளியும், ஆம் ஆத்மியின் மாநில தலைவருமான சோனி சோரி அண்மையில் அவர் மீது நடந்த தாக்குதல் குறித்தும், மாநில ஐ.ஜி.பி. எஸ்.ஆர்.பி. கல்லூரிக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டம், காவல்துறை மற்றும் நக்ஸல்கள் இடையிலான சண்டை மற்றும் மாநிலத்திலுள்ள பழங்குடியினர் குறித்தும் நம்மிடையே விரிவாக உரையாடுகிறார்.                                   ஆங்கிலத்தில்: இஷான் மிடல்                                   தமிழில்: வின்சென்ட் காபோ அண்மையில் உங்களை சிலர் தாக்கினார்கள் அல்லவா?(பிப்ரவரி 21) தாக்கியவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் கிடைத்ததா? அவர்களின் முகம் எனக்குத் தெரியாது. பாஸ்தர் ஐ.ஜி.பி. எஸ்.ஆர்.பி. கல்லூரியின் இந்த விவகாரத்தின் பின் இருக்கிறார் என்று சந்தேகப்படுகிறேன். பாஸ்தரின் உள்ளே காவல்துறை அத்துமீறுவதை எதிர்த்து குரல் கொடுத்த விவகாரத்திலிருந்து  அவரும் நானும் போரிட்டு வருகிறோம்.  உங்களைத் தாக்கியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஆமாம்.

தமிழாக்க கட்டுரை: ஷோபா டே

படம்
மாற்றுக்கருத்தினை கண்டு ஏன் இவ்வளவு பயம்?                                             ஆங்கிலமூலம்: ஷோபா டே                                              தமிழாக்கம்: அன்பரசு சண்முகம் கடந்த இரவன்று நடந்த ஒரு விருந்தில் ரோஸ்நிற ஐஸ்க்ரீமை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் அருகில் வலதுபுறமாக வந்து சரி, ஜே.என்.யு பல்கலைக்கழகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அப்போதுதான் கன்னையா குமாருக்கு இடைக்கால பிணை கிடைத்திருந்த செய்தி கிடைத்தது .அவருக்கு அப்படி பிணை கொடுத்தது சரி/தவறு என நாடெங்கும் தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. என்னிடம் கேள்வி கேட்டவர் நான் பதில் கூறும்முன்னமேயே நான் ஜே.என்.யுவில்தான் படித்தேன். பின் கொல்கத்தா சென்றுவிட்டேன். நான் அங்கிருந்தபோது தங்கியிருந்தவர்கள் மாநில அரசோடு தினமும் சண்டையிட்டு கொண்டுதான் இருந்தார்கள். பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, சண்டையிடுவது, குடிப்பது, மறியல்களை நடத்துவது என்றுதான் இருப்போம். அது இயல்பானதாகவே இருந்து வந்தது. மாணவர்கள் நம்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்துக்கள் ஆவர். அவர்களின் செ