இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பால் உற்பத்தியில் இந்தியா சாதித்த வெற்றிக்கதை! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 கூட்டுறவு நிறுவனங்களின் வெற்றிக்கதை.  குஜராத்திலுள்ள கைரா என்ற மாவட்டமே கூட்டுறவு அமைப்பு முறையில் பால் உற்பத்தியாளர் சங்கங்களை அமைக்க முக்கிய காரணம். இதனை நிர்வாகம் செய்த கேரளத்தை பூர்வீகமாக கொண்ட வர்க்கீஸ் குரியன், ஏழை மக்களை சுரண்டிய பால் நிறுவனங்களை விரட்டியடித்தார். தற்சார்பான பொருளாதாரத்தை அமுல் நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினார். இந்தியா 75 என்ற வரிசையில் அமுலின் கதை முக்கியமானது.  இந்தியா இன்று பால் உற்பத்தி துறையில் முக்கியமான நிறுவனமாக உள்ளது. அதுவும் தனியார் நிறுவனங்களை தாண்டி வெற்றித்தடங்களை பதித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது பிஸ்கெட்டுகள், பிரெட், சாக்லெட் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது. ஆனால் இதற்கான தொடக்கம் என்பது மிக எளிமையாகவே இருந்தது.  வர்க்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல், ஹெச்எம் தலாயா தற்போதைய ஆனந்த் என்ற இடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினசரி 250 லிட்டர் பாலை கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் பெற்று விற்று வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஏகபோக நிறுவனமாக இருந்தது பாய்சன் டைரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு

வீட்டிலிருந்தே அலுவலக வேலை - கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்தே வேலை அன்புக்குரிய தோழர் இரா.முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? தங்கள் குடும்பத்தினர் நலமோடு இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எங்கள் இதழுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. வேலைகள் அனைத்தும் இணையம் சார்ந்தது என்பதால் கட்டுரைகளை எழுதிய மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும். வலி நிவாரணிகள் பற்றி படிக்க நினைத்தேன். அதற்கான நூல் கிடைத்தது. போனில் அதனைப் படித்து வருகிறேன். நேரு பற்றிய தமிழ் நூல் எழுதி வருவதைச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுதினால் போதும். சரிபார்த்து வெளியிட்டு விடலாம்.  நன்றி ச.அன்பரசு 2.4.2021 படம் பிக்சாபே

இலங்கையின் அரசியல் நிலைமையை சொல்லும் கதைகள்! கடிதங்கள்

படம்
  இலங்கை சிறுகதைகள் - உறவுப்பாலம் அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இரண்டாவது முறையாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. இப்போது நான் சென்னையிலுள்ள அறையில் இருக்கிறேன். ஊருக்கு வரவில்லை. காலைக்கதிர் அலுவலகத்தில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது. நான் உறவுப்பாலம் என்ற இலங்கை சிறுகதை தொகுப்பை படித்து முடித்தேன்.  சிங்களக்கதைகளும், ஆங்கிலக் கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்க்கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்கதைகள் தேறவில்லை. கணியம் சீனிவாசனிடம் வாங்கி வந்த இந்திய பயணக் கடிதங்கள் நூலை படித்து வருகிறேன். கடல் மார்க்கமாக  இந்தியாவுக்கு வரும் ஆங்கிலப் பெண்மணி எலிசாபே சந்தித்த அனுபவங்கள் கடிதமாக உள்ளன.  நூறு பக்கங்கள் படித்துள்ளேன். அக்களூர் ரவியின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.  நன்றி! ச.அன்பரசு 16.3.2021

பூச்சிகளின் ரத்த வேறுபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  pixabay-  பதில் சொல்லுங்க ப்ரோ? பூச்சிகளின் ரத்தம் மனிதர்களின் ரத்தம் மாதிரி இருப்பதில்லையே ஏன்? வேறுபாட்டிற்கு காரணம், நமது உடலில் உள்ள  சிவப்பணுக்கள்தான். பூச்சிகளின் உடலில் ஹீமோலிம்ப் எனும் திரவம் உள்ளது. இந்த திரவம்தான் அந்த உயிரிகளின் உடலிலுள்ள செல்களை பாதுகாக்கிறது. பூச்சிகளின் ரத்தத்தில் பெரும்பாலும் நீர்தான். கூடவே அயனிகள், கார்போஹைட்ரேட், கிளிசரால், அமினோ அமிலங்கள், நிறமிகள், செல்கள் ஆகியவை இருக்கும்.  பூச்சிகளின் உடலிலிருந்து சிவப்பு நிற திரவம் வந்தால் அது அதன் கண்களில் உள்ள சிவப்புநிறத்திலிருந்து வந்ததாக இருக்கும்.  பூச்சிகளின் ரத்தம் பொதுவாகவே வெள்ளை அல்லது பச்சையாக இருக்கும். பாலூட்டிகளின் உடலில் சிவப்பணுக்கள் மூலமாக செல்கள் உயிரோடு இருக்கின்றன. இவைதான் செல்கள் அனைத்திற்கும் ஆக்சிஜன் கிடைக்கிறது. பூச்சிகளுக்கு இப்பணியை ட்ரிச்சல் ட்யூப் என்ற உறுப்பு இப்பணியை செய்கிறது.  பூச்சிகளுக்கு என்னவிதமான நோய்கள் ஏற்படும்? அனைத்து உயிரினங்களுக்குமே பாக்டீரியம் மற்றும் வைரஸ், பூஞ்சைகள் எப்போதும் நோய்களை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளுக்கு கூடுதலாக ஒட்டுண்ணிகள் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.

