இடுகைகள்

தேர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு அதிகாரி வழங்கும் இலவச அரசுத் தேர்வு பயிற்சி - கேள்வி பதிலுக்கு பணப்பரிசு, மாணவர்களுக்கும் உணவும் உண்டு

படம்
  சௌதி அரேபியாவில் மருத்துவத்துறையில் பணியாற்றியவர், நாராயண குமார். வேலையில் திடீரென சிக்கல் ஏற்பட்டு, மூன்று மாத சம்பளம் இல்லாத நிலையில் தனது ஊருக்கு திரும்பி வந்தார. அடுத்து என்ன வேலை செய்வது என்று தெரியாத நிலையில், தவித்தார். அப்போது அவருக்கு மாரிமுத்து என்பவர் அரசு வேலைக்கான பயிற்சி வழங்குவது தெரிய வந்தது. விருதுநகர் சென்று பயிற்சி வகுப்பில்   கலந்துகொண்டவர், அரசு தேர்வு எழுதி தாசில்தாராக பணியில் இயங்கி வருகிறார். இவரின் உறவினர்கள் இருவர் கூட அரசு வேலையில்தான்   உள்ளனர். இவர்களும் மாரிமுத்துவிடம் பயின்றவர்கள்தான். இங்கு செய்தி மாரிமுத்துவைப் பற்றித்தான்.   பத்தாயிரம் இளைஞர்களை அரசுத் தேர்வில் வெல்ல வைத்திருக்கிறார். இவர் ஶ்ரீவில்லிப்புத்தூரில் தாசில்தாராக செயல்பட்டு வருகிறார். வார இறுதி நாட்களில் மாணவர்களுக்கு அரசு தேர்வுகளில் வெல்ல இலவச பயிற்சி வகுப்புகளை எடுக்கிறார். மாரிமுத்து, அரசுப் பணிகளுக்கான   பயிற்சி வகுப்புகளை பதினெட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், மாரிமுத்து. அரசு அதிகாரியாவதுதான் அவரது கனவு. அதை நிஜமாக்கி 1994ஆம் ஆண்டு திருமங்கலத்தி

மனப்பூர்வமாகத் தேடினால் சுதந்திரத்தைப் பெறலாம்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி தேர்ந்தெடுப்பது -2 உங்கள் வாழ்க்கை என்பது தேர்வுகளாக அமைந்துள்ளது. உங்களின் தேர்வு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.  இந்த தேர்வு, உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த நாள் இந்த தேர்வு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை உடனே கைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிடலாம். ஆகவே,  உங்களது தேர்வு என்பது உணர்வுநிலையைச் சேர்ந்தது. நீங்கள் அதை சுயநினைவு சார்ந்தும் இருநிலைப்பாடுகள் சார்ந்தே எடுக்கிறீர்கள். ஆனால் எடுக்கும் தேர்வு நிலைப்பாடு, எதிர்மறையாக அமைகிறது. எதிர்மறையாகச் செல்லும் தேர்வுகள் பற்றி நீங்கள் கவனமுடன் இருந்தால்,  உண்மை எதுவென அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையை அடையாளம் காண்பதற்கான ஆர்வம், வேட்கை இல்லை என்பதால் உணர்வு நிலை சார்ந்து எதிர்மறையான தேர்வுகளே கிடைக்கின்றன. இந்த நிலையில் மனம் முழுக்க எதிர்மறை தேர்வுகளிலிருந்து எளிதாக விடுதலையாவதில்லை. இச்சூழலில், விழிப்புணர்வாக, செழிப்பான நிலையில் மனம் இருக்காது. ஒருவரின் எதிர்மறைத் தேர்வுகளில் சுதந்திரம் இருப்பது, சாதனை என்று க

