இடுகைகள்

நகரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

படம்
  20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார்.  மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப்பு என்பத

தெரிஞ்சுக்கோ - நகரங்கள்

படம்
  தெரிஞ்சுக்கோ இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில்,   பதிமூன்று ஆறுகள் ஓடுகின்றன. இந்த நகரம் ஆண்டுக்கு 1-15 செ.மீ என்ற அளவில் கீழே முழுகிக்கொண்டு இருக்கிறது. 1966-1987 காலகட்டத்தில் ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜாவிக் நகரில் வியாழக்கிழமை டிவி பார்ப்பதற்கு தடை இருந்தது. சீனாவில்31.18 பெய்ஜிங் நகரில் 699.3 கி.மீ. தொலைவுக்கு இருப்பு பாதையும், 405 ரயில் நிலையங்களும் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் மூன்று தலைநகரங்கள் உண்டு. பிரிடொரியா, நாட்டின் தலைநகர். கேப் டவுன், சட்டம் இயற்றப்படும் நகரம், பிளோம்ஃபான்டெய்ன், நீதிமன்றம் இயங்குவதற்கானது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில்   900 தேவாலயங்கள் உள்ளன. மங்கோலியாவின் உலானபாட்டர் நகரில் பதிவான தோராய ஆண்டு வெப்பநிலை -1.3 டிகிரி செல்சியஸ். 1801-1821 காலகட்டம் வரையில் தென் அமெரிக்காவின் ரியோ டி ஜெனிரோ போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகராக செயல்பட்டது. அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ் image - pinterest

மக்கள்தொகை பெருகிய உலக நாடுகளின் நகரங்கள்!

படம்
    அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்கள் டோக்கியோ ஜப்பான் 37.34 மில்லியன் நாட்டின் முக்கியமான பொருளாதார அரசியல் தலைநகரம். பிறப்பு சதவீதம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள்தொகை பெருக்கம் என்ற அந்தஸ்தை 2030இல் இழக்க வாய்ப்புள்ளது. டெல்லி இந்தியா 31.18 மில்லியன் முகலாயர்களின் கட்டுமானங்களைக் கொண்ட பழைய நகரம்.   பெயர்களை மாற்றி வைத்தாலும் வரலாற்றை அழிக்க முடியாது அல்லவா?   தொன்மைக் காலத்தில் இருந்தே அரசின் அதிகாரத் தலைநகரம். ஷாங்காய் சீனா 27.80 மில்லியன் சீனாவின் வணிகம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் இந்த நகரில்தான் நடைபெறுகின்றன. விண் முட்டும் கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள் என கட்டுமானங்களுக்கு, வணிகத்திற்கு பெயர் பெற்ற நகரம். சாவோ பாலோ பிரேசில் 22.24 மில்லியன் புனிதர் பாலின் பெயர் வைக்கப்பட்ட நகரம். இங்கு 111 இனக்குழுக்கள் வசிக்கின்றனர். மெக்சிகோ சிட்டி மெக்சிகோ 21.92 மில்லியன் சியரா மாட்ரே மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள நகரம்.   கடலுக்கு மேலே 2,240 மீட்டர் உயரத்தில் உள்ளது.   டாக்கா வங்கதேசம் 21.74 மில்லியன் கங்கை ஆற்றுப்பகுதியில் அமைந்த

தனியே தன்னந்தனியே.... கடிதங்கள் - கதிரவன்

படம்
  28.2.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  எப்படி இருக்கிறீர்கள்? நான் புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்களை இன்னும் படிக்கவில்லை. இப்போதுதான் சுப்ரதோ பக்ஷியை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் இருந்து ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி வெளியேறிவிட்டார். அதாவது, வேறு உயர்ந்த சம்பளம் கொண்ட வேலைக்குப் போகிறார். நான் அவருடன் சில மாதங்களாக பேசுவதில்லை. இறுதியாக இன்று வாழ்த்துச் செய்தி மட்டுமே அனுப்பினேன். நான் ஆபீசில் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியவர் அவர். அவர் கவனித்த பக்கங்களை பார்த்துக்கொள்ள புதிய உதவி ஆசிரியர் வருவார். அல்லது இப்போதுள்ள உதவி ஆசிரியர்களே பகிர்ந்துகொள்ளவேண்டும்.  நேற்று குரூப் மலையாளப் படத்தை பார்க்கத் தொடங்கினேன். படத்தை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். இன்னும் முழுதாக பார்க்கவில்லை.  வீட்டில் அம்மாவுக்கு தைராய்டு பிரச்னை தொடங்கிவிட்டது. அதற்கான மருந்தை அவள் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு வருகிறாள். ஊரில் இருந்து ஈரோடு டவுனில் தனியாக வீடு எடுத்து தங்குவாள் என நினைக்கிறேன். இனி அப்பா கிராமத்தில் சௌகரியமாக இருப்பா

விரைவில் வருகிறது ஸ்மார்ட்சிட்டி! - முழுமையாக நகரங்களைக் கண்காணிக்கும் ஒன்றிய அரசு!