ப்ளூமூன் பற்றி தெரியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  நீலநிலவு பதில் சொல்லுங்க ப்ரோ? ப்ளூமூன் என்றால் என்ன? இதற்கான விளக்கங்கள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே வருகின்றன. ஒருமுறை ப்ளூமூன் என்பதை இல்லாத ஒன்றாக கருதி பன்றிகள் பறப்பது  என கூறிவந்தனர்.  இப்போது கூறிவந்த காலம் ஆறாம் நூற்றாண்டு. பிறகு, 1883ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்த கிரகட்டாவு என்ற எரிமலை வெடித்து சாம்பல் வானில் பரவியபோது, சூரியனின் அஸ்தமனம் பச்சை நிறமாக மாறியது. அப்போது வானில் இருந்த நிலவு நீலநிறமாக மாறியது.  காட்டுத்தீ, கடுமையான பஞ்சம், எரிமலை வெடிப்பு ஆகியவை நடக்கும் போது நீலநிலவு உருவாகிறது. மாதத்தில் கூடுதலாக நாட்கள் வருவது அல்லது ஆண்டு இறுதியில் கூடுதல் நாட்கள் வருவது ஆகியவற்றின் காரணமாக நிலவின் காட்சி அதிகமாகும் வாய்ப்புள்ளது. சாதாரணமாக ஆண்டில் 12 முழுநிலவு வரும். சில அரிதான நேரங்களில் 13 வரும். மாத த்தில் வரும் இரண்டாவது முழுநிலவை நீலநிலவு என்று சொல்கிறார்கள்.  கோள்கள் வட்டமாக இருப்பது ஏன்? இதற்கு காரணம் அதன் மத்தியில் செயல்படும் ஈர்ப்புவிசைதான். கோள்கள் பொதுவாகவே திரவத்தின் தன்மையில் செயல்படும். இதனால் நெடுங்காலம்  ஈர்ப்புவிசை அதன் மீது செயல்படும்போது வடிவம் வட்டமாகிற

அதிகரித்து வரும் வெப்பம்! கடிதங்கள்

படம்
  நேரு அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. அறையில் நீர் தட்டுப்பாடு பிரச்னை வரும் என நினைக்கிறேன். புத்தக காட்சியில்  வாங்கிய இலங்கை சிறுகதைகளை படித்து வருகிறேன். 2 சிறுகதைகளை படித்துள்ளேன். தொகுப்பு மொழியாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.  நேருவின் போராட்டகால சிந்தனைகள் நூலை அடுத்து படிக்கவேண்டும். அறிவியல் மொழிபெயர்ப்பு  நேர்காணல் நூலை எழுதி அமேசானில் பதிவிட்டேன். ஓராண்டாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த பணி. இப்போதுதான் அதற்கு நேரம் கிடைத்தது. நூலை எழுதி தொகுத்து பதிவிட்டுவிட்டேன்.  நேரு பேசிய சொற்பொழிவு நூலை நடப்பு ஆண்டில் எழுதிவிட நினைத்துள்ளேன். என்னளவில் அதனை சரியாக செய்ய முயல்கிறேன். அதிர்ஷ்டம் கால் அப்பியாசம் முக்கால் என்பதுதான் நிலை. நன்றி ச.அன்பரசு 8.3.2021

வடகிழக்கு கலாசார விஷயங்களை பேசும் சிறுகதை நூல்! - கடிதங்கள்

படம்
  அசாம் அன்புள்ள நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? கடந்த சில மாதங்களாக ஷர்ட், பேண்ட் என எதையும் வாங்கவில்லை. நேற்று பேண்ட் ஒன்று வாங்கினேன். ஷர்ட் பீசாக வாங்கி தைக்கவேண்டும். தற்போது சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் லைபாக்லை ஆன்ட்டி சிறுகதைத் தொகுப்பு படித்து வருகிறேன்.  ஐந்து சிறுகதைகளை படித்திருக்கிறேன். இக்கதைகள் பழங்குடி மக்களின் பண்பாடு, வேறு இனங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், இழப்புகள் பற்றி பேசுகின்றன. பாசனின் பாட்டி சிறுகதை உணர்ச்சிகரமான கதை. வங்காளி குடும்பத்திற்கும், பழங்குடி குடும்பத்திற்குமான உறவை பேசுகிறது.  எங்கள் இதழ் வேலைகள் எப்போதும் போல நடந்துகொண்டிருக்கிறது. எழுதுவதில் வாக்கிய அமைப்பு பிரச்னை உள்ளது என அலுவலக சகா பாலபாரதி சொன்னார். எனவே, கவனமும், கருத்துமாக எழுத முயன்று வருகிறேன். வேகமாக எழுதும்போது சிலசமயம் பத்திகளிடையே தொடர்பு அற்று போகும் வாய்ப்புள்ளது.  20 நேர்காணல்களைக் கொண்ட நூல் தயார் செய்துவிட்டேன். இன்னும் சில வேலைகள் பாக்கி. தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள். உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.  நன்றி ச.அன்பரசு 3.3.2021

சூழலைக் காக்கும் பணியில் நவீன கலைஞர்கள்!

படம்
முத்துவின் வானம் -ஷில்பா கிருஷ்ணன்  ஐஐடி பாம்பேயைச் சேர்ந்தவர் பங்கஜ் ஷேக்சரியா. இவர் பேராசிரியராகவும் சூழல் சார்ந்த செயல்பாட்டாளராகவும் இருக்கிறார். இவர்  வெயிட்டிங் பார் டர்டில்ஸ் என்ற குழந்தைகள் நூலைப் படித்தார். அதில் சாம்ராட் என்ற சிறுவன், எழுதிய பல்வேறு ஆமைகளைப் பார்த்த கதையை வாசித்தார். இந்த நூலை கரடி டேல்ஸ் என்ற பெயர் கொண்ட பதிப்பகம் சென்னையில் வெளியிட்டது.  இந்த நூலைப் படிக்கும் சிறுவர்கள் கடலில் உள்ள பல்வேறு வகை ஆமைகள் மற்றும் நண்டுகளை அறிய முடியும். அந்தமானிலுள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்காக போராடி வருகிறார் பங்கஜ். அங்குள்ள ஜாரவா மக்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார். அரசுடன் போராடி நீதிமன்றத்தில் போராடி பல்வேறு ஆணைகளைப் பெற்ற கதைகளை லாஸ்ட் வேவ் என்ற பெயரில் கதையாக எழுதினார். “நீதிமன்றத்தில் பல்வேறு உத்தரவுகளை பெற்று அதனை செயல்படுத்தும் நேரம் வந்தது. அப்போதுதான் 2014 ஆம் ஆண்டில் சுனாமி வந்தது அனைத்து விஷயங்களையும் மாற்றியது’’ என்றார் பங்கஜ் ஷேக்சரியா.  முத்துவின் வானம் என்ற கதையை குக்கூ தன்னார்வ அமைப்பின் தும்பி என்ற பதிப்பகம் வழியாக வெளியாகியுள்ளது. ஜவ்வா