மனதில் வெறுமை நிலை உருவாவது எப்படி? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி முடிவெடுப்பது? நீங்கள் தேர்வுகளின் அடிப்படையில் வாழ்கிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் எதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ன தேவை, எந்த விசை உங்களை தேர்ந்தெடுக்க உந்துகிறது? நான் ஒருவரை இப்படி உந்தும் விசையை, ஒருவரின் உள்ளே உள்ள வெறுமை நிலை அல்லது தனிமை   என்று கூறுவேன். இந்த முழுமை இல்லாத நிலை ஒருவரை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது. இப்போது கேள்வி, வெறுமை நிலையை எப்படி நிரப்புவது என்பதல்ல. அதற்கு பதிலாக வெறுமை நிலையை எது உருவாக்குகிறது என்பதுதான். தேர்வுகளின் செயல்பாட்டால் வெறுமை நிலை உருவாகிறது , செயலின் முடிவில் என்ன கிடைக்கிறது என்பதை நோக்கி செல்வதால் வெறுமை உருவாகிறது என்கிறேன். வெறுமை நிலை உண்டாகும்போது, ஒரு கேள்வி உருவாகிறது, எப்படி இந்த வெறுமை நிலையை நிரப்புவது, தனிமை நிலையை, நிறைவுறாத நிலையை அழிப்பது எப்படி?   என்னைப் பொறுத்தவரை வெறுமை நிலையை நிரப்புவது என்பது ஒரு பதில் கிடைக்கும் கேள்வியாகவே தெரியவில்லை. ஏனெனில் வெறுமையை எதனாலும் நிரப்பவே முடியாது.   ஆனால் பெரும்பாலான மக்களை அதை நிரப்பவே முயன்று வருகிறார்கள். இ

விவாகரத்தான ஆசிரியையைக் காதலிக்கும் மாணவன்! - கிறிஸ்டி - மேத்யூ, மாளவிகா மோகனன்

படம்
  கிறிஸ்டி 2023 மலையாளம் கிறிஸ்டி இயக்கம் ஆல்வின் ஹென்றி திரைக்கதை – பென்யாமின், ஜிஆர் இந்துகோபன் மாணவன் தன் ட்யூசன் ஆசிரியையைக் காதலிக்கும் கதை. பூவார் எனும் கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. கதை, ராய் என்ற மாணவனின் பார்வையில் நடைபெறுகிறது. இதனால் அவனது பார்வையில்தான் ட்யூஷன் ஆசிரியையை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.   சுமாரான படிப்பு, அதிக நேரம் நண்பர்களுடன் விளையாட்டு, நடனம் ஆடுவது என சுற்றுவதுதான் ராயிற்கு விருப்பம். ஆனால் தேர்வில் வெல்ல கொஞ்சமேனும் படிக்கவேண்டுமே? ஜாலி, கேலி மட்டுமே போதாது அல்லலவா? எனவே, பெற்றோர் அவனுக்கு ட்யூஷன் சொல்லித்தர கிறிஸ்டி என்ற ஆசிரியையை ஏற்பாடு செய்கிறார்கள். ராய்க்கு முதலில் கிறிஸ்டி ஜோசப்புக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக தோன்றுகிறது. பிறகு மெல்ல அவள் சொல்வதைக் கேட்டு படிக்கிறான். பரீட்சையிலும் படித்து வெல்கிறான். அதேசமயம் கிறிஸ்டி சேச்சியுடன் அவன் பழக்கமும் தொடர்கிறது. அவன், அவள் தேர்வுக்குச் செல்ல, உறவினர் திருமணத்திற்கு செல்லவென பல்வேறு உதவிகளைச் செய்கிறான். அவள் சிரிப்பதை, நட்பாக பேசுவதை காதலென நினைத்துக்கொள்கிறான். கிறிஸ்டிக்கு மாலத்தீவில் ஆசிர

மாணவர்களிடையே தேய்ந்து வரும் எழுதும் பழக்கம்! - விளைவு என்ன?

