இடுகைகள்

மேலாதிக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன்முறைப் போராட்டத்திற்கான மூல காரணம்!

      வன்முறையைக் கொண்டாடும் திரைப்படங்கள் உலகமெங்கும் உண்டு. ஆங்கிலத்தில் வந்த திரைப்படங்களை அடியொற்றி இப்போது இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட அத்தகைய படங்களை உள்ளூர் மொழிகளில் உருவாக்குகிறார்கள். பழிவாங்குவதை, தங்கத்தின் மீது கொண்ட பேராசையை தாயின் கனவு, அண்ணனின் லட்சியம், தம்பியின் வாழ்க்கை என ஏதோ கதை சொல்லி கோடரி, கத்தி, வாள், துப்பாக்கி என பயன்படுத்தி ரத்தம் தெறிக்க கொல்கிறார்கள். இதில் புராண கோட்டிங் அடித்து தாழ்த்தப்பட்ட மனிதர்களைக் கொன்று அவர்கள் மீது சிறுநீர் கழிப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில்லை. பார்ப்பனன் தொந்தி வைத்துக்கொண்டு விளையாட்டை விளையாடுகிறான் என்பதை எதிர்க்கட்சிக்காரர் கூறிவிட்டார் என அதை ஊடகங்கள் ஊதிவிட்டு வெறுப்பை வளர்த்து வருகின்றன. இங்கு இறப்பவன் யார், அவனுக்கு சமூகத்தில் என்ன அந்தஸ்து, என்ன மதத்தைக் கடைபிடிக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்தே அவன் சாவுக்கான சமதர்ம நீதி தீர்மானிக்கப்படுகிறது. இப்படியான நிலப்பரப்பில் நாம் வன்முறையை கையில் எடுப்பதைப் பற்றி பேசுகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனன், அவனுடைய ஆதரவு பெற்ற பொறுக்கித்தின்னும் இடைநிலை ச...

மக்கள் அதிகார அமைப்புகளில், அதிகார பரவலாக்கம்!

படம்
  ஒரு அமைப்பை குறிப்பிட்ட கட்டமைப்பில் உருவாக்கினால், அதை எதிர்பார்த்தபடி பயன்படுத்திக்கொள்ளலாம். சரிதான். ஆனால், மக்கள் அதிகார அமைப்புகளைப் பொறுத்தவரை, அவை குறிப்பிட்ட முறையில் கட்டமைக்கப்படுவதில்லை. அங்கு நடக்கும் தகவல்தொடர்புகளும் கூட தனித்துவம் கொண்டவை. ஆட்களை ஒருங்கிணைப்பது, உரையாடுவது, குறிப்பிட்ட பணிகளை செய்வது அனைத்துமே பிற தன்னார்வ, தனியார் நிறுவனங்கள், அமைப்புகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக, மக்கள் அதிகார அமைப்புகளில் கண்காணிப்பு என்பது இருக்காது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கும் சென்றாலும் உங்களை யாரோ ஒருவர் கண்காணிப்பார். ஆசிரியர், பேராசிரியர் அல்லது கல்லூரி முதல்வர், நிறுவன முதலாளி, கண்காணிப்பு கேமரா பிரிவு என ஏதாவது ஒரு நச்சு இருக்கும். இப்படியான கண்காணிப்பு ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதாகும். இதை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் செய்வதில்லை. புக்சின், பாகுனின், ஃப்ரீமன் என பல முன்னோடி தத்துவவியலாளர்கள் இதைப்பற்றி கூறியிருந்தாலும் கூட நடைமுறையில், கண்காணிப்பை செய்வது கடினமான ஒன்று. இதுபோன்ற அமைப்புகளில் உருவாகும் உறவுகள் நீர்போன்ற இலகுவான தன்மை கொண்டவை. ...

சமூக மாற்றங்களை அடிப்படையாக கொண்ட புரட்சி போராட்டம்!