படம்
  ஸ்மார்ட்சிட்டியை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மையங்கள் மொத்தம் 100 ஐ அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் 80 மையங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மீதியுள்ளவை ஆகஸ்ட் 15 அன்று நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அண்மையில் ஸ்மார்ட்சிட்டிகளுக்கான மாநாடு சூரத்தில் ஏப்.18 - 19 என இரு நாட்கள் நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன சமாச்சாரங்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறினார்.  ஸ்மார்ட்சிட்டி திட்டம் 100 நகரங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. இவற்றில் தற்சார்பான பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு செய்யவிருக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டம் 2015ஆம் ஆண்டு  ஜூன் 25 அன்று தொடங்கியது.  நகரங்களில் நடப்பதற்கான பிளாட்பாரங்கள், சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதைகள், போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை ஸ்மார்ட்சிட்டி திட்டங்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  நகரை புனரமைப்பது, பசுமை பரப்பை அதிகரிப்பது, நிலப்பரப்பு சார்ந்த அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இதில் முக்கியமான அம்சங்கள்.  கட்டுப்பாட்டு மையங்க

செவ்வாயில் புத்தம் புதிய நகரம்!

படம்
  செவ்வாயில் புத்தம் புதிய நகரம்! செவ்வாயில் மக்களை குடியமர்த்துவதற்கான நகரத்தை அமைக்க சீனா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.  அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹோம் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2117ஆம் ஆண்டில் அங்கு நகரம் அமைப்பதற்கான திட்டத்தை அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்குப்பிறகு சீனாவின் தியான்வென் 1 என்ற விண்கலம் செவ்வாய்க்கு அங்குள்ள சூழல்களை ஆராய அனுப்பி வைக்கப்பட்டது. மூன்றாவதாக, அமெரிக்க நாசாவின் பெர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாயிலுள்ள வேதியியல் பொருட்களைப் பற்றி ஆராய அனுப்பி வைக்கப்பட்டது.  உலக நாடுகளிடையே செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் சங்கம் என்ற அமைப்பு, செவ்வாயில் நகரத்தை அமைப்பதற்கான திட்டங்களை அனுப்பி வைக்க கோரியது. இதற்காக, உலக நாடுகளிலிருந்து 175 குழுக்கள் நகர வடிவமைப்பு திட்டங்களை அனுப்பி வைத்துள்ளன. இதில் பங்கேற்ற சோனெட் எனும் குழுவின் திட்டத்தைப் பார்ப்போம். .நுவா நகரம் எனும் இத்திட்டப்படி செவ்வாயில் நிலத்திற்கு கீழே வீடுகள

மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

படம்
  மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும்.  சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை.  இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார்.  குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும்.  பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர்

படித்த பெண்ணால் களேபரமாகும் கல்யாணம்! - வேரோட்டம் - கு.ப.ரா

படம்
  வேரோட்டம்  முற்றுப்பெறாத குறுநாவல் கு.ப.ராஜகோபாலன் சென்னையில் கல்லூரியில் படிக்கும் திருவெழுந்தூர் பையனும், தஞ்சாவூர் பெண்ணும் காதல் வலையில் விழுகிறார்கள். இருவருமே பிராமணர்கள்தான். ஆனால் திருமணம் செய்வதில் பிரச்னை எழுகிறது. அதனை இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை.  சந்திரசேகரன், கல்லூரியில் புகழ்பெற்ற ஆள். போட்டிகளில் கலந்துகொள்வது, படிப்பது என அனைத்திலும் முன்னணியில் நிற்பவன். அவன் மீது காதல் வயப்படும் பெண்களை அவன் பெரிதாக மதிப்பது கிடையாது. அப்படியிருந்தும் லலிதா என்ற பெண் அவன் போகும் இடமெல்லாம் வந்து என்னைப் பாரேன், என் அழகைப் பாரேன் என்று மௌனமாக மிரட்டுகிறாள்.  லலிதாவைப் பொறுத்தவரை கல்லூரில் உள்ள பெரும்பாலான ஆட்கள் தனது அழகுக்கு ரசிகர்களாக இருப்பதில் பெருமை. ஆனால் சந்திரசேகரன் இவளை கண்டுகொள்ளவே இல்லை என்றதும் அவளது ஈகோ காயம்படுகிறது. அப்படியென்ன அவனுக்கு ஆணவம் என அவனைப் பின்தொடர்கிறாள். இப்படி நாம் இருவரின் மனவோட்டத்தை புரிந்துகொள்வது கதாபாத்திரங்களில் பெயர்கள், அதற்குப்பிறகு மனவோட்டம் என எழுதப்பட்டுள்ளது.  தஞ்சாவூர், திருவெழுந்தூர் கல்யாண பஞ்சாயத்துகள் கடித வடிவில்

அமைச்சரை கொலைசெய்த பழியில் மாட்டிக்கொள்ளும் காமெடி குண்டர்கள்! - ஜாதி ரத்னாலு - அனுதீப்