மனதிலுள்ள உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்கொயட் கேம்! - ஷோபா டே

படம்
  இப்போது உலகமே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஸ்கொயட் கேம்ஸ் என்ற வெப் சீரிசைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சிலர் பார்க்க முடியவில்லை என கூட வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒன்பது எபிசோடுகள் கொண்ட சீரிசை முழுமையாக பார்த்து விஷயங்களை புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கும்.  உலகம் முழுக்க 142 மில்லியன் மக்கள் இந்த வெப் தொடரை பார்த்துள்ளனர். தொடரை இயக்கிய இயக்குநர் ஹூவாங் டாங் ஹூயூக், அதனை சரியாக செய்யவேண்டுமென்ற மன அழுத்தத்தில் பற்கள் கூட விழுந்துவிட்டன என்று பேட்டியில் சொன்னார். தொடரில் ஒவ்வொரு கட்டமும் குழந்தைகளின் விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன.  உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியானது. 45.6 பில்லியன் டாலர்களை வெல்ல குழந்தைகளின் விளையாட்டை விளையாட வேண்டும். பார்த்தால் இந்தியாவின் கௌன் பனேகா குரோர்பதி விளையாட்டு நிகழ்ச்சி போல தோன்றலாம்.  போட்டியில் தோற்றால் வைல்ட்கார்ட் சுற்றெல்லாம் கிடையாது. நேரடியாக சாவுதான். வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். தோற்பவர்கள் உடனே கொல்லப்படுவார்கள். ரத்தம் சொட்டும் திரில்லர், வன்முறை, உணர்ச்சிகரமான காட்சிகளை

உறுப்புகளை இழந்தாலும் அநீதிக்கு எதிராக குரல் உயர்த்திய பாடகன்! - கடிதங்கள்

படம்
  துணிவின் பாடகன் பாந்த்சிங் அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? அறுபத்துமூவர் விழா இறுதிப்பகுதியை எட்டியிருக்கிறது. மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவில் விழா என்பதால் எப்போதும் போல கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. நோய்த்தொற்று காலத்தில் விழாவை நிறுத்தமுடியாமல் நடத்துகிறார்கள். ஏராளமான போலீஸ் நாற்புறங்களிலும் குவிந்து விட்டனர்.  துணிவின் பாடகன் பாந்த்சிங் என்ற நூலைப் படித்து வருகிறேன். 175 பக்கங்கள் படித்துவிட்டேன். இன்னும் நூறு பக்கங்கள் பாக்கியாக உள்ளது. ஜாட் சாதி வெறியர்களால் இருகைகளும், ஒரு காலும் வெட்டப்பட்டு உயிர்பிழைத்தவர் பாந்த்சிங். இவரது மூத்த மகளான பல்ஜித்தை மேல்சாதி இளைஞர்கள் பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். அதனை காவல்துறையில் பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க பாந்த்சிங் முயன்றதற்காக அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிருபமா தத் என்ற பத்திரிகையாளர் எழுதியதை கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  நீங்கள் இந்த சம்பவம் பற்றிய செய்தியை முன்னதாக நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். தெஹல்கா, டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய இதழ்கள் மட்டுமே பாந்த்சிங் பற்ற

இப்படியும் நிதியுதவிகளை பெறலாம்! - கடிதங்கள்

படம்
  நன்கொடை மிரட்டல் அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்று பிக்பஜார் கடைக்கு டீஷர்ட் வாங்க சென்றேன். வடபழனியில் தனியாக கடையை அமைத்துள்ளார்கள். துணியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு டிப்டாப் டை கட்டாத ஆட்கள் எங்களை அணுகினர். குழந்தைகள் பசியால் இறக்கின்றனர் என்பதை சொல்லி புள்ளிவிவரங்களைச் சொன்னார்கள். எதற்கு என்னால் நாங்கள் அதற்கு 5 ஆயிரம் தொடங்கி பல்லாயிரம் வரை தானம் கொடுக்கலாமாம். 500 ரூபாய் டிஷர்ட் எடுக்க வந்து ஐயாயிரம் ரூபாய் தானம் கொடுக்கும் தைரியம் எனக்கு இல்லை.  பிக் பஜார் கடையில் இதுபோல வாடிக்கையாளர்களை மிரட்டும் ஆட்கள் புதிதல்ல. இதற்கு முன்னால் வங்கி ஆட்களை உள்ளே விட்டு கிரடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள் என மிரட்டுவார்கள். இப்போது இப்படி. நேருவின் போராட்டகால சிந்தனைகளை படிக்கத் தொடங்கியுள்ளேன். மதம் பற்றிய அவரது உறுதியான சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது.  நன்றி! ச.அன்பரசு  22.3. 2021

தொழிலை தொடங்கி நடத்த நெஞ்சம் முழுக்க துணிச்சல் கொண்டவர்! - கடிதங்கள்

படம்
தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்று காலை 5.45க்கு தாம்பரம் பஸ் பிடித்தேன். கணியம் சீனிவாசன் சார் வீட்டுக்கு போவதுதான் திட்டம். சானடோரியம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிவிட்டு பஸ் டிப்போவில் ஒருமணிநேரம் உட்கார்ந்திருந்தேன். அங்கு தினசரி பேப்பர்களை வாங்கிப்படித்தேன். பிறகு, எழுந்து சாலையைக் கடந்து எதிரே தெரிந்த உணவகத்திற்கு சென்று நான்கு இட்லிகளை சாப்பிட்டேன். பிறகு, அருகில் இருந்த காய்கறிக்கடைக்கு சென்று பழங்களை வாங்கினேன்.  பிறகுதான் சீனிவாசன் சாரை அழைத்தேன். பைக்கில் வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனபோது வியன் என்ற பையன் இருந்தான். இப்போது கைக்குழந்தையோடு இயல் என்ற சிறுமியும் இருந்தாள். அந்தளவு இடைவெளி ஆகிவிட்டது. நிறைய நேரம் பேசிவிட்டு, வீட்டில் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களை படிக்க வாங்கி வந்தேன்.  ரிச்சர்ட் பிரான்சன் - என் சொக்கன் எழுதிய நூலை அவரது வீட்டிலேயே படித்துவிட்டேன். 174 பக்கம்தான். தொழில் அதிபர்களைப் பற்றி படிப்பது எப்போதும் எனக்கு பிடித்தமானது.ரிச்சர்டின் வாழ்க்கையில் அவரது

