ஒழுக்கம் போதித்தால் குழந்தைகளின் மனம் என்னவாக மாறுகிறது? - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஒழுக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு அரசியல் மற்றும் தொழில்துறை சார்ந்து ஒழுக்கம் என்பது முக்கியமானது. தற்போதையை சமூக அடிப்படையிலும் உளவியல் ரீதியாகவும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. ஒழுக்கம் என்பதை ஒருவர் கடைபிடித்தால் செயலின் இறுதியில் முடிவு எளிதாக கிடைத்துவிடும். இப்படிக் கிடைக்கும் முடிவு எளிதாக இருந்தாலும் இதற்கான அர்த்தம் என்பதை கவனிக்க வேண்டும். அதில்தான் பிரச்னை உள்ளது. ஒழுக்கம் மூலம் முடிவு கிடைத்தாலும் அர்த்தம் என்பதே செயலின் முடிவைத் தீர்மானிக்கிறது. ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில் உள்ள ஆபத்துகளில் ஒன்று, மனிதர்களை விட அமைப்பு முறை முக்கியத்துவம் பெற்றுவிடுவதுதான். ஒழுக்கத்தை பின்பற்றுபவர்களின் இதயம், அன்பை இழந்து வெறுமையாகிவிடும். சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் காரணமாக வருவ தில்லை. சுதந்திரம் என்பது ஒருவர் தன் வாழ்வில் இறுதியாக அடையும் லட்சியம் அல்லது குறிக்கோள் அல்ல. வாழ்வில் சாதிக்க நினைக்க தொலைவில் உள்ள லட்சியம் என சுதந்திரத்தை நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. சுதந்திரம் என்பது ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளும் பாராட்டு சான்றிதழ் அல்லது பிறர் புகழ்ந்து பேசும் வார்த்த