இடுகைகள்

தள்ளு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் வரவேற்பு பெற்று வரும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள்!

படம்
  ஸ்ட்ராபெர்ரி ஆங்கில நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் பழம். ஆனால் இன்று ஆங்கில காலனி நாடுகளிலும் எப்படியோ சமாளித்து இப்பழங்களை உற்பத்தி  செய்து வருகிறார்கள். அப்படித்தான் இந்தியாவில் ஜான்சி பகுதியிலும், குஜராத்திலும் கூட ஸ்ட்ராபெர்ரிக்கான சந்தை உருவாகியுள்ளது.  இதனைப்பற்றி பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இன்று இதைப்பற்றி நாம் பேசினாலும் ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் என்பது ஆங்கிலேயர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. 1884ஆம் ஆண்டு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள கொங்கணி மலைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனை அங்குள்ள சிறைவாசிகள் மூலம் தொடங்கிய ஆங்கிலேயரின் பெயர் எஸ்.எஸ். ஸ்மித்.  மனிதர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் ஒன்றுபோலத்தான். அவர்களுக்கான கலாசார விஷயங்களை உருவாக்கிக்கொண்டேதான் இருப்பார்கள். இதன் அடிப்படையில் கோவில் கட்டுவது, கலாசார மையங்களை அமைப்பது, அவர்களுக்கான தனி குடியிருப்புகளை அமைப்பது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆங்கிலேயர்களின் அனைத்து காலனி நாடுகளிலும் அவர்களின் நாட்டைப் போலவே சிறுபகுதி ஒன்று செயல்பட்டு வரும். அவர்கள் பல்வேறு