கல்வியின் ஒளிக்கீற்று
கல்வியின் ஒளிக்கீற்று அசாம் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் மக்களின் பங்களிப்போடு செயல்பட்டுவரும் கல்விக்கூடம் இலவச கல்வியை 500 குழந்தைகளுக்கு வழங்கிவருகிறது. ப்ரசாந்தா மஜூம்தார் தமிழில்: வின்சென்ட் காபோ 12 ஆண்டுகளுக்கு முன்பு அசாம் - மேகாலயா எல்லையிலுள்ள பமோகி எனும் பழங்குடிமக்கள் வாழும் கிராமத்தில், 27 வயதான அறிவியல் பட்டதாரியான உத்தம் தெரோன் தம் மக்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை கூறியபோது, அவரது நண்பர்களின் கேலிச்சிரிப்பில் கிராமமே அதிர்ந்தது. தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த தெரோன் கைவிடப்பட்ட மாட்டுக்கொட்டகை ஒன்றினை வகுப்பாகக்கொண்டு நான்கு மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கத்தொடங்கினார். இன்று 500 க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளிலிருந்து இளம்வயதினர் வரை தோராயமாக இவரது பரிஜித் அகாதெமி மூலம் 100% கல்வி அறிவினைப் பெற பெருமையோடு பயணித்துக்கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் மோகியிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பழங்குடி குக்கிராமங்களிலிருந்தும் தெரோன் பள்ளிக்கு கல்வி கற்க வருகிறார்கள். பள்ளியின் நோக்கம் குறித்து தெரோன் கூறுகையில், அடித்தட்டு மக்