படம்
  தேயும் எழுதும் பழக்கம்! பெருந்தொற்று காலகட்டம் மாணவர்களின் கல்வியை பின்னோக்கி நகர்த்தியது. கூடவே, எழுதும் பழக்கத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் எழுதுவதற்கு பயிற்சி தேவைப்படும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போன், கணினி, டேப்லெட், பல்வேறு ஆப்கள் என யாருக்குமே பேனாவை பிடித்து எழுதும் அவசியம் இல்லை. பள்ளிகளில்மட்டும் தான் மாணவர்கள் பல்வேறு எழுத்து வேலைகளை செய்கிறார்கள். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களின் மனநிலை பற்றி பலரும் கவலைப்பட்டனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் எதையும் எழுதாமல் இருக்கும் மாணவர்கள் பள்ளி தொடங்கியதும் எப்படி எழுதுவார்கள் என இப்போதுதான் பெற்றோர் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக டில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் எழுத்துப் பயிற்சிக்கான மையங்கள் உருவாகி வருகின்றன. மும்பையில் கையெழுத்துப் பயிற்சி அளித்து வருகிறார் குன்சால் கலா. இவரது வகுப்பில், 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் பயிற்சியளித்துள்ளார். எழுதுவதில் சுணங்கினால் எழுத்து தேர்வுகளை நேரத்திற்கு எழுத முடியாது என்பதே பெற்றோரின் கவலை. மாணவர்கள் பலருக்கும் பேனா, பென்சிலை சரியாக விரல்களில் பிடிப்பதே மறந்

31 வயதில் 120 பேர்கொண்ட குழுவுக்குத் தலைவர்! - ஜோஹோ பள்ளியின் சாதனைக் கதை

படம்
  ஸ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ பொதுவாக தமிழ்நாட்டில் சாதித்து பெரிய இடங்களுக்கு நகர்பவர்கள், எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். விவசாயிகள், வீட்டுவேலை செய்பவர்களாகவே இருப்பார்கள். இந்தியளவில் எடுத்துக்கொண்டால், பஞ்சாப்பின் புதிய முதல்வரின் அம்மா, பள்ளிக்கூடத்தில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்தவர், செய்து வருபவர்தான்.  செய்யும் வேலையை புனிதப்படுத்துவதற்காக சொல்லவில்லை. சாதிரீதியாக, திறன் ரீதியாக நிறைய வேறுபாடுகள் இங்குள்ள மனிதர்களுக்கு இடையே உள்ளது என்பதை கூறவே முந்தைய பாரா.  பார்த்திபனுக்கு வயது 31. ஜோகோ நிறுவனத்தின் மேனேஜ் எஞ்சின் என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். புரோடக்ட் மேனேஜராகப் பணி. இந்தப் பணியில்தான் 120 பேரைக் கட்டி மேய்க்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபனுக்கு இருந்த கனவு, கட்டுமானக் கலைஞர் ஆவதுதான். ஆனால் அவரது குடும்பம் இருந்த பொருளாதார நிலையில் அது சாத்தியமில்லை என விரைவில் தெரிந்துகொண்டார். நான்கு பேர் கொண்ட குடும்பம், மாதம் அப்பா சம்பாதிக்கும் 3 ஆயிரத்தில்தான் நடந்து வந்தது. ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள், வருமானப் பற்றாக்குறையால் அங்கிருந்து வெள

கல்வி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் தற்கொலைகளைத் தடுக்கலாம்! - சௌமித்ரா பதாரே

