இடுகைகள்

கரிச்சான் குஞ்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காமத்தாலும் சுயநலத்தாலும் அலைகழியும் மனிதர்களின் கதைகள்- சுகவாசிகள் - கரிச்சான்குஞ்சு- காலச்சுவடு

படம்
  சுகவாசிகள் கரிச்சான் குஞ்சு காலச்சுவடு பதிப்பகம் இரண்டு குறுநாவல்கள் – சுகவாசிகள், ஒரு மாதிரியான கூட்டம்   தனது குறுநாவல்கள் பற்றி கரிச்சான் குஞ்சு முன்னுரையில் எப்படிப்பட்டவை என்று கூறிவிடுகிறார். எனவே, முடிந்தவரை அதை படிக்காமல் கதைகளை படித்தால் கதைகளை உங்கள் மனதில் உணர்ந்து பார்த்து காட்சிகளாக வாழ்ந்து பார்த்த அனுபவம் கிடைக்கும். சுகவாசிகள் குறுநாவலில் நாகு அய்யர் வருகிறார். இவருக்கு சொத்துகள் ஏகபோகம். அந்த சொத்துகள்தான் காமத்தை தூண்டுகின்றன. இதன் விளைவாக மூன்று பிள்ளைகளை கட்டிக்கொடுத்து விடுதலைப் பத்திரம் வாங்கியும் கூட ஐம்பது வயதில் பார்வதி என்ற மலையாளப் பெண்ணை மணம் செய்துகொள்கிறார். வயதாகி, உடல் வேகமாக இயங்காதபோதும் தங்க பஸ்பம் சாப்பிட்டு உடலை இயங்கவைத்து மகன் ஒருவனை பெற்றெடுக்கிறார். அவன்தான் சீனு. நாகு அய்யரைப் போன்ற உருவம். ஆனால் அதற்குப் பிறகு நாகு அய்யர் உடலுறவில் தீவிரமாக ஈடுபடுகிறார். இதனால் உடல்நலம் குன்றுகிறது. உடல்நலம் குன்றிய காலகட்டத்தில் பார்வதிக்கு கிருஷ்ணன், ராசாளி என இருவர் மீதும் ஆர்வம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளால் சொத்துகள் பறிபோகிறது.

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் ஆங்கில மொழிபெயர்ப்பில்.... - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  புதிய நூல்கள் அறிமுகம் வீ மூவ் குர்நாய்க் ஜோகல் செர்பன்ட் டெய்ல் 499 இங்கிலாந்தில் குடியேறிய ஆசிய மக்கள் பற்றிய கதைகளை நூலில் கூறுகிறார்கள். மேற்கு லண்டன் பகுதியில் ப்ரீத்தி வாழ்கிறாள். இவளது பாட்டி பஞ்சாபி மொழியைப் பேசுகிறாள். இருவருக்குமான இடைமுகமாக இருப்பது ப்ரீத்தியின் அம்மாதான். இவர்களது உலகம் சார்ந்த சிக்கல்களை ஆசிரியர் விவரித்திருக்கிறார்.  நியூ அனிமல் எல்லா பாக்ஸ்டர் பிகாடர் 799 அமெலியா, இறந்து போனவர்களின் உடல்களை அலங்கரிக்கும் தனது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவள் ஆன்லைனில் தனது காதலைக் கண்டுபிடிக்கிறாள். இடையில் அந்த உறவை இழக்கிறாள். பாலுறவு, இறப்பு, துக்கம் என பல்வேறு விஷயங்களை அவள் எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதே கதை. வலி என்பது உடல்தோறும் மாறிக்கொண்டே இருப்பதை வாசிக்கையில் வாசகர்கள் எளிதாக உணரலாம்.  லாஸ்ட் கேர்ள் சனா ஷெட்டி ஹார்ப்பர் கோலின்ஸ் இந்தியா 299 சிம்லாவில் நடைபெறும் திரில்லர் கதை. இங்கு பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி வனெஸ்ஸா தனது கணவர் அடியனோடு வாழ்கிறார். ஒருநாள் சாலையோரத்தில் உள்ள புதர்ப்பகுதியில் பெண் ஒருவர் அடிபட்டு குற்றுயிராக கிடப்பதைப் பார்த்து அ