      மக்கள் அதிகார தத்துவத்தில் கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டவர்களும் உண்டு. அதில் நம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு. இதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். சமூகத்தில் உள்ள செல்வம், விடுதலை, நீதி, நலவாழ்வு அனைத்து மக்களுக்கும் புறக்கணிப்பின்றி கிடைக்கவேண்டுமென கம்யூனிச தத்துவம் வலியுறுத்துகிறது. இதில் நம்பிக்கை இல்லாதவர்களை தனித்துவவாதிகள் என்று கூறலாம். அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசு என்பது ஆக்கிரமிப்பு உணர்வு கொண்டது. மக்களை அழுத்தி நசுக்குவது, அநீதியை அடிப்படையாக கொண்டது என ஒப்புக்கொள்வர். தனிமனித வளர்ச்சியை அரசு அழித்தொழிக்கிறது. ஒரு சமூகத்தில் மனிதர்கள் மீது எந்த வித அழுத்தமும் உந்துதலும் இருக்கக்கூடாது. எனவே, அடிப்படையாக அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசை ஒழிப்பது என்ற கருத்தில் ஒன்றுபடுகிறார்கள். மியூசுவலிஸ்ட் என்ற பிரிவினர், மக்கள் அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள், அரசு என்ற அமைப்பை அடியோடு அறவே ஒழிக்க நினைப்பவர்கள். பிரெஞ்சு தத்துவவாதி ப்ரவுட்தோன் என்பவரை பின்பற்றுகிறார்கள். அரசு இல்லாத அமைப்பில் லாபநோக்கு இருக்காது என்பவர்கள். வட்டி இல்லாத கடன்...

சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம்?

படம்
              அடிப்படையில் ஒரு மனிதர் வேலை செய்து ஒன்றை உருவாக்குகிறார். அதை அவர் முழுக்க சமூகத்தின் உதவியின்றி உருவாக்கினார் என்று கூற முடியாது அல்லவா? அப்படி உருவாக்கியது சமூகத்தைச் சேர்ந்தது. அதை தனது சொத்து என கூறக்கூடாது. எனவே, அப்படி உருவாக்கிய பொருள் சமூகத்திற்கான சொத்து. நூல், வைரம், உடை ஆகியவற்றை உருவாக்கியவர்களுக்கு முக்கியமானதாக மதிப்புக்குரியதாக தோன்றலாம். மற்றவர்களுக்கு அதில் மதிப்பு இருக்காமல் இருக்கலாம். பசி நேரத்தில் ஒற்றை ரொட்டித்துண்டின் மதிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்? வைரமோ, தங்கத்தைவிட அதிகமாகத்தானே? பத்து ரொட்டிப் பாக்கெட்டுகளை இரண்டுபேர் வாங்க காத்திருக்கிறார்கள். எனில், அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. இரண்டு பாக்கெட்டுகளுக்கு பத்துபேர் காத்திருந்தால் விலை அதிகரிக்கும். இதெல்லாம் விநியோகம், தேவையை அடிப்படையாக கொண்ட கணக்கு. ஒருவரின் உழைப்பை எளிதில் கணக்கிட்டுவிட முடியாது.அதற்கான அளவுகோலை பாரபட்சமில்லாமல் உருவாக்குவது எளிதான காரியமல்ல. லாபம், அதீத லாபம், குறைந்த கூலி என பாதையில் வேகமெடுத்தால் அதுதான் முதலாளித்துவப்பாதை. அங்கு, குறைந...

கிழக்காசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குக்கர் பெண்களின் வாழ்க்கையை மாற்றியதா?

படம்
      1962ஆம் ஆண்டு, கணவர் தனது மனைவிக்காக பிரஷர் குக்கர் ஒன்றை வாங்குகிறார். இதைப் பார்த்து அருகிலுள்ள வீட்டுக்காரரும் குக்கர் ஒன்றை வாங்கி மனைவிக்கு கொடுக்கிறார். குக்கரை வாங்கிக் கொடுப்பது, மனைவில் அதை வைத்து வேகமாக சமையல் செய்துவிட்டால் வெளியில் வேலைக்கு செல்லலாம் என கணவர் எதிர்பார்க்கிறார். சமையல் வேலையை செய்துவிட்டு வெளியில் செல்லும் இருவரின் மனைவிகளும் தாங்கள் சந்திக்கும் ஆண்களிடம் காதலில் வீழ்கிறார்கள். இன் தி மூட் ஃபார் லவ் என்ற புகழ்பெற்ற படத்தின் காட்சிகள் மேலேயுள்ளவை. திரைப்படத்தின் கதை ஹாங்காங்கில் நடந்தது. ஆசியாவில் நடந்த முக்கிய கண்டுபிடிப்புகளி்ல ஒன்று, பிரஷ்ர் குக்கர் கண்டுபிடிப்பு. இதன்மூலம் பெண்கள் சமையல் வேலையிலிருந்து சற்றே விடுபட்டு வேலைக்கு செல்ல முடிந்தது. ஒவ்வொரு வேளைக்கும் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள், குக்கர் வழியாக  ஒரே நேரத்தில் சமைத்து இறக்கிவைத்துவிட முடிந்தது. இன் தி மூட் ஃபார் லவ் படத்தின் இயக்குநர், வாங் கர் வாய் மேற்சொன்ன கருத்தை கூறியிருந்தார். ஆல் வி இமேஜின் ஏஸ் லைட் என்ற திரைப்படத்தை இயக்குநர் பாயல் கபாடியா என்பவர் இயக்கியிருந்த...