படம்
உளவியலாளர் சௌமித்ர பதாரே சௌமித்ர பதாரே மனநல சட்டம் மற்றும் கொள்கை மைய இயக்குநர் உலகளவில் நடைபெறும் தற்கொலைகளில் 20 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. பதாரே, இதுபற்றி லைஃப் இன்டரப்டட் அண்டர்ஸ்டாண்டிங்  இண்டியாஸ் சூசைட் கிரிசிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அம்ரிதா திரிபாதி, அமிஜித் நட்கர்னி ஆகிய எழுத்தாளர்களும் பங்களித்துள்ளனர்.  இளைஞர்கள், பெண்கள், எழுபது வயதானவர்கள் ஆகிய பிரிவுகளில் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன என கூறியுள்ளீர்கள். இந்தியாவில் தற்கொலைகள் இப்படி அதிகரிக்க என்ன காரணம்? வயதானவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்கள் தனியாக இருப்பதுதான் காரணம். மேலும் அவர்கள் தங்கள் துணையை இழந்திருப்பார்கள். சமூகத்தில் புறக்கணிப்பையும் எதிர்கொண்டிருப்பார்கள். இதைப் பற்றிய தகவல் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இளைஞர்கள் ஏன் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.  குடும்ப பிரச்னைகள், உறவு சார்ந்த சிடுக்குகள் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. பிற நாடுகளில் நேரும் தற்கொலைகளுக்கு வேலைவாய்ப்பின்மை முக்கியமான காரணமாக உள்ளது. இளம் வயதில் கர்ப்பிணியாவது, பொருளாதார பற்றாக்குறை, ப

மத்திய அரசுப்பள்ளியை முந்திய அரசுப்பள்ளி! - சாதித்தது எப்படி?

படம்
  தலைநகரில் அசத்தும் அரசுப்பள்ளி! டில்லியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி, தேர்ச்சியிலும் பிற திறன்களிலும் அசத்தி வருகிறது.  கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த பள்ளிகள் பட்டியலில் கேந்திரிய வித்யாலயாவுக்கு இரண்டாமிடம்தான் கிடைத்தது. முதலிடம், அரசுப்பள்ளியான ராஜ்கிய பிரதிபா வித்யாலயாவுக்கு கிடைத்தது. மத்திய அரசு பள்ளியை முந்தும் அளவுக்கு அப்படியென்ன சிறப்பு இப்பள்ளியில் உள்ளது?  டில்லி அரசு நடத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 7,9,11 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெறும் மாணவர்களை இங்கு சேர்த்துகொள்கின்றனர். வகுப்பறைக்கு 35 பேர்தான். இதற்காக டில்லி அரசு தன் நிதியில் 28 சதவீதத்தை செலவு செய்துள்ளது. நாட்டில் பிற மாநிலங்கள் அதிகபட்சமாக 14.8 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்கியுள்ளன. இந்த பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு மாத வருமானமே ரூ.3000தான். ஆசிரியர்கள் அனைவருக்கும் டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளதால், காகிதப்பயன்பாடு குறைவு. “இங்கு மாணவர்கள் வருகைப்பதிவு குறைந்தால், அது பற்றி விசாரித்து ஆலோசனை அளிக்கும் வசதி உள்ளது’ என ஆச்சரியப்படுத்துகிறார் பள்ளி முதல்வரான தேஜ்பால் சிங்.  இங்குள்

மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது! - புதிய ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

படம்
    பிக்சாபே     2019ஆம் ஆண்டில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நடந்துள்ளதை ஆய்வுகள் கூறியுள்ளன. 2009ஆம் ஆண்டில் 109 முதல் 10.4 என்ற அளவில் இருந்த தற்கொலை அளவு நடப்பில் 9.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இருக்கும் மாநிலங்களிலேயே சிக்கிமில் 33.1 சதவீத தற்கொலை நடைபெற்று வருவதால் முதலிடத்தைபை் பெற்றுள்ளது. குறைவான தற்கொலை நடக்கும் மாநிலமாக பீகார் உள்ளது. யூனியன் பிரதேசத்தில் அந்தமான் தீவு 45 சதவீத தற்கொலையுடன் முதலிடத்தில் உள்ளது. தற்கொலைகள் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. நடக்கும் தற்கொலைகளில் மூன்றில் ஒன்று குடும்ப பிரச்னைகள் காரணமாக நடைபெறுகிறது. அடுத்த முக்கியமான காரணமாக வங்கியில் வாங்கும் கடன், திவால் பிரச்னை உள்ளது. குடும்ப பிரச்னை, நோய், கடன், போதைப்பொருட்கள், மது பயன்பாடு ஆகியவை அடுத்தடுத்த முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 2019ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்பவர்களில் சுயதொழில் செய்பவர்கள், மாணவர்கள் அதிகளவு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மணமான பெண்கள் தற்கொலை செய்துகொள்வது 2009இல் 19.7 சதவீதமாக முன்னர் இருந்து இப்போது குறைந்துள்ளது. ஆனால் மாணவர்களின் தற்கொலை சதவீதம்

தேர்வால் சோகத்திற்குள்ளாகும் மாணவர்கள்!

