இடுகைகள்

தலித் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அயோத்திதாசரின் பெயரை மறைத்து விமர்சித்த ஆளுமைகளைப் பற்றிய நூல் - பெயரழிந்த வரலாறு - ஸ்டாலின் ராஜங்கம்

படம்
  பெயரழிந்த வரலாறு - அயோத்திதாசர்  பெயரழிந்த வரலாறு அயோத்தி தாசரும் அவர் காலத்திய ஆளுமைகளும் ஸ்டாலின் ராஜாங்கம் காலச்சுவடு தமிழ் வழியில் படித்து ராயப்பேட்டையில் சித்த மருத்துவமனைச்சாலை நடத்தி வந்த அயோத்திதாசர், பௌத்த மதத்தை பட்டியலின மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களை அதைநோக்கி ஈர்த்தார். இதற்கென தனது நாளிதழில் பல்வேறு தொடர்களை எழுதி அதை நூல்களாக தொகுத்து வெளியிட்டார். இதேபோல இரட்டைமலை சீனிவாசன், சிங்கார வேலர், லட்சுமி நரசு ஆகியோர் பட்டியலின மக்களுக்கு பல்வேறு பங்களிப்புகளை ஆற்றினர். அன்றைய காலத்தில் மக்களிடையே புகழ்பெற்றிருந்த பிராமண கவிஞர்கள், எழுத்தாளர்கள் பட்டியலின மக்களுக்காக பாடுபட்ட அயோத்திதாசரின் செயல்பாடுகளை எங்குமே குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட நேர்ந்தாலும் கூட பெயரைக் கூறவில்லை. இந்தவகையில் அவரது செயல்பாடு குறிப்பிடப்படாமல் அழிந்துபோனது. இதை ஸ்டாலின் ராஜாங்கம், அன்றைய போக்கு அப்படித்தான் இருந்தது. உவேசா, பாரதி மட்டும் அயோத்திதாசரின் பெயரைக்குறிப்பிடாமல் இல்லை. அயோத்திதாசரும் மேற்சொன்னவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விமர்சித்தார் என்று கூறுகிறார். அயோத்தி

செயலில் நேர்மையாக இருந்து வெற்றிகண்ட பெருநிறுவன வழக்குரைஞர்! - நயனா மொட்டம்மா

படம்
  நயனா மொட்டம்மா நயனா மொட்டம்மா - கர்நாடக சட்டமன்றத்தொகுதி எம்எல்ஏ நயனா மொட்டம்மா கார்ப்பரேட் வழக்குரைஞராக இருந்து எம்எல்ஏ வாக மாறியவர் கர்நாடக மாநிலத்தின் முடிகெரே தொகுதியில் மொட்டம்மா வெல்லுவார் என யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மால்நாடு, சிக்மகளூர் என இரு புகழ்பெற்ற பகுதிகளின் செல்வாக்கும் இங்கு உண்டு. இந்த பகுதியில் 1978ஆம்ஆண்டு இந்திராகாந்தி போட்டியிட்டு வென்று பிறகு தேசிய அரசியலில் வெற்றி பெற்றார். மொட்டம்மா 2015ஆம் ஆண்டு தொடங்கி அரசியலில் இருக்கிறார். இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவரை வீழ்த்த தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதைப்பற்றியெல்லாம் மொட்டம்மா கவலையே படவில்லை.  அதே படங்ளை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து பெண்களை உடைகளை கொண்டு தீர்மானிக்க கூடாது என முகத்தில் அறைந்தது போல பதிவுகளை இட்டார். கர்நாடகாவின் 224 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பெண்களில் மொட்டம்மாவும் ஒருவர். 1957ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அங்கு போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 224 என்ற அளவுக்கு கூட உயரவில்லை. மொட்டம

உருளக்குடி கிராமத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்! - சூல் - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம்