அரசுக்கும், டெக் நிறுவனங்களுக்குமான மேலாதிக்க போட்டி!

படம்
          அதிகாரப் பந்தயம் - அரசு, சமூக வலைத்தளங்களின் மேலாதிக்க மோதல் போக்கு! இணையத்தில் உள்ள பல்வேறு சமூக வலைத்தளங்கள் மீது நெருக்கடிகள் திணிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் குறுஞ்செய்தி நிறுவனத்தின் தலைவர் பாவெல் மீது குற்றச்சாட்டு பதிவாக, அவர் பிரான்சில் கைதானார். பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைத்தளம் நீதிமன்ற பிரதிநிதியை நியமிக்காத காரணத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மெட்டா நிறுவனம், பைடன் ஹாரிஸ் ஆகியோரின் நிர்வாகத்தால் சமூக வலைத்தள தணிக்கையை செய்யுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது. டெலிகிராம் நிறுவனம், போதைப்பொருட்கள் கடத்தல், சட்டவிரோத பரிவர்த்தனைகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், ஆபாச வீடியோக்கள் பகிரல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. இதுபற்றிய தகவல்களை அரசு அமைப்புகளுக்கு தருவதில் டெலிகிராம் ஆர்வம் காட்டவில்லை. பிரேசில் நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி எக்ஸ் தளத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நீதிபதி டீ மோரஸ், எக்ஸ் தளம் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தும் பிரதிநிதிகளை நீக்கியதால் இப்படியான தடை உத்தரவ...

தொல் வரலாற்றுப் பெண்களின் பங்களிப்பை, மேற்குலகின் ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்! - எழுத்தாளர் ஏஞ்சலான சைனி

படம்
  எழுத்தாளர் ஏஞ்சலா சைனி ஆண்களின் மேலாதிக்கம் எப்போது தொடங்கியிருக்கும்?   விவசாயம் செய்யத் தொடங்கியபோதா அல்லது தனிச்சொத்துடைமை உருவானபோதா, புதிய மாகாணங்கள் உருவானபோதா, அடிமை முறை தொடங்கியபோதா இப்படி நிறைய கேள்விகளை மானுடவியலாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டு அதற்கான பதில்களை தேடுகிறார்கள். தேடலை விளக்கி ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் ஆய்வாளர் ஏஞ்சலா சைனி, 'தி பேட்ரியாச் – ஹவ் மேன் கேன் டூ ரூல்' என்ற நூலை எழுதியிருக்கிறார். பாலின பாகுபாடு, ஆண் மேலாதிக்கம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். மேலும், மரபணு, தொல்பொருளாய்வு ஆகியவை தொடர்பாக எழுந்த யூகங்களுக்கும் பதில் கூறியுள்ளார். மேலாதிக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தூண்டிய காரணங்கள் என்ன? கடந்த நாற்பது ஆண்டுகளாக மேலாதிக்கம் கொண்ட சமூகம் பற்றி மிக குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். இது எனக்குஆச்சரியமான தகவலாக இருந்தது. பெண்ணிய இலக்கியங்களில், தொடர்ந்து ஆண் மேலாதிக்கம் பற்றிய அழுத்தங்களை பதிவுசெய்திருந்தனர். இதைப் பற்றிய வேறுபாடுகளை யோசித்தேன்.    எனவே, நான் மேலாதிக்கம் பற்றிய...