இடுகைகள்

உணவகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமையலால் காதலில் ஒன்று கூடும் பால்ய கால நண்பர்கள்!

படம்
    ஃபார்ம் டு போர்க் டு லவ் ஆங்கிலம் யூட்யூப் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் உரையாடல்களை, முரண்களை மட்டும் கொண்ட ஆங்கில திரைப்படங்களை அமெரிக்காவில் தயாரித்து வருகிறார்கள். இவற்றில் சில படங்கள், இலவசமாக இணையத்தில் பார்க்க கிடைக்கிறது. அப்படி கிடைத்த படத்தில் ஒன்றுதான் இது. அலைஸ் மையர்ஸ், கிறிஸ்டியன் என இருவரும் சமையல் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கிறிஸ்டியனின் சொந்த வாழ்க்கையில் பெரும் இழப்பை அவர் சந்திக்க, அலைஸை காதலித்தபோதும் ஏதும் சொல்லாமல் பிரிக்கிறார். அலைஸ் படித்து முடித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு மேற்பார்வையாளராக உள்ள சமையல்காரருடன் காதல் உருவாகிறது. சூப்புகளை தயாரித்து தரும் வேலையை செய்து வருகிறார். அப்படியான சூழலில் அவருக்கு உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக இருக்க வெளிநாட்டில் இருந்து அழைப்பு வருகிறது. பிலிப்ஸ் குழுமம் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. அலைஸ் அங்கு செல்கிறாள். மிகப்பெரிய ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குதான் பள்ளிகால தோழன், முன்னாள் காதலனான கிறிஸ்டியனை மீண்டும் சந்திக்கிறார். கிறிஸ்டியன் சமை...

நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு திரும்பி வந்து சுற்றுலாவை வளர்க்கும் இளைஞர்கள்!

படம்
            கிராமங்களில் வளரும் சுற்றுலா சீனாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக தனித்துவ கலாசார, உணவு, பண்பாட்டு தன்மை கொண்ட கிராமங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர். இதை சீனாவில் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரும், இளைஞர்களும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த சீன அரசும், உள்ளூர் நிர்வாகமும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள எட்டு கிராமங்களை சிறந்த சுற்றுலா கிராமங்கள் என சர்வதேச சுற்றுலா அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு, ஐ.நாவுடையது. எடுத்துக்காட்டாக ஷிதி கிராமத்தைப் பார்ப்போம். இந்த கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு, தேயிலைப் பயிர் ஆகியவை முக்கியமான தொழில்கள். 1986ஆம் ஆண்டு, சுற்றுலா துறை மேம்பட்டது. கிராமத்தில் உள்ள வரலாற்று கட்டுமானங்கள், ஹூய்சூ கலாசாரம் ஆகியவை பிரசாரம் செய்யப்பட, உலக நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் சுற்றுலா வணிகத்தை கையாண்டாலும் பின்னாளில் 2013க்குப் பிறகு சுற்றுலாவுக்கென தனி ந...

டைம் 100 - அகதிகளுக்கு உணவகத்தில் வேலை கொடுத்து ஆதரிக்கும் மனிதநேய உணவக உரிமையாளர்

படம்
            அஸ்மா கான் உணவக உரிமையாளர், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் asma khan அஸ்மா கான், லண்டனில் டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். அதில் ஏராளமான இந்திய உணவு வகைகள் சுவையாக கிடைக்கின்றன. அது விஷயமல்ல. அதை அவர் தனக்கு கிடைத்த பயிற்சி மூலம் கூட செய்யலாம். அந்த உணவுகளை தயாரிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அத்தனை பேருமே தெற்காசியாவில் இருந்து மேற்கு நாடுகளுக்கு பிழைக்க வந்த அகதிகள். அவர்களுக்கு முறையான உணவு தயாரிப்பு பயிற்சி கூட இல்லை. ஆனால், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தனது டார்ஜிலிங் உணவகத்தை தனித்தன்மை கொண்டதாக மாற்றி வருகிறார். டாப் செஃப் என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு சுவையான தனித்தன்மை  கொண்ட உணவு வகைகளை தயாரித்து வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது. பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார் அஸ்மா கான். தற்போது, டிஃபன் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்பட தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். இதில், அஸ்மா இந்திய உணவு வகைகளைப் பற்றி விளக்கி பேசுகிறார். அஸ்மா சிறந்த தொகுப்பாளர் மட்டு...