மாரடைப்பில் இறந்துபோன பேசாத தாய்மாமன்! - கடிதங்கள்

படம்
நூலகத்திற்கு நூல்களை வழங்குதல் அன்பு நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? அண்மையில் எனது தாய்மாமன்களில் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். பெரிய காரியம் காரணமாக அலைந்துகொண்டிருக்கிறேன். இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டோடு பேச்சுவார்த்தையே இல்லாதவர், கந்தசாமி மாமா.  கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். இதெல்லாம் அவரது இறந்து கிடந்த உடலைப் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. அம்மா கண் ஜாடை காட்ட, அவரது உடலை தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். விரைவில் ஆபீஸ் செல்லவேண்டும். வரச்சொல்லி அழைப்பு வந்துவிட்டது. கொரோனா காரணமாக சம்பளத்தையும் குறைத்துவிட்டார்கள். இருக்கும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.   வீட்டிலிருந்து வேலைபார்க்கும் போது தஞ்சை ப்ரகாஷ், தி.ஜானகிராமன், வர்க்கீஸ் குரியன் ஆகியோரின் நூல்களைப் படித்தேன். அதுவே மகிழ்ச்சி. திருவண்ணாமலையில் கிடைத்த நம்மாழ்வார் நூல்கள், எனது படிப்பிற்காக வாங்கிய அனிமேஷன் நூல்களை வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு கொடுத்துவிட்டேன். நிறைய நூல்களை வைத்துக

பெயரை மாற்றிக்கொள்ள தயாராகும் பேஸ்புக்!- என்ன காரணம்?

படம்
  பெயரில்  என்ன இருக்கிறது? பொதுவாக அனைவரும் இப்படி சொல்லுவார்கள். ஆனால் பிராண்ட் பெயர்களைப் பொறுத்தவரை கவனமாக தேர்வு செய்யவேண்டும். இல்லையெனில் பெயர் மக்களின் மனதில் பதியாது. வணிகமே குப்புற விழுந்துவிடும்.  ஸோமாடோ இன்று இந்திதான் தேசிய மொழி என லொள்ளு பேசும் உணவு சேவை நிறுவனம். அதன் இயக்குநர் தமிழர்களுக்கு சமூக வலைத்தளம் வழியாக சகிப்புத்தன்மை பற்றி பாடம் நடத்தியதையும் நாம் பார்த்தோம். ஸோமாடோ, 2010இல் உருவானபோது அதன்பெயர் ஃபுடிபே என பெயர் வைக்கப்பட்டது. பிறகு இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் பெயரை ஸோமாடோ என்ற பெயரை மாற்றி பிராண்டிங் செய்தனர். இப்போது வெற்றிகரமாக மக்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி பாடம் எடுக்குமளவு நிறுவனம் வளர்ந்திருக்கிறது.  நெட்பிளிக்ஸ் இன்று உலகமெங்கும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனம். இதன் வேகத்திற்கு அமேசான், டிஸ்னி கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பாரம்பரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு நெட்பிளிக்ஸ் திரைப்பட விருதுகளையும் பெற்று வருகிறது. இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிப்பி. துணை நிறுவனர் மார்க் ராண்டோல்ப் வேறு பொருத்தமான பெயர் கிடைக்கும் வரை இந்தப்

புறக்கணிக்கும் கலாசாரம்! - நமது முதுகெலும்பு உறுதியாக நேராக இருக்கிறதா?

படம்
  புறக்கணிப்பு கலாசாரம் ட்விட்டரில் பெரும்பாலான போராட்டங்கள் புறக்கணிப்போம் என்றே தொடங்கி வருகின்றன. இவற்றை பெரும்பாலும் தேசபக்தி கூட்டம்தான் முன்னெடுக்கிறது. இவற்றில் பெரிய புத்திசாலித்தனம் ஏதும் இருக்காது. கிறுக்குத்தனமாக ஒன்றை புரிந்துகொண்டு உடனே புறக்கணிப்போம், கொடி பிடிப்போம் என ஹேஷ்டேக்கை கட்டைவிரலால் அழுத்திக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட போராட்டங்களை அசலான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப ஆளும் ஒன்றிய அரசின் ஐடி விங் ஆட்கள் செய்கிறார்கள். அல்லது அப்படி செய்பவர்களுக்கு காசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள்.  இந்தியர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும் உறுப்பு, காது. அதில் கேட்கும் செய்திகளை மோசமாக பிறருக்கு சொல்ல பயன்படும் உறுப்பு வாய் என்று கூறுவார்கள். அந்த வகையில் போலிச்செய்திகளுக்கும் வெறுப்பை உண்டாக்கவும் ட்விட்டர் முக்கியமான கருவியாகிவிட்டது.  ஃபேப் இந்தியாவின் விளம்பரம் முன்னர் டாடாவின் தனிஷ்க் நிறுவனத்தின் மதமாற்றுத்திருமணத்தைப் பேசிய ஏகத்துவம் என்ற விளம்பரத்திற்கு மனது புண்பட்டுவிட்டது என ஓலங்களை எழுப்பினார்கள். விளம்பரத்திற்காக இந்த கூச்சலா என பதறிப்போன த

மரபணுமாற்ற அரிசியால் மாட்டிக்கொண்ட இந்திய அரசு!