படம்
              ஜாதி ரத்னாலு  Director: Anudeep KV Produced by: Nag Ashwin Writer(s): Anudeep KV     ஏஜெண்ட் சாய் ஶ்ரீனிவாசா படத்திற்கு பிறகு நவீன் பொலிசெட்டி தெலுங்கில் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுத்துள்ள படம்தான் ஜாதி ரத்னாலு.  ஜோகிபேட்டில் மது, சூது என அனைத்து போங்குத்தனங்களிலும் ஈடுபடும் மூன்று நண்பர்கள் திடீரென வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என நினைத்து ஹைதராபாத் கிளம்புகிறார்கள். அங்கு நேரும் காமெடி களேபரங்களே கதை.    ஶ்ரீகாந்த் லேடீஸ் எம்போரியத்தில் இளம் முதலாளியாக ஶ்ரீகாந்த், ஊரில் யாரும் அவரை பெரிதாக மதிப்பதில்லை. பெண்களுக்கு எந்த சேலைக்கு எந்த வளையல் மேட்சிங் என்று சொல்வதில் புகழ்பெற்றவன். ஆனால் இந்த புகழ் பெண்கள் வேடத்தில் நடிப்பதற்கும், அவர்களுக்கு கல்யாணத்திற்கும் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு சரியான உடைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும்தான் உதவுகிறது. ஆனால் அவருக்கென காதல் மனைவி கிடைக்க  ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் பயனில்லை. அடுத்து சேகர், பிறக்கும்போது வீட்டில் அரிசி குக்கர் விசிலடிக்கும்போது பிறந்தவன். அவன் நினைப்பு எப்போதுமே சோறு, அதற்கு குழம்பு, கூட்டு, பொரியல் என்ன வ

டென்மார்க்கை தோற்கடிக்க நினைக்கும் பாரிஸ்! - சைக்கிள் சவால்!

படம்
giphy.com சைக்கிள் சொர்க்கம் பாரிஸ்! 1980 களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட சைக்கிள் இன்று பாரிசில் அபரிமிதமாக பெருகியுள்ளன. காரணம், அரசு சூழலுக்கு ஏற்றபடி தன் சட்டங்களை மாற்றி வருவதும். அதற்கேற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இசைவாக இருப்பதும்தான். கடந்தாண்டு செப்டம்பர் 2018 முதல் நடப்பாண்டு 2019 வரையில் மட்டும் சைக்கிள்களின் 54 சதவீத த்திற்கும் அதிகமாகியுள்ளது. அரசு பல்வேறு இடங்களில் சைக்கிள்களை ஷேரிங் செய்வதற்கான வசதிகளைக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் சைக்கிள் சதவீதம் 62 ஆக உள்ளது. அந்த அளவை எட்ட இன்னும் மக்கள் சைக்கிள் மீது பாசம் காட்டி லட்சுமி, செல்லம்மா என செல்லம் கொஞ்ச வேண்டும். அவ்வளவேதான். ”இப்போது சைக்கிள் ஓட்டுபவர்களைப் பார்த்தால் உங்களுக்கு மாற்றம் நடந்திருப்பதுபோல தோன்றலாம். உண்மையில் காரில் செல்பவர்கள் யாரும் சைக்கிளை அதற்கு மாற்றாக எடுக்கவில்லை. எப்போதும்போல பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவர்கள்தான் சைக்கிளை கையில் எடுத்துள்ளார்கள். பிறரும் தங்களுக்கு ஏற்ற மாசு குறைவான வழியை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருவர் மட்டும்

தமிழகத்தில் பரவும் அகிரா மியாவகி வகை காடுகள்!

படம்
நகரில் வளர்க்கலாம் காட்டை! நகரில் லூயிஸ் பிலிப் சட்டை போட்டு ஆபீஸ் செல்லும் அனைவரின் மனதிலும் காட்டைப் பற்றிய எண்ணம் ரகசியமாக இருக்கும். காரணம் நாம் அங்கிருந்து வந்தவர்கள்தானே? இதன்காரணமாகவே நாம் பழுப்பை விட பச்சையை விரும்புகிறோம். வயல்வெளியைப் பார்த்தால் ஒருகணம் திடுக்கிட்டு நின்றுவிடுகிறோம். ஆனால் நகரத்தில் எங்கே பசுமையைக் காண? அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் துவக்கம் குழுவினர். ஜப்பானைச்  சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகியின் டெக்னிக்தான் நகரங்களில் கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகளை உருவாக்குவது. இதனை கையில் எடுத்து குரோம்பேட்டையிலுள்ள ஜெயின் பள்ளியில் மினி காட்டை உருவாக்கிக் காட்டினர். சென்னையில் தண்ணீர் கிடையாது. இந்த லட்சணத்தில் எப்படி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது? என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதில் உள்ளது. நம்மோடு பேசிக்கொண்டே அவருக்கு வந்த 40 போன்கால்களையும் பேசிச் சமாளிக்கிறார். அடுத்த கோடைக்குள் மரங்களை உருவாக்கும் வேகத்தில் மக்கள் உள்ளனர். இம்முறையில் நாங்கள் அனைத்து வகை மரக்கன்றுகளையும் ஒன்றாகவே விதைக்கிறோம். இது அசப்பில் காடுபோன்ற டெக்னிக்தான். இடம்தான்