மயிலாப்பூர் டைம்ஸ் - பொறுப்பு ஏத்துக்கோங்க!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  பொறுப்பு ஏத்துக்கோங்க! எங்கள் அலுவலகத்தில் சக உதவியாசிரியர்களை அடக்கி ஒடுக்க புதிய அதிகாரி ஒருவர் வந்தார். இவரது தீர்மானப்படி அலுவலகமே, மிலிடரில அகாடமிபோல செயல்பட வேண்டும். அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுக்கவேண்டும். அலுவலகத்தில் தூங்கும் நேரம், வாட்ஸ் அப்பில் பிறர் மீது புகார்களை அனுப்பும் நேரம் தவிர மீதி நேரம் இருக்குமே? என்ன செய்வது? உதவி ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பற்றி செமினார் போல பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் கட்டுரை திருத்துவதில் செய்த தவறு பிறருக்கு தெரிய வந்து கேட்டால், அமைதியாகிவிடுவார். அப்போது அவரது முகத்தை பார்க்கவேண்டுமே?  கல்லே கூட முகத்தைப் பார்த்தால் கரைந்துவிடும். இவரது குண வழக்கங்களைப் பார்த்த மூத்த உதவி ஆசிரியர் சிம்பிளாக ஒரு வாக்கியத்தை சொன்னார். மேல இருக்கிறவன நக்கணும். கீழ இருக்கிறவனை எத்தணும். அதுதான் அவன் குணம் என்று சொல்லிவிட்டார்.  ராயப்பேட்டையில் பெரும்பாலும் பிரியாணி சாப்பிட வாங்க என்று அழைக்கும் உணவகங்கள் தான் அதிகம். அதையும் மீறி ஏதாவது உணவகம் இருக்கிறது என்றால் அது, கேரள சேட்டனின் மெஸ், அடுத்து கணேஷ் டிபன...

வீடற்றவர்கள், அகதிகளுக்காக உணவகம் தொடங்கி நடத்தும் சமையல்கலைஞர்!

படம்
  சமையல் கலைஞர் மாசிமோ பொட்டுரா உணவை வீணாக்காத சமையல்கலைஞர்!  மாசிமோ பொட்டுரா, புகழ்பெற்ற சமையல்கலைஞர். இவர் இத்தாலியில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். இவரது உணவு தயாரிப்பு என்பது, அன்று கடைக்கு வரும் காய்கறிகளைப் பொறுத்ததுதான். ஒருநாள் கோழிக்கறியும், ஆரஞ்சுப்பழங்களும் கிடைக்கிறது என்றால் அவற்றை வைத்து உணவு வகைகளை உருவாக்குகிறார்.  இந்த வகையில் உணவுப்பொருட்களை வீணாக்காமல் இருக்க  தனி உணவகங்களை தொடங்கியுள்ளார். இதன் பெயர், ரெஃபெடோரியோ அம்புரோசியானோ. உலகம் முழுக்க 13 உணவகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவற்றை உண்மையில் சூப்களை செய்யும் இடம் என்றே அழைக்கவேண்டும்.ஆனால் பொட்டுரோ அதனை அப்படி அழைப்பதில்லை.  அகதிகள், வேலையற்றவர்கள், வீடற்றவர்கள் ஆகியோருக்கு இலவச உணவுகளை தனது உணவகத்தில் வழங்கி வருகிறார். இலவசமாக கொடுத்தாலும் உணவு உண்ண வருபவர்களை கௌரவமாக நடத்தவேண்டும் என எண்ணுகிறார். தனது உணவகத்தில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களிடமும் பொட்டுரோ பொருட்களை முடிந்தளவு வீணாக்காமல் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.   “ உணவு வீணாவதை எனது பாட்டி எப்ப...

உணவுக்கான ரேஷன் தேவையா? சேட்டன் பகத்!

படம்
Giphy.com நாம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிறது. இதை எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்? நிச்சயம் அது உங்கள் கவனத்திலேயே இருக்காது. காரணம், நாம் இன்னும் வறுமை நாடாகவே இருக்கிறோம். உங்களில் வீட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வந்துவிட்டன. ஆனாலும் அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கிறீர்கள். அரசு குடிமகன்களுக்கான உணவு, உடை, வாழிடம் கொடுப்பது கடமை. இதில் கூடுதலாக மின்சாரத்தையும் சேர்க்கலாம்தானே? இவற்றை உருவாக்கிக்கொள்ளும் வேலை தந்துவிட்டால் மக்களுக்கு யாரையும் சார்ந்து நிற்க வேண்டியதில்லை. ஆனால் மக்களிடம் பிரச்னை எழுந்தால்தானே தேர்தலில் அரசியல்வாதிகள் வெல்ல முடியும்? pixabay எனவே அவர்கள் வறுமை ஒழிக்க வேலை பெற்றுத்தருவதை விட ரேஷனில் மாதம் அரிசி, காய்கறி, சர்க்கரை என வழங்குவது எளிது. நாமும் இந்த அவலத்தை மனப்பூர்வமாக ஏற்று இந்தியாவை தலைகுனிய வைக்கிறோம். அரசு வழங்கும் பொருட்களை பெறும் நிலையில் உள்ள வறுமையான குடும்பங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. ஆனாலும் நாம் ரேஷன் கார்டிலுள்ள பொருட்களை மனத்தயக்கமின்றி சென்று வாங்குகிறோமே ஏன்?  எனக்கு அரசின் இலவசப் பொருட்...