படம்
  மரபணுமாற்ற பயிர் அண்மையில் பிரான்சில் அரிசிமாவு வணிகர், இந்தியாவிலுருந்து நொய்யரிசி 500 டன்களை வாங்கியிருக்கிறார். அதில் மரபணுமாற்ற சமாச்சாரங்கள் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த அரிசியை ஏற்றுமதி செய்தவர், மகாராஷ்டிராவை சேர்ந்த வணிகர் ஒருவர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற பொருட்களை விற்பதற்கு பயன்படுத்த தடை உள்ளது. எனவே, இந்திய வணிகர் மரபணு மாற்ற பொருட்கள் இல்லை என்று சொல்லி அதற்கான சான்றிதழை வாங்கி இணைத்துத்தான் அனுப்பியிருக்கிறார். அப்படியிருந்தும் சோதனையில் மரபணுமாற்ற பொருட்கள் சிக்கியிருக்கின்றன.  அரிசியை அரைத்து மாவாக்கி அதனை மிட்டாய், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பேக்கரி உணவுகளை தயராக்கின்றனர்.  இந்தியா அரிசி விற்பனையில் முன்னிலை வகிக்கும் நாடு. கடந்த ஆண்டு 18 டன்களுக்கு தானியங்களை விற்று 65 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. இதில் வருமானம் பெற்றுத்தந்தது பாஸ்மதி அரிசிதான். இந்த அரிசியை மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்கள் நேபாளம், வங்கதேசம், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்கின்ற

காவரி ஆற்று வெள்ளம் போல அலைபுரளும் காமம்! கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலை இப்போது முழுக்க இணையம் சார்ந்து மாறிவிட்டது. சமாளித்து செய்து வருகிறேன். கரமுண்டார் வூடு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன். கள்ளர்களுக்கும் பள்ளர்களுக்குமான பல்லாண்டு கால உறவை நாவல் பேசுகிறது. கள்ளர்களின் ஆவேசமும், கட்டற்ற காம உறவுகளும் பள்ளர்களுக்குள் உருவாக்கும் மோதல், பிரிவினை பற்றியதே நாவல். இதனை பேச்சு மொழியில் எழுதியுள்ளார் தஞ்சை ப்ரகாஷ்.  தஞ்சையில் வாழும் கள்ளர், பள்ளர் மக்களை இயக்குவதும், செயலின்மையை ஏற்படுத்துவதுமாக காமமே உள்ளது. காவிரி ஆற்றில் கட்டப்பட்ட பழமையான கரமுண்டார் வூடு அங்கு வரும் வெள்ள நீரின் தன்மைக்கு ஏற்ப தன்னை சமாளித்துக்கொண்டதா இல்லையா என்பது கூட குறியீடுதான். அடுத்து அங்கு அந்த வீட்டை தலைமை ஏற்க வரும் ஒருவனுக்காக பல்வேறு வகையிலும் காத்திருப்பது கதையை வாசிக்க வைக்கும் இடம். வயதான காலத்திலும் கரமுண்டார் ஆண் வாரிசுக்காக மனைவியின் பின்னாடியே சுற்றுவதும், உமா, உடலின் பொறுமலை சகிக்க முடியாமல் கலியனைத் தேடிப்போவதும், காத்தாயம்மா பத்தாயக்கட்டுக்குள் தன்னை இருத்தியப

கள்ளம் இல்லாத மனத்துடன் கலையை வளர்க்க முயல்பவனின் கதை! - கடிதங்கள்

படம்
  கள்ளம் -எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்பு நண்பர் முருகுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஆர்ச்சீவ்.ஆர்க் என்ற தளத்தில் பள்ளத்தாக்கு என்ற சிறுகதையைப் படித்தேன். மைதிலி என்ற பெண்ணின் சுதந்திர வாழ்கையைப் பேசுகிற கதை. தஞ்சை ப்ரகாஷின் மொழியில் பெண்கள் தைரியமாகவும், தனித்துவமாகவும் எழுந்து நிற்கிறார்கள். முக்கியமான அம்சம், மைதிலியைப் பெண் பார்க்க வரும் ஆண்கள் பற்றியது.  வர்க்கீஸ் குரியன் எழுதிய  எனக்கும் ஒரு கனவு  நூலை இரண்டாம் முறையாக படித்தேன். குரியன் போன்றவர்களின் அர்ப்பணிப்பு மீதான ஈர்ப்பு எனக்கு குறையவே இல்லை. திரிபுவன்தாஸ் படேலின் பேச்சைக் கேட்டு பணிபுரிய ஒப்புக்கொண்ட வர்க்கீஸின் முடிவு முக்கியமானது. விவசாயிகளை வலுவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் அமுலுக்கு முக்கியமான பங்குண்டு.  1950 முதல் 1988ஆம் ஆண்டுவரை மேலாளர் பதவியில் ரூ.5 ஆயிரத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு வேலை செய்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல்வாதிகளில் சுயநலமாக செயல்பட்ட ஜெகஜீவன்ராம் போன்றோரை நேரடியாகவே விமர்சித்து எழுதியிருக்கிற துணிச்சல் பாராட்டத்தக்கது. குரோடி, ஜெகஜீவன்ராம், நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோ

இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் சைக்கோ டைரி நூலை வாசிக்கலாம்! - இணைய முகவரி இதோ!

படம்
  சைக்கோ டைரி இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் சைக்கோ டைரி நூலை வாசிக்க முடியும். விருப்பமிருந்தால் தரவிறக்கலாம். இல்லையெனில் நூல் போலவே அப்படியே வாசிக்கலாம்.  நன்றி இணைய முகவரி https://ia902307.us.archive.org/3/items/the-heist/psycho%20diary.pdf

திரைப்படங்களில் உணர்ச்சிகளை உருவாக்குவது கடினமானதுதான்! - சத்யஜித்ரே நூற்றாண்டு - நேர்காணல்

படம்
  சத்யஜித்ரே நூற்றாண்டு 2021 சத்யஜித்ரே வங்காளத்தைச் சேர்ந்த முக்கியமான திரைப்பட இயக்குநர். அவரின் நூற்றாண்டை முன்னிட்டு ஆங்கில மாத இதழான பிரன்ட்லைன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணல் இது.  செஸ் பிளேயர்ஸ் படத்தில் நவாப்புகளைப் பற்றி பேசியிருப்பீர்கள். குழந்தையாக இருக்கும்போது நீங்கள் லக்னோவிலிருந்து கல்கத்தா வந்தவர். எப்படி இதனை சித்திரித்தீர்கள்? நல்லது. அங்கு நவாப்புகள் யாருமில்லை. அங்கு எனது மாமா மட்டுமே இருந்தார். அதுல்பிரசாத் சென் எனும் அவர்தான் வங்காள பாடல்களுக்கு இசையமைத்து வந்த பிரபலமான ஆள். நாங்கள் அவரின் வீட்டுக்கு அருகில் வசித்ததால், பாடல்களை உருவாக்கப்படுவதையும் உருதை நல்ல முறையில் உச்சரிப்பதையும் அறிந்திருந்தேன். லக்னோவில் உள்ள பாரம்பரிய முறையும் எனக்கு தெரிந்த ஒன்றுதான். நான் லக்னோவிற்கு நடிகை அக்தாரி பாயை பார்க்கப் போனேன். ஜல்சாகர் என்ற படத்தில் அவரை நடிக்க வைக்க கேட்கலாம் என்று யோசனை இருந்தது. அங்கு அவருடைய கணவர் வழக்குரைஞராக இருந்தார். அவரின் உடல்மொழியைப் பார்த்தேன்.எனவே அவரை நவாபாக நடிக்க வைத்தேன்.  எனவே நான் சிறுவனாக இருந்தபோத