படம்
    சூல் நாவல் சூல் நாவல் எழுத்தாளர் சோ.தர்மன் சூல் சோ. தர்மன் அடையாளம் பதிப்பகம்   நாவலாசிரியர் சோ.தர்மன், சூல் நாவலை நீர், நீர் பாய்வதால் பயிர் பச்சைகள் எப்படி விளைகின்றன என்பதையே சூல் என அர்த்தப்படுத்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளக்குடி என்ற ஊரின் தொன்மையும், சாதி கட்டுப்பாடுகளும் உடைந்து மெல்ல விவசாயம் என்ற தொழில் அழிவதை 500 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். நாவலில் நாம் ரசிக்கும்படியான விஷயம் என்றால், பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் திட்டுவது போல ஹாஸ்யமாக உரையாடிக் கொள்வதுதான். இதில் பாலியல் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. கொஞ்சம் விஷமமான விஷயங்களை போகிற போக்கில் பேசிவிட்டு போகிறார்கள். நாவலில் வரும் குப்பாண்டி, கோவிந்தசாமி விவகாரம் முதலில் இயல்பானதாக இருந்து பிறகு மெல்ல ஆன்மிகம் நோக்கி நகர்கிறது. அதற்கு பிறகு குப்பாண்டி குப்பாண்டி சாமியாக மாறுகிறார். அதற்கு பிறகு அவர் பேசுவதெல்லாம் ஆசிரியரின் மனதில் உள்ள உபதேசக் கருத்துகளைத்தான். நீர்ப்பாய்ச்சி, ஊரில் உள்ள மனைவி இல்லாத மூவரின் வாழ்க்கை, எலியன், அவரின் நண்பரான ஆசாரி, கோணக்கண்ணன், சுச

இந்திரா நகர் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஆதி திராவிடர் தெரு - அனுசுயாவின் சுயமரியாதை முயற்சி

படம்
  பெயர் மாற்றம் ஏற்படுத்தும் சமூக மாற்றம்! ஹரிஜன், ஆதி திராவிடர் என்ற சொற்கள் நாளிதழ்களில் படிக்க எப்படி இருந்தாலும்   அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? சமூக அந்தஸ்து சார்ந்து பார்க்கும்போது இதுபோன்ற வார்த்தைகளை வகுப்பறையில் அல்லது பொது இடங்களில், அரசு அலுவலகங்களில் கூறப்படும்போது தர்மசங்கடமாக உணர்வு எழக்கூடும். அதனால்தான் தலித்துகள் தங்கள் பெயர்களை நாகரிகமாக வைத்துக்கொள்வதோடு சாதியையும் வெளியே தெரிவிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். கல்வி கற்பவர்கள் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்தபிறகு தங்கள் சமூகம் சார்ந்து பாடுபடுவது குறைவு. பெரும்பாலும் சாய்பாபா, ஐயப்பன் கோவில், மூகாம்பிகை கோவில் என சம்பாதித்த பணத்தைக் கொடுத்து தனது   அந்தஸ்தை மேல்சாதிக்கு இணையாக வளர்த்துக்கொள்ள முயல்வார்கள். அப்படியல்லாமல் தான் சார்ந்த சமூகம், இனக்குழு சார்ந்து கவலைப்படுபவர்கள் தங்களால் முயன்ற செயல்களை செய்து வருகிறார்கள். அப்படி செயல்பட்டு கவனம் ஈர்த்திருக்கிறார் அனுசுயா. நாகர்கோவில் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர், ஹைதராபாத்திலுள்ள   தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிய

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் காந்தி- வரிசைப்படுத்தப்படும் அரசியல், அந்தரங்க தவறுகள்

