ஒப்பந்தங்கள் நிறைவடைந்ததால் ஊழியர்களை கழற்றிவிடும் பிபிஓ நிறுவனங்கள்! - பறக்குது பிங்க் ஸ்லிப்புகள்
பறக்குது பிங்க் சிலிப்புகள் – அதிகரிக்கும் வேலையிழப்புகள் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலத்தில்: ஆதித்தியா எம்எஸ், சௌம்யா மணி சென்னையைச் சேர்ந்த தொழில் அமைப்பு ஒன்று, இந்தியா முழுக்க உள்ள சிறு குறு தொழிலகங்கள் 50 சதவீதம் மூடும் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் வாடகை மற்றும் சம்பளம் தரமுடியாமல் தடுமாற்றத்தில் உள்ளன. சிறுகுறு தொழிலகங்கள் அல்லாமல், தகவல்தொடர்புத் துறை சார்ந்தும் வேலையிழப்புகள் தொடங்கியுள்ளன. திருச்சியைச் சேர்ந்த தகவல்தொடர்புத்துறை நிறுவனம் 300 பேர்களை தற்போது வேலைநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்வி டிஜிகனெக்ட் என்ற நிறுவனம், இந்த சர்ச்சையில் மாட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு கொடுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததால் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது. திடீரென வேலையை விட்டு நீக்கியதால் கோபமுற்ற தொழிலாளர்கள் விளக்கம் கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மே மாத சம்பளம் வழங்காததும், நோட்டீஸ் காலம் முடிவடைவதற்கு முன்னமே பணியாளர்களை நீக்கியதும் பணியாளர்களை கோபத்தில் தள்ளியுள்ளது. கோவிட் -19 நோய்த்தொற்று காலத்தில் திடீரென வேலைய