இறுதியாத்திரை அனுபவத்தில் அப்பாவின் நினைவுகள்! - கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்றுதான் இங்கு வெயில் லேசாக அடிக்கிறது. விரைவில் சென்னை ஆபீசுக்கு வேலைக்கு வரச்சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.  அறையில் தங்கவில்லை என்றாலும் வாடகையை மாதம்தோறும் கொடுத்து வருகிறேன். அறையைத் தக்க வைக்க வேறு வழியில்லை. எம்.டி. வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலைப் படித்தேன். 130 பக்கம் கொண்ட நாவல் இது. புற்றுநோயால் இறந்துபோன அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு வரும் நான்கு மகன்களைப் பற்றிய கதை. நான்கு மகன்களின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு, அப்படி எப்படி இருந்தார் என்பதை விவரிக்கிறார் ஆசிரியர்.  கேரளம், இலங்கை என பயணிக்கும் கதையில் அனைத்து இடங்களையும் சிறப்பாக அனுபவித்து உணரும்படி எழுதியிருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், மொழிபெயர்ப்பாளரான சைலஜாதான். பொருளாதாரத்தில் முக்கியமான வார்த்தைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பான நூலில் இன்னும் நூறு பக்கங்கள் மிச்சமுள்ளன.  அம்பேத்கரின் இந்துமத தத்துவம் என்ற நூலை எடிட்டர் கே.என்.சிவராமன் பரிசாக வழங்கினார். அதன் இரு பகுதிகளைப் படித்துள்ளேன். இன

எட்கர் ஆலன்போவின் இறந்தகாலம், நிகழ்காலத்தை ஒப்பிடும் கதை! - கடிதங்கள்

படம்
  அன்பு முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா?  எட்கர் ஆலன்போவின் மம்மி பற்றிய கதையை இப்போது வாசித்தேன். இன்னும் இரண்டு கதைகள் பாக்கியாக உள்ளது. எகிப்திலிருந்து பெறப்பட்ட மம்மிக்கு மின்சாரம் அளிக்கப்பட அது பேசத் தொடங்கிவிடுகிறது. அந்தக்காலம், இந்தக்காலம் என உரையாடல் தீராத விவாதமாகிறது.  பீடிஎப் வடிவில் நிறைய கதைகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு நேரமொதுக்கி படிக்கவேண்டும். குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன் மொழிபெயர்த்த கதைகள் படித்தேன். இதில் அனைத்து கதைகளும் வாசிக்க நன்றாக இருந்தன. கார்சியா மார்க்வெஸ் எழுதிய கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை என்ற கதை நீளமானது. வாசிக்க மனம் கனக்கக் கூடியதும் கூட. ஓய்வூதியத்தை 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து வாழும் ராணுவ வீரர் ஒருவரின் கதை.  உள்நாட்டுப் போர்களால் சீரழிந்த நாட்டை உரையாடல்கள் வழியாக அறிய முடிகிறது.  தலைப்பில் அமைந்த குரங்கு வளர்க்கும் பெண், இங்கர் என்ற பெண் மீது ஒருவருக்கு ஏற்படும் காதலை  விவரிக்கிறது. இது பித்தேறிய காதல்வகை. ரேமண்ட் கார்வர் எழுதிய நகர கதைகள் சிறியவை என்றாலும் படிக்க சிறப்பானவை.  நன்றி ச.அன்பரசு 6.1.2021

அதிசயங்கள் இல்லாத மனிதரின் வாழ்க்கை கதை! கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் ஃபேஸ்புக்கில் எழுதும் பதிவுகளை படித்து வருகிறேன். அரசின் விதிகள் பற்றியும் அதன் செயலின்மை பற்றியும் பகடியாக எழுதுவது நன்றாக இருக்கிறது. வீடியோக்களைப் பார்க்கவில்லை. எழுத்துகளை மட்டுமே படித்தேன்.  எங்கள் பத்திரிகைக்கான வேலைகளை வீட்டிலிருந்தே செய்து வருகிறேன். இந்த வேலை எத்தனை நாட்கள் இருக்கும் என்று தெரியவில்லை. வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைக்கு இன்னும் உடல், மனம் இரண்டுமே பழகவில்லை.  பூனாச்சி - பெருமாள் முருகன் எழுதிய நாவலைப் படித்தேன். ஆடு தன்னுடைய பார்வையில் உலகைப் பார்த்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் நாவல் எழுதப்பட்டுள்ளது.  ஆட்டுக்கு காது குத்தி எண் பதிவது என்ற முறையில் அரசின் செயல்பாடுகளை கடுமையாக பகடி செய்கிறார் ஆசிரியர். இப்படி செல்லும் சில இடங்கள் அதிகமாக நீள்கிறதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக ஏழு குட்டிகளை ஆடு ஈன்றபிறகு அதைப்பற்றி அரசு அதிகாரிகள் கேள்வி கேட்கும் இடம். குருதேவ் எனும் பானுமதி நரசிம்மன் எழுதிய ரவிஷங்கரின் சுயசரிதையைப் படித்தேன். நூல் எளிமையாக ரவிஷங்கர் அவர்களின் வாழ்க்கையை விவரிக

புதிய துப்பறியும் விவகாரத்தை விளையாட்டுத்தனமாக கண்டுபிடிக்கும் ஆத்ரேயா! - கடிதங்கள்

