இடுகைகள்

எரிபொருள் - எத்தனால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எத்தனால் மூலம் பிரச்னை தீருமா?

படம்
பெட்ரோல், டீசலுக்கு எத்தனால் தீர்வாகுமா?  பெட்ரோல், டீசல் ரேட்(82.51/75.48(4.9.18 படி)) ரூபாயில் உயர்ந்து பைசாவில் குறைந்துவரும் காலத்தில் அதன் அரசியல் பிரச்னைகளை யோசிப்பதை விட நம் கண்முன் உள்ள எதார்த்த தீர்வுகளை தேடுவது புத்திசாலித்தனம்.  உயிரி எரிபொருளான எத்தனாலை பெட்ரோல், டீசலில் கலப்பது குறித்து பிரதமர் மோடி, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி மேடைதோறும் பேசினாலும் இந்திய அரசு அதில் ஆழமாக கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை. அமெரிக்காவில் சோளம், பிரேசிலில் கரும்பு, இந்தியாவில் மொலாசஸ் ஆகியவற்றிலிருந்து உயிரிஎரிபொருளான   எத்தனால் தயாரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் எரிபொருட்களில் எத்தனால் கலப்பு 45-50% என இருந்தாலும் இந்தியாவில் 2-3% சதவிகிதம் தாண்டி ஒரு இன்ச் கூட அதிகரிக்கவில்லை. இந்நிலையில் 2030 ஆம் ஆண்டில் 20% என்ற அரசின் லட்சியம் எப்படி நிறைவேறும்? உயிரி எரிபொருளான எத்தனாலுக்கு முக்கியப் பிரச்னை இதற்கான பயிரிடும் பரப்பும்,   நீராதாரங்களும்தான். பெட்ரோலுக்காக விவசாயமா? உணவுக்கு என்ன செய்வது என இயற்கை ஆர்வலர்கள் உடனே ஆட்சேபம் கிளப்புவார்கள்.