படம்
  காந்தியை இன்று பின்தொடர்பவர்கள் இருவகையாக உள்ளனர் . காந்தியவாதிகளாக நூல்களில் காந்தியைப் பற்றிய கருத்துகளைப் படித்துவிட்டு அவரைப் பின்பற்றுபவர்கள் . அடுத்து , காந்தியின் புனித தன்மை மனதை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்க , அவரை தனிப்பட்ட வாழ்க்கை , அரசியல் என இரண்டிலும் உள்ள தவறுகளை எடுத்து அதனை விமர்சித்து வருபவர்கள் . காந்தியைப் பின்பற்றுபவர்களை விட அவரை விமர்சிப்பவர்களே இன்றும் அவரை உயிரோடு வைத்திருக்கிறார்கள் . இல்லையென்றால் ஒருவர் இறந்து 150 ஆம் ஆண்டுகளாகியும் கூட ஒருவரைப் பற்றி பேசி விவாதித்துக்கொண்டிருக்க முடியுமா ? காந்தி தலித்துகளுக்கு தனி தொகுதிகள் கூடாது என்று கூறியது உண்மை . உண்மையில் அவர் அப்படிக்கூறியது , இந்தியா எதிர்காலத்தில் பிளவுபட்டு போகக்கூடாது என்ற நோக்கில்தான் . காந்தி , அம்பேத்கரின் பேச்சு , எழுத்துகள் மூலமாகவே தலித்துகளின் பிரச்னைகளை ஆழமாக புரிந்துகொண்டார் . கிறிஸ்துவம் , சமணம் , இந்து ஆகிய மதங்களின் நூல்களை காந்தி படித்துள்ளதால் , அவை பற்றிய அறிவு காந்திக்கு உண்டு . அம்பேத்கர் , அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கவேண்டுமென விரும்பினார் . அரசு அதிகாரம் மூலம் சாதி இழிவ

குஜராத்தில் சிறுபான்மையினரின் குரல்! - ஜிக்னேஷ் மேவானி

படம்
  மத்திய அரசின் தேசதுரோக குற்றச்சாட்டுக்காக குஜராத்தின் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அலைகழிக்கப்பட்டவதை அறிவீர்கள். ஜிக்னேஷ் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்.  அவனுக்கு புரட்சியில் ஆர்வமிருக்கிறது. எப்போதும் அதை துடிப்பாக பேசிக்கொண்டிருப்பான். நான் புரட்சி என்பது நடந்தால் 1947க்கு முன் நடந்திருக்கவேண்டும் என்று கூறுவேன். ஆனால் அவன் புரட்சி காரணமாக சிறைக்கு போவதற்கும் தயார் என்றுதான் கூறுவான் என்றார் ஜிக்னேஷ் மேவானியின் தந்தை நட்வார்பாய் பார்மர்.  பிரதமர் மோடி பற்றி ஒரே ஒரு ட்வீட் பதிவை எழுதியதற்காக எம்எல்ஏவான ஜிக்னேஷை காவல்துறை அலைக்கழித்தது. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்வது கொலை, கொள்ளை குற்றங்கள் என்றே இதுவரை இருந்தது. பாஜக அரசின் கைங்கர்யத்தில் இது  அரசியல்வாதிகளுக்கும் மாறியுள்ளது. ட்வீட் குற்றம் மட்டும் சிறையில் அடைக்க பத்தாதோ என நினைத்த காவல்துறை பெண் காவலரைத் தாக்கினார் என மற்றொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்தது. ஆனால் நீதிமன்றத்தில், வழக்குப்பதிவு பல் இளித்துவ

மிருதங்க கைவினைஞர்களின் தாழ்வுணர்ச்சி கொண்ட வாழ்க்கை! - செபாஸ்டியன் குடும்பக்கலை - டிஎம் கிருஷ்ணா தமிழில் அரவிந்தன்

படம்
  செபாஸ்டியன் குடும்பக்கலை - காலச்சுவடு செபாஸ்டியன் குடும்பக்கலை டிஎம் கிருஷ்ணா தமிழில் டிஐ அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 195 ரூபாய் டிஎம் கிருஷ்ணா புகழ்பெற்ற வாய்ப்பாட்டு கலைஞர். கர்நாடக இசை உலகில் பலரும் இவரது பாடல்களை அறிவார்கள். பாடல்களை சபாக்களைக்  கடந்து பாடும் இடங்களும் கிருஷ்ணாவின் புகழ் பரப்பின. சூழலுக்கு ஆதரவான பாடல்களை பாடும் ஆர்வமும் திறனும் கொண்டவர். அவர், மிருதங்க கைவினைஞர்களைப் பற்றி ஆய்வுகள் செய்து, நான்கு ஆண்டுகள் உழைத்து எழுதிய நூல்தான் இது.  ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழ் வடிவம். நூலின் வெளியீடு மார்ச் 3 அன்று வெளியாகிறது. சென்னை புத்தகத் திருவிழாவில் நூலை வேகமாக அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறார்கள். நூலின் ஆராய்ச்சி தகவல்கள், ரோஹினி மணியின் ஓவியங்கள், கூறுப்படும் பல்வேறு சாதி பற்றிய ஆய்வுத் தகவல்கள் வாசகர்களை வியக்க வைக்கிறது.  பறையர்கள் எனும் சாதியினர் சாதிக் கொடுமை தாங்காமல் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். இவர்கள்தான் மாடு, எருமை, ஆடு ஆகிய விலங்குகளின் தோல்களை வாங்கி மிருதங்கங்களை உருவாக்குகிறார்கள். இதனை வாசிக்கும் பிராமணர்கள், இசைவேளாளர்கள் இதற்கான அங்கீகாரத்தை