படம்
  சாய் சீனிவாஸ் ஆத்ரேயா  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? கடந்த மாதம் எங்களுக்கு பாதி நாட்களிலேயே வீட்டிலேயே வேலை பார்ப்பதற்கான அனுமதியை வழங்கிவிட்டார்கள். அதற்காக சம்பளத்தை முழுக்க கொடுக்க முடியுமா? பாதிதான் கொடுத்தார்கள். இந்த மாதம் முழுக்க விடுமுறை என்று சொல்லிவிட்டார்கள்.  விஸ்வரூபம் எண்ட மூரி வீரேந்திரநாத்தின் நாவல் ஒன்றை படித்தேன்.  ராமகிருஷ்ணன் என்ற முன்னாள் ராணுவ வீரன் ஒருவனை காதலை காரணமாக காட்டி அணு ஆயுத ரகசியங்களை திருடுகிறது தாலிபன். இதைவைத்து சாரங்கபாணி என்ற விஞ்ஞானியை பயன்படுத்தி ஆயுதங்களை தயாரித்துத் தர சொல்லுகிறது. அவனையும் அவன் மனைவியை தந்திரமாக அவனே கொன்றான் என்று தடயங்களை உருவாக்கி மிரட்டுகிறது. இவற்றை ராமகிருஷ்ணன் எப்படி முறியடித்து இந்தியாவை காப்பாற்றுகிறான். தாலிபன் தீவிரவாதிகளை கொல்கிறான் என்பதுதான் கதை. 336 பக்க கதையில்  நாம் இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், டெல்லி, பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறோம். தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்.  விறுவிறுப்பான தேசபக்தி நாவல். தொடக்கத்தில் வரும் காதல் உரையாடல்கள் நன்றாக இருக்கி

முஸ்லீம்களை முழுமையாக அரசு அமைப்பு மூலம் களையெடுத்தல்! - அசாமில் பரவும் மதவாதமும் வெறுப்பு அரசியலும்!

படம்
  அசாம் நெல்லி இனப்படுகொலை அசாமில் முஸ்லீம்களின் குடியிருப்பை செப்.23 அன்று அசாம் மாநில அரசு அகற்றியது. பலவந்தமாக செய்த இந்த நடவடிக்கையால் முஸ்லீம்களோடு வங்காள இந்துகளும் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தனர். இங்கு கவனிக்கவேண்டியது அரசு, மேம்பாட்டுப் பணிகளுக்காக வீடுகளை இடித்து முஸ்லீம்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை.  பூர்விக அசாம் மக்கள் முஸ்லீம்கள் ஆற்று ஓரத்தில் குடியிருக்கும் இடங்களில் விவசாயம் செய்வார்களாம். அதற்காக நிலங்களை அரசு அவர்களுக்கு அளிக்குமாம். இப்படி சொன்னாலும் அரசு நிலங்களை பூர்விக மக்களுக்கு அதாவது தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கும் வரையில் தனது கையில்தான் வைத்திருக்கும்.  அரசு 28 வயதான மைனல் ஹாக்கிக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது காவல்துறை. இறந்து கிடக்கும் உடல் மீது புகைப்படக்கார ர் பிஜய் பனியா என்பவர் வெறியோடு குதிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி அரசின் ஆதரவோடு மதவாத, இனவெறியை அங்கு பரப்பி வருகின்றனர். எதற்கு? மக்களை பிரித்தால்தானே தேர்தலில் ஜெயிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான எதிரியை உருவாக்கவேண்டும் என்கிற நாஜி கருத்த

ஹாங்காங் திரைப்பட விழாவில் திரையிடப்படும் சில படங்கள்!

படம்
  டிரைவ் மை கார் ஹாங்காங் திரைப்பட விழாவில் இடம்பெறும் முக்கியமான படங்கள் இந்த திரைப்படவிழாவில் ஏராளமான புதிய இளைஞர்கள், கருத்து, நடிகர்கள் இடம்பெற்ற திரைப்படங்களை எதிர்பார்க்கலாம். சில படங்களைப் பார்ப்போம்.  அனிதா அனிதா 2003ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்துபோன அனிதா இம் முயி என்ற பாப் இசைக்கலைஞர்  பற்றிய திரைப்படம் இது. லூயிஸ் வாங் அனிதாவாக நடிக்கிறார். இவர் மாடல் நடிகையாக புகழ்பெற்றவர். கவாஷிமோ யோஷிகோ, மிட்நைட் ஃபிளை என்ற இரு படங்களை திரைப்பட விழாவில் அனிதாவை நினைவுகூறும்வகையில் திரையிடுகிறார்கள்.  மடலேனா எமிலி சான் என்கா என்ற இயக்குநரின் படம். இன்சோம்னியா பாதிப்பு கொண்ட டாக்சி ஓட்டுநர், வேலை செய்து தனியாக வாழும்  குழந்தையைக் கொண்ட பெண் என இருவருக்குமான உறவும் சம்பவங்களும்தான் கதை. படம் முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.  ஃபார் ஃபார் அவே ஹாங்காங் இயக்குநர் அமோஸ் எடுத்துள்ள படம் இது. டாட் 2 டாட் என்ற படம் எடுத்து புகழ்பெற்ற இயக்குநர் இவர். காகி சாம் என்ற ஐடி துறையில் வேலை செய்பவர்தான் நாயகன். அவர் செய்யும் காதல் கலாட்டாக்களில் ஐந்து பெண்கள் சிக்குகிறார்கள். சிக்கலான காதல் உறவுகளைப்

முஸ்லீம்களின் மீதான வெறுப்பை இயல்பானதாக்குகிறது பாஜக! - மனித உரிமை வழக்குரைஞர் அமான் வதூத்

படம்
  மனித உரிமைகள் வழக்குரைஞர் அமான் வதூத் முஸ்லீம்களை இப்படி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவது அரசின் மிகப்பெரிய திட்டம் என்று கூறுகிறீர்களா? ஆமாம். இது பெரிய திட்டத்தின் சிறிய பகுதிதான். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, பிற மாவட்டங்களிலிருந்து மக்கள் எதற்கு இங்கு வந்து தங்கவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இந்திய அரசியலமைப்புச்சட்டம் 19(டி, இ எஃப்) ஆகியவற்றின் படி இந்தியாவில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சென்று குடியேறி வாழலாம். அதற்கான உரிமை அம்மக்களுக்கு உண்டு.  மக்களை வெளியேற்றும்போது நான்கு மசூதிகளை இடித்தார்கள் ஆனால் அங்குள்ள கோவிலை எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறதே உண்மையா? மக்கள் கோவிலின் அருகே குடியிருந்தார்கள் என அரசு வாதிடுகிறது. ஆனால் கோவில் மக்களின் வாழிடத்திலிருந்து தூரமாகவே இருந்தது.  மக்களின் குடியிருப்புகளிலிருந்து அவர்களை வெளியேற்றிய அரசு, அவர்களுக்கான மறுவாழ்வு குடியேற்றங்களை அமைத்து தருவதாக கூறியது. ஆனால் அத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லையே? 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந

ஒன்றிய அரசின் பசிபட்டினி பற்றிய ஆவேசமும் உண்மையும்!