படம்
தேர்வு வரும் காலங்களில் மாணவர்கள் கடுமையான மனச்சோர்வுக்கு உட்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 72 நகரங்களில் செய்த ஆய்வில் 82 சதவீத மாணவர்கள் கடுமையான சோர்வையும் அழுத்தத்தையும் உணர்வதாக கூறியிருக்கிறார்கள். ஃபோர்டிஸ் மனநல திட்டம் சார்பில் பல்வேறு தன்னார்வலர்கள் இந்திய மாநிலங்களில் இதுபற்றி சோதனைகளை நடத்தினர். இதில் 25 சதவீதப் பேர் கடுமையான பதற்றத்தை தேர்வுக்காலங்களில் மனதளவில் சந்திக்கின்றனர். இவர்களில் அதிகளவு பதற்றத்தை சந்திப்பவர்களுக்கு ஐந்து எனும் ரேட்டிங்கை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். இதில் 13 சதவீத மாணவர்கள் மட்டும் குறைந்தளவு பதற்றம் கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளனர்.  “நாம் மாணவர்களுக்கு தேர்வு கால பதற்றம் பற்றி குறைவாகவே விவாதித்துள்ளோம். ஆனால் இந்த ஆய்வில் குறைந்தளவேனும் தேர்வு பற்றிய பதற்றத்தை மாணவர்கள் உணருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது” என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான மருத்துவர் சஞ்சய் பாரிக். மாணவர்களிடம் நெருங்கிப் பேசினால்தானே அவர்களின் மன அழுத்தம் வெளியே தெரியவரும். இதற்காக 24 பேர் கொண்ட தன்னார்வக்குழுவை பயிற்சி கொடுத்து உருவாக்கி உள்ளனர். இதனால் மாணவர

அபாகஸ் மூலம் கணிதம் வளருமா? - ஜப்பானில் புதிய முயற்சி!

படம்
கணிதத்தில் வெல்ல அபாகஸ் பயிற்சி! ஜப்பான் மாணவர்கள் தேசிய அளவிலான கணிதப்போட்டிகளில் வெற்றிபெற அபாகஸ் பயிற்சியை செய்து வருகின்றனர். உலகம் முழுக்கவே கணிதம் பற்றிய அறிவைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். அதேசமயம் மரபான பல்வேறு கணிதப்பயிற்சிகளை கைவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் அபாகஸ். இதனை இன்னும் ஜப்பான் மாணவர்கள் கைவிடாமல் பயின்று வருகின்றனர். அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கணிதப்போட்டியில் அபாகஸ் பயிற்சியின் திறன் உணரப்பட்டது. போட்டியில் கேட்கப்பட்ட கணிதக்கேள்வி ஒன்றுக்கு விடை ட்ரில்லியனில் வந்தது. இதனைக் கணினி, கால்குலேட்டர் எனத் தேடி எழுதுவதில்  தடுமாற்றம் இருந்தது. அப்போது அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவர்கள் எளிதாக விடை கண்டுபிடித்து எழுதினர்.  ஜப்பானில் 1970 ஆம்ஆண்டு கற்றுத்தரப்பட்ட அடிப்படை கணிதப் பயிற்சி அபாகஸ். பின்னர் அரசுப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இன்று தனியார் பள்ளிகளில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனைக் கற்றுவருகின்றனர். கூடுதலாக, கணிதத் திறனுக்கான பயிற்சியாக அபாகஸ் மாறிவிட்டது. ஜப்பானில் அபாகஸை சோரபன் (Soroban) என்று குறிப்பிடுகின