நம்பிக்கை நாயகர்கள்- கார்த்திக் ஆர்யன், பா ரஞ்சித், தனுஷ், புவன் பாம்

படம்
கார்த்திக் ஆர்யன் எப்போதுமே புதுசுதான்!  கார்த்திக் ஆர்யன் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன், தனது 20 வயதில் முதல் படத்தில் நடித்தார். 2011இல் வெளியான பியார் கா பன்ச்னாமா என்ற படம் அது. அதனை பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். லவ் ரஞ்சன் இயக்கிய நவீனமான காதல் கதைப்படம் அது.  குவாலியரில் பிறந்த கார்த்திக் ஆர்யன் பிறகுதான் பிரபலமாகத் தொடங்கினார். இத்தனைக்கும் அவருக்கு சினிமா பின்புலம் ஏதும் கிடையாது. பதினெட்டு வயதில் மும்பைக்கு வந்தவர் கார்த்திக்.  எனக்கு எந்த இரண்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே வாய்ப்புதான். அதில் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது என்பவர் சொல்லியபடியே இரண்டு பன்ச்னாமா பாகங்களில் நடித்தார். பிறகு சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்திலும் நடித்து நமது மனதை கவர்ந்தார்.  பிறகு நடித்த லூக்கா சூப்பி, பதி, பத்னி ஆர் வோ ஆகிய படங்கள் மெல்ல ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் போது கூட புதிய இயக்குநர்களோடு பணியாற்றவே மெனக்கெடுகிறார். வண்டி நன்றாக ஓடும்போது எதற்காக இந்த ரிஸ்க் என பலரும் கார்த்திக்கிடம் கேட்கிறார்கள்தான். ஆனால் அவர் அதைப்பற்றி கவ

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ஏன் இப்படி என்று கே

தலித் மாணவர்களுக்கான வசதிகளை செய்துகொடுக்காமல் அவர்களை அலைகழித்தனர்! - தீபா மோகனன், முனைவர் படிப்பு மாணவி

படம்
  தீபா மோகனன்   1035 × 1180     தீபா மோகனன் கேரளாவின் கோட்டயத்திலுள்ளது , காந்தி பல்கலைக்கழகம் . இங்கு பத்தாண்டுகளாக சாதி ரீதியான புற்க்கணிப்பு நடைபெற்றுள்ளது என உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் தீபா மோகனன் . இவர் அங்கு பிஹெச்டி படிக்கும் மாணவி . பதினொரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் பல்கலைக்கழக நிர்வாகத்தை பணிய வைத்திருக்கிறார் . தீபா மோகனன் 1600 × 961 பல்கலைக்கழகங்களில் உள்ள ஜாதி பிரச்னைகளை எப்படி தீர்ப்பது ? ஜாதி ரீதியான பிரச்னைகள் அனைவரும் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும் . நான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இதுவரை எட்டு புகார்களை அளித்துள்ளேன் . விசாரணையை தாமதம் செய்ய விசாரணைக் குழுக்களை அமைப்பார்கள் . அப்புறம் அது அப்படியே நின்றுவிடும் . இதில் சில புகார்களின் தாமதத்திற்கு நீதிமன்றமும் காரணமாக உள்ளது . பத்தாண்டுகளாக பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியான பிரச்னைகளை எதிர்த்து போராடி வருகிறேன் . அதனை நீர்த்துப்போகும் விஷயங்களை நிர்வாகத்தினர் செய்து கொண்டே இருந்தனர் . தீபா மோகனன் 1280 × 720 பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றிய புகார்களை எப்படி பார்க்கிறீர்கள்