படம்
  பசிபட்டினி தொகுப்பு பட்டியல் 2021 யாருக்கும் தான் செய்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொடுத்தால் உடனே கோபம் வந்துவிடும். காரியம் நடந்துகொண்டிருக்கும்போதே முடிவை சொல்கிறாயே என்று ஒன்றிய அரசும் கூட பட்டினிதொகுப்பு பட்டியல் முடிவை அறிவியல் ஆதாரமே இல்லை என்று எளிமையாக கூறிவிட்டது.  மொத்தம் 116 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா இப்போது 101 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்த தற்கே எல்லாம் எங்கள் கட்சி பிரதமரின் உழைப்பால் வந்தது என கட்சி தொண்டர்கள், ஐடி விங்குகள், சமூகவலைத்தள விளக்குகள் கொண்டாடிக்கொண்டு உள்ளனர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இப்படி சமாளிப்பு பதில் சொல்வது இத்தோடு நிற்காது. எளிதாக வணிகம் செய்வதற்கான பட்டியலிலும் தடுமாற்றம், பத்திரிகை ஜனநாயக பட்டியலிலும் பின்னடைவு, எகனாமிஸ்ட் பத்திரிகை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா குறைத்தே கணக்கு காட்டுகிறது எனசெய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளையும் தவறு என சுட்டிக்காட்டவேண்டிய தேவையும் அவசியமும் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  பட்டினிப் பட்டியலை எடுக்க முக்கியமான அம்சங்கள் சில உள்ளன.

சீக்கிய மதத்தைப் பாதுகாக்கும் ராணுவப்படை நிகாங்குகள்!

படம்
  கடந்த வெள்ளிக்கிழமை அன்று, விவசாயிகள் போராட்டத்தில் 35 வயதான தலித் ஒருவரை நிகாங்க்  ஆட்கள் கோரமாக வெட்டிக்கொன்றனர். எதற்கு இந்தக்கொலை என்றபோது, சீக்கியர்களின் நூல்களை மதிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு நிகாங்குகள் உதவி சப் இன்ஸ்பெக்டரின் கையை சீவி எறிந்தனர். பொதுமுடக்க காலத்தில் விதிகளை பின்பற்ற முடியாது என நிகாங்குகள் கூறியதன் காரணமாக நடந்த தாக்குதல் இது.  நீலநிற உடை, அலங்கார தலைப்பாகை, வாள், இன்னும் பிற ஆயுதங்களைக் கொண்ட படையை நிகாங் என்கிறார்கள். 1699ஆம்ஆண்டு குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது நிகாங் படை. இவர்களின் பெயருக்கு சமஸ்கிருதத்தில், பயமில்லாத உலகத்தில் லாப நஷ்டம் பற்றி கவலைப்படாதவர்கள் என்று அர்த்தம்.  பாபா புத்தா தல், தமா தல், தர்னா தல் என மூன்று பிரிவாக நிகாங்குகள் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றனர். பஞ்சாப்பில் நிகாங்குகளின் குழு 30க்கும் மேலாக சிறியதும் பெரியதுமாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.  நாடோடிகளாக அங்கும் இங்கும் அலைவதால் நிகாங்குகளின் எண்ணிக்கையை முழுவதுமாக கணக்கிடமுடியவில்லை. சீக்கியர்களின் விழாக்களில் தற்காப்புக்கலைகளையும், குத

ஆபீசிற்கான பொருட்களை வாங்கவேண்டாமா?

படம்
  ஹெக்டார் லேப்டாப் பேக் மேக்புக் ஏர், டெல் எக்ஸ்பிஎஸ் 13 என்ற இரு கணினி வகைகளை உள்ளே வைக்கும் விதமாக பையை வடிவமைத்திருக்கிறார்கள். தோல்பை என்பதால் அழகாக இருக்கிறது. பேனா, பென்சில், அண்ணாச்சி கடையில் வாங்கிய பில்லைக் கூட  நிறைய ஜிப்களைத் திறந்து பைகளில் வைத்துக்கொள்ளலாம்.  பழசாகும்போது இன்னும் அழகான பையாக மாறும் வாய்ப்பிருக்கிறது.  விலை ரூ.24, 500 லாகிடெக் எம் எக்ஸ் எர்கோனாமிக் மவுஸ் அசல் எலி என நினைப்பீர்கள். வடிவமைப்பு எலி குனிந்து உட்கார்ந்து எதையோ கொறிப்பது போல உருவாக்கியிருக்கிறார்கள். செயல்பாடு அனைத்து கருவிகளிலும் இணைத்து பணிபுரியும்படி இருக்கிறது. நீண்டநேரம் மவுசைப் பிடித்து வேலை செய்தாலும் மணிக்கட்டு வலிக்காது என்கிறார்கள். விலை 9300. லாகிடெக் வயர்லெஸ் கீபோர்டு ஆப்பிள், ஆண்ட்ராய்ட், விண்டோஸ், குரோம் ஓஎஸ்சில் கூட இதனை வைத்து வேலை செய்ய முடியும். நன்றாக உள்ளது. கைகளுக்கு உறுத்தலாக இல்லாமல் பணி செய்ய உதவும்.  லாகிடெக் காம்போ டச் பார் ஐபேட் புரோ லாகிடெக் பற்றியே நிறைய எழுத காரணம், அந்தளவு புதிதாக ஏதாவது செய்கிறார்கள் என்பதுதான். ஐபேட் புரோவுக்கான பொருள்தான். பயன்படுத்தினால் மேக் ப

முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

படம்
  அமான் வதூத் மனித உரிமை வழக்குரைஞர் செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள்.  ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள்.  இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவி