இடுகைகள்

புகார்மனு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை பாதுகாக்க நினைக்கிறேன் - ரிதிமா பாண்டே , இயற்கை செயல்பாட்டாளர்

படம்
  ரிதிமா பாண்டே ரிதிமா பாண்டே இயற்கை செயல்பாட்டாளர் இவரை இந்தியாவின் கிரேட்டா துன்பெர்க் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இவருக்கென ரிதிமா பாண்டே என்ற பெயர் இருப்பதால், அதனையே சொல்லி அழைப்போம். 2007ஆம் ஆண்டு பிறந்தவர் ரிதிமா பாண்டே. உத்தரகாண்டில் பிறந்தவரின் தந்தையும் கூட சூழல் சார்ந்த செயல்பாட்டாளர்தான். வெள்ளம், நிலச்சரிவு சார்ந்த பிரச்னைகள் பத்தாண்டுகளாக நடப்பதை கவனித்து வந்து பிறகே சூழல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  2016ஆம் ஆண்டு தனது ஒன்பது வயதில் அரசுக்கு எதிராக மாசுபாடு தொடர்பாக புகார் ஒன்றை எழுதி அனுப்பினார். அதற்கு முன்னரே தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு இதுபோல புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மனுவை தீர்ப்பாணையம் தள்ளுபடி செய்துவிட்டது. பிறகு 2016ஆம் ஆண்டு ரிதிமா, தன்னோடு பதினாறு குழந்தைகளை சேர்த்துக்கொண்டு ஐ.நாவில் மாசுபாட்டு பற்றி புகார் மனுவை வழங்கினார். இதில் துருக்கி, அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் மாசுபாடு பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கையை குறிப்பிட்டிருந்தார்.  2020ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடிய